சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 7 ஜூன், 2025
சென்னை சில்க்ஸ் நிறுவனர் நூற்றாண்டு துவக்க விழா
சென்னை சில்க்ஸ் நிறுவனர் நூற்றாண்டு துவக்க விழா
அவினாசியில் வியாழன் அன்று நடைபெற்றது. விழாவில் திரைப்பட இயக்குனர் எடிட்டர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சுப்ரபாரதி மணியன் சிறப்பு மலர் வெளியிட்டில் மேடையில் பங்கு பெற்றார். அந்நிறுவன பணியாளர்களின் ஓவியங்கள் கவிதைகள் கட்டுரைகள் போன்ற படைப்புகளை உள்ளிட்டது அந்த சிறப்பு மலர்.. அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது
விழாவில்
தலைமை ஏற்று பேசினார் நிறுவன மேலாளர் டி கே சந்திரன் அவர்கள் : “ இந்த நிறுவனம் ஆர்கானிக்காக வளர்ந்ததா அல்லது திட்டமிட்டு வளர்ந்த்தா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. இன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்றவை நம் முன் நிற்கிறது “ என்று குறிப்பிட்டார்
நிறுவனத்தின் இயக்குனர் ஆறுமுகம் பேசுகிறபோது 100 சதவீதம் நேர்மை என்பது வியாபாரத்திலும் தனிமனித வாழ்க்கையிலும் வியப்பான வெற்றிகளைத் தரும். வறுமையிலும் நேர்மையாக இருக்க எங்கள் அப்பாக் கற்றுக் கொடுத்தார் பயிற்சிகளும் முயற்சிகளும் தான் ஒரு மனிதனை வடிவமைக்கும் அவமானங்கள் முன்னேற்றத்திற்கு படிகளாக இருக்கும் சமூக உணர்வும் சமூகத்துக்காக பயன்படவேண்டும் என்ற சமூக விதியை மக்களுக்காக எடுத்துக் கொள்ளாத வணிக நிறுவனங்கள் வெற்றியை தொடர முடியாமல் போய்விடும் வறுமையிலும் 100% நேர்மை என்ற தாரக மந்திரத்தை நாங்கள் கடைபிடித்தோம். வறுமையும் மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று எங்கள் வாழ்க்கை தெரிவித்தது எதற்கு தகுதி கொண்டாலும் அதற்கு சரியான இடம் நமக்கு வந்து சேரும் பெரும் ஆசைப்பட்டால் நடக்காது. அப்படி நடப்பது 2 சதவீதமாக நிறைவேறி இருக்கும். ஆசை நிறைவேறினால் பிரபஞ்ச சக்தியே முழுமையாக உணரலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அப்படி ஆசைகளை பெரிதாக நினைத்தால் நடைமுறையில் காணாமல் போய்விடும். கவலை கற்பனையாக பின்னப்பட்டது அதை மீறி உழைப்பு வெற்றியை தரும்” என்று குறிப்பிட்டார்
நிறுவனர் குழந்தைவேலு அவர்களின் எல்லா மகன்களும் மகள்களும் ஒரு சேர விழாவில் காணப்பட்டதும் மேடையில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது
திரைப்படஇயக்குனர் லெனின் பேசுகையில் நம் பாரம்பரியம் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் அது பெருமை கூட. அதில் மொழி முதல் சாதி வரை பல விஷயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாளர்களும் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டதாக அமைந்தன