சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
வானம்பாடிக்குப் பின் புதுக்கவிதை : சுப்ரபாரதிமணியன் நூல் 1982
வானம்பாடி இயக்கம் தோன்றி, வெளிப்பட்டு, பரவலாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த பரபரப்பான காலகட்டத்தில் பலர் அதன்
இருப்பும் விளங்காமல், திசையும் தெரியாமல் இருட்டில் நின்று ஒரு மாய யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், கை சலிக்கும் வரை. இப்போதும் கூட, ஒரு சிலர் இதன் பெயரைச் சொன்னாலே காது திருப்பிக் கொள்கிறார்கள்.
எழுத்தில் பார்க்கும்போது கண்களை மூடிக் கொள்கிறார்கள். என்றாலும். இதன் தோற்றமும், செயல்பாடும் தமிழ் இலக்கிய வரலாற்றில் புறக்கணிக்க
முடியாததொரு இடத்தைப் பெற்றுவிட்டது.
இதைப் போலவேதான் ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. க.நா.சு. போன்றவர்களைக் தொடங்கிய புதுக்கவிதை இயக்கமும். வரலாற்றை அப்படியொன்றும் எளிதாக இருட்டடிப்பு செய்துவிட முடியாது.
மகாகவி பாரதி செய்யுள் சிறையிலிருந்து கவிதைக்கு விடுதலை கொடுத்தது போலவே மிகச் சிலருக்கு விளங்கக் கூடிய பூடகமான புதுக்கவிதையிலிருந்தும், கவிதைக்கு விடுதலை தந்து விசாலமானதொரு களத்தை தேடித்தந்தது வானம்பாடி
இயக்கம். வாளம்பாடி இயக்கத்தின் தோற்றத்தைப் போலவே அதன் சிதைவும், சீர்குலைவும் ஒரு வரலாற்று உண்மைதான். கசப்பான உண்மை.
ஒரு இன்றியமையாத் தேவை காரணமாகவே ஒரு இயக்கம் தோன்றுகிறது. அதன் காரியம் முடிந்ததும் அது அழித்து விடுகிறது. எந்த ஒரு அமைப்புதான் சாசுவதமானது? ஆனால் இவ்வளவு சீக்கிரம், இப்படி உடைந்திருக்க வேண்டாம். அதற்கான காரணங்களை, விருப்பு ஒளிவு வெறுப்பில்லாமல்
மறைவில்லாமல்
சொல்வதற்கான
நேரம் இன்னும் வரவில்லை.
அது ஒரு கசப்பான கதை. வேதனையான கதை. இப்போது அது வேண்டாம். மிகச் சமீபகாலம் வரைக்கும்கூட புதுக்கவிதையை
கேலி பேசி வந்த சில சரித்திர காலத்து கவிஞர்கள் பொங்கிப் பிரவகிக்கும் புதுவெள்ளப் பெருக்குக்கு எதிராக நிற்க முடியாமல், புத்திசாலித்தனமாய்,
சட்டென மதம் மாறி, கொட்டி முழக்கிக் கொண்டு
புதுக்கவிதைத் தேரேறி வலம் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.
வரட்டும்... வரவேற்புக் கூறுவோம்.
ஆனால் உண்மையான உள்ளத் துடிப்போடு இந்தச் சமுதாயத்தை கூர்ந்து பார்த்துப் பலப்பல
இளைஞர்கள் புதுக்கவிதை படைக்க முன் வந்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்யமான சூழல்.
இவர்கள் மேடை மரியாதைகளை, பட்டம் பதவி பரிசுகளை எதிர்பார்த்து வந்தவர்களல்ல.
எங்கெங்கோ இருந்துகொண்டு தம் இதயத்துடிப்புகளை வடித்துக் கொடுத்துத் கொண்டிருப்பவர்கள்....
இவர்களை அறிமுகப்படுத்தி விமர்சித்திருக்கிறார்
நண்பர் ஆர்.பி.எஸ். சுருக்கமாக.
இப்புதிய கவிஞர்களோடு பழையவர்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கூட
குறிப்பிட்டிருக்கிறார்.
தேவையான, காலத்திற்கேற்ற ஒரு படைப்பு- நண்பர் யாருக்காகவும் வளைந்து கொடுக்கவில்லை
என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.வாழ்த்துகிறேன்.
- புவியரசு.