சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
நொய்யல் மீண்டும் ஜீவநதியாகும்.. நுால் வெளியீடு விழாவில் நம்பிக்கை
________________________________________
திருப்பூர்; திருப்பூர், பாண்டியன் நகரில், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் 'வேர்களை இழக்கும் பூமி' என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரை தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.
நுாலை வெளியிட்டு, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி பேசியதாவது:
சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பது தான், பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் விருப்பம். அந்த விருப்பம் இன்னும் மூன்றாண்டுகளில் நிறைவேறும்.
அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 160 கி.மீ, ஓடும் நொய்யல் ஆற்றில், பல கழிவுகள் கலக்கின்றன. அதனை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். மீண்டும் ஜீவநதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கரூர் தொகுதி மக்கள் நொய்யல் நதிநீர் பாசனத்தால் அதிகம் பயன்பெறுகின்றனர்.
மூன்றாவது குடிநீர் திட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெரும் பங்களிப்பில் கொண்டு வரப்பட்டது. அதில், அரசின் நிதியுதவி இருந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினரால் வெற்றி பெற்றது. நான்காவது குடிநீர் திட்டத்திற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கின்றன. காவிரி, பவானி ஆறுகள் வற்றினாலும், திருப்பூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்ற அடிப்படையில் நான்காவது குடிநீர் திட்டம் அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார். Dinamalar today
0