சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 30 ஆகஸ்ட், 2025
அஞ்சலி: சுப்ரபாரதிமணியன்
சுற்றுச்சூழல் காவலர்கள்
1. புலி மனிதர்:
அந்த புலி மனிதரை திருச்சூர் திரைப்பட விழா படமொன்றின் மூலம் அறிந்தேன். புலிகளின் தேசம் என்ற படமே அவரை அறிமுகப்படுத்தியது.
அந்தப்படம் புலிகளின் களம், புனித நீர், தெரியாதக் கடல், பாலைவன் ராஜ்யம்,கடவுள்களின் மலைகள், பருவ மழைக்காடுகள் ஆகிய பகுதிகளைக்கொண்டிருந்தது,
இந்தியாவின் இயற்கை சரித்திரங்களின் ஒரு பகுதியானார் அவர். இமாலயம் முதல் இந்தியாவைன் காடுகளில் அலைந்தவர்.முதல் பாகப் படத்தில் குஜராத்தில் வங்காளப்புலி ஒன்று குட்டிகளுடன் வாழ்வதையும் அதன் வேட்டை லாவகங்களையும் பற்றிச் சொல்கிறார். வேட்டையிலும் தோல்விகள் இருக்கும் என்பதைச் சொன்னவர் தன் வாழ்க்கைத் தோல்விகளையும் பற்றிச் சொல்கிறார்.கங்கை பிரம்மபுத்திரா பகுதி காட்டுவாழ்க்கையை நுணுக்கமாகச் சொன்னார் இதில்.
புலிகளுடன் வாழ்தல்
(Living with Tigers), புலிகளின் அந்தரங்க வாழ்வு (The Secret Life of Tigers), புலி கனல்: இந்தியாவில் புலிகளின் ஐந்நூறு ஆண்டு வரலாறு (Tiger Fire: 500 Years of the Tiger in India) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அறிவியல் தகவல்களை கதை வடிவில் உணர்வு பூர்வமாக தரும் ஆற்றல் மிக்க எழுத்து வல்லமை கொண்டவர்.
இவர் இயற்கைப் பாதுகாப்பு குறித்து 30 புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.
தாப்பர், 1959ஆம் ஆண்டில் செமினார் எனும் அரசியல் இதழை நிறுவிய ராஜ் தாப்பர், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ரோமேசு தாப்பர் ஆகிய இணையரின் மகனாக மகாராட்டிர தலைநகர் மும்பையில் பிறந்தார். புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் இவரது அத்தை ஆவார்.
வால்மிக் தாப்பர் இந்தியாவின் புலிகளின் குறித்து தனது ஆய்வினைப் பல தசாப்தங்களாக தொடர்ந்தார். இவர் பதேக்சிங் இரத்தோரால் ஈர்க்கப்பட்டார்
ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தாபரின் பெரும்பாலான களப்பணிகள் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தன, அத்துடன், மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்
இரணதம்பூர் அறக்கட்டளை இவரது பணியினை அங்கீகரித்து தலைமைப் பொறுப்பை வழங்கியது. இவர் 2005-ஆம் ஆண்டு புலிகள் பணிக்குழுவில் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். புலிகள்-மனிதர்களின் சகவாழ்வின் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்துவதாக தனது கருத்து வேறுபாடு குறிப்பில் பெரும்பான்மை பணிக்குழுவின் பார்வையை இவர் விமர்சித்தார், இது இவரது பார்வையில் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை.
1973-ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம்தோல்வியடைந்ததாக இவரது பகுப்பாய்வுகள் தெரிவித்தன.[8] பெரும்பாலும் அறிவியல் ரீதியாகப் பயிற்சி பெறாத வன அதிகாரிகளின் தவறான மேலாண்மை குறித்து கவனத்தை ஈர்த்த இவர், புலிகள் திட்டத்தினை விமர்சித்தார். இவரது கடைசி புத்தகமான தி லாஸ்ட் டைகர் (ஆக்சுபோர்டு யுனிவர்சிட்டி பிரசு) இந்த கூற்றினை வலுவாக கூறுகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மீது தாப்பர் தொடர்ந்து விமர்சித்ததில் ஒன்று ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளின் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்க இது விரும்பவில்லை என்பதும், அறிவார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு காடுகளில் அனுமதி இல்லை என்பதும் மையக் கருத்தாகும்.
'மச்ச்லி' என்ற புலியுடனான புகழ்பெற்ற உறவு இவரது சில வரலாறுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தாப்பரின் மிகவும் நேசத்துக்குரிய புலிகள் பிபிசி ஆவணப்படமான மை டைகர் ஃபேமிலியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
0
2. பசுமை மனிதன்
மண்ணுக்குள் விதையானார் பாலன் :
0
25 ஆண்டுகளில், இருபது லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்து, பராமரித்து வளர்த்துள்ளார் பாலன் அவர்கள் என்பதே பாலக்காட்டுச் சாதனையாகும். பாலன் அவர்களின் சாதனையாகும்
எப்போதும், பச்சை நிற சட்டையும், வேட்டியும் அணிந்து, எப்போதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவதையே மேற்கொண்டார்.
பாலன் அவர்கள் அவரைப் பற்றிய ஆவணப்படத்தில் காடுகளில் மலைகளின் அலைந்து திரிகிறார். எங்கெங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் மரங்களை நடுகிறார். நாவல் பழங்களை உலுக்கி எடுத்துச் சாப்பிடுகிறார். மற்றவர்களுக்கும் தருகிறார் .பனங் எடுத்து பலருக்குத் தருகிறார், பனரங்கொட்டைகளை பல இடங்களில் நடுகிறார் இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் துணையாக இளைஞர்களையும் பெண்களையும் வைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்பது முக்கியமாக இருக்கிறது. போகும் இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழல் கேடுபற்றியும் நெகிழியின் தீமைகளை பற்றியும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். உலகமயமாக்கல் செய்திருக்கும் தீய விளைவுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை குறைந்து போய் இருப்பதும் நுகர்வு அதிகமாக போயிருப்பதையும் பற்றி பேசுகிறார். இந்த உரைகளும் மற்றவர்களுடன் உரையாடுவதும் பலருக்கும் மகிழ்ச்சி வருகிறது. இந்த உரையாடல் தான் தன்னுடைய மரம் நடும் பணிகளைத் தாண்டி மிக முக்கியமான ஒன்று என்று அவர் கருதுகிறார். அதை அவர் பற்றிய ஆவணப்படம் சொல்கிறது.
அவரின் அயராது மரம் நடும் பணியை பலரும் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்கள். இயக்கம் வி கே சுபாஷ்
பாலக்காடு பாலன் என்று பிறரால் சொல்லப்பட்டாலும்
அவர் கல்லூர் பாலன். கல்லூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் அவர்.
, பாலக்காடு மாவட்டம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலன், . சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,பிரபவரி 2025ல் எழுபத்தைந்தாம் வயதில் இறந்தார். .
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், இயற்கையை பாதுகாப்பதை முக்கிய பணியாக கொண்டு செயல்பட்டார்.
இவர், தரிசாக கிடந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, நீண்ட கால முயற்சியால் மரக்காடாக மாற்றி, வனத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை அமைத்தும், பழங்களை உணவாக வழங்கியும் முன்மாதிரியான செயல்பட்டு மக்கள் மனதை ஈர்த்தவர்.
பாலக்காட்டின் வறண்ட பகுதிகளை பசுமையாக்கிய மனிதர். பாலக்காட்டின் படுமைப் பகுதிகளைப் பார்க்கிற போது நினைவு வருகிறவர் பாலன் அவர்கள்.