சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
திருப்பூர் இலக்கிய விருது 2024 உரை 3 : குமரி எஸ். நீலகண்டன்
நாடக அனுபவங்கள் குமரி எஸ். நீலகண்டன் Kanavu 120
உலகமே ஒரு நாடக மேடை என்போம். நாமெல்லாம் அதில் கதா பாத்திரங்களாக கொள்ளப்படுகிறது. இலக்கியத்தில் கதை, கவிதை, கட்டுரை, இசை, நாடகமெல்லாம் ஒரு அனுபவப் பகிர்வுதான். தன்னுடைய அனுபவங்களை வெவ்வேறு வடிவங்களில் பலரோடு பகிர்ந்து கொள்கிறோம். சமைக்கிற விதங்களால் அதன் வடிவங்கள் வேறுபடுகின்றன.
கதையானது ஒரு தனி நபராலே பகிரப்படுகிறது. கவிதையானது ஒரு கலையுணர்வுடன் அதி நுட்பமான ஒரு அனுபவத்தை அதி நுட்பமான ஒரு சித்தாந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதாகும். கவிதை அனுபவமானது வாசகனின் உட்கொள்ளும் தரத்தைப் பொறுத்து மாறுபடும். கட்டுரையானது எல்லோருக்குமான ஒரு கருத்துப் பகிர்வு. நாடகமானது ஒரு கதையினை சுவைபட எளிய மக்களின் இதயத்தில் வெவ்வேறு கதா பாத்திரங்கள் வழியாக உள்ளேற்றுவதாகும். நாடகத்தில் மக்களோடு மக்களாக மக்களின் மொழியில் வசனங்கள்பேசி அனுபவத்தை பகிர்வதாகும். மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் எல்லாம் ஒரே குடும்பம் சார்ந்த கலை வடிவங்கள். மேடை நாடகங்களின் இன்னொரு பரிணாம வளர்ச்சியில் திரைப்படம் உருவானது. ஆனால் எல்லாவற்றையும் விட வானொலி நாடகமானது ஒரு தனித்துவம் வாய்ந்த கலை வடிவம்.
திரைப்படத்தில் ஒரு கதை நடக்கும் நிகழ்விடத்தை காட்சியில் கொண்டு வந்து விடலாம். கதா பாத்திரத்தின் உணர்வுகளை துல்லியமாய் காட்சியாய் நடிப்பில் காட்டி விட இயலும். கதா பாத்திரத்தின் பொருளாதார சூழலை அணியும் ஆடைகளால் காட்சி வழி காட்டி விட இயலும். திரைப்படத்தில் கதா பாத்திரத்தின் நடிப்பு திறனோடு ஒப்பனையும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் வானொலி நாடகத்திற்கு ஒப்பனை வேண்டாம். கதா பாத்திரங்களின் முக தோற்றங்கள் எவ்வாறும் இருக்கலாம். கை கால்களற்ற ஒரு மாற்றுத் திறனாளி கூட ஒரு நெப்போலியனாக நாடகத்தில் நடிக்க இயலும். ஒரு ராஜா கதாபாத்திரத்திற்கு கிரீடம் தேவையில்லை. அரண்மனை தேவையில்லை. வாள் தேவையில்லை. போர் களம் தேவையில்லை. எல்லாவற்றையும் கதா பாத்திரத்தின் வசனங்களில் உணர்த்த வேண்டும்.
கதா பாத்திரத்தின் இயல்பு, கதைக் களம், கதா பாத்திரம் உரையாடும் நபருடனான உறவு, கதை நடக்கிற காலம், நேரம், காலநிலை, பருவமெல்லாவற்றையும் வசனம் வழியாக இயல்பாக உணர்த்த வேண்டும்.
கதையில் நல்ல ஆர்வமேற்றுகிற அளவிலான துவக்கம், காட்சிகளைப் பதிய வைக்கிற வசனம், பிரச்சனைகள், கதைக்கேற்ற நகைச்சுவை, உச்சக் கட்ட காட்சி என எல்லா அம்சங்கள் இணைந்தே ஒரு நல்ல நாடகத்தை வழங்க இயலும்.
நடிக்கிற கதா பாத்திரத்தின் குரல் மிக முக்கியமானது. கதா பாத்திரத்தின் மொழி வளம், உச்சரிப்பு எல்லாம் மிக உன்னதமாக இருக்க வேண்டும். நடிக்கும் கலைஞர் தனது கதா பாத்திரத்தை தனது உணர்வு பூர்வமான வசனத்தால் கதையை உணர்த்த வேண்டும். வசனத்தின் ஏற்ற இறக்கங்கள் உணர்வுகளோடு ஒன்றிணைந்து இயங்க வேண்டும். ஒலி வாங்கியின் முன்பு வசனம் பேசும் போது நம் ஒலியின் பாதை, ஒலி வாங்கியின் தூரம் எல்லாம் சரியான அளவோடு இருந்தால்தான் கதா பாத்திரத்தின் உணர்வுகள் நேயர்களை சரியாகச் சென்றடையும்.
ஒரு வானொலி நாடகத்தில் காஷ்மீரை காட்சியாக காட்ட இயலாது. காஷ்மீரில் இருக்கும் உணர்வை வசனத்திலும், குரல் நடுக்கத்திலும், வியப்பிலும், உச்சரிப்பிலும், பின்னணி ஒலியிலும், இசையிலுமாக உணர்த்த வேண்டும். திரைப்படத்தில் ஒரு கடவுளைக் காட்டுவதை விட வானொலியில் ஒரு கலைஞரின் குரல் வளத்தால் இசைப் பின்னணியில் கடவுளை உன்னதமாக காட்சிப் படுத்த இயலும். தொலைக்காட்சியில் ராமாயண கதா நாயகனான ஸ்ரீராமர் அதில் நடிக்கிற கலைஞரின் முகமாகவே பார்வையாளரின் மனதில் பதிக்கப் படுகிறார். இயக்குநர் உருவாக்கிய ராமரே பார்க்கும் பார்வையாளரின் மனதில் பலவந்தமாக பதிக்கப் படுகிறார்.
தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரே ராமன்தான் காட்சிப்படுத்தப் படுகிறார். பல பார்வையாளர்களின் கனவு ராமனின் சித்திரத்தோடு அந்த நாடக ராமன் முரண்படலாம். ஆனால் வானொலியிலோ குரல், வசனம் வழியாக ராமர் நேயர்களின் உள்ளத்தில் காட்சிப் படுத்தப் படுகிறார். கேட்கும் லட்சக் கணக்கான நேயர்களுக்கு வசனங்கள் வழி அவரவர் ராமர்களை கற்பனை செய்து கொள்ளும் சுதந்திரம் வானொலி நாடகத்தில் மட்டுமே இருக்கிறது.
வானொலி நாடகத்தை தயார் செய்யும் போது கதையின் கதா பாத்திரங்களுக்கேற்ற அளவில் குரல் கொண்ட கலைஞர்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியமாக கவனிக்கத் தக்கது.
வானொலி நாடகத்தில் பின்னணி இசையோடு, காட்சியை உணர்த்துகிற இடி, மழை, புயல், ஆடு, மாடு, காகம், ரயில், பேருந்து, ஆட்டோ, பேருந்து நிலைய சலசலப்பு, உணவு விடுதி, கலவரம், போர் என எல்லா ஒலிப் பின்னணியும் சரியாக இருந்தால்தான் கதையின் களம் கதா பாத்திரங்களோடு நேயர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியும். சில வேளைகளில் வசனங்களின் பின்னணி இசையின் அளவு அதிகமானால் வசனங்கள் சரியாக கேட்க இயலாமல் போகலாம். கதை கூட புரியாமல் போகலாம்.
நடிகர் சிவாஜி கணேசன், மனோரமா, டெல்லி கணேஷ், ஆர்.எஸ்.மனோகர், சகஸ்ரநாமம், எஸ்.என்.பார்வதி, காத்தாடி ராமமூர்த்தி உட்பட பல முன்னணி திரைக் கலைஞர்களெல்லாம் சென்னை வானொலியின் முக்கியமான நாடகக் கலைஞர்கள்.
நான் ஒரு ’பி’ கிரேடு வானொலி நாடக கலைஞனாக பல வானொலி நாடகங்களில் நடித்துள்ளேன். சுந்தர ராமசாமியின் பிரசாதம் நாடகத்தில் போலிஸ் காரராக நடித்துள்ளேன். எஸ். ராமகிருஷ்ணனின் ’காந்தியைச் சுமப்பவர்கள்’ நாடகத்தை வானொலி நாடகமாக்கி இருக்கிறேன். ஜெயமோகனின் ’நிலம்’ சிறுகதையையும் வானொலி நாடகமாக்கி அந்த நாடகத்தில் பங்கேற்றிருக்கிறேன். சென்னை வானொலியில் நிகழ்ச்சி பொறுப்பாளராக ஓய்வு பெற்ற அண்ணாமலைப் பாண்டியன் பல உன்னதமான தமிழ் சிறுகதைகளை வானொலி நாடகமாக்கி சிறப்புற வழங்கி இருக்கிறார்.
30 வருடங்களுக்கு முன்புவரை வானொலியே ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருந்த தருணத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 3 மணிக்கு ஒலிபரப்பாகும் நாடகத்தை கேட்க நேயர்கள் ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.
வானொலி நாடகத்தில் மட்டுமே பேரண்டத்தையும், பெரும் புயலையும், கடலையும், சொர்க்கத்தையும், நரகத்தையும், அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும், உலகின் தென் துருவத்தையும், நிலாவையும். சூரியனையும் அங்கு போகாமலேயே காட்சி படுத்த இயலும். ஒலி மட்டுமே போதும் ஒரு நாடகத்தை காட்சிப் படுத்த. ஆனால் அந்த ஒலியினால் புள்ளியிட்டு உன்னதமான கோலத்தை உருவாக்கி அதன் வழி கதா பாத்திரங்களை வெற்றிகரமாக உலா வரச் செய்வதுதான் மிகவும் சவாலானப் பணி.
நாடகம் வாழ வேண்டும். உலகமுள்ள வரை நாடகம் வாழ வேண்டும். தன்னுயர்வுக்காக வாழ்க்கையில் நாடகம் செய்பவராக அல்ல. வாழும் சமூகம் பற்றிய அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள…
வாழும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை பிரதிபலிக்க…
வாழ்ந்த சமூகத்தின் மதிப்பீடுகளை புதிய தலைமுறையிடம் கொண்டு செல்ல…
வாழ்ந்த வாழுகிற சமூகத்தின் உயர் மதிப்பீடுகளை புதிய தலைமுறையிடம் கொண்டு செல்ல…
வாழ்ந்த சமூகத்தால் விதைக்கப்பட்டு வேரூன்றிய விஷக் களைகளை வேருடன் பிடுங்கி எறிய…
உலக அமைதிக்காய்….
உலகின் உன்னத உயர்வுக்காய்…
கலாச்சார மதிப்பீடுகளை உலக மக்களிடையே கதா பாத்திரங்கள் வழி கொண்டு செல்ல…. நாடகம் வாழ வேண்டும்.