சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
.நேர்காணல் - எழுத்தாளர் – சுப்ரபாரதிமணியன்
( கண்டவர் செ. சுரேஷ் , சென்னை 8778970794 )
1. ேீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?அதற்கான அகச்சூழல்
புைச்சூழல் எப்படி அறமந்தது?
ோன் அடிப்பறையில் ஒரு நேசவாளக் குடும்பத்றத நசர்ந்தவன். ோன்
எழுத்துத் துறைக்கு வந்தது ஒரு தற்நசயலான ஒன்றுதான். முதலில் பள்ளிப்
பருவங்களில் ராணி, குமுதம் நபான்ை வார இதழ்கறள வாசிக்கத்
நதாைங்கிநனன். ோன் நகாறவ பிஎஸ்ஜி கறலக் கல்லூாியில் கணிதவியல்
படித்து நகாண்டிருந்த காலத்தில், மாணவர்களுக்காக கல்லூாி தமிழ்த்துறை புது
நவள்ளம் என்ை ஒரு பத்திாிறகறய ேைத்தி வந்தது. இப்பத்திாிறகயில்
இருந்துதான் எனக்கு எழுத்திற்கான அைிமுகம் கிறைத்தது. எங்கள் கல்லூாியில்
திருக்குைள் அத்தியாயம் என்ை ஒரு அறமப்பு ேிறுவப்பட்ைது. அவற்ைில்
ஒவ்நவாரு மாணவரும் திருக்குைளில் ஒவ்நவாரு அத்தியாயம் பற்ைிய தங்களது
கருத்துக்கறள கூை நவண்டும். இந்த அறமப்பில் ஆண்டுநதாறும் பாிசு
தருவார்கள். எனக்கும் ஒரு ஆண்டு பாிசு கிறைத்தது. பின்னர் நஜயகாந்தனின்
எழுத்துக்கள் என்றன மிகவும் கவர்ந்தன. தினமும் ோம் சந்திக்கும் மனிதர்களின்
வாழ்வியறலயும் விளிம்பு ேிறல மக்கறளயும் பைம்பிடித்து காட்டும் அவரது
பறைப்புகள் என்றன நமலும் வாசிக்கத் தூண்டியது. நஜயகாந்தன் அவர்கள்
திருப்பூர் வரும் சமயங்களில் அவரது கூட்ைங்களில் பங்நகற்க எனக்கு வாய்ப்பு
கிறைத்தது. அவரது கர்ஜறனயான நபச்சாற்ைல் எனக்குள் ஒரு மிகப்நபாிய
தாக்கத்றத ஏற்படுத்தின. ோன் முதுேிறலக் கணிதவியல் படிக்கும் நபாது என்
பள்ளி கால ேண்பர்கறள மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிறைத்தது.
அவர்கநளல்லாம் உயர்ேிறலப் பள்ளியுைன் படிப்றப ேிறுத்திக் நகாண்டு
பனியன் கம்நபனிக்கு பணிக்கு நசல்லத் நதாைங்கிவிட்ைார்கள். அப்நபாழுது
அவர்கள் குைிஞ்சி என்ை ஒரு றகநயழுத்துப் பத்திாிறக ேைத்தி வந்தனர்.
அப்பத்திாிறகயில் கவிறத எழுத எனக்கு வாய்ப்பு கிறைத்தது. ோன் எழுத்துத்
துறைக்கு வந்ததற்கான ஆரம்பமாகவும் அறமந்தது.
2. புத்துமண் ோவல் உருவான பின்னணி என்ன?
ோன் திருப்பூறரச் நசர்ந்தவன் என்பதால் திருப்பூாில் ேைக்கும்
சுற்றுச்சூழல் அவலங்கறள கவனிக்க நதாைங்கிநனன். ேதி மாசுபாடு, ேிலத்தடி
ேீர் மாசுபாடு, மண் மாசுபாடு நபான்ைறவகள் திருப்பூாில் ேிகழ்ந்த வண்ணம்
இருந்தன. அங்கு ேிறைய தன்னார்வ குழுக்கள் இச்சுற்றுச்சூழல் சீர்நகடு குைித்து
பலவிதமான விமர்சனங்கறள முன் றவத்தார்கள். இருப்பினும் நபரு
ேிறுவனங்களின் கார்ப்பநரட் முதலாளிகளிைம் அவர்களுறைய விமர்சனங்கள்
எடுபைவில்றல. பின்னர் ோனும் சில தன்னார்வ நதாண்டு அறமப்புகளுைன்
நசர்ந்து பயணிக்க நதாைங்கிநனன். நபரணி, கருத்தரங்குகள் ேைத்துவது, சில
எழுத்தாளர்கறள அறழத்து கூட்ைங்கள் ேிகழ்த்துவது நபான்ை பணிகறள
நசய்து வந்நதன். பின்னர் ஒரு எட்டு ஆண்டுகள் இறைநவளி எடுத்து
றைதராபாத்தில் உள்ள நதாறலத் நதாைர்பு அலுவலகத்தில் பணி நசய்து
வந்நதன். பின்னர் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்த பிைகு திருப்பூாில் நபரும்
மாற்ைங்கறள ோன் கண்நைன். என் ேண்பர்கள் சிலர் பின்னலாறை ேிறுவன
ஏற்றுமதியில் நகாடி கட்டி பைந்தார்கள். திருப்பூறர நபாறுத்தவறர அந்ேிய
நசலவாணி அன்று 25 ஆயிரம் நகாடி வறர இருந்தது. இன்று அது 50,000 நகாடி
எட்டி உள்ளது. இருப்பினும் 50,000 நகாடிக்கு பின்னால் நபருவாாியான
சுற்றுச்சூழல் சார்ந்த நபரழிவுகறள எதிர் நகாள்ள நவண்டி இருந்தது.
அவற்ைின் சாயக்கழிவுகள் மாசுபாடு, வீட்டு கழிவுகள் மாசுபாடு ஆகியறவ
நோய்யல் ேதியிநல கலந்து ேதி மாசறைந்து விட்ைது. இது தவிர குழந்றத
நதாழிலாளர்களும் அதிகளவில் பல ேிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ைனர்.
இவற்றைநயல்லாம் நசர்த்து எழுதத் தூண்டியதுதான் சாயத்திறர ோவல்.
முதன்முதலாக என்னுறைய சாயத்திறர ோவல் எழுதி நவளிவரும்நபாது
பின்னலாறை ேிறுவன முதலாளிகளிைமிருந்து மிகப்நபாிய எதிர்ப்பு எனக்கு
எழுந்தது. இவ்வாைாக சூழலியல் ஆர்வலர்கள் எதிர்நகாள்ளும் சிக்கல்கறள ஒரு
ோவலாக பறைக்க நவண்டும் என்ை எண்ணம் நதான்ைியது. அவ்வறகயில்
உருவானநத இந்த புத்துமண் ோவல்.
3. பறைப்பிலக்கியம் வழியாக சுற்றுச்சூழல் குைித்து உறரயாடுதலின்
அவசியம் என்ன?
கரூாில் சுப்பிரமணியம் என்ை ஒரு சூழலியல் ஆர்வலர் இருந்தார். அவர்
சுற்றுச்சூழலுக்கு எதிராக நசயல்படுவர்கறள பற்ைி தனது பத்திாிறககளில் எழுதி
வந்தார். அவர் அதனால் பல சிக்கல்கறள எதிர்நகாள்ள நவண்டி இருந்தது.
அவருறைய இைப்பிற்கு பின்னர், அவறரப் பற்ைிய குைிப்புகறள நசர்த்து
எழுதப்பட்ைது தான் இந்த புத்து மண் ோவல். இது முழுக்க முழுக்க ஒரு உண்றம
சம்பவம். ஒரு சுற்றுச்சூழறலக் காப்பாற்ை ேிறனக்கும் சூழலியல் ஆர்வலர், அவர்
சந்திக்கும் இன்னல்கள் நபான்ைவற்றை இப்புதினத்தில் நதாகுத்து
எடுத்துறரக்கப்பட்டுள்ளது. திருப்பூாில் சூழலியல் சார்ந்த பாதிப்புகள்
ஆங்காங்நக ேிகழ்ந்த வண்ணம் இருந்தது. என்னுறைய கனவு பத்திாிறகயில்
இது நதாைர்பான பல்நவறு கட்டுறரகறள ோன் எழுதியுள்நளன். கட்டுறர
வடிவில் எழுதப்படும் பறைப்புகள் இலக்கிய மாணவர்கள் மற்றும் இலக்கிய
வாசகர்கள் மட்டுநம படிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதுநபால்
சுற்றுச்சூழல் நதாைர்பான சிக்கல்கறள ஒரு புதினமாக பறைத்தால் அறனவரும்
படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பநத என்னுறைய கருத்து. அதனாநலநய
என்னுறைய பறைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த பறைப்புகளாக சாயத்திறர,
புத்துமண், நவப்பம் நபான்ைறவ புதினங்களாக நவளிவந்தன. றேஜீாியாவில்
நகன் சநரா விவா என்ை ஒருவர் விவசாய ேிலங்களில் வாயுப் பழுப்புகள்
புறதப்பதற்கு எதிராக நபரும் நபாராட்ைங்கறள எதிர்நகாண்ை சுற்றுச்சூழல்
நபாராளி. இவற்ைிற்நகதிரான நபாராட்ைத்தில் அவர் நகால்லப்பட்ைார்.
இதுநபான்று பல சுற்றுச்சூழல் நபாராளிகள் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான
நபாராட்ைங்களில் தன் இன்னுயிர்கறள ேீக்கின்ைனர். இதுநபான்ை
சுற்றுச்சூழல் நபாராளிகறள யாரும் சாிவர கண்டுநகாள்வதில்றல. ஆறகயால்
என்னுறைய ோவல்கள் இதுநபான்ை கதாபாத்திரங்கறள றமயமாக றவத்து
பறைக்கும் நபாது, அவற்றை படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்றம
சம்பவங்கள் குைித்த நசய்திகறள அைிய வாய்ப்புள்ளது என்று ோன்
ேிறனக்கிநைன். ஒரு எழுத்தாளர் என்ை முறையில் இது நபான்ை நபாராளிகறள
கறதமாந்தர்களாக சித்தாித்து என் பறைப்புகளில் நகாண்டு நசல்வறத ோன்
நபருறமயாக கருதுகிநைன்.
4. புத்துமண் ோவலில் ‘மண்’ பாதுகாப்பு குைித்து அதிகம் நபசுகிைீர்கள்
ஏன்?
கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆற்றுமணல் அதிகளவில்
அள்ளப்படுகிைது. ஆறுகநள ேீறரப் பாதுகாத்து விவசாயம் நபான்ை
நதறவகளுக்கு பயன்படுத்தப்படுகிைது. ஆற்றுமணல் அள்ளப்படுவதால்
ஆறுகள் ேீறர உைிஞ்சி நதக்கும் தன்றமறய இழக்கிைது. புத்துமண் ோவலில்
வீரண்ணன் எனும் கதாபாத்திரம் மணல் திருட்டுக்கு எதிராக நபாராடி, மணல்
நகாள்றளக்காரர்களால் நகால்லப்படுவான். இந்த சம்பவமும், கதாபாத்திரமும்
கரூாில் ேைந்த ஒரு உண்றம சம்பவம். இதுநபான்ை நபாராளிகள் மட்டுமல்லாது
மணல் நகாள்றளறய தடுக்கும் பல நேர்றமயான அரசு அதிகாாிகளும்
நகால்லப்படுகிைார்கள். ஆதலால் இவற்றை றமயமாக றவத்நத இப்புதினம்
எழுதப்பட்ைது.
5. புத்துமண் ோவலில் உங்களுக்கு கிறைத்த மைக்கமுடியாத
பின்னூட்ைம் என்ன?
புத்துமண் ோவல் நவளிவந்த பின்னர் ேிறைய வாசகர்கள் என்றன
நதாைர்பு நகாண்டு தங்கள் கருத்துக்கறள நதாிவித்தனர். அவற்ைில் குைிப்பாக
சாகித்ய அகாைமியின் முன்னாள் தறலவர் ைாக்ைர்.ராஜமுத்து அவர்கள்
இந்ோவல் குைித்து தன் கட்டுறரயில் குைிப்பிட்டு எழுதியுள்ளார். அது
மட்டுமல்லாது பல கல்லூாிகள், பல்கறலக்கழகங்களில் இந்த புத்துமண் ோவல்
பாைமாக றவத்திருப்பதநத இதன் சிைப்பு. அதுமட்டுமன்ைி ேிறையப் பிரதிகள்
விற்பறனயானது. இறவ அறனத்றதயும் சிைந்த பின்னூட்ைமாகநவ ோன்
கருதுகிநைன்.
6. பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் இறையில் உள்ள நவறுபாடுகள்
பற்ைிய உங்களது கருத்து என்ன?
எந்த ஒரு பறைப்பும் உண்றம சம்பவங்கள் இல்லாமல் நவறும்
புறனவுகறள றவத்து உருவாக்க முடியாது. அவற்ைில் எத்தறன சதவீதம்
உண்றம இருக்கிைது? எத்தறன சதவீதம் புறனவு இருக்கிைது? என்பறத
மட்டுநம பார்க்க நவண்டும். எதார்த்தம் மட்டுநம ஒரு மிகப்நபாிய கறல
வடிவமாகாது. என்னுறைய ோவல்கள் அறனத்துநம 99 சதவீதம் உண்றமக்
கறதறயத் தழுவி எழுதப்பட்ைது. இவ்வாறு பறைப்பிற்கும் ேறைமுறைக்கும்
உள்ள இறைநவளி குறையும்நபாது அந்த பறைப்பினுறைய வலிறம அதிகமாக
இருக்கும்.
Subrabharathimanian, Tiruppur
0 சுப்ர பாரதி மணியன் : 25/10/1955 . / 69
வெளியாகி உள்ள நூல்கள் :
115 நூல்கள்
/ 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் / 3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )
பரிசுகள் :
0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு
0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998
0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016
0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022
0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்
0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021
0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021
0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக
0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது
0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது
எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023
0 தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன்
1 0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன்
0 பொறுப்பு:
0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர் 2008 - 12
0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்
மொழிபெயர்ப்பு:
0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது
0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும்
மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன
ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.
0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
சுற்றுச்சூழல் நூல்கள் :
நாவல்கள் :
0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண்
0 கட்டுரைத் தொகுப்புகள் :
தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத் தொகுப்புகள்
இதழியல் :
0 கனவு இலக்கியக் காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
0 கனவு திரைப்பட இயக்கம்,,
0 தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 30 ஆண்டுகளாய்.
திரைநாவல்கள் :
0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 70 திரைக்கதைகள் உள்ளன.
திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.
குறும்படங்கள்:
0
சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம் ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )
இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன.. ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பயணங்கள்:
0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய் சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து
கதை சொல்லித் திருவிழா 2025
0
சிறார் இலக்கியத் திருவிழா 2025 திருப்பூரில் கல்வியாளர் சசிகலா பசுபதி தலைமையில் நடைபெற்றது
0
0
கதை சொல்லிகளின் சிறப்புரைகளாக நான்சி கோமகன்,
சரிதா ஜோ
சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி அரசப்பன், ஆனந்த குமார் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
0
சிறார் ஓவியக் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்கஅலமேலு திறந்து வைத்தார்
சிறார் நூல்கள் கண்காட்சியை மூத்த எழுத்தாளர் மதுராந்தகன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிரிஜா சுப்ரமணியன் , பாக்யலட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறாரின் கதை சொல்லல் ( ஆங்கிலம்/தமிழ் ) நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கு பெற்றனர்.
சிறார் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கல்வியாளர் பசுபதி, சமூகப் பணியாளர்கள் ஸ்டார் குமார், லீலா ஜகன் உள்ளிட்டோர் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர்.
0
நன்றியுரை : மோகன்ராஜ் மனோகரன், தமிழாசிரியர்
கனவு இலக்கிய அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது.
செய்தி : சுப்ரபாரதிமணியன், 9486101003
புகைப்படங்கள் : கதை சொல்லும் மாணவி / சிறப்புரை ஆற்ரிய நான்சி கோமகன்
நொய்யல் மீள சாத்தியங்கள் தெரிகின்றன
நொய்யல் விழா
கோவை திருப்பூர் பகுதியின் நொய்யல் நதிக்கரை, சமவெளியில் வாழக்கூடிய உங்களுக்கு ஒரு உறுத்தலானtது நொய்யல் விழா என்பது. அதில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவு மாசு அதனால அதை ஒட்டி நம்மளோட கலை பண்பாட்டு நிகழ்வுக்கு பெயர் வைப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
ஆனால் ஆச்சரியமான பல விஷயங்கள் இருக்குது அண்மையில் சூலூர் பெரிய குளத்துல நடந்த இடத்துல ஒரு ஆய்வுல பழமையான அழிஞ்சு போயிருப்போம்ன்னு நம்புன உயிரினங்கள், நன்னீர்ல வாழக்கூடிய அதிக வகை மீன் உயிரினங்கள் வந்து இப்போதும் இருக்குது அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
அது வந்து இன்னும் இதன் தன்மை வந்து மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு முன்னாடி வரைக்கும் இருக்கு. இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நதி பாயும் இடத்துக்கு முன்பாக வரைக்கும் நொய்யால வந்து பழையபடி மாசற்ற திறமையோடு மாற்ற முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்குது மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதன் கிழக்குப் பகுதியில் வந்து அங்கிருந்து பாத்தீங்கன்னா, அது வந்து ஈரோடு மாவட்டத்துல நுழையக்கூடிய பகுதிகளில் ஒரு ரெண்டு ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய நீரில் காரத் தன்மையும் அமிலத்தன்மையும் அதில் கலந்து இருக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த உப்புகளையும் நீக்கும் பணி என்கிறது மிகப்பெரிய சவால். அந்த சவாலை வந்து முன்பைக்காட்டிலும் இப்போ வந்து இன்னும் நிறைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்துகிட்டு இருக்கிறதுனால அதை செய்து ஒரு எதிர்காலத்தில் வெற்றிகரமாக்க ம்முடியும். 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி மாசற்ற ஒரு நதி, கடந்த 16 ஆண்டுகளாக ஓரளவு மாசு குறைந்திருக்கிறது அதை தீர்ப்பு வந்து 16 ஆண்டுகள் ஆகுது கிட்டத்தட்ட இன்னொரு பத்து வருடங்களில் வந்து முழுமையான மாற்றத்தை வந்து அடைய முடியும் என்பது ஒரு நம்பிக்கை.. பெரிய நம்பிக்கை இது .
இந்த நொய்யல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கம் சார்ந்த விஷயங்களை வந்து உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
சுற்றுசூழல் போராளி நண்பர் ஒருவருடனான உரையாடலில்…
விகடன் கதை
0
முடிவு : சுப்ரபாரதிமணியன்
“ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள்.
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘
சந்திரமதியின் முகத்தில் தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி.
“ மொதல்லே உக்காருங்க “
“ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும். அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “
சந்திரமதிக்கு சந்திரசேகரின் வீட்டு நிலமை நன்கு தெரியும். மூன்று அறைகளில் பத்துக்குப்பத்து சமையலறை. மீதி உள்ள இரண்டு அறைகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் அறையில் அவன் அம்மா மூலையில் உட்கார்ந்திருப்பார். காலில் சின்னதாய் அடிபட்ட பின் மூலையில் இருந்த அவரின் கட்டில் வெளியில் சென்று கிடக்க அவர் தரையில்தான் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு அறை படுக்கையறை என்று. இரண்டும் பதினாறுக்குப் பத்து என்று அளவு. தொலைக்காட்சி உள்ள அறையில் மகன் சிவனும்,மகள் பிரியாவும் படுத்துக் கொள்வர்.. முன்பெல்லாம் “ பாட்டி தடவற எண்ணெய் வாசம் சகிக்க முடியலே. அவங்க இருமல் வேற பெரிய தொல்லை ” என்று அவர்கள் இருவரும் உள் அறைக்கே சென்று விட்டார்கள். சந்திரசேகரும் கிருஷ்ணகுமாரியும் தொலைக்காட்சி அறைக்கு வர வேண்டியதாகி விட்டது. தூக்கம் வரும் வரை தொலைக்காட்சி பார்ப்பான் சந்திரசேகர். அதனால் தாமதமாகவே எழுவான் .சந்திரமதிக்கு தூரத்து உறவினன்.
“ அதுவரைக்கும் எங்க வீட்லே இருக்கமுடியுமுன்னு தோணலே “
அவள் கையில் வைத்திருந்த சூட்கேசைத் திறந்து எதையோ பார்ப்பதும் மூடுவதும் என் பரபரவென்று அவளின் கைகள் இயங்கின. எதையோ தேடுவது போல் இருந்தது அவள் கைகள். பரபரவென்று கண்களும் சூட்கேசை விட்டு வெளியே தாவி ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிக்கும் அவள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்குமிடையில் அலைக்கழிந்தது..இந்தத் தேடலை அறைமுழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில் அவள் பரபரத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
“ டென்சன் ஆகாதீங்க . கொஞ்சம் நிதானமா உட்காருங்க “
“ என்னமோ பரபரப்பா இருக்கு. அந்நியமான எடத்திலே இருக்கற மாதிரி பரபரப்பு ”
“ இதை புது எடமா நெனைக்காதீங்க . அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ரிலேக்ஸ் “
“ இதத்தா எல்லாரும் சொல்றாங்க . எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். இன்னொரு பொண்ணெ என் இடத்திலே வெச்சுப் பாக்கறதிலே ஒவ்வொரு நொடியும் இம்சைதா. தற்கொலைதா பண்ணிக்கணும் “
“ விபரீதாமெல்லா நெனக்காதீங்க “
“ எல்லாம் விபரீதமாத்தா நடந்திட்டிருக்கு.”
“ எப்படி வேண்ணா சொல்லிக்கலாம் “
“ இதெல்லா ஏன்னு உங்களாலே ஒரு வார்த்தை அவர் கிட்ட நீங்க கேக்க முடியுமா .. இல்லே.. இல்லே அவன் கிட்ட ,..”
“ எப்பிடி கேக்க .. என்ன அதிகாரம் எனக்கிருக்கு...சாதாரண கடன் பிரசினையிலெ என்னன்னு பக்கத்திலெ இருக்கறவன் கிட்ட கூட கேக்க முடியாத நெலமை. இதிலெ இதுவெல்லா பெரிசுதா ..”
“ தலெ விதின்னு சொல்றாங்களே இதுதானா..”
சட்டெனத் தூறலாய் இருந்த மழை வலுக்க ஆரம்பித்தது. எதனாலோ தாக்கப்பட்டது போல் விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தாள் . மழைச்சப்தம் அறைக்குள்ளும் ஊடுருவியிருந்தது.
“ மழை பலமா பெய்யுதா. வெளியே போக முடியுமா ... ஏதோ மாட்டிகிட்டன்னு தெரியுது”
சட்டென பாளம்பாளமாக அருவியைப் போல தண்ணீர் விழுகிற சப்தம் அவளின் காதில் கேட்க ஆரம்பித்தது. உடம்பிலிருந்து கழுத்து தனியே தெறித்துப் போய் விழுகிற மாதியான பரபரப்புப் பார்வையுடன் பார்த்தாள்.
விர்ரென்று அந்த அறையினுள் நுழைந்த ராகேஷ் சாக்லெட் தட்டை நீட்டினான். இரண்டை அள்ளிக் கொண்டான் சந்திரசேகர். “ உனக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே “பாக்கெட்டிலிருந்து அய்ம்பது ரூபாயை உருவினான் சந்திரசேகர்..
“ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. எனக்கு இன்னிக்கு பெர்த் டே “. சந்திரமதி அவனின் செதில்செதிலான மேல்உடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கவர்ச்சியும் பளபளப்பும் அவளின் கண்களைக் கூச்சச் செய்தன.
“ எத்தனாவதுடா ‘
“ ஆறு... சிக்ஸ் “
“ போன வருஷமும் இதைத்தா சொல்லியிருப்பியா “
“ நான் என்ன நடிகையா. ஒரே வயசெச் சொல்றதுக்கு ..”
“ அடடா.. அதெல்லா தெரிஞ்சிருக்கா உனக்கு “
“ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. பெர்த் டே சாக்லேட் “.
சந்திரமதி காபி கலர் தாளிலிருந்த ஒற்றை சாக்லெட்டை எடுத்தாள்.
“ இதெல்லா சாப்புடற, ரசிக்கிற மன நிலை இல்லாமெப் போச்சு பாருங்க இப்போ. நான் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாக்லெட் பிரிக்காமெ கெடக்குது அங்கெ “
“ சமாதானமா என்ன சொல்றதுன்னு தெரியலே “
“ எனக்கு பிளைட்டுக்குப் போறது வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலே .. அங்க தங்கியிருக்கக் விருப்பமில்லை.தங்கியிருக்க முடியும்ன்னு தோணலே. மனசு பதறது ”
“ வேறே என்ன பண்ணலாம் . யோசிக்கலாம்..”
“ என் சொந்தக்காரங்க ரொம்பவும் அந்நியமாகி ரொம்ப வருஷமாச்சு. யார் கிட்டையும் உறவில்லை. அவங்களுக்கு நான் துபாய் போனதிலெ ஆரமபத்திலிருந்து இஷ்டமில்லெ.. இப்போ இந்த நிலமையிலெ அவங்ககிட்டையெல்லா திரும்பிப் போக இஷ்டமில்லே”
“ அவங்களுக்கு எப்பிடி இஷ்டமில்லாமெப் போச்சு “
“ வளர்ந்திட்டிருக்கற கொழந்தைக. பக்கத்திலிருந்து பாக்க வேண்டிய பருவம். இப்போ எதுக்கு வுட்டுட்டுப் போகணும் வெளிநாட்டு வேலைக்குன்னு கேட்டாங்க. உள்ளூர்லே ஏதாச்சும் வேலைக்குப் போ. அதுலே கஷ்டமோ நஷ்டமோ சமாளிச்சுக்கன்னாங்க. அவன்தா கேட்கலே. துபாய் வேலைக்கு ஆள் புடுச்சு காசு குடுத்து எல்லாம் தயார் பண்ணிட்டான். போ.போ.ன்னு தொரத்துனான். அவனோட சின்ன வேலையிலெ அந்த வருமானத்திலெ குடும்பத்தெ ஓட்ட முடியாதுன்னு போனன். இப்போ சொந்தக்காரங்க அவங்க சொன்னதே சொல்லிக்காமிச்சு ஏசுவாங்க. எல்லாம் தலை கீழாகிப்போச்சு “
அவளின் பரபரப்பு பேச்சு தடைபட்டும் கோர்வையற்றும் இருப்பதில் தெரிந்தது.கைகள் சற்றே நடுங்குவது போல் பட்டது.
“ எங்க தங்கி இருபது நாளைக்கடத்துவேங்க . ஒரு சின்ன விசயம் ஞாபகம் வருது. பக்கத்து வீதி டிராவல் ஏசன்சியில் அறுபடை வீடு அப்புறம் கொஞ்சம் வடநாடுன்னு ஒரு டூர் புரகிராம் இருக்கறதெ நோட்டீஸ் விளம்பரத்திலெ பாத்தன். ரெண்டு வாரத்துக்கு மேலெ ஆகும். அதிலெ போனா பொழுதும் போகும் .செரியாவும். மனசு அலைபாயாமெ, இவங்களையெல்லா பாத்துப் பாத்து மனம் புழுங்காமெ கொஞ்சம் நாளும் கழியும்..மனசுக்கும் கோவில்களுக்குப் போறதிலெ ஆறுதல் கெடைக்கும்.. ஊர் திரும்பறதெ அதெப்பாத்துட்டு முடிவு பண்னீக்கலாம் “
அவளே தீர்மானித்துக் கொண்டு சொன்னாள்.ஒருவகையில் பதற்றம் தணிந்து விட்ட்து போலிருந்தது.
முதல் முறையாக குவைத்திற்குச் சென்ற மூன்று மாதத்தில் வளைகுடாப் போர் வந்து உயிர் பிழைக்கவென்று பலர் திரும்பி வந்தனர். அப்படி அவளும் திரும்பி இருக்கிறாள்.
” அங்க போன செலவெல்லா இன்னம் கட்ட முடியாமெ . அதெல்லாம் மனசிலெ வெச்சு மறுபடியும் போய்த்தானே ஆகணும் “ . இரண்டாம் முறை அங்கு போக நிர்பந்தங்கள் இப்படித்தான் ஆரம்பித்தன.
அது பற்றி ஒரு இந்தித் திரைப்படம் வந்திருப்பதாய் உறவினர் மோகன் கூடச் சொன்னான். சவரம் செய்யப்படாத மனிதர்களால் நிரம்பிய படம் போல் அவளுக்குத் தோன்றியது. அவ்வளவு இருட்டு அவர்களின் முகங்களில் இருட்டு அப்பிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. கழுத்தில் ஏறிவிட்ட பாம்பை உதறித்தள்ளுவது போல் ஒவ்வொருவரும் பிரயத்தனம்படுவது போலிருந்தது.அந்த நிலைமை இப்போது தனக்கு வந்து விட்ட்தைப் போலவே அவள் உணர்ந்தாள்.
“ ஊருக்கு அவங்கெல்லா திரும்பி வர்றதலே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. அந்த ஆம்பளெ பொம்பளியிலெ உன்னைத் தேடிப்பாத்தன் அக்கா ”
“ அது சினிமாடா . அதுலெ நான் எப்பிடிடா வருவன்.”
“ என்னமோ அதிலே நீ இருக்கறதா நெனச்சு பாத்துட்டே இருந்தேன். “” ” அதுதாண்டா சினிமா ..அந்த சிடி கெடச்சா குடு. மறுபடியும் பாக்கணும் “ மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை.அதை வீட்டில் போட்டுக்காட்டினால் தான் திரும்பியதில் இருந்த சிரமங்களை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தாள்.அந்த ஏர்லிப்ட் என்ற படக்குறுந்தகடு தேடியும் கிடைக்கவில்லை.
“ நாங்க உன்னெ அனுப்பறதுக்கு என்ன கஷ்டப்படறோம்ன்னு இன்னொரு சினிமா எடுக்கலாம்” : என்றார் கணவர். பணம் எல்லாக்கஷ்டங்களையும் சொல்லி விட்டுப் போனபோது அந்த துபாய் பயணம் அமைந்தது. அங்கு வேலை கொடுப்பவரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, கொஞ்சம் சமையல் வேலையில் உதவுவது என்பது அவளுக்கான வேலையாகச் சொன்னார்கள். சாப்பட்டிற்குப் பிரச்சினை இல்லை. துணி, தங்குமிடம் இலவசம். ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் விட்டு வர செலவுக்குத் தருவார்கள்.
இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பையன் அவளுக்கு. மாமியார் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னபின்பு கிளம்பிப் போனாள்.
மூன்றாம் தடவையாக இப்போது ஊருக்கு வந்திருக்கிறாள்.
முதல் தரம் வந்தபோது குடும்பம் சந்தோஷத்தில் மிதப்பதும் அவள் அனுப்பும் பணம் குழந்தைகளின் படிப்பிற்கும் குடும்பப் பராமரிப்பிற்கும் சுலபமாக ஒத்துவருவது தெரிந்தது. போதும் இனி போக வேண்டாம் என்று ஒருபுறம் மனதில் ஆசை துளிர்த்தது. யாருக்காகவோ உழைப்பது. எல்லோரும் வேலைக்குப் போன பின்பு எப்போதும் ஏசி இருக்கும் அறையில் உடம்பு எலும்பு போல் கட்டையாகிற மாதிரி உட்கார்ந்திருப்பது .அரக்கப்பறக்க வேலை செய்வது இதெல்லாம் பிடிக்கவில்லை அவளுக்கு.ஓய்வு என்று அமையாமல் காலம் விரைந்து கொண்டிருந்த்து.
ஈரக்கையை சேலைத்தலைப்பிலேயே துடைத்தபடியே வந்த ரூபா “ ரொம்பவும் பதட்டமா இருக்காதீங்க மதி.. எல்லாம் நடக்கறதெ நல்லதுக்குத்தா . நல்லதே நடக்குமுன்னு நெனையுங்க ‘ என்றாள்.அப்போதுதான் முகத்தை நன்கு கழுவிப் பளிச்சென்று ஆக்கியது போல் ரூபா இருந்தாள். மழையின் சப்தத்தை மீறி உள்ளே பைப்பிலிருந்து ஏதோ தண்ணீர் விழும் சப்தம் கேட்டதும் மீண்டும் ரூபா சமையலறைக்குச் சென்றாள்.
.” இனிதா படிப்புக்குன்னு நெறைய செலவெல்லா இருக்கு. மூணு பேர்த்தெ கரையேத்தணும் . ரெண்டு பொண்ணுக. எங்கம்மா இவங்களுக்கும் அம்மாவா இருந்துப் பாத்துப்பாங்க மதி ” . அங்கு அனுப்புகையில் கணவன் தீர்மானமாகவே முன்பு சொல்லியிருந்தான்.
குழந்தைகள் வளர்வதைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் அவள் அனுப்பும் பணத்தைச் சுட்டிக் காட்டி எல்லாம் நீ போட்ட சாதம்மமா என்று குழந்தைகள் சொல்லி சொல்லி அவளைக் குளிப்பாட்டினார்கள். மாமியாருக்கு முடியாத போது வந்து விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்தில் ஒரு சமயத்தில் இருந்தாள். குடும்பத்தில் வறுமை அகன்று விட்டதாகத் தோன்றியது அவளுக்குப் பெருமை தந்தது. குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிற வேதனை அவர்கள் நன்கு வளர்ந்து நிற்பதில் கரைந்தது..
மூன்று குழந்தைகள் பெற்றவளுக்கு உடம்பு எந்த விருப்பங்களையும் வைக்காதபடி காலத்தைத் தள்ளினாள்.
இந்த முறை வந்தபோது வீட்டில், அவளின் இடத்தில் வேறொரு பெண் இருப்பது தெரிந்தது. அதிர்ந்து போனாள்.
“ஆம்பளெ தனியா இருக்க முடியுமான்னு சமாதானமெல்லா சொல்ல மாட்டேன் , எல்லாம் கை மீறிப் போச்சு. வளர்ற பொண் குழந்தைகளுக்கு மத்தியில ஒருத்தியெக் கொண்டாந்து வெச்சிட்டு எனக்கு அவ வேணுங்கறான். இதுகளையெல்லா வுட்டுட்டு வீம்புக்கு நான் எங்க போயி நிக்கறது. நீ வந்தா இதுகளெ கையில் புடுச்சுகுடுத்துட்டு வெலகிக்கலாம்ன்னு உள்ளுக்குள்ளியே அழுதுட்டிருந்தேன் சந்திரா. என்னை மனச்சிடம்மா .. “ என்று அழுதாள் மாமியார்.
“ அப்பிடி நீ தனியா போறதுன்னா சொல்லு இவங்களியும் கூட்டிட்டு வர்றன். தனியா போயிர்லாம். அவன் புதுசா வந்தவளோட என்னமோ பண்னுட்டும். “
“ ரெண்டு பொண்ணுகளுக்குன்னு கொஞ்சம் நகைக கொண்டாந்தேன். கொஞ்சம் காசு இருக்கு. அதெல்லா எத்தனெ நாளைக்கு வரும்ன்னு தெரியாது. மூணும் படிக்கதுங்க. இப்பத்திக்கு அந்த யோசனையெல்லா தனியா போறதெல்லா எடுபடாது. தனியான்னும் போக முடியாது. .பாக்கலாம். திரும்பப் போயிதா யோசிக்கணும். காசு மிச்சம்பண்ணிக்கனும். இந்த ஆம்பளெ பண்ணுன மாதிரி நானும் நெனச்சிருந்தா, அங்க நடந்துட்டிருந்தா என்னாகும்”
“ எனக்கும் புரியுதம்மா . நான் கெழட்டுப் பொம்பளை. நான் என்ன பண்ண முடியும் . எல்லாம் கை மீறிப் போச்சு. .கொஞ்சம் வார்த்தைக மீறுனா கூட இந்த மூணுகளோட நான் வீதியில் நிக்கணும். நான் நின்னு சவமாயிருவன். வயசு அப்பிடி. இந்த மூணும் என்ன பண்ணும்“
“ அந்த தைரியந்தா அந்த ஆம்பளைக்கு. போலீசுக்குப் போனா அவன் நிலைமை என்னாகும்ன்னு தெரியுமா “
“ எதுவா இருந்தாலும் வீதிக்கு வர்றவங்க நாங்க நாலு பேருந்தா. இப்போ புதுசா வந்திருக்கற அவ வேறே.. ‘
சின்னப்பெண் சந்திரமதியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெரிதாய் பிரச்சினை புரியவில்லை போலிருந்தது.
“ நீ இருக்கற ஊர்லெல்லா ராக்கெட் இருக்கும்மா ..ராகெட்லே உட்காந்து பாக்கணும். அதுக்குன்ன்னு படிக்கணும் “
“ படிக்க வைக்கறண்டி.. பாத்துக்கலாம் “
அவள் வேலைசெய்யும் இடத்தில் பக்கத்து வீட்டு வேலைக்காரி இந்தோனிசியாப் பெண் நிர்ஷா ஞாபகம் வந்தாள். அவள் வரும் போது ஒரு ஆறு வயதுப் பையனை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கிறாள். வேறொருவருடன் சினேகிதமாகி அவனுடன் மறைமுகமாய் குடும்பம் நட்த்துகிறாள். அவ்வப்போது ஊருக்கும் போய் விட்டு வருகிறாள். ஏதாவது கேட்டாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போய் விடுவாள். வங்கதேசத்திலிருந்து வந்த சில வீட்டு வேலைசெய்யும் பெண்களும் அவளுக்குத் தெரிந்திருந்தார்கள். எல்லோருக்கும் அவள் ” மா “ தான். யார் ” மா “என்று சொல்லிக்கூப்பிட்டாலும் தன் இரண்டு பெண்கள் கூப்பிடுவது போல் நினைத்துக் கொண்டு கண் கலங்கிவிடுவாள் சந்திரமதி.
சந்திரமதிக்கு வீட்டில் இருக்க வேண்டாம் என்று தோன்றி விட்டது..கணவன் பற்றி யாரிடமாவது போய் புகார் செய்யலாம் என்று தோன்றியது.காவல்துறைக்கு வேண்டாம். வடக்குத் தெருவில் பார்த்த பிளக்சில் கோமதியின் பெரியதலை தென்பட்டது. வருங்கால முதல்வரே வருக என்று போட்டிருந்தார்கள். சந்திரமதியோடு உயர்நிலைப்பள்ளியில் படித்தவள் அரசியலுக்குப் போனாள். சிரமங்கள் இருந்தன.வட்டச்செயலாளர், மாவட்டச்செயலாளர் என்று உயர்ந்து கொண்டே போனாள்.ஆனால் முதலமைச்சர் என்ற அடைமொழியுடன் பிளக்ஸ்தட்டியைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் ஓரிருவர் முதலமைச்சரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வார்கள். நிரந்தரமுதல்வர் காலமானபின்பு பத்துப் பேர் அந்தமாதிரி சொல்லிக் கொள்வது தெரிந்தது. இரண்டு மாதங்களுக்குள் அந்தப்பட்டியல் நூறு பேரைத்தொட்டு விடும் போல் இருந்தது.இப்போது போய் அவள் முன் நின்றால் ஒன்றும் நடக்காது. அவளுக்குப் பரபரப்பு அரசியல் முக்கியம்
ஆனால் வீட்டில் உட்கார்ந்திருந்தால் மனம் தாறுமாறாய் அலையும். கொலைவெறி வந்து விடும் என்று ஒருதரம் வாய் முணுமுணுத்துக் கொண்டபோது வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். சித்தப்பா பாலாமணி ஞாபகம் வந்தார்.தன்மகள் திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு பதிவுத்திருமணம் செய்து வைத்தார். நாலு பேரைக்கூட்டி அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பும் செய்தார். வீட்டில் அவள் இருக்கும் போது பலரின் பேச்சு அவரைத்தடுமாறவைத்தது. ” பொழங்கற சாதி கூட இல்லெ பாரு “ என்று பலரும் குத்திக் காட்டினார்கள்.ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியான அவள் மேல் மண்ணெண்யை ஊற்றிப் பற்ற வைத்து விட்டார்.. சிறைக்குப் போன போது தலையில் அடித்துக் கொண்டு தான் நடந்து கொண்டதைப்பற்றி ப்ற்றி சொல்லி அழ ஆரம்பித்தார். புத்தி கெட்டுப் போச்சு என்று சொல்லி அழுதார்.
அதுபோல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனதில் போட்டுப் புளங்கிக் கொண்டிருந்தால் ஏதாவது விபரீதத்திற்கு மனக்குரங்கு வழி காட்டி விடும். அதில் பலியாகப்போவது கணவனா, புதிதாய் வந்த பெண்ணா என்று பிரித்துக் பார்க்க இயலாமல் போய் விடும்.மெல்ல மெல்ல ஏதோ பூதம் அவளை எங்கோ கொண்டு போய் தள்ளிவிடும் என்று தோன்றியது. வெளியில் வந்து விடுமுறை தினங்களைக் கழித்து விட்டு குவைத்துக்குப் போவதுதான் நல்லது என்று தோன்றியது.
அறைக்குள் நுழையும் போது தலையிலிருந்த முக்காட்டுச் சேலை நழுவி சந்திரமதியின் கழுத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது. சந்திரசேகர் அதிகபட்ச அதிர்ச்சியுடன் சந்திரமதியின் மொட்டைத்தலையைப் பார்த்தான். கொஞ்சம் சந்தனக் கீற்றுகள் எண்ணெய் பிசுக்குடன் இருந்தன. “ என்னங்க.. இப்பிடி “
“ அறுபடை வீடு போனா முருகனுக்கு மொட்டை அடிக்க வேண்டாமா “
“ மொட்டை அடிக்கறன்னு சொல்லவேயில்லே..”
“ யாருக்குத்தெரியும். பழனியிலே திடீர்ன்னு ஒரு எண்ணம் வந்துது. வேண்டுதல்ன்னு ஒண்ணும் இல்லே.. நீங்க அதிந்து போன மாதிரி எங்க வீட்லே எல்லொருக்கும் சின்னதா அதிர்ச்சி தரணும்ன்னுதா.. ஒரு சின்ன அதிர்ச்சி. பெரிய அதிர்ச்சியெல்லா தர்ர அளவு கொடுமைக்காரியில்லே நான் ..அந்த மனுஷன் மாதிரி .. “
அவளுக்கே அவளின் முகத்தை மொட்டைக் கோலத்தில் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது.மொட்டை அடிக்கும் இடத்தில் வரிசையாய் உட்கார்ந்திருந்த பெண்களின் முகங்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிவது போலிருந்தது. குடும்பத்துச் சிரமங்களியெல்லாம் நினைத்து அழுகிறார்களா என்ன. அல்லது மொட்டை அடிக்க லகுவாகட்டும் என்று தலையை நனைக்க போடப்பட்ட நீரா இப்படி வழிந்தோடுகிறது என்றிருந்தது..அந்த இடத்தில் இருந்த சப்தங்களின் உச்சமும், மயிர்கள் குவியலாய் அங்கங்கே தாறுமாறாய் இறைந்து கிடந்ததும் அவளுக்கு அருவருப்பையேத் தந்தன.
செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் ஏதோ பசையில் கால்கள் ஒட்டிக் கொள்வது போலிருந்தது. ஒவ்வொருவரின் கைகளிலும் கண்ணாடிகள். சிறிதும் பெரிதுமாய். ஹாலின் சுவர்களில் இருந்த பெரிய கண்ணாடிகள் மொட்டைகளைக் காட்டி பயமுறுத்தின . சடைசடையாய் மயிர்கற்றைகள் தலையிலிருந்து கழனறு விழும்போது அவளின் கண்களிருந்தும் கண்ணீர் வழிந்தது. இந்தக்கண்ணீருக்கான காரணகர்த்தாக்களின் மேல் ஏதாவது சாபமிடலாமா...தன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகட்டும் என்று விருப்பபடலாம். தன் கஷ்டமெல்லாம் இப்போதுதான் ஆரம்பமாகியிருப்பது போலவும் பட்டது. இதுபோல் பிரச்சினை வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை அவள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருப்பது போல் பட்டது . பழனி மலை முருகன் அந்தக் கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான் என்ற நம்பிக்கை மனதில் வந்தது. இப்படியெல்லாம் கஷ்டம் வந்து விட்டதே என்றிருந்தது.. எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம். புருஷனைப் பங்கு போட்டுக் கொள்வதை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்தது.
“ எப்பிடியோ இருபது நாளு கழிஞ்சது. பிளைட்டுக்கு செரியா இருக்கும். எல்லார்த்துகிட்ட சொல்லணுமில்லியா வர்ற வழியிலெ வீட்டுக்குப் போனன். நான் இன்னிக்கு ஊருக்குப் போறது தெரிஞ்சு அந்த ஆளு அந்தப் பொண்ணோட வெளியூர் போயிட்டான். குழந்தைக கொஞ்சம் அழுதாங்க. வந்துரும்மான்னாங்க. இன்னம் ஒண்னும் முடிவு பண்ண முடியலேன்னு சொன்னன். மொட்டை அடிக்க முடிவு பண்னுன மாதிரி ஏதாச்சும் முடிவு எப்பவாச்சும் எடுப்பன். எப்போன்னு தெரியலே. என்னன்னு தெரியலே..”
‘’ ஆமா . அந்த நாட்லே மொட்டை அடிச்சுட்டு இருக்க அனுமதி இருக்குமா. வேற மத அடையாளம்ன்னு எதுவும் அனுமதிக்க சிரமம் இருக்குமா..”
“ ஆமா .. நீங்க சொன்னப்புறந்தா ஞாபகம் வருது. சிக்கலா மாறுமா.. தெரியலெ. அங்க ஏர்போர்ட்லிருந்து வெளியே போக வுடுவாங்களா.. இல்லே ஏதாச்சும் காரணம் காட்டி திருப்பி அனுப்புச்சுவாங்களா .. எதுவா இருந்தாலும்.... “
“ பாசிட்டிவா இருங்க “
“ செரி. எதுவா இருந்தாலும் ஏத்துக்கத்தா வேணும். எந்த முடிவெ எடுக்கவும் எந்த சமயம்ன்னு ஒண்னு இருக்கில்லியா ..”
பக்கத்தில் வந்து நின்ற சந்திரசேகரவனின் மனைவி ரூபா சந்திரமதி நீட்டிய பஞ்சாமிர்த டப்பாவை வாங்கிக் கொண்டாள்.விபூதி அது மூடப்பட்டிருந்த பிளாஸ்டி உறையைத் தாண்டி ககமமத்தது.
“ சின்ன வயசிலே எனக்கு பழனி பஞ்சாமிர்தம்ன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த தரம் என்னமோ புடிக்காத மாதிரி டேஸ்டே பண்ணலே “ என்றாள் சந்திரமதி மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே... மினுங்கலாய் நரை மயிர்கள் தெரிந்தன.
Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com.
Ananda viketan weekly feb 2025.
SUBRABHARATHIMANIAN/
RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
To
பங்குடி நாவல் ; க மூர்த்தி /
சுப்ரபாரதிமணியன்
தலித் மக்களின் வாழ்க்கைகளை தொடர்ந்து சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர் க. மூர்த்தி அவர்கள்.
அவர்களின் விடுதலை சார்ந்தும் யோசிப்பவர்.பெரம்பலூர் பகுதி தலித் மக்களின் வாழ்க்கைஅவரின் எழுத்தில் தீவிரமாக வெளிப்பட்டிருக்கிறது. அவரின் தலித் வகை நாவலே பங்குடி
கரிசல் படைப்புகளை தொடர்ந்து வாசித்ததன் மூலம் அந்த பகுதி வட்டார வாழ்க்கை வழக்கு, பேச்சு வழக்கு போன்றவற்றை இப்போதெல்லாம் சுலபமாக தான் புரிந்து கொள்ள முடிகிறது
க. மூர்த்தி அவர்கள் இந்த நாவலில் வரையும் பெரம்பலூர் வட்டார வழக்கு பேச்சு வழக்கு சார்ந்த விஷயங்கள் புதிதாக இருப்பதால் இறுக்கமாக தோன்றுகின்றது. பெரம்பலூர் பகுதியில் இருந்து எழுத்தாளர்கள் அதிகப்படியானவர்கள் வரவில்லை என்பதால் இந்த குறை .
பங்குடி என்ற வார்த்தையே புதிதாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்கள் இருக்க கூடிய இடம் என்றார்கள். அங்கு எல்லா சாதி மக்களும் இருக்கிறார்கள். வருத்த புளியங்கொட்டையை சாப்பிடும் மக்கள் அல்லது புளியங்கட்டையை அவித்து சாப்பிடும் மக்கள் வறுமையில் என்ற சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன விதைப்பட்டியை எடுத்து சோற்றுக்காக குத்தி போடு என்ற என்று சொல்கிற சோகமும் வருகிறது. ஒரு மலை இருக்கிறது அந்த மலையை உடைத்து துண்டு துண்டாக செய்து அதில் சில பொருட்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஆதாரங்களை அந்த பகுதி ஒட்டக்குடியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் “ சீலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்கு போனாங்க அவ ஈச்சம்பாயைக் கட்டிட்டு எதுத்தாப்புல வந்தாங்கற கதை “ போல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பாறைகளை சிறு வடிவமாகி விற்பவர்கள் அவர்கள். அங்கு விளைந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டுகளாக்கும் பொறுப்பு அவர்களுடையது அப்படித்தான் மூப்பனார் சிலை சிவப்பாக தொப்புள் கொடி கொப்பளித்து வருகிற வரை அந்த வேலையை செய்கிறவர்கள் அவர்கள். அங்கு வருகிற ஒரு புல்டோசர் வடக்கு பாரத பகுதியில் நிறுவப்பட இருக்கிற ஒரு கோயிலுக்காக பெரும் பாறைகளை கொண்டு செல்கிறது. அதற்காக அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது பாறைகளை உடைத்து . பெரும் தேரைகள் போல் புல்டோசர்கள் அந்த பகுதியில் நடமாடுகிறது. வடநாட்டு கோயிலுக்கு இங்க இருக்கும் மலை அழிய பாறைகளை கொண்டு போகிறார்கள். அந்த மக்கள் கூட்டம் சோர்ந்து போகிறது. அங்கே பல சாதிப்பிரிவினைகள். மதப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஆழமாக தான் மூர்த்தி சொல்கிறார். பேரிங்கை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை முக்கியமாக இதில் இடம் பெறுகிறது. அவளுக்கு இரண்டு பெண்கள் அமைகிறார்கள். கணவனாக அமைகிறவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பெண்களும் சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பாறைகளை நொறுக்கி எடுத்துச் செல்லும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிப் போகிற மனிதர்கள் போல பேரிங்கின் வாழ்க்கையும் ஆகிறது. வேறு எங்கே போல பல பெண்கள் வாழ்க்கை இங்கே இப்படி சொல்லப்படுகிறது. இப்படி புல்டோசர் நடமாடிக் கொண்டிருப்பதால் அந்தப் பங்குடி ரத்த நிலமாக மாறிப் பொழிகிறது . இந்த ரத்த காயப்பட்ட இரண்டு பகுதிகள் என்னை பாதித்தனர். ஒன்று பள்ளிகூடம். பள்ளிக்கூடம் இடிந்து மாணவருடைய வாழ்க்கை தவிக்கும் விதமாய் மாறிவிடுகிறது இன்னொன்று மக்கள் பீக்காட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பின்னால் அதற்காக கழிவறைக்காக அவர்கள் வேறு இடம் தேடி போக வேண்டி இருக்கிறது. சாதியின் அதிகாரத்தின் வடிவமாக மலக்கரசலை வாயில் ஊற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் எதிரிடையாக பெருமாள் சாமிக்கு பீவாடையை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். மக்கள், பன்னி மாடு திங்கிற மக்கள் என்ற வகையில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன மலைகள் பாறையில் இடிக்கப்பட்டு மண் குவியல் ஆகிறது .மலைக்காடு கைவிட்டு போறதிலிருந்து புத்தி பேதலித்து ஊரை விட்டு பலர் போகிறார்கள் பலர். அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் குடித்தெருவும் பங்குடி தெருவும் பகைத்திருக்க இருந்து கொண்டிருக்கிறன. அங்கு ஒட்டக் குடிகளாக இருந்தவர்கள் கூலி வேலைக்கும் செல்கிறார்கள் .பலர் வெட்டியாய் திரிகிறார்கள் சிலருக்கு பண்ணை வேலை தூரத்தில் அமைகிறது. பழங்குடிகளின் ஆதாரமாக இருந்த மலை பெட்ரோல் ஆகிறது கல் அரவை மெஷின்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது கல் அரவை மெஷின்கள் இருந்த இடம் பள்ளிக்கூடத்துக்கு என்று ஆகிறது .பேரிங்கையோடு உறவு கொண்டிருந்த காண்டீபன் செய்யும் ரகளையும் அதனால் கொலையும் நிகழ்கிறது ஆண்குறியை அறுத்து கொலை செய்யப்படுகிறான். அந்த பெண்ணுக்கு பின்னால் பித்தன் என்பவன் அலைகிறான் பனங்கறுக்கு நெஞ்சில் கீறுவது போல பல துயரங்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்கிறது. பாறைகள் இல்லாத போன காலத்தில் வெறும் குன்றுகள் ஆறுதல் தருவது போல அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகள்கள் ஆறுதல் தருகிறார்கள். புது வெள்ளத்தைக் கண்ட கெளுத்தி மாதிரி குதித்து விழும் வாழ்க்கை மின்னல்கள் எப்போது வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.. பல ஆண்களுடன் வாழ நினைக்கிற அந்த பெண்ணின் துயரம் நாவல் முழக்க இருக்கிறது. மலைகளை பாறைகளை துண்டாக்கிய புல்டோசர்கள் வேறு ஊர்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அக்காட்சிகளோடு நாவல் முடிகிறது. ஒட்டக்குடிகள் சார்ந்த மக்களின் வாழ்க்கையும் வடநாட்டு கோயிலுக்காக இங்கிருந்து பாறையில் கொண்டு செல்லப்படுவதற்காக சிதைக்கப்படும் மலைப் பகுதிகளும் இந்த நாவலில் மிக முக்கியமான இடங்களை அமைக்கின்றன. பெரம்பலூர் பகுதியை மக்களின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர்களின் மொழி மற்றவர்களுக்கு படிக்க சிரமம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மீறி அப்படியே
கொடுக்கப்பட்டிருப்பது மூர்த்தி அவர்கள் தொடர்ந்து அந்த மொழியில் இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம். அவர்களின் விடுதலையை நோக்கிய பார்வையை உள்ளீடக் கொண்டது இந்த நாவல் ( .ரூ 300 வெற்றி மொழி பதிப்பகம் திண்டுக்கல்)
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “
என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் அமெரிகாவிலிருந்து இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள்
“ சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது
” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய அகாடமி என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்
0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா
0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா
0 பாரதியின் சிந்தனைகள் இன்றைக்கு எப்படி தேவை
0விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது
0 எழுத்தில் சரித்திர கதைகள் இன்றைக்கு ஏன் தேவை
0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது
0 சங்க இலக்கிய மறு வாசிப்பு ஏன் அவசியம்
0 தெலுங்கு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா
0 ஜெயகாந்தன் ஆண்டாள் பிரதர்சினி போன்றோரின் கதைகளை முன்வைத்து தமிழ் இலக்கியத்தில் மனித நேயம்
ஆகிய தலைப்புகளில் எழுத்தார்கள் பேசினார்கள்.
திருப்பூர் சக்தி விருது 2025 விழா ( 21ஆம் ஆண்டில் )
09/03/25 ஞாயிறு மாலை 4 மணி- பார்ச்சூன் ஹோட்டல், 15 வேலம்பாளையம் சாலை, அனுப்பர்பாளையம், திருப்பூரில் நடைபெற்றது.
தலைமை: கேபிகே செல்வராஜ் ( தலைவர் முத்தமிழ்ச்சங்கம் )
முன்னிலை : சுப்ரபாரதிமணியன்( கனவு ), பி. குமார் ( ஸ்டார் அசோசியேட்ஸ்)., நாதன் ரகுநாதன்
21 ஆம் ஆண்டில் விருது பெற்ற பெண் படைப்பாளிகள் :
அல்லிபாத்திமா /பத்மஜா நாராயணன்/ இவள் பாரதி /கயல்
சிவசெல்வி செல்லமுத்து / திராவிடமணி/ மோகனப்ரியா
பிருந்தா சீனிவாசன்/ காயத்ரி ஆர்/// ம. ஜீவ ரேகா/ கனகதூரிகா
வி. இளவரசி சங்கர்/// ரேவதிராம்/ அமுதா செல்வி/ பவுசியா இக்பால்
மருத்துவர் தேவி / யசோதா பழனிச்சாமி / கனலி விஜயலட்சுமி
விஜிலா தேரிராஜன்/ எஸ் வைஜெயந்தி / ஜெ. விஜயலட்சுமி
பிரியா // எஸ். ஜெயலட்சுமி/ வி . கலாவதி/ விஜி ரவி /
சிறப்பு விருந்தினர் :
திருமதி தி. லாவண்யா சோபனா அவர்கள்
( மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர் )
நன்றியுரை : கேபிகே பாலசுப்ரமணியன் ( செயலாளர், முத்தமிழ்ச்சங்கம்
:
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்/கனவு/ ஸ்டார் அசோசியேட்ஸ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின
தொடர்புக்கு : நாதன் ரகுநாதன் 90034 41425
நாகன் ரகுநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்
சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் 39
சுப்ரபாரதிமணியன்
இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 38 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான்
. ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள் . சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன . அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். 1912இல் சிக்காகோவில் பொய்ட்ரி என்ற பத்திரிகையை ஒரு பெண்மணி ஆரம்பித்தார். அந்த பத்திரிகை இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, ஒரு மருந்து கம்பெனி பெண் தன் சொத்தில் ஒரு லட்சம் டாலரை அந்த பத்திரிக்கைக்கு எழுதி வைத்திருக்கிறார் அந்த உயில் நடைமுறைக்கு வரும் போது இரண்டு லட்சம் டாலர்கள் என்று ஆகிவிடுகிறது. அந்த பெரிய பணம் அந்த பத்திரிகையின் முதலீடாக மாறி இன்றும் அந்த பத்திரிகையை தொடர்ந்து வர உதவுகிறது. அந்த தொகை வழங்கிய அந்த பெண்மணி கவிஞராக இருந்திருக்கிறார் அவர் எழுதிய கவிதைகளைப் பிரசுரிக்க மறுத்து இருக்கிறது. இருக்கிறது ஆனால் அந்த பெண் அந்த பத்திரிகையின் தீவிர நடவடிக்கைக்காக உதவி செய்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பவுண்ட் போன்ற கவிஞர்கள் அந்த பத்திரிகைகளுக்கு படைப்புகளை வாங்கி பரிந்துரை செய்து பலருக்கு கவிதைகள் பல வெளிவர உதவி செய்திருக்கிறார்கள் டிஎஸ் எலியட், தாகூர் போன்றவரின் கவிதைகளையும் வாங்கி அந்த பத்திரிகைகளுக்கு எக்ஸ்ட்ரா பவுண்ட் சிபாரிசு செய்து அனுப்பி இருக்கிறார். தாகூரின் கவிதை அந்த இதழில் வெளிவந்த ஆண்டுக்கு பின்னால் தாகூர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது ஒரு சிறு செய்தி
பேரா சிவகுமார் இதை ஒரு பேச்சில் தெரிவித்தார்.
நான் ஹைதராபாத்தில் என் வேலை நிமித்தமாக வசிக்க தொடங்கிய போது பம்பாய், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களில் தமிழர்களின் குரலாய் சில பத்திரிகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன், அப்போதான் ஆந்திரா தமிழர்களின் குரலாக ஒரு பத்திரிகையை நடத்தப்பட வேண்டும் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தோம் பாரதியாரின் பூர்த்தி ஆகாத சுயசரிதை கனவு என்ற பெயரில் அந்த பத்திரிகையை அப்போது ஆரம்பித்தோம் .முதல் இரண்டு இதழ்கள் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வந்தன. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை.
அந்த காலத்தில் ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் இருந்த மத்திய தர வாசகர்கள் ஆனந்த விகடன் கொண்டு பல வெகுஜனை இதழ்களில் அக்கறை கொண்டிருந்தார்கள் .அங்கிருந்த மத்திய மற்றும் உயர் குடி பிராமண பெருமக்கள் அந்த வகை பத்திரிக்கைகளை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களின் பண்பாட்டு சார்ந்த அரசியல், பண்டிகை சார்ந்த விஷயங்கள் முன்னணி பெற்றன. இந்த சூழலில் அங்கு பெரும்பகுதியான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிராமணர்கள் அல்லாத எழுத்து என மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்புகளை அபூர்வமாக எழுதினார்கள். அவர்களுக்குக் களமாக கனவு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அதற்கான வரவேற்பு இல்லாததால். மூன்றாம் இதிலிருந்து அந்த இதழை தமிழ்நாட்டு படைப்பாளிகளும் எழுத மாற்றினேன் அதுவரை ஒத்துழைப்புச் செயல் தந்து கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் விலகிக் கொண்டார்கள்..
எண்ணிக்கையில் குறைந்த பிரதிகளாய் இருந்தது கனவு. 800 பிரதிகள் என்பது குறைவானது அல்ல என்பது நண்பர்கள் சிலரின் வாதம்.
அதற்கு பின்னாலும் நான் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்த பின்னும் கனவு இதழின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
“ வாசன் மகனுக்கு என்றால்தான் அச்சு பொறி அடிக்குமோ
காசு இருந்தால் எங்கேயும் கொண்டு போய் நிறுத்தலாம் “என்ற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று கசடதபரறமுதல் இதழில் வெளிவந்த ஞாபகம். அப்படித்தான் செகந்திராபாத் தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதாக ஆரம்பித்த கனவு இதழ் 38 ஆண்டுகளாக மாற்றுக் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை முன்னணியாகக் கொண்டு இயங்கி வருகிறது .பத்திரிகையில் மட்டுமில்லாமல் கனவு திரைப்பட இயக்கம், தமிழ்மொழி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கி தன் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இப்போதும் 700 பிரதிகள் அடிக்கிறேன்.700 பிரதிகள் காலியாகி விட்ட்து இலவசப்பிரதிகள் தந்து என்று உணரும் போது அடுத்த இதழுக்குப் போகிறேன்.
எண்ணிக்கையிலான இதழ் என்ற கட்டம் தாண்டி கை வசம் இருக்கும் பிரதிகளின் எண்ணிக்கை தீர்ந்து போவதால் அடுத்த இதழ் வரும் என்ற புதிய போக்கு விசித்திரமாகவே இருக்கிறது.
அந்த வகையில் அமரர் மோகன் அவர்களின் நினைவுகளாக வழங்கப்படும் இந்த இலக்கிய விருது கனவுக்கு வழங்கப்படுவது ஒரு சிறு அங்கீகாரமாகவே நினைக்கிறேன், இந்த பண்பை பாராட்டும் கௌரவப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து அமர்ர் மோகன் நினைவு குழு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்
கால நிலை மாற்ற நிலை தரும் நோய்கள்
என் சகோதரர் ஒருவர் கொரோனா காலத்திற்குப் பின் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் உடையவராகி விட்டார் ஆரம்பத்தில் அவர் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியினால் அவரின் உடல்நலம் கெட்டு விட்டது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அதனால் வருகிற சாவுகளை பற்றியும் அதிகம் சொல்ல ஆரம்பித்தார்.
சமீப காலங்களில் மருத்துவமனைக்கு அவர் போகும் பழக்கம் அதிகாரித்து காலநிலை மாற்றம்தான் தம்முடைய உடல்நிலை கேட்டுக்கு காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கால்களை மாற்றம் பற்றிய பிரச்சார மனிதர் மாதிரி அதைப்பற்றி பலரிடம் பேசிக் கொண்டே இருப்பது அவரின் வழக்கமாக இருக்கிறது
காலரை மாற்றங்கள் பல தொற்று நோய்களை உருவாக்குகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா போன்றவை அவற்றால் வருகின்றன. பாச நோய்களும் இதய நோய்களும் நீரழிவு நோய்களும் இந்த கால மாற்ற போக்குகளால் அதிகம் ஏற்படுகின்றன
மற்றும் காற்றுத்துகள்களின் மாசு அதிகரிப்பதும் காரணம இந்த நோய் தன்மையை அதிகரித்து இருக்கிறது.
கல நிலை மாற்றம் இன்றைக்கு மனிதன் எதிர் கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது . தொற்று நோய் ஆகியவற்றை கொண்டு வந்து விடுகிறது. ஆரோக்கியத்தில் ஏற்படும் மாறுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, வெப்ப அலைகள், பக்கவாதம் போன்ற இதய நோய்களை கொண்டு வருகின்றன.மூச்சு திணறல், தீக்காய்களுக்கு வழி இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் கொண்டு வந்து விடுகிறது
இடம் பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் வயதான மக்கள் அடிப்படை சுகாதார நிலையங்களை கொண்டவர்கள் சாதாரணமாக பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை கணிப்புகள் தவறிக் கொண்டே இருக்கின்றன. கலநிலை மாற்றத்தைக் கண்டு இயற்கையைப் பாதுகாப்பதும் சுத்தமான காற்று மற்றும் நீர் வழங்குவதைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதும் ஆரோக்கியமான தலையான விடயங்களாகும். உணவு விநியோகத்தை முறையாக
ஊக்குவித்தாலும் அரசின் கடமையாக உள்ளது. புது வெப்பநிலையில் மனிதர் என்பது காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது இந்த வெப்பநிலை உயர்வு பூமியின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித இடப்பெயர்வு மற்றும் குடியேற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன காலங்களை. காற்று புயல் வெப்ப அலைகள் கனமழை வெள்ளம் போன்றவை அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் உள்ளன. மனித குடியேற்ற நிகழ்வுகள் ஏற்படும் மாற்றம் சில பகுதிகளில் அதிக மக்களை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. பொருளாதார இடையூறுகள், உணவு பாதுகாப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. உணவு சங்கிலிகளில் பல இடங்களில் உணவின் பாதுகாப்பை சமரசம் செய்யும் பல்வேறு ஆபத்துக்கள் வந்து விட்டன. உற்பத்தி சங்கிலியில், உணவின் பாதுகாப்பில் காலநிலை காரணிகளின் தாக்கம் நுண்ணியர்களின் வளர்ச்சியை அவற்றின் தொற்று நோய் போன்றவற்றால் சாதாரண ஆக்கப்பட்டுள்ளது. தாவரம் தொடர்புடைய உணவு மூலம் பரவும் வியாதிகள் அதிகமாக இருக்கிறது. இதில் விலங்குகள் மூலமாகவும் பரவுகிறது. கொரானா வவ்வால்களால் பரவிய கதைகள் நம்குத் தெரியும். உணவு பொருட்களை கெட்டுப் போக வைக்கிறோம். பல பூஞ்சைகள் தொடர்ந்து உற்பத்தியாகி மனிதனுக்கு பலத்த பயங்கர சிரமங்களை கொண்டு வருகின்றன சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் உணவு வழி பாதுகாப்பை சரிப்படுத்த உணவு மூலமாக பரவும் வியாதிகளை கட்டுப்படுத்துவதும் இன்றைக்கு பெரிய சவாலாக இருக்கிறது
திரைக்கதை நூல்
என் நாவல்கள் சிறுகதைகள் என்று முப்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதைகள் உருவாக்கத்தில் ஈடுபட்டபோது என்னை பாதித்த வேறுகதைகளையும் திரைக்கதையாக்கினேன். 8திரைக்கதை நூல்களை வெளியிட்டேன்
அப்படி திரைக்கதையாக்கியதை ( சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வெளி வராதவற்றை ) நாவல் வடிவத்துள் கொண்டு செல்லலாம் என்று முயன்றதன் விளைவில் இந்த நாவல் பிறந்தது.
அதனால் நிகழ் காலத்தில் எழுதப்பட்ட பாணியில் இந்த நாவலை எழுதியுள்ளேன். இந்தப் பாணியிலும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று முயல்கிறேன்.
பார்க்கலாம். எப்படி வருகிறது என்று.
திரைப்பட காமிரா பாணியில் நிகழ் காலத்தில் எழுதப்படுவதை கொஞ்சம் முயன்று பார்த்திருக்கிறேன் இதில். திரைப்பட தாக்கங்களையும் தவிர்க்க முடியவில்லை. தலைப்பிலேயே இது தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
NCBH rs 60
என் மூன்று சிறுகதைகள் :
செம்மலர்:
சோற்று பொட்டலங்கள் என்று என்னுடைய கதை இம்மாத செம்மலரில்..
சோற்று பொட்டலங்கள் என்று முன்பு என்னுடைய கதை ஒன்றை கோவை பேரழில் குமரன் அவர்கள் ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார். அது திருப்பூர் பாண்டியன் நகர், தாய்த்தமிழ் பள்ளியில் எடுக்கப்பட்ட படம் .குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பேசிய படம்.பேரெழில் குமரன் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய நாற்பதாவது வயதில் இறந்துவிட்டார் .கோவைக்காரர்
இப்போது அதே பெயரில் ஒரு சிறுகதை .
இந்த சிறுகதையில் வட மாநில தொழிலாளரின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அல்லது புறக்கணிப்பது பற்றிய மையம். இதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை .வெளி மாநில குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்வி பற்றி அரசாங்கங்கள் கவலை கொள்வதில்லை .சில தன்னார் அமைப்புகள் நிதி பெற்று அவர்க்கான மாலை நேர வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தன இப்போது அந்த நிதிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தைகளுடைய கல்வி வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாய் விட்டது
0
பள்ளிக்கூடம் போகலாமா என்ற என்னுடைய திரைக்கதையின் முதல் அத்தியாயத்தை ஒரு சின்ன சிறுகதையாக ஆக்கி இங்கே தந்திருக்கிறேன் செம்மலரில்..
0
ஈஅல்ம் பெண்ணின் துயர அனுபவங்கள் விகடனில்
ஆனந்த விகடலில் வெளிவந்த என் சிறுகதை முடிவு பதிவுகள் டாட் காம் கனடா இணையதளத்தில்..
விகடன் இதழில் 1200 வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.ஆனால் அதில் மூலத்தில் 2000 வார்த்தைகளில் உள்ளது .அது அப்படியே பதிவில் டாட் காமில் வெளி வந்தது கிரிதரன் அவர்களுக்கு நன்றி
0
அமிருதா இதழில் மழை பொழிந்து.. தனிமையின் அனுபவங்கள் ஒரு இளம் பெண்ணின் கதையாக.. மார்ச் இதழில் ..
0
இப்போதைக்கு விகடன் கதை
” சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விரைவில் விளங்கும் “
சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பதுதான் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் விருப்பம்.அந்த விருப்பம் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும். நீண்ட நாள் கனவு நிறைவேறும் .அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர் சங்கத்தினர்.nirtma உள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்
160 கிலோமீட்டர் ஓடும் நொய்யல் ஆற்றில் பல கழிவுகள் கலக்கின்றன அதை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். அதை மீண்டும் ஜீவநதியாக விளங்கும் .சாக்கடைகள் கழிந்து சுற்றுச்சூழல் சார்ந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓடும் நதியாக நொய்யல் இன்னும் மூன்று ஆண்டுகளில் மாறும். ஒரத்துப் பாளையம் அணை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தேக்கி வைக்கும் அணையாக மாறி உள்ளது.. பல சமயங்களில் அந்த பகுதி விவசாயிகள் தண்ணீர் தேக்குவதை பற்றியும் தண்ணீர் விடுவதை பற்றியும் பல வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவுகள் இல்லாத இடமாக, சுத்தீகரிக்கப்பட்ட நீரைத் தேக்கி வைக்கும் அணையாக ஒரத்துப் பாளையம் விளங்கி வருகிறது
கரூர் தொகுதி மக்கள் தான் நொய்யல் நதியின் பாசனத்தால் அதிகமாக பயன்படுகிற மக்கள்
மூன்றாவது குடிநீர் திட்டம் திருப்பூர் ஏற்றுமதியா சங்கத்தின் பெரும்பங்களிப்பில் கொண்டுவரப்பட்டது .அதில் அரசாங்கத்தின் நிதி உதவி இருந்தாலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மூலமாக வெற்றி பெற்றது
நாலாவது குடிநீர்த் திட்டதற்கான செயல்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. காவிரி ஆறு வற்றி போனாலும் பவானி ஆறு வற்றி போனாலும் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராதபடி நாலாவது குடிநீர் திட்டம் அமையும்
கோவையில் இருந்து திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் அதற்கும் ஏற்றுமதியாளர்களுடைய நிதி பங்களிப்பு இருக்கும் அதிக மின் உற்பத்தி பகுதியாக நம்முடைய கொங்கு பகுதி இருக்கிறது என்பது இன்னும் ஒரு பெருமை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புடன் இங்கு வாழும் தொழிலாளர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கான எல்லா வகை முயற்சிகளையும் ஏற்றுமதி எடுக்கும். படைப்புகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை கொண்டு வரும் படைப்பாளிகள் பாராட்டுக்குரியவர்கள் “
என்று அகில் ரத்தினசாமி ( தலைவர் நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் தலைவர் )சுப்ரபாதிமணியனின் ” வேர்களை இழக்கும் பூமி “ என்ற சுற்றுச்சூழல் கட்டுரை நூலைக வெளியிட்டுப் பேசினார் . அதை சென்னை நியூ செஞ்சுரி புக் வெளியிட்டிருக்கிறது 110 ரூபாய்
இந்த நூலின் முதல் பிரதியை ஜி. சிவானந்தன் ( தலைவர் மக்கள் பசுமை இயக்கம் ) மற்றும் ஆடிட்டர் பாலு ( குமரன் மகளிர் அரசு கலைக்கல்லூரி செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். சிவானந்தன் அவர்கள் கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார்
0
நியாயவணிகம், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு போன்ற அறம் சார்ந்த கொள்கைகள் உலகம் முழுவதும் பேசப்படுகிற போதும், கடைப்பிடிக்கிற போதும் நம் கொங்கு பகுதி இதை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
நமக்கு தேவை 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியசெலவாணியா அல்லது சுற்றுச்சூழலை காக்க வேண்டுமா என்பதை என்னுடைய ” சாயத்திரை “ நாவல் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த போது கேள்வியை முன் வைத்தது
அது தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு மற்றும் ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட போது சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகள் முன்நிறுத்தப்பட்டன
முன்பு லண்டன் தேம்ஸ் கழிவு நீர் ஓடக்கூடிய நதியாக இருந்தது ஆனால் அங்கு இருக்கிற வியாபாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியால் அது படகுகள் ஓடக்கூடிய நதியாக மாறிவிட்டது அதுபோல் நொய்யலை மாற்றுவோம் என்ற கனவை திருப்பூரின் பல ஏற்றுமதியாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான நடவடிக்கைகளும் அவர்கள் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஓரடி முன்னே ஈரடி பின்னே என்று லெனின் சொல்வதைப் போல அவர்களுடைய நடவடிக்கைகளும் அதை சீர்குலைக்கிற சில முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.
உலகம் முழுக்க இன்றைக்கு காலநிலை மாற்றம் சார்ந்த சிக்கலால் சுற்றுச்சூழலை பற்றி அதிகமாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்கள் பேசுகிறார்கள்.
அவர்கள் பேசுகிற அறம் சார்ந்த நியாய வணிகம் எல்லா நிலையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத்தான் எங்களைப் போன்றோர் சுற்றுச்சூழலும் சார்ந்த படைப்புகளை எழுதுகிறோம். குறிப்பிடுகிறோம்
நாங்கள் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நீடித்த வளர்ச்சி என்பது 50 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி மற்றும் நொய்யலைக் காக்கும் முயற்சியில் இணைந்தது என்பதை குறிப்பிட்டு அத்தகைய படைப்புகளை உருவாக்கி வருகிறோம்
சமீப காலங்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியினர் அதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதும் அந்த முயற்சிகள் 30 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் செயலாக்கம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று
சுப்ரபாதிமணியனின் “ வேர்களை இழக்கும் பூமி “ என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு விழாவில் பேசினார்
அதை சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டு இருக்கிறது ரூபாய் 110
0
இந்த விழாவில் பெண் எழுத்தாளர்களுக்காக வழங்கப்படும் நாயகி விருது திருவாளர்கள் ஜெயந்தி சீனிவாசன், மனோரஞ்சித மலர், மீனா முரளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விருதை ஸ்டார் அசோசியேட்ஸ் குமார் அவர்கள் வழங்கி பேசுகையில் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையில் திருப்பூரில் ஏற்றுமதியாளர்களை தவிர பிற தொழில் செய்வோரும் பங்கேற்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆக எல்லோரும் இணைந்து இன்னும் தீவிரமா ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்
இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள், மாண்விகள் பரிசுகளையும் புத்தகங்களையும் பெற்றார்கள்.
தாய் தமிழ் இலக்கியப் பேரவையின் நிர்வாகி பாண்டியராஜன் தலைமை வகித்தார்.பசிதாபானு நன்றியுரை வழங்கினார். பரிசு பெற்ற படைப்பாளிகள் தங்கள் எழுத்து அனுபவத்தை பற்றிப் பேசினர் கவிதை வாசிப்பில் மதுராந்தகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்: :: பாண்டிய ராஜன் தாய் தமிழ் இலக்கியப் பேரவை. , பாண்டியன் நகர் சார்பாக ( 9543625422/ 7868062287 )
நொய்யல் மீண்டும் ஜீவநதியாகும்.. நுால் வெளியீடு விழாவில் நம்பிக்கை
________________________________________
திருப்பூர்; திருப்பூர், பாண்டியன் நகரில், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் 'வேர்களை இழக்கும் பூமி' என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரை தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.
நுாலை வெளியிட்டு, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி பேசியதாவது:
சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பது தான், பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் விருப்பம். அந்த விருப்பம் இன்னும் மூன்றாண்டுகளில் நிறைவேறும்.
அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 160 கி.மீ, ஓடும் நொய்யல் ஆற்றில், பல கழிவுகள் கலக்கின்றன. அதனை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். மீண்டும் ஜீவநதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கரூர் தொகுதி மக்கள் நொய்யல் நதிநீர் பாசனத்தால் அதிகம் பயன்பெறுகின்றனர்.
மூன்றாவது குடிநீர் திட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெரும் பங்களிப்பில் கொண்டு வரப்பட்டது. அதில், அரசின் நிதியுதவி இருந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினரால் வெற்றி பெற்றது. நான்காவது குடிநீர் திட்டத்திற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கின்றன. காவிரி, பவானி ஆறுகள் வற்றினாலும், திருப்பூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்ற அடிப்படையில் நான்காவது குடிநீர் திட்டம் அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார். Dinamalar today
0
வெப்பம்: Tamil hindu
சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
- மதுராந்தகன்
புதன், 19 பிப்ரவரி, 2025
சுப்ர பாரதி மணியன்
சுப்பிரமணிய பாரதியின் குட்டிக் கதைகள்
நான் சேவல் சண்டை பற்றி பல கதைகளை எழுதி இருக்கிறேன் அப்பா தொகுப்பிலும் வேறு கதை தொப்புகளிலும் அந்தக் கதைகள் உள்ளன. ஆடுகளம் படத்தில் சேவல் சண்டைகள் இலக்கியத்தில் வருகிற இடங்களைக் குறிப்பிட்டு பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்பதையும் போடுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னுடைய சேவல் சண்டை கதைகளை பற்றி அதில் குறிப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
பாரதி வேடிக்கை கதைகள் என்று பலவற்றை எழுதியிருக்கிறார் குட்டிக் கதைகள் எழுதி இருக்கிறார் அவற்றிலெல்லாம் நகைச்சுவை மிளிரும்.
பாரதியாரின் சின்ன சங்கரன் கதை 33 பக்க நீண்ட கதை அப்படித்தான் அவர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஐரோப்பிய சாயல் சிறுகதைகளில் வரும் வடிவத்தை பின்பற்றியவர் அல்ல. அதே சமயம் சிறுகதைகள் மற்றும் படைப்புகளில் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும். சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கருதியவர். அவர் எழுதிய படைப்புகளில் உடன்கட்டை ஏறுவது குறித்த எதிர்ப்பும் பொட்டுக்கட்டு வழக்கத்தை எதிர்த்தும் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கத்தை எதிர்த்தும் பலவற்றை எழுதியிருக்கிறார். கலப்பு மணம் பற்றி ஆதரித்து எழுதியிருக்கிறார். மதவழக்கம், பழமையான சட்டங்களை பற்றி கண்டித்து இருக்கிறார். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் கூட தீண்டாமை சார்ந்த எதிர்ப்பு குரல் இருக்கும் இவை எல்லாம் பாரதியை நவீன சிறுகதை சார்ந்த ஒரு எழுத்தாளராக காட்டும்
இதனுடைய தொடர்ச்சி சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார் . 11 பக்கம் கொண்டது. அது தமிழில் முதல் சிறுகதை என்று சிலர் சொல்கிறார்கள் . ஷெல்லிதாசன் என்ற புனைப் பெயரில் எழுதியிருந்தார், “ ஆறில் ஒரு பங்கு “ கதையும் அப்படி சிறப்புகள் கொண்டது ஆறில் ஒன்று ஒரு பங்கு 1910 இல் பாண்டிச்சேரியில் இருந்து பாரதியார் அவர்களால் வெளியிடப்பட்டது
கதாபாத்திரம் கதை சொல்லும் யுத்தியும் கதை மையத்திலிருந்து கதையை வெளியேற்றும் புத்தியும் இன்றைக்கு பல எழுத்தாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதை கடைபிடித்தவர் ஆரம்பத்திலேயே பாரதியார் அவர்கள். அவர்களுடைய வேடிக்கை கதைகள் அல்லது குட்டி கதைகள் எனக்குப் பிடிக்கும். இவற்றில் எனக்கு அந்த பழக்கடைக்காரனை ரொம்பவும் ஞாபகம் இருக்கிறது
அவன் கால் யானைக்கால் போல இருக்கும் .அந்த வியாதி உள்ளது. அந்தப் பக்கம் வரும் பள்ளி மாணவர்கள் அவனுடைய கடையில் இருந்து பழங்களை திருட முயற்சித்தால் என் காலால் அடிபடுவீர்கள் என்று விரட்டுவான். ஒரு பையன் அப்படித்தான் ஒரு பழத்தை எடுத்து விட்டான் காலால் உதைக்கிறான். யானைக்கால் என்பதால் மெது மெது என்று இருப்பதாக அந்தப் பையன் மற்ற பையன்களிடம் சொல்லிச் சிரிக்கிறான் . திரும்பத் திரும்பச்சொல்லி சிரிக்கிறான். இது எலும்பில்லாத கால் அடியே படாது, வலிக்காது என்று அவன் சொல்கிறான் இந்த கதை சின்ன வயதிலிருந்து எனக்கு ஞாபகம் வந்தது.. காரணம் இதேபோல யானைக்கால் வியாதி கொண்ட ஒரு பெண்மணி நான் படித்த திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் முன்பு தேன் மிட்டாய்கள். நெல்லிக்காய் வைத்தபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் .அவள் தன் காலை காட்டித்தான் மற்றவர்களையும் மிரட்டி கடையை நடத்திக் கொண்டிருந்தாள்.
சேவல் கட்டு பற்றிய குறிப்பு வருகிற சின்ன சங்கரன் கதைக்கு மறுபடியும் செல்லலாம். அதில் ராமசாமி கவுண்டர் நபர் மிக முக்கியமான வருகிறார். அவர் பொழுதுபோக்குகளில் ஒன்று சேவல் சண்டை வேடிக்கை பார்ப்பது. அவர் சார்ந்த அரண்மனை கோழிகள் அந்த சண்டையில் தோற்று தான் போகும். புதிதாக அரண்மனை கோழி என்று எதையாவது கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் .பிறகு அவையெல்லாம் சேவல் சண்டையில் பிரயோஜனம் இல்லாமல் போகும். ராமசாமி கவுண்டரின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி எல்லாம் அந்த கதையில் நிறைய சொல்லப்படும். 32 கவளம் சாப்பிட வேண்டும் என்று குறிப்பு அதில் இருக்கும். அவ்வளவு சாதம் அவ்வளவு சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை அவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அந்த கதையில் வலியுறுத்தி இருப்பார். .அதேபோல ராமசாமி கவுண்டர் சேவல் சண்டையில் தோற்றுப் போன கோச்சைக்கறியைச் சாப்பிட்டாரா என்ற குறிப்பு காணவில்லை பாரதியாருடைய கதையில் இடம்பெறும் இந்த சேவல் சண்டை என்னுடைய சில கதைகளின் சேவல் சண்டை மையத்திற்கு அருகில் வந்திருப்பதால் அந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறது. பாரதியார் எழுதிய வேடிக்கை கதைகள், குட்டி கதைகள் இவற்றை சுலபமாக யாரும் படித்து தங்களுக்கான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம்
ReplyForward
Add reaction
The tamil hindu jan 2025-02-20
வெப்பம்:
சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
• மதுராந்தகன்
தறிநாடா : குறும்படம்
இயக்கம் : ஜோசன் விக்டர்
திரைமொழிக்கதை: சுப்ரபாரதிமணியன்
கைபேசியில் எடுத்த படம்
தயாரிப்பு : கனவு On production
0
தறிநாடா : குறும்படம்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
சேலையை நெய்து முடித்தல்
0
முதலாளியிடம் போதல் .
நெசவாளி : கூலி குறைவாக இருக்குதே
முதலாளி : அவ்வளவுதான் வரும் .. போ
0
வீடு திரும்பும் நெசவாளி சோகத்துடன்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
நெசவை திடீரென நிறுத்துதல்
தறி நாடாவை கையில் எடுத்து வீதிக்குச் செல்லுவது . கூர்மையாக்குவது
0
முதலாளி வீடு வரல். குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
சாயப்பட்டறை செல்லல்
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ரேசன் கடையிலில் இலவச சேலை, வேட்டியை வாங்கி வரும் பெண்
“ நான் என்ன பண்ணட்டும். இலவச சேலை, வேட்டின்னு சொல்லி பவர்லூம்லே நெய்சதெ தந்தாங்க. கைத்தறியிலெ நெய்சது இல்லே இது .
அலறல் : நான் காரணமில்லை
0
மளிகைக்கடைக்குச் செல்லுவது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ஜரிகைக் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நூல் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நாங்க காரணம் இல்லை யார் காரணம் தேடு
0
அவன் விழித்தபடி
கையில் இருக்கும் நாடாவை உயர்த்துவது.
நட்புரை
வாழ்க்கை பிரம்மாண்டமானது. வாழ்க்கை அனுபவங்களை சில வார்த்தைகளில், சில வரிகளில் சுருக்கிக் கவிதையாக அதிலும் குறிப்பாக ஹைக்கூவாகத் தரும் வல்லமை அமரன் அவர்களுக்கு எப்போதும் உண்டு. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் பிற மொழிகளில் கொண்டு செல்வதிலும் ஆர்வம் கொள்பவர்.
ஆயிரக்கணக்கான பக்கங்களை ஹைக்கூ கவிதைகளால் நிரப்பி இருப்பவர் .
எவ்வளவு அனுபவங்கள்
எவ்வளவு கைகுலுக்கல்கள்
எவ்வளவு பரிமாற்றங்கள்
அதெல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அந்த துறை சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கு ஹைக்கூ சுலபமாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு வகையில் பழமைத் தன்மையும் வேறு வகையான இறுக்கமும் இருப்பதை நான் அந்நியமாக கண்டு சில சமயம் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் அனுபவ அளவில் அவையெல்லாம் விரிந்த கடல் போன்றது.
அதிலிருந்து சிலவற்றை எடுத்து சொல்ல சொல்ல நாமும் அந்த கடலுக்குள் போய் பயணம் செய்கிற அனுபவத்தை பெறுகிறோம். அதற்குள் நீச்சல் அடிக்கிறோம். சில சமயம் கடல் நீர் வாய்க்குள் புகுந்து கொள்வது உண்டு. அப்படித்தான் நான் முன்னால் குறிப்பிட்ட பழமைத்தன்மையும் கூட.
ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தொடர்ந்து கவிதை உலகில் இருப்பதும் ஆயிரக்கணக்கான கவிதைகளை அக்கறையுடன் எழுதி இருப்பதும் பெரிய சாதனையாகப்படுகிறது.
அதில் ஒரு நூலை கனவு பதிப்பகத்தின் மூலம் அவர் வெளியிட இசிவு தந்தது என்னை பெரு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மகிழ்ச்சியை ஹைக்கூ வாசகங்கள் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். .அமரன் அவர்களின் ஹைக்கூ உலகத்திற்குள் நாம் செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை கனவு வெளியீட்டின் மூலமாக அவர் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி
அவரின் ஹைக்கூ உலகில் அவரோடு இணைந்து அவருடன் கைக்குலுக்கிக் கொள்வோம்.. வாருங்கள்
0
சுப்ரபாரதி மணியன் 9486101003 ( கனவு பதிப்பகம், திருப்பூர் )
எழுத்தாளர் தேவி பாரதி:
ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை... அமரர் நண்பர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் நண்பர்கள் உடன் இணைந்து ஆரம்பித்த மருத்துவமனை. அங்கு தான் எழுத்தாளர் தேவி பாரதி சிகிச்சை பெற்று வந்தார். வருகிறார். அவரை மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகளான சிவானந்தம் போன்றவர்களும் பத்திரிக்கையாளர் ஜீவா தங்கவேல் போன்றவர்களும் அக்கறை எடுத்துக்கொண்டு அங்கே அனுமதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
நண்பர் ஓவியர் சுந்தரம் அவர்களுடன் சென்றபோது அவர் அடையாளம் கண்டு பேசும் நிலையில் இருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இரண்டாவது மாடியில் இருந்த அவர் அறையில் அவரை பார்த்தவுடன் தூக்கத்தில் இருந்தவர் சட்டென விழித்து புன்னகைத்தார். தலை கருப்பு கேசம் அடர்ந்திருந்தது.முகத்தில் நாலைந்து நாள் தாடிதான். மூக்கில் குழாய்கள்.
அவர் வாயிலிருந்து வெளியேறிய கோழை படுக்கையை நனைத்து அசுத்துதக்கியிருப்பதைக் காட்டி அதை துடைக்க முடியாமல் இருப்பதை சொன்னார். பக்க வாதத்தால் கைகால்கள் செயலிழந்திருப்பதாகச் சொன்னார். அவரின் தலை அருகில் இருந்த்த் துண்டை எடுத்து ஓவியர் சுந்தர் அவர்கள் அதைத் துடைத்து அவருக்கு ஆறுதல். தந்தார் நன்றாக இருப்பதாக சொன்னார் நாங்கள் வேறு எதுவும் கேட்காத போது அவர் சரளமாக பேச ஆரம்பித்தார்
9 வயதில் பள்ளியில் படிக்கிற போது எழுத ஆரம்பித்தேன் அப்போதே நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று நினைத்தேன் ஜெயகாந்தன் அவர்கள் அப்போது பிரபலமான எழுத்தாளர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினேன். நான் எழுத்தாளன் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக படிப்பதற்காக சில புத்தகங்களை எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கடிதம் எழுதினேன். அவர் பதில் அனுப்பவில்லை
பின்னால் ஈரோட்டுக்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன்.மதுவும் மாமிசம் ஆகவும் இருந்தார். எனக்கு அது சிரமப்படுத்தியது. குப்பையாக இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் அவர் எழுத்துக்கள் அப்படி இல்லை அவரும் அப்படி இல்லை என்று பின்னால் நான் உணர்ந்து கொண்டேன்.
அவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி காலகட்டத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் சென்று சந்தித்தேன் அடுத்த முறை மைதிலி உடன் சென்று சந்தித்தேன். நான் சந்தித்த சில நிமிடங்களில் அவர் மறைந்து விட்டார் அவருக்கு அஞ்சலி செலுத்திய முதல் நபராக இருந்தேன் என்று நினைக்கிறேன்
சுந்தர ராமசாமியின் படைப்புகளில் எனக்கு பிடித்தது புளிய மரத்தின் கதை தான்.. ஜே ஜே சில குறிப்புகள் நாவல் விளையாட்டுதான் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இன்னொரு சிறந்த நாவல். அவர் படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவருக்கு பெரிய விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்று உள்ளவர்களுக்கு வருத்தம் ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை
என்னுடைய படைப்புகளுக்கு ஆதாரமாக, அட்சாரமாக ஈரோட்டைச் சார்ந்த நண்பர் மதுசூதரன் இருந்தார். தீபம் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார். அவர்தான் என்னை ஊக்குவித்து எழுத சொன்னார்.
நான் மார்க்சிய தத்துவம் சார்ந்த இயக்கங்களில் இருந்தேன் ஆனால் அங்கிருந்தவர்களில் பலபேர் இலக்கிய வாசிப்பு என்பதை தேவையில்லாததாகக் கொண்டிருந்தார்கள் ஆனால் தத்துவார்த்த விஷயங்களை வரமாக கொண்டிருந்தார்கள் அதெல்லாம் எனக்கு உரமாக இருந்தது
நான் எழுதிய நாவல்களில் நொய்யல் எனக்கு பிடித்த நாவல் என் வாழ்க்கை அனுபவங்கள் பலதும் அதில் வந்திருக்கின்றன. நீர் வழிபடூம் நாவல் அதிகம் பேசப்பட்டாலும் அதைவிட நொய்யல்தான் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைத்தேன்
நான் இப்போது எழுதி வரும் ஆதியாகமம் என்ற நாவல் கூட முக்கியமான நாவல். வண்ணநிலவனின் கதைகளில் ஆதியாகமமஎன்ற வார்த்தை அதிகம் தென்படும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .அந்த தலைப்பிலேயே புதிய நாவலை எழுத ஆரம்பித்தேன்.
எழுத்தாளனுக்கு மரணம் இல்லை அவர் எழுத்துக்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
The hidnu tamil feb 2025
முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும்
கற்பனையும் கருத்துரையும்: பிஜிலி நூல்
உண்மையைச் சரணடைதல் என்ற எளிய நம்பிக்கை தான். இஸ்லாமியத்தின் அடிப்படை அது பணிந்து நடக்க வற்புறுத்துகிறது என்கிறார் பிஜிலி
இஸ்லாம் ஒரு தத்துவமாகும். வாழ்க்கை முறையாகவும் பரவி அந்தந்த நாடுகளின் கலாச்சாரமும் பாதித்திருக்கிறது உள்ளூர் கலாச்சாரம் இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளை பாதிக்காத முறையில் பின்பற்றப்படுகிறது. வேறுபாடு இருக்குமானால் அது விலகிதாக உணரப்படும் சூழல்களை இந்த நூலில் சிறப்பாக சொல்கிறார். பிஜிலி.
சுற்றுச்சூழல் பொறியாளராக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து திருவனந்தபுரம் நகரில் வாழ்ந்து வருபவர். ஐந்து மொழிகளில் எழுதும் ஆர்வம் கொண்டவர். அவரின் சமீபத்தியக் கட்டுரைத்தொகுப்பு நூல் இது.
இஸ்லாமைக் கொள்ளாதவர்களும் புரிந்து கொண்டிருப்பது போன்று அது வெறும் மதம் மட்டும் அல்ல படைத்தவர்களிடமிருந்து படைக்கப்பட்டது திருக்குர்ஆன். இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் உண்மையின் குரலை சொல்வதற்காக இந்த நூலை பிஜிலி அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரத்தை கொண்டது என்ற கருத்து கற்பனையானது. இந்த கருத்தை கொண்டவர்கள் அதிகாரம் வைத்திருக்கிறார்கள் அவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று மனதில்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல தரவுகள் மூலம் சொல்கிறார்.
பேராசை தாகம் உருவாக்கியிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடைவதற்காக வழியாக இஸ்லாம் இருப்பதை பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். அந்த உண்மையை அறிந்து அடைய இந்த கட்டுரைகள் வழி காட்டுவதாக அமைத்திருக்கிறார். இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக எடுத்துரைக்கப்பட்டு தவறாக கணிக்கப்பட்டு இன்று இஸ்லாம் உட்படாத எல்லோராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். நாம் ஒன்று சேர்ந்து மனிதாபிமானத்தை புரிந்து கொள்ள முயல்வது சமூக வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை சொல்கிறார்
இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்கள் சரிவாகவேக் கிடக்கிறார்கள். பலரைக் கவரக்கூடிய உயர் சாதிக் கலாச்சாரம் பூர்வீக ஆதிக்கம் அவர்களை பாதித்திருக்கிறது என்பதை சொல்கிறார் ஆன்மீகம் லவுகீகமும் இஸ்லாமில் இணைபிரியாதவை இஸ்லாம் தான் மிகவும் பழமையான மதம் அதே நேரத்தில் இஸ்லாம் தான் மனிதனுக்கு ஏற்றதான நவீனமான மதம் என்றும் பல சர்ச்சைகளை இந்த நூல் எழுப்பி இருக்கிறது. முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும் என்பதற்கான நெறிமுறைகளையும் விளக்குகிறது இந்நூல்.அதை பிற மதத்தினரும் கைக்கொள்ளலாம் என்பதையும் இது சொல்கிறது
பிஜிலி அவர்கள் தமிழ், மலையாளம், உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் அறிந்தவர். தமிழில் அவ்வப்போது எழுதி வருகிறார் அவரின் ஐந்து தமிழ் நூல்களில் சமீபத்திய நூல் இது.
ரூபாய் 300/ 388 பக்கங்கள் சித்தார்த் பதிப்பகம் மதுரை 6 2 5020 8220550688
சுப்ரபாரதிமணியன்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
. தமிழகம் முதல்வருக்கு கோரிக்கை: சுப்ரபாரதிமணியன்
1. நகரங்களில் மற்றும் பிற ஊர்களில் நடைபெறும் நூலக விழாக்களில் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு பங்களிப்பும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்
2. நூலாக வாசகர் வட்ட குழுக்களில் அம்பது சதவீதம் எழுத்தாளர்கள் இடம் பெற வேண்டும்
சமீபத்தில் நூலக வார விழா நடந்து முடிந்தது அதில் இடம்பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் அதிர்ச்சிகரமாக இருக்கும்.அதில்எழுத்தாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எழுத்தாளர்களை நூல்கள் நூலகங்ளில் இருக்கும். பிறர் எடுத்து படிப்பார்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அங்கு நடைபெறும் கூட்டங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற மாட்டார்கள்
சாதாரண தேனீர் செலவுக்கு பணம் கொடுக்கும் தொழில் பிரமுகர்கள் இலக்கிய வள்ளல்களாக அந்த கூட்டங்களில் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் எழுதும் பொன்மொழிகள் கவிதைகள் என சொல்லப்படும் தத்துவ கொட்டேசன் மூலம் அவர்கள் நூல் சிறந்த எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.
நூலகர்கள் அந்தப் பகுதியில் எழுத்தாளர்களை அழைப்பதில்லை. அவர்களின் நூல்களைப் படிப்பதில்லை சரியாக அறிந்து கொள்வதே இல்லை இந்த நிலையில் நடக்கும் நூலக விழாக்கள் திருப்திகரமாக இல்லை
மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, உள்ளூர் படைப்பாளியின் பங்களிப்பையும் வலியுறுத்தும் தமிழக அரசு இந்த விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் இதை நூலகப் பொதுத்துறை கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 116 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 110 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை
நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள்
நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
சுப்ரபாரதிமணியன்
NCBH புதிய நூல்கள் 1 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
1 வேர்களை இழக்கும் பூமி.. சுற்றுச்சூழல் கட்டுரைகள்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் சுப்ரபாரதிமணியனின் சமீபக் கட்டுரைகள் சொல்கின்றன.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் பற்றிய பார்வையையும் இவை தருகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரின் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன
27 நாவல்கள் உட்பட 115 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் -- சுற்றுச் சூழல் நூல்களின் வரிசையில் ஒரு கட்டுரை நூல் இது..
சுப்ரபாரதிமணியன் NCBH புதிய நூல்கள் 2
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
0 முகப்பறவையே எங்கு சென்றாய்.. திரைநாவல்
27 நாவல்கள் உட்பட 116 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் திரை நாவல் வரிசையில் ஒரு நாவல் இது.
நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரைக்கதைகள் உருவாகும்.. . அதே சமயம் திரைக்கதைகளிலிருந்து உருவாகும் திரைநாவல்கள் இன்னொரு வகை. அந்த வகையில் ஒரு நாவல் இது.
பெண்ணின் முக அழகும், உள்ளார்ந்த அக அழகும் வெளிப்படுமொரு இளம் பெண்ணின் கதையாகும் .
கிளமெண்ட் விக்டரின் திரைக்கதைகள்
திரையரங்குகளில் வேலை என்ற அளவில் சுமார் 40 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்திருப்பவர் கிளமெண்ட் விக்டர் அவர்கள் .ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பவர். தொழில் ரீதியாக அந்த படங்கள் அவரோடு ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தமிழ் திரைப்பட உலகின் அகல ஆழங்களை நன்கு அறிந்தவர் நீண்டகால தமிழ் திரைப்பட வரலாற்றை தன் மனதில் கொண்டிருப்பவர். திரைப்பட ஆக்கங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பவ.ர் திரைக்கதை ஆக்கங்கள் சார்ந்த பல ஆலோசனைகளில் அவருடைய திறமையை கண்டு வியந்திருக்கிறேன் அது சார்ந்த உழைப்பும் அக்கறையும் ஆச்சரியப்படுத்தும்.
அவர் இயக்கிய குறும்படங்களை பார்க்கிற போது அதில் திரைக்கதைகளில் நேர்த்தியும் தொழில்நுட்ப நேர்த்தியும் அவரின் கைவண்ணத்தை காட்டும். அவரும் திரைக்கதை நூல்களை எழுதி இருக்கிறார். திரைப்பட பாடல்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் முத்திரை அவருடைய குறும்படங்களில் பளிச்சென்று தெரிகின்றன
முழுநீளத்திரைப் படம் எடுக்கிற அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதைப் புத்தகம் கொண்டு வருகிறார்
இன்றைய திரைப்பட ஆக்கங்களில் திரைக்கதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன அந்த வகைக் கதைகளை சொல்ல அவர் கேட்டு இருப்பது ஆச்சரியம் எனக்குள். திகைப்பும் புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரங்களும் திரைக்கதை ஆக்கமும் வசனமும் ஆச்சரியப்படுத்தும் அப்படி ஆச்சரியப்படுத்திய ஒரு திரைக்கதை தான் இது. இதுபோல் அவருடைய மனதில் நிறைய திரைக்கதைகள் உள்ளன. பல பதிவுகள் உள்ளன அவையெல்லாம் திரைப்பட ஆக்கங்களாக வெளிவர வேண்டும் அதற்கு காலம் கை கொடுக்க வேண்டும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதை நூலை எடுத்துக் கொள்ளலாம் நானும் அவருடைய முயற்சிகளில் பங்கு பெறவே விரும்புகிறேன்.
காலம் ஒத்துழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்
. சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர் திருப்பூர
ReplyForward
Add reaction
கொரானா தடுப்பூசி
சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி
- மு.முருகேஷ்
குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின்
கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள்.
தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி
பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால்
முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக்
கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும்
பொம்மைகள் அல்லவே!
குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால்
கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை.
நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச,
ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள்
பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல
விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும்
தடையாக இருந்து விடுகிறது.
குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும்
குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி
விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள்.
‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்...
குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள்.
“ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?”
“ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?”
“தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு
நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று
குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம்.
குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன.
“கையைக் கட்டு; வாயைப் பொத்து..!”
தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே
வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..?
குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள்
சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும்.
குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான
மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும்.
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர்
குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம்
நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர்.
’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை
இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள்,
கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி
வெளியிட்டது.
ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா,
பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப்
பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது.
சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து
மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில்
உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு
எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார்.
எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத்
தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும்
ஈடுபட்டு வருகிறார்.
எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 38 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல்
எனக்கு மிகவும் பிடித்தமானது. சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின்
நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே
சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்.
கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான
நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே
பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்...
இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள்.
“மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ்,
செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக
இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும்
வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின்
எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும்,
ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும்
விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன.
.
எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா
போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான
கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது.
’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப்
பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம்.
சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள்.
இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக
அமையட்டும்.
( கொரானா தடுப்பூசி. விலை ரூ100 நிவேதா பதிப்பகம், சென்னை வெளியீடு..
அழவள்ளியப்பா நூற்றாண்டை ஒட்டி நிவேதா பதிப்பகம் வெளியிட்ட 30 சிறார் நூல்களில் ஒரே சிறார் நாவல் இது )_
திருப்பூர் இலக்கிய விருதுகள் நிகழ்வு உரை :
ஹைக்கூ கவிதைகள் ;: கவின்
வெற்று நிறங்கள் வேண்டாம்/ பூக்கள் போட்ட குடை கொடுங்கள் மழைக்கு காட்டுவேன் என்று எழுதியபடி ஒரு புயலைத் தாண்டி வந்திருக்கிறேன்.
ஹைக்கூ என்பது ஒரு காட்சியை விவரிப்பது மூலம் தான் உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது.. காட்சிப்பூர்வமானது என்றும் அவசிய தேவையான வார்த்தைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் மிக முக்கியமாக அது எளிமையானதொரு பகிர்வு என்ற கவனமும் தேவை... எளிமையான பகிர் என்பதால் தன் நிலை மற்றும் காலத்தில் ” பொதுநிலையில் சுட்டுவது “ அதிகம் இருத்தல் வேண்டும். அவை மீறப்படும் இடங்களின் சிறப்புத் தேவைகளை உணருதல் வேண்டும். இயன்றவரை வரை உணர்வை விளக்கும் சொல்லை பயன்படுத்தாது விடுதல்
ஹைகூ வரலாறு, முன்னோடிகள் வந்து சேர்ந்திருக்கிற இடம் எல்லாவற்றையும் தாண்டி இனி இப்போது ஹைக்கூவில் செய்ய வேண்டியவை இவை என்று சொல்லலாம்
1ஹைக்கூ பார்த்தல் - நேரடி அனுபவம் மட்டுமே எழுதுக கவிதை 2. கவிதை ஹைக்கூ சென்ரியூக்கான வேறுபாடுகளை உணர்தல் வேண்டும்
3. ஹைக்கூவின்பல்வேறு நிலைகளை உணர்தல் வேண்டும். அரசியல், அழகியல், தனித்துவம், உள்ளார்தல்
4. இதுவரை வந்த நல்ல ஹைக்கூக்களை அடையாளப்படுத்த வேண்டும்
5. ஹைகூ நூல்களை சிறிய பொருட் செலவில் அதிகம் சென்றடைய வைத்தல்
6. ஒருங்கிணைப்புகள், ஹைக்கு வாசிப்பு, பகிர்வரங்கங்கள் நிகழ்த்தலாம்
7..பயனாக ஹைகூவின் தன்மையை வாழ்வில் எடுத்துக் கொள்ளுதல் ( சான்றாக: It is a learning process from the nature and intuitive happenings which are spontaneous and unplanned )
8. தேடி செல்வதொன்றில்லாமல் மேற்கொள்ளப்படும் ஹைக்கூ பயணங்கள் ( சான்றாக ஜப்பானிய ஹைக்கு முன்னோடி பாஷோ இப்படி பயணித்திருக்கிறார் )
9. வழமையான ஹைக்கூ முன்மாதிரிகளில் இருந்து விடுபடல் ( coiming out from cliché haiku )
10. ஹைக்கூ எழுதுவதை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ( where to stop writing haiku also an art, it will evolve , it will happen
(குழு செயல்பாடுகள் போன்ற நடைமுறை சிக்கலில் இருந்து எவ்வாறு தனித்துவத்தோடு இருப்பது போன்றவை தனி )
1 அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது
கதிர் பாரதி கவிதைகள்
கதிர் பாரதியின் புதிய கவிதை நூல்
அம்மா என்பவள் குடும்பத்தில் ஒருத்தி... முக்கியமானவள் மற்றும் நாட்டை அம்மா என்று அழைக்கிற வழக்கமும் நம்மிடம் உண்டு. பாரதமாதா அப்படித்தான்.
ஆனால் பிரபஞ்சத் தாயாகி அம்மா எல்லோரையும் அணைக்கும் அனுபவங்களால் இந்த தொகுப்பை நிறைத்திருக்கிறார் கதிர் பாரதி அவர்கள்
இன்றைய நவீன கவிதை உலகம் இறுக்கமும் படிமக்குவியல்களும் தெளிவின்மையும் பல மாய ரூபங்களும் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிகிற போது தெளிவான அனுபவங்களால் அமைக்கப்பட்ட இக் கவிதை வரிகளை பார்க்கிறபோது ஆறுதலாகவே இருக்கிறது.
. அவையெல்லாம் நல்ல கவிதைகள் அடையாளமாக இருக்கின்றன.
காட்சிகளை விவரிப்பது, உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது, , தேவையான வார்த்தைகள் . அது எளிமையானதொரு பகிர்வாய். இருத்தல் வேண்டும் என்ற அணுகுமுறையில் இவை உச்சம் பெறுகின்றன.
இப்படி அம்மாக்களை வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள். இப்படி அம்மாக்கள் அமையாது போனவர்களை எண்ணி கண்ணீர் விட ஒரு சந்தர்ப்பம் கூட இது .
நிகழ்கால சம்பவங்கள் ஊடே ஒரு பேண்டஸித் தன்மையும் பல பகுதிகளில் வந்து விடுவது இன்னொரு பரிமாணமாக இருக்கிறது அம்மா மாடு முதல் குழந்தைகள் வரைக்கும் பலருக்கு ஆறுதல். உயிர் தண்ணீர் என்று இருப்பது போல் இருக்கிறவள் ஏர்வாடியில் கொஞ்சம் இருக்கிற அனுபவங்களும் வந்து எதார்த்தத்தைத் தொட்டுப் போகிறது. கொஞ்சம் பைபிளும் உலவும் குருவிகளும் கற்றாழைச் செடிகளும் இந்த கவிதைகளுக்கு ஒரு அரணாக அமைந்து விடுகின்றன. மாந்திரீகமாய் முளைப்பாரிக்கு தலை துவட்டும் சந்தர்ப்பங்களும் பல அமைகின்றன பொன் மூக்குத்திகளுக்கு மத்தியில் வேப்பம்பூக்கள் பளபளக்கும் தருணங்களை கவிதைகளில் பார்க்க முடிகிறது. மேகம் கூட அனாதையாய் விடக்கூடாது என்று துயரம் படும் அம்மா யாரையும் அனாதையாக விட்டதில்லை. ஆனால் அவள் கதி என்னவென்று பல சமயம் யோசிக்க வைக்கிறது
அம்மாவின் குருதியில் இருந்து கிளம்பிய வார்த்தைகளால் இக்கவிதைகள் அமைந்துள்ளன. விளைந்த கதிர் அசைவது போல வலம் வரும் அவளது உடலை கூறாக்கி பசியாற்ற முடிகிறது . சமூகத்தில் அவள் தன்னை மனதால் நிலைநிறுத்திக் கொண்ட அனுபவங்களால் இந்த கவிதைகள் நிரம்பி இருக்கிறது உலகத்தையே அணைத்துக்கொள்ளும் இது போன்ற அம்மாவின் உள்ளங்களால் கவிதை வாசகர்களை அணைத்துக் கொள்ள முடிகிறது கதிர் பாரதியால்.
( ரூ 100 நாதன் பதிப்பகம், சென்னை )
-சுப்ரபாரதிமணியன்
கனவுகளின் வரைபடம் நாவல் : பெர்லின் வாழ் கருணாகரமூர்த்தி
பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள்
கருணாகரமூர்த்தி அவர்களின் எழுத்தில் இலங்கை மொழி வளமையும் கிண்டலும் எனக்குப் பிடித்தவை.
ரசித்துப் படிக்க வைக்கும்.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இது சாதாரணம்
இவர்கள் இலங்கை வாழ்கை, இலங்கையின் பால்ய பருவம், விடுதலை இயக்கச் செயல்பாடுகள், புலம் பெயர்தல், அங்கு சிரமதிசைகள், காதல் காம வாழ்க்கை.. பிறகு எப்பவாவது இலங்கை திரும்புதல் , அடைக்கலமாவது அல்லது மீண்டும் புகலிட நாட்டில் அடைக்கலம் என்பதாய் அவர்கள் எழுதும் நாவல்கள் அமையப் பெறுவது, சாதாரணம்
இந்த சாதாரணத்தை அசாதரணமாக இந்த நாவலில் கையாண்டிருக்கிறார் நண்பர்.
பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள்.
ஞாபகங்கள் சாசுவதமானவை. இந்த நாவலைப் பற்றிய ஞாபகங்கள் கூட அப்படித்தான் இனி இருக்கும் .
இலங்கையின் யோகபுரம். இது சொந்த ஊரா. இயல்பான பெயரா.. அங்கு இருக்கும் அத்தி மரம் முதல் சாதாரண மனிதர் கள் வரை பலரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. அத்திமரம் புயலால் அலைவுறுவதைச் சொல்வதன் வழியே அந்த ஊர் மனிதர்களின் சிரமங்களும் சந்தோசமான கணங்களும் தெரிய வருகின்றன
நாவலின் கதாநாயகன் பரம்குருவின் குடும்பக்கடமைகள், காந்திய இயக்க செயல்பாடுகள் ஆரம்பத்தில் கவனத்திற்குரியவை. பையன் இளம்பருதி . சுபாஷினி பிஸ்டல் பெண்ணாக அறிமுகம் .சந்தியார் உரை சிறப்பானவை. சோத்துக்கு வழியில்லாதவர்கள் கோசலிசம் பற்றிய விவாதம் எல்லாம் சுவாரஸ்யம்.
போராளிகள் வாழ்க்க்கை விரிவாகச் சொல்லப்படுகிறது. போராளி விசுவானந்தர் காணாமல் போகிறார் .. சிங்களவர் மத்தியில் பகைமையுடன் வாழ்க்கை.பாலியாற்று மாந்தர்களும் வந்து போகிறார்கள். சுபாஷிணி நாவல் தந்தாள் .கூடவே இரவு கூடலும் தந்தாள் குருவுக்கு. பாரிஜாதம் இளம் விதவையும் சபலப்படுத்துகிறாள்.
துப்பாக்கி ரவைகளுக்கு அரசியல் தெரியாது என்ற பாடங்களும் தரப்படுகின்றன.ரகுந்நன், அம்பேத்கார் போன்றவர்களும் வருகிறார்கள் இந்திய மண்ணில் ராணுவப் பயிற்சி பிறகு திரும்புதல். ஏதேதோ காரணங்களால் கடவுச்சீட்டும் தஞ்சமடைதலும் நடைபெறுகிறது.. கனடா நாட்டு லாட்டர் பரிசு விழுந்து அதன் அனுபங்களும் இளம்பரிதிக்குக் கிடைக்கின்றன. காதல் திருமணம், வீட்டுத்திருமணம் விசேசங்களாகிறது.
கனடா நாட்டு சூழல் விவரிப்புகள் உயிருள்ளவை. வர்ஷிதாவோடு திருமணம் . அவள் குறித்து மொட்டைக்கடிதங்கள் வருகின்றன். கணவன் மனைவி மன சிரமங்கள் . அதிரன், அருவி என்று குழந்தைகள்
இளம்பரிதிக்கு இலங்கைக்கு மீள ஆசை. வர்ஷிதாவும் வருகிறாள்.
பிறகொரு நாட்டின் தயவில் வாழும் குற்றவுணர்ச்சி, வாழ்விடத்தை விட்டு விரட்டப்பட்ட ஞாப்கங்கள், பெற்ரோர் சந்திப்பு என்று இலங்கையில் அனுபவங்கள். இலங்கையில் விவசாயப் பண்ணையோடு வாழ வர்ஷிதாவுக்கு ஆசை. பேரின்பம் தென்றலாக வந்து போகிறது. நீர்ப்பாசனம் , மரவகைகள் முதற்கொண்டு இயற்கை குறித்த புரிதல்கள் விரிவானக் களத்தைத் தருகின்றன.
சந்யாசிக்கு சம்சாரம் தெகஞ்ச மாதிரி பல அனுபங்களும் இருவருக்கும் வாய்க்கின்றன.
சித்தாந்தம், செல்னெறி , தேடல்கள்கடுனான கனவு வாழ்க்கை தொடர்வதை நாவல் முழுமையாகச் சொல்கிறது .
சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச்செல்லும் பேரின்பம் கிடைக்கிறது.
இந்த பேரின்பத்தை கருணாகர மூர்த்தி அவர்கள் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டேயிருக்கிறார் தமிழ் படைப்புகள் மூலம் என்பதும் வரம்தான்.
-சுப்ரபாரதிமணியன்
எழுத்தில் 48 ஆண்டுகள்: சுப்ரபாரதிமணியன்
கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி (கணிதம்) படித்துக் கொண்டிருந்த போது எனது முதல் சிறுகதை "சுதந்திர வீதிகள்" திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த "விழிப்பு" என்ற இடதுசாரி இலக்கிய இதழில் வெளியானது. எமர்ஜென்சி காலத்தில் போலீசாரின் அடக்குமுறைக்கு ஆளான ஒரு விளையாட்டு வீரனைப் பற்றின கதை அது. "பயிர்களை மேயும் வேலிகள்" என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்தேன். அவர்கள் தலைப்பை மாற்றியிருந்தார்கள். 1977ல் வெளிவந்தது. ஓர் உண்மை சம்பவம் என்பதும், எமர்ஜென்சி கால கட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்ததும் அக்கதை வெளிவந்த போது முதல் படைப்பின் பெருமையாக இருந்தது.
கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த ஊரான திருப்பூரில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து 'குறிஞ்சி' என்ற கையெழுத்திதழை நடத்தி வந்ததில் பல படைப்புகளை (கவிதைகள், கதைகள்) எழுதி இருந்தாலும் "சுதந்திர வீதிகள்" தான் எனது முதல் அச்சில் வரும் படைப்பாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் நடத்தி வந்த தீபம் வாசகர் வட்டக் கூட்டங்களில் படைப்புகள் வாசிப்பதும் இலக்கியம் சார்ந்த விபரங்களும் படித்து முடித்தபின் வேலையில்லாதப் பருவத்தில் ஆறுதலாக இருந்தது. அதே சமயம் கணிதம் மனசிலிருந்து கை நழுவிக் கொண்டிருந்தது. இலக்கியம் வெகு நெருக்கமாகியிருந்தது. தீபம், தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் வெளிவரத் துவங்கியிருந்தன. நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு சற்றே ஆறுதல் என்றிருந்தது.
தொலைபேசித் தொடர்பு உத்யோகம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றேன். புது மொழி, சற்றே வித்யாசமான புது கலாச்சார சூழல். அந்நியமாகவே உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்களுடன் பரிச்சயம் இருந்தது. சிறுகதைகள் நிறைய எழுதினேன்.
எனது முதல் நாவல் "மற்றும் சிலர்" -ஹைதராபாத்தில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றின நாவலாக அமைந்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதற்கு முன் "அப்பா" என்ற 15 சிறுகதைகள் அடங்கிய எனது தொகுப்பை நர்மதாவே வெளியிட்டிருந்தது. அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதியிருந்த நீண்ட முன்னுரை கவனத்திற்குரியதானது. "மற்றும் சிலர்" நாவலில் 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது வேலை வாய்ப்பை இழந்த ஒரு இந்தி ஆசிரியன் ஹைதராபாத்திற்கு துணி விற்கும் வேலைக்குப் போய் தெலுங்குப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்நியனாகவே உணரும் 15 வருட வாழ்க்கை பற்றினது. ஹைதராபாத்தில் தொடர்ந்து தமிழகப் பதிப்பாளர்கள் பங்கு பெற்ற புத்தகக் கண்காட்சியை நடத்தினோம். சபா நாடகங்கள், சமய சொற்பொழிவுகளுக்குள் இருந்த ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகரத் தமிழர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் அறிமுகமாக 'கனவு' இலக்கிய வட்டத்தின் சிறு அளவிலானக் கூட்டங்களும், புத்தகக் கண்காட்சிகளும் பயன்பட்டன.
வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென்று அங்கங்கே தமிழ் இதழ்கள் இருந்தன. பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் "ஏடு", கேரளத் தமிழ்ச் சங்கத்தின் "கேரளத் தமிழ்", பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் "ஊற்று" என. இரட்டை நகர தமிழர்களின் இலக்கிய வெளிப்பாட்டிற்காக "கனவு" என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து இரட்டை நகர இளைஞர்கள் அதில் பங்கு பெற வைத்தேன். க.நா.சு., நடுவனின் பல படைப்புகள், சுந்தர ராமசாமி கவிதைகள், வானம்பாடிக் கவிஞர்களின் படைப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ஜெயமோகன், பாவண்ணன், கோபி கிருஷ்ணன் என்று விரிவான தளத்தில் பலர் பங்கு பெற்றனர்.
எட்டாண்டு கால ஹைதராபாத் வாழ்க்கை "மற்றும் சிலர்", "சுடுமணல்" நகரம் 90 போன்ற நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளிக் கொணர வைத்தது.
தமிழகத்திற்கு மாற்றலாகி வந்தேன். எனது கடைசி ஆண்டு ஆந்திர மாநில அனுபவங்களும், மதக் கலவரங்களும் "நகரம்-90" என்ற குறு நாவலை எழுத வைத்து, குமுதம்-ஏர் இந்தியா நடத்தியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 45 நாட்கள் சுற்றுப்பயணம் சென்று வரும் வாய்ப்பைத் தந்தது (அந்த பயண அனுபவங்கள் "மண் புதிது" என்றத் தலைப்பில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது)
சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த போது நகரின் முகமே மாறியிருந்தது. சிறு நகரம் ஆசியாவின் பெரிய வியாபார நகரமாகியிருந்தது. 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டும் நகரமாக அது மாறியிருந்தாலும், ( இப்போது 50,000 கோடி ) நொய்யல் என்ற நதி காணாமல் போனதும் 40,000 குழந்தைத் தொழிலாளர் அவலம் என்ற விபரீதங்கள் என்னை "சாயத்திரை" நாவலை எழுத வைத்தது. தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. ('சாயத்திரை' 'காவ்யா' வெளியீடு; ஆங்கிலத்தில் இந்தியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னட, வங்காள மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. சாயத்திரையை ஆங்கிலத்ஹ்டில் மொழிபெயர்த்து என்னைப் பெருமைபடுத்தியவர் பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்கள் ).
படிப்பு என்பதை புறந்தள்ளிவிட்டு குழந்தைகள் தொழிலாளர்களாய் மாறும் அவலத்திற்கு பனியன் உற்பத்தி வேலை வாய்ப்புகளை அமைத்திருந்ததை மையமாகக் கொண்டு "பிணங்களின் முகங்கள்" நாவலை எழுதினேன். குழந்தைப்பருவம், உலகக் குழந்தைகள் பற்றினக் கதைகள் என்று அந்த நாவல் ஊடாடி நின்றது. அது கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் ரூ 15,000 பரிசு பெற்றது. (இது ஆங்கிலத்தில் ஆர். பாலகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. The facer of Dead)
உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்கள் பெண்களையும் பெருமளவில் பாதித்து வருகிறது. பெண்மயமாகும் தொழிற்சாலைகளின் நிலையில் பெண்களின் அவலம் குறித்த எனது நாவல் "சமையலறைக் கலயங்கள்" ('காவ்யா பதிப்பகம்' சென்னை வெளியிட்டுள்ளது).
50,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் திருப்பூர் பின்னலாடை நகரம் தமிழக தெற்கு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இடம் பெறச் செய்திருக்கிறது. உலகமயமாக்கலின் காரணமாக விவசாயம், புராதனத் தொழில்களை இழந்து வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் நகரமாகி விட்டது திருப்பூர். இவ்வாறு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் கேம்ப் கூலிகளாகவும், சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிற அவலம் என்னை வெகுவாக பாதித்தது. இதன் விளைவாக "தேநீர் இடைவேளை" என்ற நாவல் (காவ்யா) எழுதினேன். (இது ஆங்கிலத்தில் பிரேமா நந்தகுமார் அவர்களால் The unwritten letters என்ற பெயரில் வெளிவந்துள்ளது). தொழிற்சங்க இயக்கங்களுக்கு பெயர் போன கோவை மாவட்டம் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் காரணமாகவும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாகவும் திணறிக் கொண்டிருப்பதை என்னுடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இவ்வகை அனுபவங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு "The lost symphony" என்ற பெயரில் (மொழிபெயர்ப்பு: ஆர். பாலகிருஷ்ணன்) வெளிவந்துள்ளது.
350 பக்க அளவிலான "ஓடும் நதி" நாவல் (அமிருதா பதிப்பகம் சென்னை) ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. பல்வேறு கலாச்சார சூழல்களும், மாறிவரும் நெருக்கடிகளும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து இடம் பெயர்வு சூழ்நிலைப் பார்வையாளனாக இருந்து பார்க்க வைக்கிற அனுபவங்களை அந்த நீண்ட நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
"கனவு" இதழ் தொடர்ந்து வெளிவருகிறது. (இப்போது ரொம்பவும்தான் இளைத்து விட்டது). 38 ஆண்டுகளாய் 'கனவு' வெளிவருகிறது. தமிழில் பல படைப்பாளிகளுக்குத் தளமாக இன்றும் அமைந்துள்ளது. கனவு இதழ்களில் லண்டன் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பிலான "உலக சினிமா நூற்றாண்டு"ஓட்டிய ஐந்து இதழ்களும், நோபல் பரிசு பெற்றவர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இதழும், ஜெயமோகனின் தயாரிப்பிலான "தற்கால மலையாளக் கவிதைகள்" சிறப்பிதழ், பாவண்ணனின் தயாரிப்பிலான "கன்னடக் கவிதைகள் சிறப்பிதழ்", "தந்தர ராமசாமி சிறப்பு மலர்", "அசோகமித்திரன் சிறப்பு மலர்", எனது வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னதான "இலங்கை சிறப்பிதழ்", "சிங்கப்பூர் சிறப்பிதழ்", இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தாங்கிய இதழ்களை (இதுவரை 56 இதழ்கள் வந்துள்ளன) குறிப்பிட்டதாகச் சொல்லலாம்.
திருப்பூருக்கு வந்தபின்பு பல்வேறு சமூக இயக்கங்களுடான பணிகள் திருப்தி தந்துள்ளன. அவற்றுள் சுற்றுச்சூழல் இயக்கங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கங்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்தவை மற்றும் தொழில் நிறுவனங்களின் கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (Corporate Social Repounililily) இயக்கங்களைச் சொல்லலாம். இன்றைய தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டு கார்பரேட் சமூக பொறுப்புணர்வை விரிவாக்கும் தளத்தில் நெதர்லாந்து Partners in change அமைப்பின் ஆராய்ச்சி நூலை "பின்னலினால்..." என்றத் தலைப்பில் நான் மொழிபெயர்த்து (200 பக்கங்கள்) வெளிவந்திருக்கிறது. இது என் மொழிபெயர்ப்புப் பணியின் ஆரம்பம். பதினோரு நூல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்து விட்டேன்..
கனவு திரைப்பட இயக்கம், 21 ஆண்டுகளாக சிறந்த குறும்படங்களுக்கான அரிமா விருது, சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது, திரைப்பட விருது ஆகியவற்றை தந்து வருகிறது. கனவு பல் குறும்பட பட்டறைகளை நடத்தியது. மாதந்தோறும் குறும்படங்கள், உலகத் திரைப்படங்கள் திரையிடல், இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது. (திருவிழா, சோத்துப் பொட்டலம் என்ற உருவப்படங்கள் எனது படைப்பில் வெளிவந்துள்ளன. நாவே இயக்கிய குறும்படம் நாணல். ஆனந்த விகடனில் வந்த பாதுகாப்பு என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது.) திரைப்பட நூல்கள் 6, திரைக்கதை நூல்கள் 9, திரைநாவல்கள் என்று திரை முயற்சிகள் தொடர்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும், புதுப்பிக்கவுமென எழுத்தாளர்களைக் கொண்டு "கதை சொல்லி..." நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்துகிறது. சிறுவர்களுக்கான கதை சொல்லி..." விருதுகளையும் வழங்கி வருகிறது.
இதைத் தவிர கனவின் சக்தி விருது, திருப்பூர் இலக்கிய விருது, குறும்பட விருது என் 210 ஆண்டுகளாய் தொடர்கிறது.
27 நாவல்கள் வந்து விட்டன. 25ம் நாவல் சிலுவை 1000 பக்கம் ரூ 1200. இது தொடரும். ( இதில் இரு சிறுவர் நாவல்கள் உள்ளன )
சிலுவை 1000 பக்க நாவல் .300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது :
0
திருப்பூர் போன்ற வணிக நகரத்தில் கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகள் மூலம் வணிக நகரம் தரும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் முயற்சிகளாக நண்பர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவது ஆறுதல் தருகிறது. வெறும் வியாபார வளர்ச்சி உடம்பின் ஏதோ ஒரு பாகத்தின் வீக்கம்தான். பூரண வளர்ச்சி என்பது பொருளாத நிலையோடு கலாச்சார வளர்ச்சியோடும் இணைந்தது என்பதை தொழில் மய சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டியிருப்பதன் அக்கறையை மனதில் கொண்டு Fair Trade- நியாய வணிக தார்மீகத்தில் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறேன்.
சமூக, பொருளாதார நெருக்கடிகள் தரும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்வது எனது அக்கறையாக இருக்கிறது. இதன் மூலம் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் உறவாடவும், அவர்களை நெருங்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. சக மனிதனோடு உறவாட எழுத்தைத் தவிர வேறு ஊடகம் எனக்குத் தெரியவில்லை. அலுவலகப் பணி தரும் நெருக்கடிகள், மற்றும் குடும்ப வாழ்க்கையின் சிரமங்கள், என்னைச் சுற்றியுள்ள சமூகம் கட்டமைக்கும் விடயங்களை எழுத்தில் பதிவு செய்வதுதான் மன இறுக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஏதுவாகிறது. எழுத்தைத் தவிர, வாசிப்பதைத் தவிர, அதன் மூலம் சக மனிதர்களுடன் உறவாடும் வாய்ப்பைத் தவிர வேறு என்ன ஆசுவாசம் இருக்கிறது இந்த வாழ்க்கையில்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)