சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 8 ஏப்ரல், 2025

.நேர்காணல் - எழுத்தாளர் – சுப்ரபாரதிமணியன் ( கண்டவர் செ. சுரேஷ் , சென்னை 8778970794 ) 1. ேீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?அதற்கான அகச்சூழல் புைச்சூழல் எப்படி அறமந்தது? ோன் அடிப்பறையில் ஒரு நேசவாளக் குடும்பத்றத நசர்ந்தவன். ோன் எழுத்துத் துறைக்கு வந்தது ஒரு தற்நசயலான ஒன்றுதான். முதலில் பள்ளிப் பருவங்களில் ராணி, குமுதம் நபான்ை வார இதழ்கறள வாசிக்கத் நதாைங்கிநனன். ோன் நகாறவ பிஎஸ்ஜி கறலக் கல்லூாியில் கணிதவியல் படித்து நகாண்டிருந்த காலத்தில், மாணவர்களுக்காக கல்லூாி தமிழ்த்துறை புது நவள்ளம் என்ை ஒரு பத்திாிறகறய ேைத்தி வந்தது. இப்பத்திாிறகயில் இருந்துதான் எனக்கு எழுத்திற்கான அைிமுகம் கிறைத்தது. எங்கள் கல்லூாியில் திருக்குைள் அத்தியாயம் என்ை ஒரு அறமப்பு ேிறுவப்பட்ைது. அவற்ைில் ஒவ்நவாரு மாணவரும் திருக்குைளில் ஒவ்நவாரு அத்தியாயம் பற்ைிய தங்களது கருத்துக்கறள கூை நவண்டும். இந்த அறமப்பில் ஆண்டுநதாறும் பாிசு தருவார்கள். எனக்கும் ஒரு ஆண்டு பாிசு கிறைத்தது. பின்னர் நஜயகாந்தனின் எழுத்துக்கள் என்றன மிகவும் கவர்ந்தன. தினமும் ோம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வியறலயும் விளிம்பு ேிறல மக்கறளயும் பைம்பிடித்து காட்டும் அவரது பறைப்புகள் என்றன நமலும் வாசிக்கத் தூண்டியது. நஜயகாந்தன் அவர்கள் திருப்பூர் வரும் சமயங்களில் அவரது கூட்ைங்களில் பங்நகற்க எனக்கு வாய்ப்பு கிறைத்தது. அவரது கர்ஜறனயான நபச்சாற்ைல் எனக்குள் ஒரு மிகப்நபாிய தாக்கத்றத ஏற்படுத்தின. ோன் முதுேிறலக் கணிதவியல் படிக்கும் நபாது என் பள்ளி கால ேண்பர்கறள மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிறைத்தது. அவர்கநளல்லாம் உயர்ேிறலப் பள்ளியுைன் படிப்றப ேிறுத்திக் நகாண்டு பனியன் கம்நபனிக்கு பணிக்கு நசல்லத் நதாைங்கிவிட்ைார்கள். அப்நபாழுது அவர்கள் குைிஞ்சி என்ை ஒரு றகநயழுத்துப் பத்திாிறக ேைத்தி வந்தனர். அப்பத்திாிறகயில் கவிறத எழுத எனக்கு வாய்ப்பு கிறைத்தது. ோன் எழுத்துத் துறைக்கு வந்ததற்கான ஆரம்பமாகவும் அறமந்தது. 2. புத்துமண் ோவல் உருவான பின்னணி என்ன? ோன் திருப்பூறரச் நசர்ந்தவன் என்பதால் திருப்பூாில் ேைக்கும் சுற்றுச்சூழல் அவலங்கறள கவனிக்க நதாைங்கிநனன். ேதி மாசுபாடு, ேிலத்தடி ேீர் மாசுபாடு, மண் மாசுபாடு நபான்ைறவகள் திருப்பூாில் ேிகழ்ந்த வண்ணம் இருந்தன. அங்கு ேிறைய தன்னார்வ குழுக்கள் இச்சுற்றுச்சூழல் சீர்நகடு குைித்து பலவிதமான விமர்சனங்கறள முன் றவத்தார்கள். இருப்பினும் நபரு ேிறுவனங்களின் கார்ப்பநரட் முதலாளிகளிைம் அவர்களுறைய விமர்சனங்கள் எடுபைவில்றல. பின்னர் ோனும் சில தன்னார்வ நதாண்டு அறமப்புகளுைன் நசர்ந்து பயணிக்க நதாைங்கிநனன். நபரணி, கருத்தரங்குகள் ேைத்துவது, சில எழுத்தாளர்கறள அறழத்து கூட்ைங்கள் ேிகழ்த்துவது நபான்ை பணிகறள நசய்து வந்நதன். பின்னர் ஒரு எட்டு ஆண்டுகள் இறைநவளி எடுத்து றைதராபாத்தில் உள்ள நதாறலத் நதாைர்பு அலுவலகத்தில் பணி நசய்து வந்நதன். பின்னர் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்த பிைகு திருப்பூாில் நபரும் மாற்ைங்கறள ோன் கண்நைன். என் ேண்பர்கள் சிலர் பின்னலாறை ேிறுவன ஏற்றுமதியில் நகாடி கட்டி பைந்தார்கள். திருப்பூறர நபாறுத்தவறர அந்ேிய நசலவாணி அன்று 25 ஆயிரம் நகாடி வறர இருந்தது. இன்று அது 50,000 நகாடி எட்டி உள்ளது. இருப்பினும் 50,000 நகாடிக்கு பின்னால் நபருவாாியான சுற்றுச்சூழல் சார்ந்த நபரழிவுகறள எதிர் நகாள்ள நவண்டி இருந்தது. அவற்ைின் சாயக்கழிவுகள் மாசுபாடு, வீட்டு கழிவுகள் மாசுபாடு ஆகியறவ நோய்யல் ேதியிநல கலந்து ேதி மாசறைந்து விட்ைது. இது தவிர குழந்றத நதாழிலாளர்களும் அதிகளவில் பல ேிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ைனர். இவற்றைநயல்லாம் நசர்த்து எழுதத் தூண்டியதுதான் சாயத்திறர ோவல். முதன்முதலாக என்னுறைய சாயத்திறர ோவல் எழுதி நவளிவரும்நபாது பின்னலாறை ேிறுவன முதலாளிகளிைமிருந்து மிகப்நபாிய எதிர்ப்பு எனக்கு எழுந்தது. இவ்வாைாக சூழலியல் ஆர்வலர்கள் எதிர்நகாள்ளும் சிக்கல்கறள ஒரு ோவலாக பறைக்க நவண்டும் என்ை எண்ணம் நதான்ைியது. அவ்வறகயில் உருவானநத இந்த புத்துமண் ோவல். 3. பறைப்பிலக்கியம் வழியாக சுற்றுச்சூழல் குைித்து உறரயாடுதலின் அவசியம் என்ன? கரூாில் சுப்பிரமணியம் என்ை ஒரு சூழலியல் ஆர்வலர் இருந்தார். அவர் சுற்றுச்சூழலுக்கு எதிராக நசயல்படுவர்கறள பற்ைி தனது பத்திாிறககளில் எழுதி வந்தார். அவர் அதனால் பல சிக்கல்கறள எதிர்நகாள்ள நவண்டி இருந்தது. அவருறைய இைப்பிற்கு பின்னர், அவறரப் பற்ைிய குைிப்புகறள நசர்த்து எழுதப்பட்ைது தான் இந்த புத்து மண் ோவல். இது முழுக்க முழுக்க ஒரு உண்றம சம்பவம். ஒரு சுற்றுச்சூழறலக் காப்பாற்ை ேிறனக்கும் சூழலியல் ஆர்வலர், அவர் சந்திக்கும் இன்னல்கள் நபான்ைவற்றை இப்புதினத்தில் நதாகுத்து எடுத்துறரக்கப்பட்டுள்ளது. திருப்பூாில் சூழலியல் சார்ந்த பாதிப்புகள் ஆங்காங்நக ேிகழ்ந்த வண்ணம் இருந்தது. என்னுறைய கனவு பத்திாிறகயில் இது நதாைர்பான பல்நவறு கட்டுறரகறள ோன் எழுதியுள்நளன். கட்டுறர வடிவில் எழுதப்படும் பறைப்புகள் இலக்கிய மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் மட்டுநம படிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதுநபால் சுற்றுச்சூழல் நதாைர்பான சிக்கல்கறள ஒரு புதினமாக பறைத்தால் அறனவரும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பநத என்னுறைய கருத்து. அதனாநலநய என்னுறைய பறைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த பறைப்புகளாக சாயத்திறர, புத்துமண், நவப்பம் நபான்ைறவ புதினங்களாக நவளிவந்தன. றேஜீாியாவில் நகன் சநரா விவா என்ை ஒருவர் விவசாய ேிலங்களில் வாயுப் பழுப்புகள் புறதப்பதற்கு எதிராக நபரும் நபாராட்ைங்கறள எதிர்நகாண்ை சுற்றுச்சூழல் நபாராளி. இவற்ைிற்நகதிரான நபாராட்ைத்தில் அவர் நகால்லப்பட்ைார். இதுநபான்று பல சுற்றுச்சூழல் நபாராளிகள் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நபாராட்ைங்களில் தன் இன்னுயிர்கறள ேீக்கின்ைனர். இதுநபான்ை சுற்றுச்சூழல் நபாராளிகறள யாரும் சாிவர கண்டுநகாள்வதில்றல. ஆறகயால் என்னுறைய ோவல்கள் இதுநபான்ை கதாபாத்திரங்கறள றமயமாக றவத்து பறைக்கும் நபாது, அவற்றை படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்றம சம்பவங்கள் குைித்த நசய்திகறள அைிய வாய்ப்புள்ளது என்று ோன் ேிறனக்கிநைன். ஒரு எழுத்தாளர் என்ை முறையில் இது நபான்ை நபாராளிகறள கறதமாந்தர்களாக சித்தாித்து என் பறைப்புகளில் நகாண்டு நசல்வறத ோன் நபருறமயாக கருதுகிநைன். 4. புத்துமண் ோவலில் ‘மண்’ பாதுகாப்பு குைித்து அதிகம் நபசுகிைீர்கள் ஏன்? கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆற்றுமணல் அதிகளவில் அள்ளப்படுகிைது. ஆறுகநள ேீறரப் பாதுகாத்து விவசாயம் நபான்ை நதறவகளுக்கு பயன்படுத்தப்படுகிைது. ஆற்றுமணல் அள்ளப்படுவதால் ஆறுகள் ேீறர உைிஞ்சி நதக்கும் தன்றமறய இழக்கிைது. புத்துமண் ோவலில் வீரண்ணன் எனும் கதாபாத்திரம் மணல் திருட்டுக்கு எதிராக நபாராடி, மணல் நகாள்றளக்காரர்களால் நகால்லப்படுவான். இந்த சம்பவமும், கதாபாத்திரமும் கரூாில் ேைந்த ஒரு உண்றம சம்பவம். இதுநபான்ை நபாராளிகள் மட்டுமல்லாது மணல் நகாள்றளறய தடுக்கும் பல நேர்றமயான அரசு அதிகாாிகளும் நகால்லப்படுகிைார்கள். ஆதலால் இவற்றை றமயமாக றவத்நத இப்புதினம் எழுதப்பட்ைது. 5. புத்துமண் ோவலில் உங்களுக்கு கிறைத்த மைக்கமுடியாத பின்னூட்ைம் என்ன? புத்துமண் ோவல் நவளிவந்த பின்னர் ேிறைய வாசகர்கள் என்றன நதாைர்பு நகாண்டு தங்கள் கருத்துக்கறள நதாிவித்தனர். அவற்ைில் குைிப்பாக சாகித்ய அகாைமியின் முன்னாள் தறலவர் ைாக்ைர்.ராஜமுத்து அவர்கள் இந்ோவல் குைித்து தன் கட்டுறரயில் குைிப்பிட்டு எழுதியுள்ளார். அது மட்டுமல்லாது பல கல்லூாிகள், பல்கறலக்கழகங்களில் இந்த புத்துமண் ோவல் பாைமாக றவத்திருப்பதநத இதன் சிைப்பு. அதுமட்டுமன்ைி ேிறையப் பிரதிகள் விற்பறனயானது. இறவ அறனத்றதயும் சிைந்த பின்னூட்ைமாகநவ ோன் கருதுகிநைன். 6. பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் இறையில் உள்ள நவறுபாடுகள் பற்ைிய உங்களது கருத்து என்ன? எந்த ஒரு பறைப்பும் உண்றம சம்பவங்கள் இல்லாமல் நவறும் புறனவுகறள றவத்து உருவாக்க முடியாது. அவற்ைில் எத்தறன சதவீதம் உண்றம இருக்கிைது? எத்தறன சதவீதம் புறனவு இருக்கிைது? என்பறத மட்டுநம பார்க்க நவண்டும். எதார்த்தம் மட்டுநம ஒரு மிகப்நபாிய கறல வடிவமாகாது. என்னுறைய ோவல்கள் அறனத்துநம 99 சதவீதம் உண்றமக் கறதறயத் தழுவி எழுதப்பட்ைது. இவ்வாறு பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் உள்ள இறைநவளி குறையும்நபாது அந்த பறைப்பினுறைய வலிறம அதிகமாக இருக்கும். Subrabharathimanian, Tiruppur 0 சுப்ர பாரதி மணியன் : 25/10/1955 . / 69 வெளியாகி உள்ள நூல்கள் : 115 நூல்கள் / 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் / 3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 ) பரிசுகள் : 0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு 0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998 0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016 0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022 0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் 0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021 0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021 0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக 0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது 0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023 0 தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன் 1 0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன் 0 பொறுப்பு: 0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர் 2008 - 12 0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர் மொழிபெயர்ப்பு: 0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது 0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும் மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும். 0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன சுற்றுச்சூழல் நூல்கள் : நாவல்கள் : 0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண் 0 கட்டுரைத் தொகுப்புகள் : தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத் தொகுப்புகள் இதழியல் : 0 கனவு இலக்கியக் காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 0 கனவு திரைப்பட இயக்கம்,, 0 தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 30 ஆண்டுகளாய். திரைநாவல்கள் : 0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 70 திரைக்கதைகள் உள்ளன. திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார். குறும்படங்கள்: 0 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம் ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை ) இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன.. ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு பயணங்கள்: 0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய் சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து
கதை சொல்லித் திருவிழா 2025 0 சிறார் இலக்கியத் திருவிழா 2025 திருப்பூரில் கல்வியாளர் சசிகலா பசுபதி தலைமையில் நடைபெற்றது 0 0 கதை சொல்லிகளின் சிறப்புரைகளாக நான்சி கோமகன், சரிதா ஜோ சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி அரசப்பன், ஆனந்த குமார் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 0 சிறார் ஓவியக் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்கஅலமேலு திறந்து வைத்தார் சிறார் நூல்கள் கண்காட்சியை மூத்த எழுத்தாளர் மதுராந்தகன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிரிஜா சுப்ரமணியன் , பாக்யலட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறாரின் கதை சொல்லல் ( ஆங்கிலம்/தமிழ் ) நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கு பெற்றனர். சிறார் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வியாளர் பசுபதி, சமூகப் பணியாளர்கள் ஸ்டார் குமார், லீலா ஜகன் உள்ளிட்டோர் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர். 0 நன்றியுரை : மோகன்ராஜ் மனோகரன், தமிழாசிரியர் கனவு இலக்கிய அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. செய்தி : சுப்ரபாரதிமணியன், 9486101003 புகைப்படங்கள் : கதை சொல்லும் மாணவி / சிறப்புரை ஆற்ரிய நான்சி கோமகன்
நொய்யல் மீள சாத்தியங்கள் தெரிகின்றன நொய்யல் விழா கோவை திருப்பூர் பகுதியின் நொய்யல் நதிக்கரை, சமவெளியில் வாழக்கூடிய உங்களுக்கு ஒரு உறுத்தலானtது நொய்யல் விழா என்பது. அதில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவு மாசு அதனால அதை ஒட்டி நம்மளோட கலை பண்பாட்டு நிகழ்வுக்கு பெயர் வைப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆனால் ஆச்சரியமான பல விஷயங்கள் இருக்குது அண்மையில் சூலூர் பெரிய குளத்துல நடந்த இடத்துல ஒரு ஆய்வுல பழமையான அழிஞ்சு போயிருப்போம்ன்னு நம்புன உயிரினங்கள், நன்னீர்ல வாழக்கூடிய அதிக வகை மீன் உயிரினங்கள் வந்து இப்போதும் இருக்குது அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அது வந்து இன்னும் இதன் தன்மை வந்து மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு முன்னாடி வரைக்கும் இருக்கு. இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நதி பாயும் இடத்துக்கு முன்பாக வரைக்கும் நொய்யால வந்து பழையபடி மாசற்ற திறமையோடு மாற்ற முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்குது மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதன் கிழக்குப் பகுதியில் வந்து அங்கிருந்து பாத்தீங்கன்னா, அது வந்து ஈரோடு மாவட்டத்துல நுழையக்கூடிய பகுதிகளில் ஒரு ரெண்டு ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய நீரில் காரத் தன்மையும் அமிலத்தன்மையும் அதில் கலந்து இருக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த உப்புகளையும் நீக்கும் பணி என்கிறது மிகப்பெரிய சவால். அந்த சவாலை வந்து முன்பைக்காட்டிலும் இப்போ வந்து இன்னும் நிறைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்துகிட்டு இருக்கிறதுனால அதை செய்து ஒரு எதிர்காலத்தில் வெற்றிகரமாக்க ம்முடியும். 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி மாசற்ற ஒரு நதி, கடந்த 16 ஆண்டுகளாக ஓரளவு மாசு குறைந்திருக்கிறது அதை தீர்ப்பு வந்து 16 ஆண்டுகள் ஆகுது கிட்டத்தட்ட இன்னொரு பத்து வருடங்களில் வந்து முழுமையான மாற்றத்தை வந்து அடைய முடியும் என்பது ஒரு நம்பிக்கை.. பெரிய நம்பிக்கை இது . இந்த நொய்யல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கம் சார்ந்த விஷயங்களை வந்து உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சுற்றுசூழல் போராளி நண்பர் ஒருவருடனான உரையாடலில்…
விகடன் கதை 0 முடிவு : சுப்ரபாரதிமணியன் “ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘ சந்திரமதியின் முகத்தில் தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி. “ மொதல்லே உக்காருங்க “ “ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும். அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “ சந்திரமதிக்கு சந்திரசேகரின் வீட்டு நிலமை நன்கு தெரியும். மூன்று அறைகளில் பத்துக்குப்பத்து சமையலறை. மீதி உள்ள இரண்டு அறைகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் அறையில் அவன் அம்மா மூலையில் உட்கார்ந்திருப்பார். காலில் சின்னதாய் அடிபட்ட பின் மூலையில் இருந்த அவரின் கட்டில் வெளியில் சென்று கிடக்க அவர் தரையில்தான் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு அறை படுக்கையறை என்று. இரண்டும் பதினாறுக்குப் பத்து என்று அளவு. தொலைக்காட்சி உள்ள அறையில் மகன் சிவனும்,மகள் பிரியாவும் படுத்துக் கொள்வர்.. முன்பெல்லாம் “ பாட்டி தடவற எண்ணெய் வாசம் சகிக்க முடியலே. அவங்க இருமல் வேற பெரிய தொல்லை ” என்று அவர்கள் இருவரும் உள் அறைக்கே சென்று விட்டார்கள். சந்திரசேகரும் கிருஷ்ணகுமாரியும் தொலைக்காட்சி அறைக்கு வர வேண்டியதாகி விட்டது. தூக்கம் வரும் வரை தொலைக்காட்சி பார்ப்பான் சந்திரசேகர். அதனால் தாமதமாகவே எழுவான் .சந்திரமதிக்கு தூரத்து உறவினன். “ அதுவரைக்கும் எங்க வீட்லே இருக்கமுடியுமுன்னு தோணலே “ அவள் கையில் வைத்திருந்த சூட்கேசைத் திறந்து எதையோ பார்ப்பதும் மூடுவதும் என் பரபரவென்று அவளின் கைகள் இயங்கின. எதையோ தேடுவது போல் இருந்தது அவள் கைகள். பரபரவென்று கண்களும் சூட்கேசை விட்டு வெளியே தாவி ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிக்கும் அவள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்குமிடையில் அலைக்கழிந்தது..இந்தத் தேடலை அறைமுழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில் அவள் பரபரத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. “ டென்சன் ஆகாதீங்க . கொஞ்சம் நிதானமா உட்காருங்க “ “ என்னமோ பரபரப்பா இருக்கு. அந்நியமான எடத்திலே இருக்கற மாதிரி பரபரப்பு ” “ இதை புது எடமா நெனைக்காதீங்க . அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ரிலேக்ஸ் “ “ இதத்தா எல்லாரும் சொல்றாங்க . எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். இன்னொரு பொண்ணெ என் இடத்திலே வெச்சுப் பாக்கறதிலே ஒவ்வொரு நொடியும் இம்சைதா. தற்கொலைதா பண்ணிக்கணும் “ “ விபரீதாமெல்லா நெனக்காதீங்க “ “ எல்லாம் விபரீதமாத்தா நடந்திட்டிருக்கு.” “ எப்படி வேண்ணா சொல்லிக்கலாம் “ “ இதெல்லா ஏன்னு உங்களாலே ஒரு வார்த்தை அவர் கிட்ட நீங்க கேக்க முடியுமா .. இல்லே.. இல்லே அவன் கிட்ட ,..” “ எப்பிடி கேக்க .. என்ன அதிகாரம் எனக்கிருக்கு...சாதாரண கடன் பிரசினையிலெ என்னன்னு பக்கத்திலெ இருக்கறவன் கிட்ட கூட கேக்க முடியாத நெலமை. இதிலெ இதுவெல்லா பெரிசுதா ..” “ தலெ விதின்னு சொல்றாங்களே இதுதானா..” சட்டெனத் தூறலாய் இருந்த மழை வலுக்க ஆரம்பித்தது. எதனாலோ தாக்கப்பட்டது போல் விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தாள் . மழைச்சப்தம் அறைக்குள்ளும் ஊடுருவியிருந்தது. “ மழை பலமா பெய்யுதா. வெளியே போக முடியுமா ... ஏதோ மாட்டிகிட்டன்னு தெரியுது” சட்டென பாளம்பாளமாக அருவியைப் போல தண்ணீர் விழுகிற சப்தம் அவளின் காதில் கேட்க ஆரம்பித்தது. உடம்பிலிருந்து கழுத்து தனியே தெறித்துப் போய் விழுகிற மாதியான பரபரப்புப் பார்வையுடன் பார்த்தாள். விர்ரென்று அந்த அறையினுள் நுழைந்த ராகேஷ் சாக்லெட் தட்டை நீட்டினான். இரண்டை அள்ளிக் கொண்டான் சந்திரசேகர். “ உனக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே “பாக்கெட்டிலிருந்து அய்ம்பது ரூபாயை உருவினான் சந்திரசேகர்.. “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. எனக்கு இன்னிக்கு பெர்த் டே “. சந்திரமதி அவனின் செதில்செதிலான மேல்உடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கவர்ச்சியும் பளபளப்பும் அவளின் கண்களைக் கூச்சச் செய்தன. “ எத்தனாவதுடா ‘ “ ஆறு... சிக்ஸ் “ “ போன வருஷமும் இதைத்தா சொல்லியிருப்பியா “ “ நான் என்ன நடிகையா. ஒரே வயசெச் சொல்றதுக்கு ..” “ அடடா.. அதெல்லா தெரிஞ்சிருக்கா உனக்கு “ “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. பெர்த் டே சாக்லேட் “. சந்திரமதி காபி கலர் தாளிலிருந்த ஒற்றை சாக்லெட்டை எடுத்தாள். “ இதெல்லா சாப்புடற, ரசிக்கிற மன நிலை இல்லாமெப் போச்சு பாருங்க இப்போ. நான் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாக்லெட் பிரிக்காமெ கெடக்குது அங்கெ “ “ சமாதானமா என்ன சொல்றதுன்னு தெரியலே “ “ எனக்கு பிளைட்டுக்குப் போறது வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலே .. அங்க தங்கியிருக்கக் விருப்பமில்லை.தங்கியிருக்க முடியும்ன்னு தோணலே. மனசு பதறது ” “ வேறே என்ன பண்ணலாம் . யோசிக்கலாம்..” “ என் சொந்தக்காரங்க ரொம்பவும் அந்நியமாகி ரொம்ப வருஷமாச்சு. யார் கிட்டையும் உறவில்லை. அவங்களுக்கு நான் துபாய் போனதிலெ ஆரமபத்திலிருந்து இஷ்டமில்லெ.. இப்போ இந்த நிலமையிலெ அவங்ககிட்டையெல்லா திரும்பிப் போக இஷ்டமில்லே” “ அவங்களுக்கு எப்பிடி இஷ்டமில்லாமெப் போச்சு “ “ வளர்ந்திட்டிருக்கற கொழந்தைக. பக்கத்திலிருந்து பாக்க வேண்டிய பருவம். இப்போ எதுக்கு வுட்டுட்டுப் போகணும் வெளிநாட்டு வேலைக்குன்னு கேட்டாங்க. உள்ளூர்லே ஏதாச்சும் வேலைக்குப் போ. அதுலே கஷ்டமோ நஷ்டமோ சமாளிச்சுக்கன்னாங்க. அவன்தா கேட்கலே. துபாய் வேலைக்கு ஆள் புடுச்சு காசு குடுத்து எல்லாம் தயார் பண்ணிட்டான். போ.போ.ன்னு தொரத்துனான். அவனோட சின்ன வேலையிலெ அந்த வருமானத்திலெ குடும்பத்தெ ஓட்ட முடியாதுன்னு போனன். இப்போ சொந்தக்காரங்க அவங்க சொன்னதே சொல்லிக்காமிச்சு ஏசுவாங்க. எல்லாம் தலை கீழாகிப்போச்சு “ அவளின் பரபரப்பு பேச்சு தடைபட்டும் கோர்வையற்றும் இருப்பதில் தெரிந்தது.கைகள் சற்றே நடுங்குவது போல் பட்டது. “ எங்க தங்கி இருபது நாளைக்கடத்துவேங்க . ஒரு சின்ன விசயம் ஞாபகம் வருது. பக்கத்து வீதி டிராவல் ஏசன்சியில் அறுபடை வீடு அப்புறம் கொஞ்சம் வடநாடுன்னு ஒரு டூர் புரகிராம் இருக்கறதெ நோட்டீஸ் விளம்பரத்திலெ பாத்தன். ரெண்டு வாரத்துக்கு மேலெ ஆகும். அதிலெ போனா பொழுதும் போகும் .செரியாவும். மனசு அலைபாயாமெ, இவங்களையெல்லா பாத்துப் பாத்து மனம் புழுங்காமெ கொஞ்சம் நாளும் கழியும்..மனசுக்கும் கோவில்களுக்குப் போறதிலெ ஆறுதல் கெடைக்கும்.. ஊர் திரும்பறதெ அதெப்பாத்துட்டு முடிவு பண்னீக்கலாம் “ அவளே தீர்மானித்துக் கொண்டு சொன்னாள்.ஒருவகையில் பதற்றம் தணிந்து விட்ட்து போலிருந்தது. முதல் முறையாக குவைத்திற்குச் சென்ற மூன்று மாதத்தில் வளைகுடாப் போர் வந்து உயிர் பிழைக்கவென்று பலர் திரும்பி வந்தனர். அப்படி அவளும் திரும்பி இருக்கிறாள். ” அங்க போன செலவெல்லா இன்னம் கட்ட முடியாமெ . அதெல்லாம் மனசிலெ வெச்சு மறுபடியும் போய்த்தானே ஆகணும் “ . இரண்டாம் முறை அங்கு போக நிர்பந்தங்கள் இப்படித்தான் ஆரம்பித்தன. அது பற்றி ஒரு இந்தித் திரைப்படம் வந்திருப்பதாய் உறவினர் மோகன் கூடச் சொன்னான். சவரம் செய்யப்படாத மனிதர்களால் நிரம்பிய படம் போல் அவளுக்குத் தோன்றியது. அவ்வளவு இருட்டு அவர்களின் முகங்களில் இருட்டு அப்பிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. கழுத்தில் ஏறிவிட்ட பாம்பை உதறித்தள்ளுவது போல் ஒவ்வொருவரும் பிரயத்தனம்படுவது போலிருந்தது.அந்த நிலைமை இப்போது தனக்கு வந்து விட்ட்தைப் போலவே அவள் உணர்ந்தாள். “ ஊருக்கு அவங்கெல்லா திரும்பி வர்றதலே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. அந்த ஆம்பளெ பொம்பளியிலெ உன்னைத் தேடிப்பாத்தன் அக்கா ” “ அது சினிமாடா . அதுலெ நான் எப்பிடிடா வருவன்.” “ என்னமோ அதிலே நீ இருக்கறதா நெனச்சு பாத்துட்டே இருந்தேன். “” ” அதுதாண்டா சினிமா ..அந்த சிடி கெடச்சா குடு. மறுபடியும் பாக்கணும் “ மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை.அதை வீட்டில் போட்டுக்காட்டினால் தான் திரும்பியதில் இருந்த சிரமங்களை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தாள்.அந்த ஏர்லிப்ட் என்ற படக்குறுந்தகடு தேடியும் கிடைக்கவில்லை. “ நாங்க உன்னெ அனுப்பறதுக்கு என்ன க‌ஷ்டப்படறோம்ன்னு இன்னொரு சினிமா எடுக்கலாம்” : என்றார் கணவர். பணம் எல்லாக்கஷ்டங்களையும் சொல்லி விட்டுப் போனபோது அந்த துபாய் பயணம் அமைந்தது. அங்கு வேலை கொடுப்பவரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, கொஞ்சம் சமையல் வேலையில் உதவுவது என்பது அவளுக்கான வேலையாகச் சொன்னார்கள். சாப்பட்டிற்குப் பிரச்சினை இல்லை. துணி, தங்குமிடம் இலவசம். ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் விட்டு வர செலவுக்குத் தருவார்கள். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பையன் அவளுக்கு. மாமியார் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னபின்பு கிளம்பிப் போனாள். மூன்றாம் தடவையாக இப்போது ஊருக்கு வந்திருக்கிறாள். முதல் தரம் வந்தபோது குடும்பம் சந்தோஷத்தில் மிதப்பதும் அவள் அனுப்பும் பணம் குழந்தைகளின் படிப்பிற்கும் குடும்பப் பராமரிப்பிற்கும் சுலபமாக ஒத்துவருவது தெரிந்தது. போதும் இனி போக வேண்டாம் என்று ஒருபுறம் மனதில் ஆசை துளிர்த்தது. யாருக்காகவோ உழைப்பது. எல்லோரும் வேலைக்குப் போன பின்பு எப்போதும் ஏசி இருக்கும் அறையில் உடம்பு எலும்பு போல் கட்டையாகிற மாதிரி உட்கார்ந்திருப்பது .அரக்கப்பறக்க வேலை செய்வது இதெல்லாம் பிடிக்கவில்லை அவளுக்கு.ஓய்வு என்று அமையாமல் காலம் விரைந்து கொண்டிருந்த்து. ஈரக்கையை சேலைத்தலைப்பிலேயே துடைத்தபடியே வந்த ரூபா “ ரொம்பவும் பதட்டமா இருக்காதீங்க மதி.. எல்லாம் நடக்கறதெ நல்லதுக்குத்தா . நல்லதே நடக்குமுன்னு நெனையுங்க ‘ என்றாள்.அப்போதுதான் முகத்தை நன்கு கழுவிப் பளிச்சென்று ஆக்கியது போல் ரூபா இருந்தாள். மழையின் சப்தத்தை மீறி உள்ளே பைப்பிலிருந்து ஏதோ தண்ணீர் விழும் சப்தம் கேட்டதும் மீண்டும் ரூபா சமையலறைக்குச் சென்றாள். .” இனிதா படிப்புக்குன்னு நெறைய செலவெல்லா இருக்கு. மூணு பேர்த்தெ கரையேத்தணும் . ரெண்டு பொண்ணுக. எங்கம்மா இவங்களுக்கும் அம்மாவா இருந்துப் பாத்துப்பாங்க மதி ” . அங்கு அனுப்புகையில் கணவன் தீர்மானமாகவே முன்பு சொல்லியிருந்தான். குழந்தைகள் வளர்வதைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் அவள் அனுப்பும் பணத்தைச் சுட்டிக் காட்டி எல்லாம் நீ போட்ட சாதம்மமா என்று குழந்தைகள் சொல்லி சொல்லி அவளைக் குளிப்பாட்டினார்கள். மாமியாருக்கு முடியாத போது வந்து விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்தில் ஒரு சமயத்தில் இருந்தாள். குடும்பத்தில் வறுமை அகன்று விட்டதாகத் தோன்றியது அவளுக்குப் பெருமை தந்தது. குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிற வேதனை அவர்கள் நன்கு வளர்ந்து நிற்பதில் கரைந்தது.. மூன்று குழந்தைகள் பெற்றவளுக்கு உடம்பு எந்த விருப்பங்களையும் வைக்காதபடி காலத்தைத் தள்ளினாள். இந்த முறை வந்தபோது வீட்டில், அவளின் இடத்தில் வேறொரு பெண் இருப்பது தெரிந்தது. அதிர்ந்து போனாள். “ஆம்பளெ தனியா இருக்க முடியுமான்னு சமாதானமெல்லா சொல்ல மாட்டேன் , எல்லாம் கை மீறிப் போச்சு. வளர்ற பொண் குழந்தைகளுக்கு மத்தியில ஒருத்தியெக் கொண்டாந்து வெச்சிட்டு எனக்கு அவ வேணுங்கறான். இதுகளையெல்லா வுட்டுட்டு வீம்புக்கு நான் எங்க போயி நிக்கறது. நீ வந்தா இதுகளெ கையில் புடுச்சுகுடுத்துட்டு வெலகிக்கலாம்ன்னு உள்ளுக்குள்ளியே அழுதுட்டிருந்தேன் சந்திரா. என்னை மனச்சிடம்மா .. “ என்று அழுதாள் மாமியார். “ அப்பிடி நீ தனியா போறதுன்னா சொல்லு இவங்களியும் கூட்டிட்டு வர்றன். தனியா போயிர்லாம். அவன் புதுசா வந்தவளோட என்னமோ பண்னுட்டும். “ “ ரெண்டு பொண்ணுகளுக்குன்னு கொஞ்சம் நகைக கொண்டாந்தேன். கொஞ்சம் காசு இருக்கு. அதெல்லா எத்தனெ நாளைக்கு வரும்ன்னு தெரியாது. மூணும் படிக்கதுங்க. இப்பத்திக்கு அந்த யோசனையெல்லா தனியா போறதெல்லா எடுபடாது. தனியான்னும் போக முடியாது. .பாக்கலாம். திரும்பப் போயிதா யோசிக்கணும். காசு மிச்சம்பண்ணிக்கனும். இந்த ஆம்பளெ பண்ணுன மாதிரி நானும் நெனச்சிருந்தா, அங்க நடந்துட்டிருந்தா என்னாகும்” “ எனக்கும் புரியுதம்மா . நான் கெழட்டுப் பொம்பளை. நான் என்ன பண்ண முடியும் . எல்லாம் கை மீறிப் போச்சு. .கொஞ்சம் வார்த்தைக மீறுனா கூட இந்த மூணுகளோட நான் வீதியில் நிக்கணும். நான் நின்னு சவமாயிருவன். வயசு அப்பிடி. இந்த மூணும் என்ன பண்ணும்“ “ அந்த தைரியந்தா அந்த ஆம்பளைக்கு. போலீசுக்குப் போனா அவன் நிலைமை என்னாகும்ன்னு தெரியுமா “ “ எதுவா இருந்தாலும் வீதிக்கு வர்றவங்க நாங்க நாலு பேருந்தா. இப்போ புதுசா வந்திருக்கற அவ வேறே.. ‘ சின்னப்பெண் சந்திரமதியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெரிதாய் பிரச்சினை புரியவில்லை போலிருந்தது. “ நீ இருக்கற ஊர்லெல்லா ராக்கெட் இருக்கும்மா ..ராகெட்லே உட்காந்து பாக்கணும். அதுக்குன்ன்னு படிக்கணும் “ “ படிக்க வைக்கறண்டி.. பாத்துக்கலாம் “ அவள் வேலைசெய்யும் இடத்தில் பக்கத்து வீட்டு வேலைக்காரி இந்தோனிசியாப் பெண் நிர்ஷா ஞாபகம் வந்தாள். அவள் வரும் போது ஒரு ஆறு வயதுப் பையனை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கிறாள். வேறொருவருடன் சினேகிதமாகி அவனுடன் மறைமுகமாய் குடும்பம் நட்த்துகிறாள். அவ்வப்போது ஊருக்கும் போய் விட்டு வருகிறாள். ஏதாவது கேட்டாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போய் விடுவாள். வங்கதேசத்திலிருந்து வந்த சில வீட்டு வேலைசெய்யும் பெண்களும் அவளுக்குத் தெரிந்திருந்தார்கள். எல்லோருக்கும் அவள் ” மா “ தான். யார் ” மா “என்று சொல்லிக்கூப்பிட்டாலும் தன் இரண்டு பெண்கள் கூப்பிடுவது போல் நினைத்துக் கொண்டு கண் கலங்கிவிடுவாள் சந்திரமதி. சந்திரமதிக்கு வீட்டில் இருக்க வேண்டாம் என்று தோன்றி விட்டது..கணவன் பற்றி யாரிடமாவது போய் புகார் செய்யலாம் என்று தோன்றியது.காவல்துறைக்கு வேண்டாம். வடக்குத் தெருவில் பார்த்த பிளக்சில் கோமதியின் பெரியதலை தென்பட்டது. வருங்கால முதல்வரே வருக என்று போட்டிருந்தார்கள். சந்திரமதியோடு உயர்நிலைப்பள்ளியில் படித்தவள் அரசியலுக்குப் போனாள். சிரமங்கள் இருந்தன.வட்டச்செயலாளர், மாவட்டச்செயலாளர் என்று உயர்ந்து கொண்டே போனாள்.ஆனால் முதலமைச்சர் என்ற அடைமொழியுடன் பிளக்ஸ்தட்டியைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் ஓரிருவர் முதலமைச்சரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வார்கள். நிரந்தரமுதல்வர் காலமானபின்பு பத்துப் பேர் அந்தமாதிரி சொல்லிக் கொள்வது தெரிந்தது. இரண்டு மாதங்களுக்குள் அந்தப்பட்டியல் நூறு பேரைத்தொட்டு விடும் போல் இருந்தது.இப்போது போய் அவள் முன் நின்றால் ஒன்றும் நடக்காது. அவளுக்குப் பரபரப்பு அரசியல் முக்கியம் ஆனால் வீட்டில் உட்கார்ந்திருந்தால் மனம் தாறுமாறாய் அலையும். கொலைவெறி வந்து விடும் என்று ஒருதரம் வாய் முணுமுணுத்துக் கொண்டபோது வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். சித்தப்பா பாலாமணி ஞாபகம் வந்தார்.தன்மகள் திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு பதிவுத்திருமணம் செய்து வைத்தார். நாலு பேரைக்கூட்டி அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பும் செய்தார். வீட்டில் அவள் இருக்கும் போது பலரின் பேச்சு அவரைத்தடுமாறவைத்தது. ” பொழங்கற சாதி கூட இல்லெ பாரு “ என்று பலரும் குத்திக் காட்டினார்கள்.ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியான அவள் மேல் மண்ணெண்யை ஊற்றிப் பற்ற வைத்து விட்டார்.. சிறைக்குப் போன போது தலையில் அடித்துக் கொண்டு தான் நடந்து கொண்டதைப்பற்றி ப்ற்றி சொல்லி அழ ஆரம்பித்தார். புத்தி கெட்டுப் போச்சு என்று சொல்லி அழுதார். அதுபோல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனதில் போட்டுப் புளங்கிக் கொண்டிருந்தால் ஏதாவது விபரீதத்திற்கு மனக்குரங்கு வழி காட்டி விடும். அதில் பலியாகப்போவது கணவனா, புதிதாய் வந்த பெண்ணா என்று பிரித்துக் பார்க்க இயலாமல் போய் விடும்.மெல்ல மெல்ல ஏதோ பூதம் அவளை எங்கோ கொண்டு போய் தள்ளிவிடும் என்று தோன்றியது. வெளியில் வந்து விடுமுறை தினங்களைக் கழித்து விட்டு குவைத்துக்குப் போவதுதான் நல்லது என்று தோன்றியது. அறைக்குள் நுழையும் போது தலையிலிருந்த முக்காட்டுச் சேலை நழுவி சந்திரமதியின் கழுத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது. சந்திரசேகர் அதிகபட்ச அதிர்ச்சியுடன் சந்திரமதியின் மொட்டைத்தலையைப் பார்த்தான். கொஞ்சம் சந்தனக் கீற்றுகள் எண்ணெய் பிசுக்குடன் இருந்தன. “ என்னங்க.. இப்பிடி “ “ அறுபடை வீடு போனா முருகனுக்கு மொட்டை அடிக்க வேண்டாமா “ “ மொட்டை அடிக்கறன்னு சொல்லவேயில்லே..” “ யாருக்குத்தெரியும். பழனியிலே திடீர்ன்னு ஒரு எண்ணம் வந்துது. வேண்டுதல்ன்னு ஒண்ணும் இல்லே.. நீங்க அதிந்து போன மாதிரி எங்க வீட்லே எல்லொருக்கும் சின்னதா அதிர்ச்சி தரணும்ன்னுதா.. ஒரு சின்ன அதிர்ச்சி. பெரிய அதிர்ச்சியெல்லா தர்ர அளவு கொடுமைக்காரியில்லே நான் ..அந்த மனுஷன் மாதிரி .. “ அவளுக்கே அவளின் முகத்தை மொட்டைக் கோலத்தில் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது.மொட்டை அடிக்கும் இடத்தில் வரிசையாய் உட்கார்ந்திருந்த பெண்களின் முகங்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிவது போலிருந்தது. குடும்பத்துச் சிரமங்களியெல்லாம் நினைத்து அழுகிறார்களா என்ன. அல்லது மொட்டை அடிக்க லகுவாகட்டும் என்று தலையை நனைக்க போடப்பட்ட நீரா இப்படி வழிந்தோடுகிறது என்றிருந்தது..அந்த இடத்தில் இருந்த சப்தங்களின் உச்சமும், மயிர்கள் குவியலாய் அங்கங்கே தாறுமாறாய் இறைந்து கிடந்ததும் அவளுக்கு அருவருப்பையேத் தந்தன. செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் ஏதோ பசையில் கால்கள் ஒட்டிக் கொள்வது போலிருந்தது. ஒவ்வொருவரின் கைகளிலும் கண்ணாடிகள். சிறிதும் பெரிதுமாய். ஹாலின் சுவர்களில் இருந்த பெரிய கண்ணாடிகள் மொட்டைகளைக் காட்டி பயமுறுத்தின . சடைசடையாய் மயிர்கற்றைகள் தலையிலிருந்து கழனறு விழும்போது அவளின் கண்களிருந்தும் கண்ணீர் வழிந்தது. இந்தக்கண்ணீருக்கான காரணகர்த்தாக்களின் மேல் ஏதாவது சாபமிடலாமா...தன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகட்டும் என்று விருப்பபடலாம். தன் கஷ்டமெல்லாம் இப்போதுதான் ஆரம்பமாகியிருப்பது போலவும் பட்டது. இதுபோல் பிரச்சினை வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை அவள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருப்பது போல் பட்டது . பழனி மலை முருகன் அந்தக் கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான் என்ற நம்பிக்கை மனதில் வந்தது. இப்படியெல்லாம் கஷ்டம் வந்து விட்டதே என்றிருந்தது.. எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம். புருஷனைப் பங்கு போட்டுக் கொள்வதை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்தது. “ எப்பிடியோ இருபது நாளு கழிஞ்சது. பிளைட்டுக்கு செரியா இருக்கும். எல்லார்த்துகிட்ட சொல்லணுமில்லியா வர்ற வழியிலெ வீட்டுக்குப் போனன். நான் இன்னிக்கு ஊருக்குப் போறது தெரிஞ்சு அந்த ஆளு அந்தப் பொண்ணோட வெளியூர் போயிட்டான். குழந்தைக கொஞ்சம் அழுதாங்க. வந்துரும்மான்னாங்க. இன்னம் ஒண்னும் முடிவு பண்ண முடியலேன்னு சொன்னன். மொட்டை அடிக்க முடிவு பண்னுன மாதிரி ஏதாச்சும் முடிவு எப்பவாச்சும் எடுப்பன். எப்போன்னு தெரியலே. என்னன்னு தெரியலே..” ‘’ ஆமா . அந்த நாட்லே மொட்டை அடிச்சுட்டு இருக்க அனுமதி இருக்குமா. வேற மத அடையாளம்ன்னு எதுவும் அனுமதிக்க சிரமம் இருக்குமா..” “ ஆமா .. நீங்க சொன்னப்புறந்தா ஞாபகம் வருது. சிக்கலா மாறுமா.. தெரியலெ. அங்க ஏர்போர்ட்லிருந்து வெளியே போக வுடுவாங்களா.. இல்லே ஏதாச்சும் காரணம் காட்டி திருப்பி அனுப்புச்சுவாங்களா .. எதுவா இருந்தாலும்.... “ “ பாசிட்டிவா இருங்க “ “ செரி. எதுவா இருந்தாலும் ஏத்துக்கத்தா வேணும். எந்த முடிவெ எடுக்கவும் எந்த சமயம்ன்னு ஒண்னு இருக்கில்லியா ..” பக்கத்தில் வந்து நின்ற சந்திரசேகரவனின் மனைவி ரூபா சந்திரமதி நீட்டிய பஞ்சாமிர்த டப்பாவை வாங்கிக் கொண்டாள்.விபூதி அது மூடப்பட்டிருந்த பிளாஸ்டி உறையைத் தாண்டி ககமமத்தது. “ சின்ன வயசிலே எனக்கு பழனி பஞ்சாமிர்தம்ன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த தரம் என்னமோ புடிக்காத மாதிரி டேஸ்டே பண்ணலே “ என்றாள் சந்திரமதி மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே... மினுங்கலாய் நரை மயிர்கள் தெரிந்தன. Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602 094861 01003/ subrabharathi@gmail.com. Ananda viketan weekly feb 2025. SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199 To
பங்குடி நாவல் ; க மூர்த்தி / சுப்ரபாரதிமணியன் தலித் மக்களின் வாழ்க்கைகளை தொடர்ந்து சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர் க. மூர்த்தி அவர்கள். அவர்களின் விடுதலை சார்ந்தும் யோசிப்பவர்.பெரம்பலூர் பகுதி தலித் மக்களின் வாழ்க்கைஅவரின் எழுத்தில் தீவிரமாக வெளிப்பட்டிருக்கிறது. அவரின் தலித் வகை நாவலே பங்குடி கரிசல் படைப்புகளை தொடர்ந்து வாசித்ததன் மூலம் அந்த பகுதி வட்டார வாழ்க்கை வழக்கு, பேச்சு வழக்கு போன்றவற்றை இப்போதெல்லாம் சுலபமாக தான் புரிந்து கொள்ள முடிகிறது க. மூர்த்தி அவர்கள் இந்த நாவலில் வரையும் பெரம்பலூர் வட்டார வழக்கு பேச்சு வழக்கு சார்ந்த விஷயங்கள் புதிதாக இருப்பதால் இறுக்கமாக தோன்றுகின்றது. பெரம்பலூர் பகுதியில் இருந்து எழுத்தாளர்கள் அதிகப்படியானவர்கள் வரவில்லை என்பதால் இந்த குறை . பங்குடி என்ற வார்த்தையே புதிதாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்கள் இருக்க கூடிய இடம் என்றார்கள். அங்கு எல்லா சாதி மக்களும் இருக்கிறார்கள். வருத்த புளியங்கொட்டையை சாப்பிடும் மக்கள் அல்லது புளியங்கட்டையை அவித்து சாப்பிடும் மக்கள் வறுமையில் என்ற சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன விதைப்பட்டியை எடுத்து சோற்றுக்காக குத்தி போடு என்ற என்று சொல்கிற சோகமும் வருகிறது. ஒரு மலை இருக்கிறது அந்த மலையை உடைத்து துண்டு துண்டாக செய்து அதில் சில பொருட்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஆதாரங்களை அந்த பகுதி ஒட்டக்குடியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் “ சீலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்கு போனாங்க அவ ஈச்சம்பாயைக் கட்டிட்டு எதுத்தாப்புல வந்தாங்கற கதை “ போல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பாறைகளை சிறு வடிவமாகி விற்பவர்கள் அவர்கள். அங்கு விளைந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டுகளாக்கும் பொறுப்பு அவர்களுடையது அப்படித்தான் மூப்பனார் சிலை சிவப்பாக தொப்புள் கொடி கொப்பளித்து வருகிற வரை அந்த வேலையை செய்கிறவர்கள் அவர்கள். அங்கு வருகிற ஒரு புல்டோசர் வடக்கு பாரத பகுதியில் நிறுவப்பட இருக்கிற ஒரு கோயிலுக்காக பெரும் பாறைகளை கொண்டு செல்கிறது. அதற்காக அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது பாறைகளை உடைத்து . பெரும் தேரைகள் போல் புல்டோசர்கள் அந்த பகுதியில் நடமாடுகிறது. வடநாட்டு கோயிலுக்கு இங்க இருக்கும் மலை அழிய பாறைகளை கொண்டு போகிறார்கள். அந்த மக்கள் கூட்டம் சோர்ந்து போகிறது. அங்கே பல சாதிப்பிரிவினைகள். மதப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஆழமாக தான் மூர்த்தி சொல்கிறார். பேரிங்கை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை முக்கியமாக இதில் இடம் பெறுகிறது. அவளுக்கு இரண்டு பெண்கள் அமைகிறார்கள். கணவனாக அமைகிறவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பெண்களும் சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பாறைகளை நொறுக்கி எடுத்துச் செல்லும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிப் போகிற மனிதர்கள் போல பேரிங்கின் வாழ்க்கையும் ஆகிறது. வேறு எங்கே போல பல பெண்கள் வாழ்க்கை இங்கே இப்படி சொல்லப்படுகிறது. இப்படி புல்டோசர் நடமாடிக் கொண்டிருப்பதால் அந்தப் பங்குடி ரத்த நிலமாக மாறிப் பொழிகிறது . இந்த ரத்த காயப்பட்ட இரண்டு பகுதிகள் என்னை பாதித்தனர். ஒன்று பள்ளிகூடம். பள்ளிக்கூடம் இடிந்து மாணவருடைய வாழ்க்கை தவிக்கும் விதமாய் மாறிவிடுகிறது இன்னொன்று மக்கள் பீக்காட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பின்னால் அதற்காக கழிவறைக்காக அவர்கள் வேறு இடம் தேடி போக வேண்டி இருக்கிறது. சாதியின் அதிகாரத்தின் வடிவமாக மலக்கரசலை வாயில் ஊற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் எதிரிடையாக பெருமாள் சாமிக்கு பீவாடையை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். மக்கள், பன்னி மாடு திங்கிற மக்கள் என்ற வகையில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன மலைகள் பாறையில் இடிக்கப்பட்டு மண் குவியல் ஆகிறது .மலைக்காடு கைவிட்டு போறதிலிருந்து புத்தி பேதலித்து ஊரை விட்டு பலர் போகிறார்கள் பலர். அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் குடித்தெருவும் பங்குடி தெருவும் பகைத்திருக்க இருந்து கொண்டிருக்கிறன. அங்கு ஒட்டக் குடிகளாக இருந்தவர்கள் கூலி வேலைக்கும் செல்கிறார்கள் .பலர் வெட்டியாய் திரிகிறார்கள் சிலருக்கு பண்ணை வேலை தூரத்தில் அமைகிறது. பழங்குடிகளின் ஆதாரமாக இருந்த மலை பெட்ரோல் ஆகிறது கல் அரவை மெஷின்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது கல் அரவை மெஷின்கள் இருந்த இடம் பள்ளிக்கூடத்துக்கு என்று ஆகிறது .பேரிங்கையோடு உறவு கொண்டிருந்த காண்டீபன் செய்யும் ரகளையும் அதனால் கொலையும் நிகழ்கிறது ஆண்குறியை அறுத்து கொலை செய்யப்படுகிறான். அந்த பெண்ணுக்கு பின்னால் பித்தன் என்பவன் அலைகிறான் பனங்கறுக்கு நெஞ்சில் கீறுவது போல பல துயரங்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்கிறது. பாறைகள் இல்லாத போன காலத்தில் வெறும் குன்றுகள் ஆறுதல் தருவது போல அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகள்கள் ஆறுதல் தருகிறார்கள். புது வெள்ளத்தைக் கண்ட கெளுத்தி மாதிரி குதித்து விழும் வாழ்க்கை மின்னல்கள் எப்போது வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.. பல ஆண்களுடன் வாழ நினைக்கிற அந்த பெண்ணின் துயரம் நாவல் முழக்க இருக்கிறது. மலைகளை பாறைகளை துண்டாக்கிய புல்டோசர்கள் வேறு ஊர்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அக்காட்சிகளோடு நாவல் முடிகிறது. ஒட்டக்குடிகள் சார்ந்த மக்களின் வாழ்க்கையும் வடநாட்டு கோயிலுக்காக இங்கிருந்து பாறையில் கொண்டு செல்லப்படுவதற்காக சிதைக்கப்படும் மலைப் பகுதிகளும் இந்த நாவலில் மிக முக்கியமான இடங்களை அமைக்கின்றன. பெரம்பலூர் பகுதியை மக்களின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர்களின் மொழி மற்றவர்களுக்கு படிக்க சிரமம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மீறி அப்படியே கொடுக்கப்பட்டிருப்பது மூர்த்தி அவர்கள் தொடர்ந்து அந்த மொழியில் இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம். அவர்களின் விடுதலையை நோக்கிய பார்வையை உள்ளீடக் கொண்டது இந்த நாவல் ( .ரூ 300 வெற்றி மொழி பதிப்பகம் திண்டுக்கல்)
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு ) இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் அமெரிகாவிலிருந்து இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள் “ சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார் மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது ” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய அகாடமி என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார் 0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா 0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா 0 பாரதியின் சிந்தனைகள் இன்றைக்கு எப்படி தேவை 0விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது 0 எழுத்தில் சரித்திர கதைகள் இன்றைக்கு ஏன் தேவை 0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது 0 சங்க இலக்கிய மறு வாசிப்பு ஏன் அவசியம் 0 தெலுங்கு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா 0 ஜெயகாந்தன் ஆண்டாள் பிரதர்சினி போன்றோரின் கதைகளை முன்வைத்து தமிழ் இலக்கியத்தில் மனித நேயம் ஆகிய தலைப்புகளில் எழுத்தார்கள் பேசினார்கள். திருப்பூர் சக்தி விருது 2025 விழா ( 21ஆம் ஆண்டில் ) 09/03/25 ஞாயிறு மாலை 4 மணி- பார்ச்சூன் ஹோட்டல், 15 வேலம்பாளையம் சாலை, அனுப்பர்பாளையம், திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: கேபிகே செல்வராஜ் ( தலைவர் முத்தமிழ்ச்சங்கம் ) முன்னிலை : சுப்ரபாரதிமணியன்( கனவு ), பி. குமார் ( ஸ்டார் அசோசியேட்ஸ்)., நாதன் ரகுநாதன் 21 ஆம் ஆண்டில் விருது பெற்ற பெண் படைப்பாளிகள் : அல்லிபாத்திமா /பத்மஜா நாராயணன்/ இவள் பாரதி /கயல் சிவசெல்வி செல்லமுத்து / திராவிடமணி/ மோகனப்ரியா பிருந்தா சீனிவாசன்/ காயத்ரி ஆர்/// ம. ஜீவ ரேகா/ கனகதூரிகா வி. இளவரசி சங்கர்/// ரேவதிராம்/ அமுதா செல்வி/ பவுசியா இக்பால் மருத்துவர் தேவி / யசோதா பழனிச்சாமி / கனலி விஜயலட்சுமி விஜிலா தேரிராஜன்/ எஸ் வைஜெயந்தி / ஜெ. விஜயலட்சுமி பிரியா // எஸ். ஜெயலட்சுமி/ வி . கலாவதி/ விஜி ரவி / சிறப்பு விருந்தினர் : திருமதி தி. லாவண்யா சோபனா அவர்கள் ( மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர் ) நன்றியுரை : கேபிகே பாலசுப்ரமணியன் ( செயலாளர், முத்தமிழ்ச்சங்கம் : திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்/கனவு/ ஸ்டார் அசோசியேட்ஸ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின தொடர்புக்கு : நாதன் ரகுநாதன் 90034 41425 நாகன் ரகுநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்
சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் 39 சுப்ரபாரதிமணியன் இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 38 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான் . ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள் . சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன . அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். 1912இல் சிக்காகோவில் பொய்ட்ரி என்ற பத்திரிகையை ஒரு பெண்மணி ஆரம்பித்தார். அந்த பத்திரிகை இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, ஒரு மருந்து கம்பெனி பெண் தன் சொத்தில் ஒரு லட்சம் டாலரை அந்த பத்திரிக்கைக்கு எழுதி வைத்திருக்கிறார் அந்த உயில் நடைமுறைக்கு வரும் போது இரண்டு லட்சம் டாலர்கள் என்று ஆகிவிடுகிறது. அந்த பெரிய பணம் அந்த பத்திரிகையின் முதலீடாக மாறி இன்றும் அந்த பத்திரிகையை தொடர்ந்து வர உதவுகிறது. அந்த தொகை வழங்கிய அந்த பெண்மணி கவிஞராக இருந்திருக்கிறார் அவர் எழுதிய கவிதைகளைப் பிரசுரிக்க மறுத்து இருக்கிறது. இருக்கிறது ஆனால் அந்த பெண் அந்த பத்திரிகையின் தீவிர நடவடிக்கைக்காக உதவி செய்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பவுண்ட் போன்ற கவிஞர்கள் அந்த பத்திரிகைகளுக்கு படைப்புகளை வாங்கி பரிந்துரை செய்து பலருக்கு கவிதைகள் பல வெளிவர உதவி செய்திருக்கிறார்கள் டிஎஸ் எலியட், தாகூர் போன்றவரின் கவிதைகளையும் வாங்கி அந்த பத்திரிகைகளுக்கு எக்ஸ்ட்ரா பவுண்ட் சிபாரிசு செய்து அனுப்பி இருக்கிறார். தாகூரின் கவிதை அந்த இதழில் வெளிவந்த ஆண்டுக்கு பின்னால் தாகூர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது ஒரு சிறு செய்தி பேரா சிவகுமார் இதை ஒரு பேச்சில் தெரிவித்தார். நான் ஹைதராபாத்தில் என் வேலை நிமித்தமாக வசிக்க தொடங்கிய போது பம்பாய், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களில் தமிழர்களின் குரலாய் சில பத்திரிகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன், அப்போதான் ஆந்திரா தமிழர்களின் குரலாக ஒரு பத்திரிகையை நடத்தப்பட வேண்டும் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தோம் பாரதியாரின் பூர்த்தி ஆகாத சுயசரிதை கனவு என்ற பெயரில் அந்த பத்திரிகையை அப்போது ஆரம்பித்தோம் .முதல் இரண்டு இதழ்கள் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வந்தன. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை. அந்த காலத்தில் ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் இருந்த மத்திய தர வாசகர்கள் ஆனந்த விகடன் கொண்டு பல வெகுஜனை இதழ்களில் அக்கறை கொண்டிருந்தார்கள் .அங்கிருந்த மத்திய மற்றும் உயர் குடி பிராமண பெருமக்கள் அந்த வகை பத்திரிக்கைகளை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களின் பண்பாட்டு சார்ந்த அரசியல், பண்டிகை சார்ந்த விஷயங்கள் முன்னணி பெற்றன. இந்த சூழலில் அங்கு பெரும்பகுதியான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிராமணர்கள் அல்லாத எழுத்து என மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்புகளை அபூர்வமாக எழுதினார்கள். அவர்களுக்குக் களமாக கனவு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அதற்கான வரவேற்பு இல்லாததால். மூன்றாம் இதிலிருந்து அந்த இதழை தமிழ்நாட்டு படைப்பாளிகளும் எழுத மாற்றினேன் அதுவரை ஒத்துழைப்புச் செயல் தந்து கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் விலகிக் கொண்டார்கள்.. எண்ணிக்கையில் குறைந்த பிரதிகளாய் இருந்தது கனவு. 800 பிரதிகள் என்பது குறைவானது அல்ல என்பது நண்பர்கள் சிலரின் வாதம். அதற்கு பின்னாலும் நான் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்த பின்னும் கனவு இதழின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது “ வாசன் மகனுக்கு என்றால்தான் அச்சு பொறி அடிக்குமோ காசு இருந்தால் எங்கேயும் கொண்டு போய் நிறுத்தலாம் “என்ற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று கசடதபரறமுதல் இதழில் வெளிவந்த ஞாபகம். அப்படித்தான் செகந்திராபாத் தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதாக ஆரம்பித்த கனவு இதழ் 38 ஆண்டுகளாக மாற்றுக் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை முன்னணியாகக் கொண்டு இயங்கி வருகிறது .பத்திரிகையில் மட்டுமில்லாமல் கனவு திரைப்பட இயக்கம், தமிழ்மொழி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கி தன் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இப்போதும் 700 பிரதிகள் அடிக்கிறேன்.700 பிரதிகள் காலியாகி விட்ட்து இலவசப்பிரதிகள் தந்து என்று உணரும் போது அடுத்த இதழுக்குப் போகிறேன். எண்ணிக்கையிலான இதழ் என்ற கட்டம் தாண்டி கை வசம் இருக்கும் பிரதிகளின் எண்ணிக்கை தீர்ந்து போவதால் அடுத்த இதழ் வரும் என்ற புதிய போக்கு விசித்திரமாகவே இருக்கிறது. அந்த வகையில் அமரர் மோகன் அவர்களின் நினைவுகளாக வழங்கப்படும் இந்த இலக்கிய விருது கனவுக்கு வழங்கப்படுவது ஒரு சிறு அங்கீகாரமாகவே நினைக்கிறேன், இந்த பண்பை பாராட்டும் கௌரவப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து அமர்ர் மோகன் நினைவு குழு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் கால நிலை மாற்ற நிலை தரும் நோய்கள் என் சகோதரர் ஒருவர் கொரோனா காலத்திற்குப் பின் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் உடையவராகி விட்டார் ஆரம்பத்தில் அவர் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியினால் அவரின் உடல்நலம் கெட்டு விட்டது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அதனால் வருகிற சாவுகளை பற்றியும் அதிகம் சொல்ல ஆரம்பித்தார். சமீப காலங்களில் மருத்துவமனைக்கு அவர் போகும் பழக்கம் அதிகாரித்து காலநிலை மாற்றம்தான் தம்முடைய உடல்நிலை கேட்டுக்கு காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கால்களை மாற்றம் பற்றிய பிரச்சார மனிதர் மாதிரி அதைப்பற்றி பலரிடம் பேசிக் கொண்டே இருப்பது அவரின் வழக்கமாக இருக்கிறது காலரை மாற்றங்கள் பல தொற்று நோய்களை உருவாக்குகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா போன்றவை அவற்றால் வருகின்றன. பாச நோய்களும் இதய நோய்களும் நீரழிவு நோய்களும் இந்த கால மாற்ற போக்குகளால் அதிகம் ஏற்படுகின்றன மற்றும் காற்றுத்துகள்களின் மாசு அதிகரிப்பதும் காரணம இந்த நோய் தன்மையை அதிகரித்து இருக்கிறது. கல நிலை மாற்றம் இன்றைக்கு மனிதன் எதிர் கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது . தொற்று நோய் ஆகியவற்றை கொண்டு வந்து விடுகிறது. ஆரோக்கியத்தில் ஏற்படும் மாறுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, வெப்ப அலைகள், பக்கவாதம் போன்ற இதய நோய்களை கொண்டு வருகின்றன.மூச்சு திணறல், தீக்காய்களுக்கு வழி இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் கொண்டு வந்து விடுகிறது இடம் பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் வயதான மக்கள் அடிப்படை சுகாதார நிலையங்களை கொண்டவர்கள் சாதாரணமாக பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை கணிப்புகள் தவறிக் கொண்டே இருக்கின்றன. கலநிலை மாற்றத்தைக் கண்டு இயற்கையைப் பாதுகாப்பதும் சுத்தமான காற்று மற்றும் நீர் வழங்குவதைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதும் ஆரோக்கியமான தலையான விடயங்களாகும். உணவு விநியோகத்தை முறையாக ஊக்குவித்தாலும் அரசின் கடமையாக உள்ளது. புது வெப்பநிலையில் மனிதர் என்பது காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது இந்த வெப்பநிலை உயர்வு பூமியின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித இடப்பெயர்வு மற்றும் குடியேற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன காலங்களை. காற்று புயல் வெப்ப அலைகள் கனமழை வெள்ளம் போன்றவை அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் உள்ளன. மனித குடியேற்ற நிகழ்வுகள் ஏற்படும் மாற்றம் சில பகுதிகளில் அதிக மக்களை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. பொருளாதார இடையூறுகள், உணவு பாதுகாப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. உணவு சங்கிலிகளில் பல இடங்களில் உணவின் பாதுகாப்பை சமரசம் செய்யும் பல்வேறு ஆபத்துக்கள் வந்து விட்டன. உற்பத்தி சங்கிலியில், உணவின் பாதுகாப்பில் காலநிலை காரணிகளின் தாக்கம் நுண்ணியர்களின் வளர்ச்சியை அவற்றின் தொற்று நோய் போன்றவற்றால் சாதாரண ஆக்கப்பட்டுள்ளது. தாவரம் தொடர்புடைய உணவு மூலம் பரவும் வியாதிகள் அதிகமாக இருக்கிறது. இதில் விலங்குகள் மூலமாகவும் பரவுகிறது. கொரானா வவ்வால்களால் பரவிய கதைகள் நம்குத் தெரியும். உணவு பொருட்களை கெட்டுப் போக வைக்கிறோம். பல பூஞ்சைகள் தொடர்ந்து உற்பத்தியாகி மனிதனுக்கு பலத்த பயங்கர சிரமங்களை கொண்டு வருகின்றன சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் உணவு வழி பாதுகாப்பை சரிப்படுத்த உணவு மூலமாக பரவும் வியாதிகளை கட்டுப்படுத்துவதும் இன்றைக்கு பெரிய சவாலாக இருக்கிறது
திரைக்கதை நூல் என் நாவல்கள் சிறுகதைகள் என்று முப்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதைகள் உருவாக்கத்தில் ஈடுபட்டபோது என்னை பாதித்த வேறுகதைகளையும் திரைக்கதையாக்கினேன். 8திரைக்கதை நூல்களை வெளியிட்டேன் அப்படி திரைக்கதையாக்கியதை ( சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வெளி வராதவற்றை ) நாவல் வடிவத்துள் கொண்டு செல்லலாம் என்று முயன்றதன் விளைவில் இந்த நாவல் பிறந்தது. அதனால் நிகழ் காலத்தில் எழுதப்பட்ட பாணியில் இந்த நாவலை எழுதியுள்ளேன். இந்தப் பாணியிலும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று முயல்கிறேன். பார்க்கலாம். எப்படி வருகிறது என்று. திரைப்பட காமிரா பாணியில் நிகழ் காலத்தில் எழுதப்படுவதை கொஞ்சம் முயன்று பார்த்திருக்கிறேன் இதில். திரைப்பட தாக்கங்களையும் தவிர்க்க முடியவில்லை. தலைப்பிலேயே இது தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். NCBH rs 60
என் மூன்று சிறுகதைகள் : செம்மலர்: சோற்று பொட்டலங்கள் என்று என்னுடைய கதை இம்மாத செம்மலரில்.. சோற்று பொட்டலங்கள் என்று முன்பு என்னுடைய கதை ஒன்றை கோவை பேரழில் குமரன் அவர்கள் ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார். அது திருப்பூர் பாண்டியன் நகர், தாய்த்தமிழ் பள்ளியில் எடுக்கப்பட்ட படம் .குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பேசிய படம்.பேரெழில் குமரன் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய நாற்பதாவது வயதில் இறந்துவிட்டார் .கோவைக்காரர் இப்போது அதே பெயரில் ஒரு சிறுகதை . இந்த சிறுகதையில் வட மாநில தொழிலாளரின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அல்லது புறக்கணிப்பது பற்றிய மையம். இதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை .வெளி மாநில குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்வி பற்றி அரசாங்கங்கள் கவலை கொள்வதில்லை .சில தன்னார் அமைப்புகள் நிதி பெற்று அவர்க்கான மாலை நேர வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தன இப்போது அந்த நிதிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தைகளுடைய கல்வி வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாய் விட்டது 0 பள்ளிக்கூடம் போகலாமா என்ற என்னுடைய திரைக்கதையின் முதல் அத்தியாயத்தை ஒரு சின்ன சிறுகதையாக ஆக்கி இங்கே தந்திருக்கிறேன் செம்மலரில்.. 0 ஈஅல்ம் பெண்ணின் துயர அனுபவங்கள் விகடனில் ஆனந்த விகடலில் வெளிவந்த என் சிறுகதை முடிவு பதிவுகள் டாட் காம் கனடா இணையதளத்தில்.. விகடன் இதழில் 1200 வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.ஆனால் அதில் மூலத்தில் 2000 வார்த்தைகளில் உள்ளது .அது அப்படியே பதிவில் டாட் காமில் வெளி வந்தது கிரிதரன் அவர்களுக்கு நன்றி 0 அமிருதா இதழில் மழை பொழிந்து.. தனிமையின் அனுபவங்கள் ஒரு இளம் பெண்ணின் கதையாக.. மார்ச் இதழில் .. 0 இப்போதைக்கு விகடன் கதை
” சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விரைவில் விளங்கும் “ சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பதுதான் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் விருப்பம்.அந்த விருப்பம் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும். நீண்ட நாள் கனவு நிறைவேறும் .அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர் சங்கத்தினர்.nirtma உள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம் 160 கிலோமீட்டர் ஓடும் நொய்யல் ஆற்றில் பல கழிவுகள் கலக்கின்றன அதை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். அதை மீண்டும் ஜீவநதியாக விளங்கும் .சாக்கடைகள் கழிந்து சுற்றுச்சூழல் சார்ந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓடும் நதியாக நொய்யல் இன்னும் மூன்று ஆண்டுகளில் மாறும். ஒரத்துப் பாளையம் அணை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தேக்கி வைக்கும் அணையாக மாறி உள்ளது.. பல சமயங்களில் அந்த பகுதி விவசாயிகள் தண்ணீர் தேக்குவதை பற்றியும் தண்ணீர் விடுவதை பற்றியும் பல வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவுகள் இல்லாத இடமாக, சுத்தீகரிக்கப்பட்ட நீரைத் தேக்கி வைக்கும் அணையாக ஒரத்துப் பாளையம் விளங்கி வருகிறது கரூர் தொகுதி மக்கள் தான் நொய்யல் நதியின் பாசனத்தால் அதிகமாக பயன்படுகிற மக்கள் மூன்றாவது குடிநீர் திட்டம் திருப்பூர் ஏற்றுமதியா சங்கத்தின் பெரும்பங்களிப்பில் கொண்டுவரப்பட்டது .அதில் அரசாங்கத்தின் நிதி உதவி இருந்தாலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மூலமாக வெற்றி பெற்றது நாலாவது குடிநீர்த் திட்டதற்கான செயல்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. காவிரி ஆறு வற்றி போனாலும் பவானி ஆறு வற்றி போனாலும் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராதபடி நாலாவது குடிநீர் திட்டம் அமையும் கோவையில் இருந்து திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் அதற்கும் ஏற்றுமதியாளர்களுடைய நிதி பங்களிப்பு இருக்கும் அதிக மின் உற்பத்தி பகுதியாக நம்முடைய கொங்கு பகுதி இருக்கிறது என்பது இன்னும் ஒரு பெருமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புடன் இங்கு வாழும் தொழிலாளர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கான எல்லா வகை முயற்சிகளையும் ஏற்றுமதி எடுக்கும். படைப்புகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை கொண்டு வரும் படைப்பாளிகள் பாராட்டுக்குரியவர்கள் “ என்று அகில் ரத்தினசாமி ( தலைவர் நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் தலைவர் )சுப்ரபாதிமணியனின் ” வேர்களை இழக்கும் பூமி “ என்ற சுற்றுச்சூழல் கட்டுரை நூலைக வெளியிட்டுப் பேசினார் . அதை சென்னை நியூ செஞ்சுரி புக் வெளியிட்டிருக்கிறது 110 ரூபாய் இந்த நூலின் முதல் பிரதியை ஜி. சிவானந்தன் ( தலைவர் மக்கள் பசுமை இயக்கம் ) மற்றும் ஆடிட்டர் பாலு ( குமரன் மகளிர் அரசு கலைக்கல்லூரி செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். சிவானந்தன் அவர்கள் கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார் 0 நியாயவணிகம், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு போன்ற அறம் சார்ந்த கொள்கைகள் உலகம் முழுவதும் பேசப்படுகிற போதும், கடைப்பிடிக்கிற போதும் நம் கொங்கு பகுதி இதை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. நமக்கு தேவை 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியசெலவாணியா அல்லது சுற்றுச்சூழலை காக்க வேண்டுமா என்பதை என்னுடைய ” சாயத்திரை “ நாவல் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த போது கேள்வியை முன் வைத்தது அது தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு மற்றும் ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட போது சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகள் முன்நிறுத்தப்பட்டன முன்பு லண்டன் தேம்ஸ் கழிவு நீர் ஓடக்கூடிய நதியாக இருந்தது ஆனால் அங்கு இருக்கிற வியாபாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியால் அது படகுகள் ஓடக்கூடிய நதியாக மாறிவிட்டது அதுபோல் நொய்யலை மாற்றுவோம் என்ற கனவை திருப்பூரின் பல ஏற்றுமதியாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான நடவடிக்கைகளும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஓரடி முன்னே ஈரடி பின்னே என்று லெனின் சொல்வதைப் போல அவர்களுடைய நடவடிக்கைகளும் அதை சீர்குலைக்கிற சில முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுக்க இன்றைக்கு காலநிலை மாற்றம் சார்ந்த சிக்கலால் சுற்றுச்சூழலை பற்றி அதிகமாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்கள் பேசுகிறார்கள். அவர்கள் பேசுகிற அறம் சார்ந்த நியாய வணிகம் எல்லா நிலையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத்தான் எங்களைப் போன்றோர் சுற்றுச்சூழலும் சார்ந்த படைப்புகளை எழுதுகிறோம். குறிப்பிடுகிறோம் நாங்கள் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நீடித்த வளர்ச்சி என்பது 50 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி மற்றும் நொய்யலைக் காக்கும் முயற்சியில் இணைந்தது என்பதை குறிப்பிட்டு அத்தகைய படைப்புகளை உருவாக்கி வருகிறோம் சமீப காலங்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியினர் அதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதும் அந்த முயற்சிகள் 30 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் செயலாக்கம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று சுப்ரபாதிமணியனின் “ வேர்களை இழக்கும் பூமி “ என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு விழாவில் பேசினார் அதை சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டு இருக்கிறது ரூபாய் 110 0 இந்த விழாவில் பெண் எழுத்தாளர்களுக்காக வழங்கப்படும் நாயகி விருது திருவாளர்கள் ஜெயந்தி சீனிவாசன், மனோரஞ்சித மலர், மீனா முரளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதை ஸ்டார் அசோசியேட்ஸ் குமார் அவர்கள் வழங்கி பேசுகையில் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையில் திருப்பூரில் ஏற்றுமதியாளர்களை தவிர பிற தொழில் செய்வோரும் பங்கேற்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆக எல்லோரும் இணைந்து இன்னும் தீவிரமா ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள், மாண்விகள் பரிசுகளையும் புத்தகங்களையும் பெற்றார்கள். தாய் தமிழ் இலக்கியப் பேரவையின் நிர்வாகி பாண்டியராஜன் தலைமை வகித்தார்.பசிதாபானு நன்றியுரை வழங்கினார். பரிசு பெற்ற படைப்பாளிகள் தங்கள் எழுத்து அனுபவத்தை பற்றிப் பேசினர் கவிதை வாசிப்பில் மதுராந்தகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவல்: :: பாண்டிய ராஜன் தாய் தமிழ் இலக்கியப் பேரவை. , பாண்டியன் நகர் சார்பாக ( 9543625422/ 7868062287 )
நொய்யல் மீண்டும் ஜீவநதியாகும்.. நுால் வெளியீடு விழாவில் நம்பிக்கை ________________________________________ திருப்பூர்; திருப்பூர், பாண்டியன் நகரில், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் 'வேர்களை இழக்கும் பூமி' என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரை தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. நுாலை வெளியிட்டு, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி பேசியதாவது: சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பது தான், பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் விருப்பம். அந்த விருப்பம் இன்னும் மூன்றாண்டுகளில் நிறைவேறும். அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 160 கி.மீ, ஓடும் நொய்யல் ஆற்றில், பல கழிவுகள் கலக்கின்றன. அதனை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். மீண்டும் ஜீவநதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கரூர் தொகுதி மக்கள் நொய்யல் நதிநீர் பாசனத்தால் அதிகம் பயன்பெறுகின்றனர். மூன்றாவது குடிநீர் திட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெரும் பங்களிப்பில் கொண்டு வரப்பட்டது. அதில், அரசின் நிதியுதவி இருந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினரால் வெற்றி பெற்றது. நான்காவது குடிநீர் திட்டத்திற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கின்றன. காவிரி, பவானி ஆறுகள் வற்றினாலும், திருப்பூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்ற அடிப்படையில் நான்காவது குடிநீர் திட்டம் அமையும். இவ்வாறு, அவர் பேசினார். Dinamalar today 0
வெப்பம்: Tamil hindu சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல் புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது. ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார். குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில் ( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை ) - மதுராந்தகன்