சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “
என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் அமெரிகாவிலிருந்து இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள்
“ சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது
” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய அகாடமி என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்
0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா
0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா
0 பாரதியின் சிந்தனைகள் இன்றைக்கு எப்படி தேவை
0விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது
0 எழுத்தில் சரித்திர கதைகள் இன்றைக்கு ஏன் தேவை
0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது
0 சங்க இலக்கிய மறு வாசிப்பு ஏன் அவசியம்
0 தெலுங்கு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா
0 ஜெயகாந்தன் ஆண்டாள் பிரதர்சினி போன்றோரின் கதைகளை முன்வைத்து தமிழ் இலக்கியத்தில் மனித நேயம்
ஆகிய தலைப்புகளில் எழுத்தார்கள் பேசினார்கள்.
திருப்பூர் சக்தி விருது 2025 விழா ( 21ஆம் ஆண்டில் )
09/03/25 ஞாயிறு மாலை 4 மணி- பார்ச்சூன் ஹோட்டல், 15 வேலம்பாளையம் சாலை, அனுப்பர்பாளையம், திருப்பூரில் நடைபெற்றது.
தலைமை: கேபிகே செல்வராஜ் ( தலைவர் முத்தமிழ்ச்சங்கம் )
முன்னிலை : சுப்ரபாரதிமணியன்( கனவு ), பி. குமார் ( ஸ்டார் அசோசியேட்ஸ்)., நாதன் ரகுநாதன்
21 ஆம் ஆண்டில் விருது பெற்ற பெண் படைப்பாளிகள் :
அல்லிபாத்திமா /பத்மஜா நாராயணன்/ இவள் பாரதி /கயல்
சிவசெல்வி செல்லமுத்து / திராவிடமணி/ மோகனப்ரியா
பிருந்தா சீனிவாசன்/ காயத்ரி ஆர்/// ம. ஜீவ ரேகா/ கனகதூரிகா
வி. இளவரசி சங்கர்/// ரேவதிராம்/ அமுதா செல்வி/ பவுசியா இக்பால்
மருத்துவர் தேவி / யசோதா பழனிச்சாமி / கனலி விஜயலட்சுமி
விஜிலா தேரிராஜன்/ எஸ் வைஜெயந்தி / ஜெ. விஜயலட்சுமி
பிரியா // எஸ். ஜெயலட்சுமி/ வி . கலாவதி/ விஜி ரவி /
சிறப்பு விருந்தினர் :
திருமதி தி. லாவண்யா சோபனா அவர்கள்
( மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர் )
நன்றியுரை : கேபிகே பாலசுப்ரமணியன் ( செயலாளர், முத்தமிழ்ச்சங்கம்
:
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்/கனவு/ ஸ்டார் அசோசியேட்ஸ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின
தொடர்புக்கு : நாதன் ரகுநாதன் 90034 41425
நாகன் ரகுநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்