சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஆகஸ்ட், 2025

என் பார்வையில் இரு சிறந்த நாவல்களைப் பற்றி 1 அலர் நாராயணி கண்ணகி நாவல் விளிம்பு மக்களை பற்றிய ஒரு நாவல். இந்த விளிம்பு நிலை மக்கள் வெகு சாதாரணமானவர்கள் .அவர்களின் விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணைப் பற்றிய நாவல் இது அவள் குடும்பமாக இருக்க ஆசைப்படுகிறாள் ,குழந்தை, குடும்பம் உறவுகள் என்று இருக்க ஆசைப்படுகிறாள் ஆனால் சமூகம் அவளை ஒரு விலைமகளாகத் தள்ளிவிட்டது வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் அங்கிருந்து வெளியேற ஆசைப்படுகிறாள். உடம்பு வேண்டாம் கூலி வேலை செய்தாவது பிழைக்க முடியும் என்று நம்புகிறாள் ஆனால் உலகத்தின் பார்வையில் இருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. உலகத்தின் பார்வையில் ஒரு முகமூடி இருக்கிறது அந்த முகமூடி பார்க்கிற பார்வையில் அவளை அப்படி மட்டும் பார்க்கிறார்கள் இந்த சூழலில் அவளுக்கு விதிக்கப்படுகிற வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த நாவல் சொல்கிறது இந்த நாவலின் கதாநாயகியும் அவனை சுற்றியுள்ள மனிதர்களில் வாழ்க்கையையும் சொல்கிறபோது எந்த பக்கம் சாயாமல் நாவலாசிரியர் வாழ்க்கை இழப்புகளை சொல்லிக்கொண்டு போகிறார். ஆசை, நம்பிக்கையை விட வாழ்க்கை கொடுக்கும் படிப்பினை மிக முக்கியமானது என்பதை அவளும் தெரிந்து கொண்டிருக்கிறாள் அவர்களோடு சேர்ந்து வாழ்கிற பல பெண்களும் மற்றும் கமலா பாட்டி லதா லட்சுமி பாலகிருஷ்ணன் கண்ணப்பன் காவல்துறையினர் போன்றவர்கள் கூட இதை உணர்த்துகிறார்கள் நெஞ்சை கவ்வுகிற மொழியில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை நேர்கோட்டுத் தன்மையில் சொல்லுகிற ஒரு முக்கியமான நாவலாக இருக்கிறது 2. ஞாலம் .. தமிழ் மகன் எழுதிய நாவல் இந்த நாவல் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த நிலம் சார்ந்த உரிமைக்கான போராட்டங்களை பற்றிப் பேசுகிறது. விவசாயிகள் போராடுகிறார்கள் அப்போதைய நிலப்பரப்பு அமைப்பு சாதி ஆதிக்கம் மிகுந்தது .போராடும் விவசாயிகளை பற்றியும் இந்த நாவல் சொல்கிறது உண்மையான சமூகத்தை, , உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களின்நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டு நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கையையும் ராமலிங்கர் -வள்ளலார் போன்றவர்களின் வாழ்க்கையையும் கூடவே சொல்கிறது.ஒரு காலத்தின் கதை. ஒரு நிலத்தின் கதை மக்களின் போராட்ட கதையாக இந்த நாவல் மலர்ந்திருக்கிறது. அன்புடன் சுப்ரபாரதிமணியன்