சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 7 ஜூன், 2025

திருப்பூரின் மூத்த எழுத்தாளர் மரணம் அஞ்சலிக்கூட்டம் சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் குழந்தை வேலு அவர்கள், அவருக்கு வயது 89. .. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார் மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார் சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார்.சுயநினைவு இல்லாமல் இருந்தார் .அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள் காவ்யா பதிப்பகத்தில் இரண்டுநாவல்களை கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றார் ஆனால் அவருடைய படைப்புகள் எங்கும் பதிவு செய்யப்படாத சாதாரண மக்களின் அவலங்கள் அதுவும் வால்பாறை பகுதிகளில் தற்காலிக மின் ஊழியராக இருந்து மின்விநியோக கட்டமைப்பு சார்ந்த அவரை அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார் வால்பாறை பழங்குடி மக்களின் வாழ்க்கை சார்ந்து அவரின் சித்திரங்கள் அற்புதமானவை. திருப்பூர் கனவு இதழில் சிறுகதைகள் எழுதினார். செம்மலர், தாமரை. உண்மை போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார் பகுத்தறிவு சிந்தனையோடு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கு அஞ்சலி கூட்டம் சனியன்று பாண்டியன் நக்ர் அரசு பள்ளி எதிரிலான நாலேஜ் செண்டரில் நடைபெற்றது. திருமதி பாசிதாபானு தலைமை தாங்கினார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இயக்கிய ” நாணல் “ குறும்படம் அறிமுகம் செய்யப்பட்டது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய “ பாதுகாப்பு “ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது.திரைக்கதை வசனத்தை கிளமண்ட் விக்டர் எழுதினார், இதை ஒளிப்பதிவு செய்த மோகன் சென்றாண்டு அகால மரணம் அடைந்தார். சுப்ரபாரதிமணீயன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன. நாணல் அவரே இயக்கியது. செய்தி: சுப்ரபாரதிமணியன் 9486101003 வணக்கம் . நீர்த்துளி நாவல் மறு பதிப்பு 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே குறைவான விலையில் தந்ததற்கு நன்றி. NCBH மருதன் என் “ கோமணம் “ நாவலை கிழக்கு பதிப்பகத்தில் மறு பதிப்புக்கு தந்தேன். உடனே வந்தது. அது மலையாளத்திலும் வந்த்து அப்போதே. நீர்த்துளி நாவலை பிறகு அனுப்பினேன். பல முறை நினைவூட்டல் திருப்பி அனுப்பச் சொல்லியும் நூலகத்தில் பிரதிகளையும் கண்டேன் சென்றாண்டு மருதன் அவர்களை திருப்பூரில் சந்தித்த போது ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வரும் என்றார். எந்த ஜனவரி என்று அவரும் சொல்லவிலை எந்த ஜனவரி என்று நானும் கேட்கவில்விலை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது கிழக்குக்கு அனுப்பி …. விடியவேயில்லை. என் சி பி எச் பதிப்பகத்திற்கு அனுப்பி மறுபிரசுரம் வந்து விட்டது. 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே குறைவான விலையில் தந்ததற்கு நன்றி மருதனுக்கும் நன்றி.