சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
என் மூன்று சிறுகதைகள் :
செம்மலர்:
சோற்று பொட்டலங்கள் என்று என்னுடைய கதை இம்மாத செம்மலரில்..
சோற்று பொட்டலங்கள் என்று முன்பு என்னுடைய கதை ஒன்றை கோவை பேரழில் குமரன் அவர்கள் ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார். அது திருப்பூர் பாண்டியன் நகர், தாய்த்தமிழ் பள்ளியில் எடுக்கப்பட்ட படம் .குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பேசிய படம்.பேரெழில் குமரன் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய நாற்பதாவது வயதில் இறந்துவிட்டார் .கோவைக்காரர்
இப்போது அதே பெயரில் ஒரு சிறுகதை .
இந்த சிறுகதையில் வட மாநில தொழிலாளரின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அல்லது புறக்கணிப்பது பற்றிய மையம். இதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை .வெளி மாநில குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்வி பற்றி அரசாங்கங்கள் கவலை கொள்வதில்லை .சில தன்னார் அமைப்புகள் நிதி பெற்று அவர்க்கான மாலை நேர வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தன இப்போது அந்த நிதிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தைகளுடைய கல்வி வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாய் விட்டது
0
பள்ளிக்கூடம் போகலாமா என்ற என்னுடைய திரைக்கதையின் முதல் அத்தியாயத்தை ஒரு சின்ன சிறுகதையாக ஆக்கி இங்கே தந்திருக்கிறேன் செம்மலரில்..
0
ஈஅல்ம் பெண்ணின் துயர அனுபவங்கள் விகடனில்
ஆனந்த விகடலில் வெளிவந்த என் சிறுகதை முடிவு பதிவுகள் டாட் காம் கனடா இணையதளத்தில்..
விகடன் இதழில் 1200 வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.ஆனால் அதில் மூலத்தில் 2000 வார்த்தைகளில் உள்ளது .அது அப்படியே பதிவில் டாட் காமில் வெளி வந்தது கிரிதரன் அவர்களுக்கு நன்றி
0
அமிருதா இதழில் மழை பொழிந்து.. தனிமையின் அனுபவங்கள் ஒரு இளம் பெண்ணின் கதையாக.. மார்ச் இதழில் ..
0
இப்போதைக்கு விகடன் கதை