சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 18 ஜூன், 2025

தமிழ் இலக்கியங்களில் சூழலியல் – மேலாண்மை சிந்தனைகள் சுப்ரபாரதிமணியன் இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை. இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரவுகளும் சொல்கின்றன அந்த வகையில் தமிழ் இலக்கியப்படைப்புகளில் இடம் பெற்றிருக்கும் சுற்றுச்சூழல் அம்சங்கள் பற்றி இந்த நூலின் கட்டுரைகள் சொல்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு துவங்கி பல இலக்கியப் படைப்புகள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன. அந்த ஆறுதலை இந்தக் கட்டுரைகளில் நாம் அடையாளம் காண இயலும். பல்வேறு சுற்றுச்சூழல் அம்சங்களை இவை ஆராய்கின்றன. இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த சுற்றுச்சூழல் சார்ந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன. அந்த எச்சரிக்கைகளை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை இதன் அத்தாட்சியாக விளங்கும் படைப்புகளை இந்த கட்டுரைகள் இரு தொகுப்புகளாக அமைந்து காட்டுகின்றன. இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் இந்த கட்டுரைகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு இந்தப் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம் முழுக்கக் கல்வித்துறையினரின் இந்தப் பங்களிப்பு புருவங்களை உயர்த்த வைக்கிறது.சூழலியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வு மாநாட்டின் கட்டுரைகள் 1200 பக்கங்களில் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெளியீடான் இத்தொகுப்புகள் சூழலியல் சார்ந்த முக்கிய ஆவணங்களாக இத் தொகுப்பின் மூலம் விளங்குகின்றன. சுப்ரபாரதிமணியன் 9486101003