சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 30 ஆகஸ்ட், 2025
ஆக., 9ம் தேதி, 'தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்'
நம் சுவாசத்துடன் கலந்திருக்கும் வாசிப்புப்பயிற்சி, மனிதனை, சமுதாயத்தின் தனித்துவ அடையாளமாக காட்டுகிறது. வாசிப்பு மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக தான், ஆண்டுதோறும், ஆக., 9ம் தேதி, 'தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பை நேசிக்கும் சிலரது கருத்துகளை இங்கே பகிர்கிறோம்.
வாசிப்பும் தியானமே! சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்: வீட்டில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கும் போது, காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும் உணர்வு தான், புத்தகங்களை வாசிக்கும் போதும் கிடைக்கும். பக்கத்து வீடு, வீதி, தெருவில் வசிப்பவர்களுடன் கூட பழக முடியாத நகர சூழலில், புத்தகம் வசிக்கும் போது, பல்வேறு நாட்டு மக்களின் வாழ்வியல் சூழல், கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து, அவர்களுடன் மனதளவில் பழக முடியும். தனிமைப்படுத்தப்பட்ட மனிதன், சமூகத்தில் இருந்து துண்டிக்கப்படாமல் இருக்க புத்தகங்கள் உதவுகின்றன.
'டிவி' உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் தான் மனம் லயிக்கும். ஆனால், புத்தகம் வாசிக்கும் போது, அந்த கதையையொட்டிய யதார்த்தம் மற்றும் கற்பனை உலகில் மிதக்க முடியும்; கவனச்சிதறல் ஏற்படாது; சிந்தனை மேம்படும்; வாசிப்பு என்பதும், ஒருவகை தியானம் தான்.
தனித்துவம்கிடைக்கும் பாசிதாபானு, பேச்சாளர், பாண்டியன் நகர்: யாரும் கைவிட்ட நிலையிலும், நம்மை புத்தகங்கள் அரவணைத்துக் கொள்ளும். மனம் சோர்வடையும் போது, புத்தகம் படித்தால், மனம் இலகுவாகும்; தைரியம் பிறக்கும். பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியை என்ற முறையில் என் தனித்திறமையை வளர்த்து, படிப்படியாக உயர புத்தகங்கள் தான் உதவின.
பாடப்புத்தகங்களை கடந்து, பிற புத்தகங்களை படிக்கும் போது தான், உலகளாவிய அறிவாற்றல் கிடைக்கும். புத்தகம், ஒரு மனிதனை பண்புள்ள, பக்குவமுள்ள வர்களாக மாற்றுகிறது. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தனித்துவம் நிறைந்தவர்களாக இருப்பர்.
மனம் இலகுவாகும் நித்தீஷ்வரன், மாணவர், சிக்கண்ணா அரசு கல்லுாரி: புத்தக வாசிப்பு மனதை இலகு வாக்குகிறது; தன்னம்பிக்கை தருகிறது. தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களின் மனதை கூட மாற்றி, அவர்களின் வாழ்க்கையை திசை மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. நான் தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன்.
பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகம் படிக்கும் போது, அதில் வரும் சிறுகதை, இலக்கியம் சார்ந்த விஷயங்கள் என் பாடம் சார்ந்தும் உதவியாக இருக்கிறது. வாசிப்பு பழக்கம் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்கிறது.
வாசிப்பு, கண் போன்றது ஜெயபால், மூத்த குடிமகன்: எனக்கு, 87 வயதாகிறது; சிறு வயது முதல், புத்தகம் வாசிக்கிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கு அல்ல; மாறாக, அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் ஒரு விஷயமாகவே கருதுகிறேன். பக்குவப்பட்ட மனிதனாக வளர்ந்திருக்கிறேன்.
குறிப்பிட்ட விஷயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள புத்தகங்கள் தான் உதவுகின்றன. ஒரு மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அந்தளவு கல்வி முக்கியம். படிக்க படிக்க அறிவாற்றல் பெருகும்; அதற்கு புத்தக வாசிப்பு மிக அவசியம்.
தன்னம்பிக்கை வளரும் ஜெயக்குமார், கார்மென்ட்ஸ் நிறுவன உரிமையாளர், திருமுருகன்பூண்டி: பள்ளி, கல்லுாரி காலத்தில் இருந்தே புத்தகம் படிக்கிறேன். சிறுகதைகளில் இருந்து, புத்தகம் படிக்க துவங்கினேன். பின், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களை அதிகம் படிக்க துவங்கினேன். இதனால், எதிர்கொள்ளும் பிரச்னைகளைஎளிதாக கையாளும் பக்குவம் கிடைத்தது.
எந்தவொரு விஷயத்தையும் அடுத்தவரிடம் கேட்டுத் தெளிவுப்படுத்தி கொள்வதை விட, புத்தகங்களை படித்து தெளிவுப்படுத்திக் கொள்வது சிறந்தது. அச்சு வடிவில் வெளியாகும் புத்தகங்களில், உண்மைக்கு மாறான தகவல்கள் பெரும்பாலும் இருக்காது.
படைப்பாற்றல் வளரும் பூங்கொடி, கதை சொல்லி, மடத்துக்குளம்: சிறு வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. இதனால், பாடப்புத்தகங்களை படிப்பது எளிதாகிறது. மனப்பாட சக்தி அதிகரிப்பதை உணர முடிகிறது. வாழ்வியலில் சந்திக்கும் பிரச்னைகளைஎதிர்கொள்ளும் மன உறுதி கிடைக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து உலக விஷயங்களை விரிவாக, விளக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது.
கதை கேட்கும், குழந்தைகள் வாசிக்க துவங்குகின்றனர்; பின், தங்களின் படைப்பாற்றல், கற்பனையாற்றால் கலந்து எழுத துவங்குகின்றனர்; எழுத்தாளர்களாக மாறுகின்றனர். வாசிக்கும் பழக்கத்தால் நம்மிடம் பழகுபவர்களின் எண்ண ஓட்டத்தை எடை போட முடியும்.
dinamalare