சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 18 ஜூன், 2025
சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் எப்படி சுற்றுச்சூழல் பிரிவில் எப்படி இடம் பிடிக்கின்றன
இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை.
இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரகவுளும் சொல்கின்றன
அந்த வகையில் சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் சுற்றுச்சூழல் பிரிவில் இடம் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு துவங்கி பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன.
இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன
அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் சுப்ரபாரதி மணியனின் நாவல்கள் பெரும்பாலும் சொல்கின்றன.
இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் அவருடைய படைப்புகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க சுப்ரபாரதிமணியன் படைப்புகள் விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் அவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு அவர் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம்
1
திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார் –பிரபஞ்சன்
2
வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.
சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.
வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார். -சி ஆர் ரவீந்திரன்
விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும்.
இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.
1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.- பிரேமா நந்தகுமார்
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறிவகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும்.
இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில். - பொன்னீலன்
அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம்
திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாraதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார்.
அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது’’
.இவர்களின் கூற்றுகள் மூலம் திருப்பூர் சார்ந்த இயற்கை சிதைவுகள்எப்படி நிகழ்ந்துள்ளன அன்று தன் நாவல்களில் விவரிப்பதன் மூலமாக சுப்ரபாரதிமணீயனின் சாயத்திரை, புத்துமண், வெப்பம் ஆகியவை சுற்றுச்சூழல் படைப்புகளாக விளங்குகின்றன.. ( சுய அறிமுகமாய் இக்கட்டுரை தொகுப்புதிவ்யா பி ., ஆய்வாளர் )