சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 7 ஜூன், 2025
0 திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே . சுப்பராயன்
மதிப்பு மிக்க அனுபவங்களால் தன் நாவல்களை நிரப்புகிறவர் சுப்ரபாரதிமணியன். அவரின் பயண அனுபவங்களும் அவரை பயண எழுத்தாளராக அடையாளம் காட்டுவதுண்டு.
மனித மனம் பற்றிய நுட்பமான பார்வைகளை சமூக இயல் விசயங்களுடன் எழுதி வாசகர்களின் மனங்களை ஊடுருவி உணர்த்தும் எழுத்தாளர்.
பொதுவுடமை இயக்கத்தைன் ஞானரதமான என் சி பி எச் பதிப்பகம் இவரின் 25க்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளது.
கனவு என்ற இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி தமிழ் நவீன இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருபவர் . எழுத்தால் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே . சுப்பராயன் அவர்கள் கோபியில் நடைபெற்ற மார்க்சீயக்கல்வி முகாமில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்டார். 13/5/25
0
அடையாள அரசியல்.சாதி.பாசிசம் சார்ந்த உரைகள் சிறப்பானவை..
இது சார்ந்து இடம் பெயர்ந்த தொழிலாளர் சமூக பாதுகாப்பின்மை.பின் நவீனத்துவம்.. அரசியல் கல்விஎன்று பல விடயங்களை பகிர்ந்து கொண்டேன் பின்னுரைகளில்...
தொலைபேசி ஊழியர்களுக்கு மார்க்சிய கல்வி வகுப்புகள்
இரண்டு நாட்களாக கலந்து கொண்டேன்
கோபியில்.சிறப்பான உரைகள்.. உரையாடல்கள்..
நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் உள்ளிட்டோர் வகுப்புகளை நடத்தினர்