சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 18 ஜூன், 2025
எழுத்தாளர்கள் செத்துப் போனால்தான் பொதுமக்களுக்குத் தெரிகிறது.
சில அமைப்புகள் விருது பெற்றால்தான் தெரிகிறது. என் உலகம் சின்னதுதான்
'வேர்கள்'
திருப்பூர்; மண்ணரை மூளிக்குளத்தை பராமரித்து வரும், 'வேர்கள்' அமைப்புக்கு, தமிழக அரசு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், திருப்பூரை சேர்ந்த 'வேர்கள்' அமைப்புக்கு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையையும் வழங்கினார். 'வேர்கள்' அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள்சந்தீப், சதீஷ்குமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.
மூளிக்குளம் பராமரிப்பு
மண்ணரை மூளிக்குளத்தை, வேர்கள் அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். குளம் மற்றும் அணைக்கு தண்ணீரை எடுத்து வரும் ராஜ வாய்க்காலையும் பராமரித்து வருகின்றனர். அதனை பாராட்டியே, விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது.
வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
அமைப்புகளுக்கும் தாய் அமைப்பாக இருந்து வழிகாட்டி வருகிறது. அதன்படியே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம். வெற்றி அமைப்பு, ஆண்டிபாளையம் குளத்தை பராமரிப்பது போல், நாம் சிறிய மூளிக்குளத்தை பராமரிக்கலாம் என, இளைஞர்கள் இணைந்து வேர்கள் அமைப்பை துவக்கினோம்.
மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன், குளம் மற்றும் வாய்க்காலை பராமரித்து வருகிறோம்.
எங்கள் தொடர் முயற்சியால், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க, 2.90 கோடி ரூபாயில், உள்ளூர் திட்டக்குழும நிதியில், கால்வாய் பணி நடக்கப்போகிறது; ஆகாயத்தாமரை படராமல், குளம் துாய்மையாக பராமரிக்கப்படும்.
எதிர்கால சந்ததிக்கான சொத்து
இளைஞர்கள் முயற்சி எடுத்து, நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்; அது, நமது எதிர்கால சந்ததியினருக்கான சொத்து; பாதுகாப்பாக பராமரித்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன், குளம் பராமரிப்பு பணியை செய்து வருகிறோம்.
- ஒருங்கிணைப்பாளர்கள், 'வேர்கள்' அமைப்பு.
0
திருப்பூர்; திருப்பூர் சாய ஆலை கள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, பொதுநல விழிப்புணர்வுக்காக, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில், ஒரு பக்க அளவில்செய்திகள் வெளியாயின. இதில், சாய ஆலைகள் சந்திக்கும் சவால்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட சாதனை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
சாய ஆலைகளின் சவால்கள் மற்றும் தீர்வுகளை எதிர்நோக்கி, 'பசுமை அங்கீகாரம் வேண்டும் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. dinamalar
1'பசுமை அங்கீகாரம்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியுள்ளதாவது:
'தினமலர்' நாளிதழில், 'பசுமை அங்கீகாரம் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிக அருமையாக உள்ளது. அதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு, சாய ஆலைகள் சார்பில், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சாய ஆலைகள் பின்பற்றி வரும் 'பூஜ்ஜிய நிலை' சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் ஏற்படக்கூட மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை பகிர்ந்துகொள்ள, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்ற எங்களது வேண்டுகோளையும், முன்வைத்துள்ள 'தினமலர்' நாளிதழுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்தசெய்தி வெளி யானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், சாய ஆலைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நம்புகிறோம்.
இவ்வாறு, காந்திராஜன் கூறினார்.
கோவையில் இந்த வாரம் சென்ற இரு இடங்கள் பற்றி..RPS
1.
கோவை போத்தனூரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது நினைவிடமாக உள்ளது. இது, காந்தி கோயம்புத்தூர் விஜயத்தின் போது தங்கியிருந்த ஓடு வேயப்பட்ட வீடு. அந்த வீடு நூலகம் மற்றும் புகைப்படத் தொகுப்புடன் கூடிய நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நினைவிடம், மகாத்மா காந்தியின் பயணம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான பங்களிப்பின் அடையாளமாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை உள்ளடக்கியதன் மூலம், மக்கள் மத்தியில் தலைமைத்துவ சிந்தனையை இயக்கும் ஒரு "செயலில் உள்ள மையமாக" அவர் நினைவுச்சின்னத்தை கருதுகிறார்.
இது 1934 பிப்ரவரி 6 அன்று கோயம்புத்தூர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, போத்தனூரில் ஜி.டி. நாயுடு குடும்பத்திற்குச் சொந்தமான ஓடு வேயப்பட்ட வீட்டிற்கு வந்தபோது இரவு 11 மணியளவில் நடந்தது.
• டிஜிட்டல் மாவட்ட களஞ்சிய விவரம்
மொழிபெயர்ப்பானது — 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த மகாத்மா காந்தி, போத்தனூரில் இரவு 11 மணியளவில் ஜி.டி. நாயுடு குடு...
cmsadmin.amritmahotsav.nic.in
• மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் ...
மொழிபெயர்ப்பானது — மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது கோயம்புத்தூர் விஜயத்தின் போது காந்தி இரண்டு நாட்கள் தங்கியிருந்த கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஓடு வேயப்பட்ட ...
thehindu.com
2. கல்லாறு பள்ளியில் உள்ள இவரின் சிலை அபூர்வமானது. கோவை செட்டிபாளையம் சாலையில் லோட்டஸ் உள்ளது.
சுவாமி சச்சிதானந்தா லோட்டஸ் கோவில் என்பது, ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தாவால் நிறுவப்பட்ட ஒரு உலகளாவிய ஆலயம். இது, யோகாவை ஒருங்கிணைத்து, உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, அமெரிக்காவின் வர்ஜீனியாவில், யோகவில் ஆசிரமத்தில் அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்பம்சங்கள்:
• உலகளாவிய ஆலயம்:
இந்த ஆலயம், அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்களையும் வரவேற்கும் ஒரு பொதுவான ஆன்மீக தளமாக விளங்குகிறது.
• சுவாமி சச்சிதானந்தாவின் யோகம்:
இந்த ஆலயம், சுவாமி சச்சிதானந்தாவின் யோகா போதனைகள் மற்றும் ஆன்மீக பார்வையை பிரதிபலிக்கிறது.
• 108-ஐ மையமாகக் கொண்ட அமைப்பு:
கோவிலின் அளவீடுகள், ஆன்மீக எண் கணிதத்தில் புனிதமான 108 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
• பிரதிபலிப்பு மற்றும் தியானம்:
இந்த ஆலயம், தனிநபர்கள் தியானம் மற்றும் ஆன்மீகப் பிரதிபலிப்பு செய்வதற்காக ஒரு அமைதியான இடமாக உள்ளது.
• மத நல்லிணக்கம்:
இந்த ஆலயம், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக விளங்குகிறது.
• யோகாவில்லி ஆசிரமம்:
இது யோகாவில்லி ஆசிரமத்தில் அமைந்துள்ளதால், யோகா மற்றும் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முக்கியமான மையமாக விளங்குகிறது. google
0
தூரிகை சின்னராஜ் அவர்களின் நண்பர் கார்த்திகேயன் இதன் பொறுப்பாளராக உள்ளார்.பல விசயங்களைச் சொன்னார் விரிவாக . அது பற்றி இன்னொரு பதிவில் ..சுப்ரபாரதி
சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் எப்படி சுற்றுச்சூழல் பிரிவில் எப்படி இடம் பிடிக்கின்றன
இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை.
இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரகவுளும் சொல்கின்றன
அந்த வகையில் சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் சுற்றுச்சூழல் பிரிவில் இடம் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு துவங்கி பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன.
இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன
அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் சுப்ரபாரதி மணியனின் நாவல்கள் பெரும்பாலும் சொல்கின்றன.
இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் அவருடைய படைப்புகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க சுப்ரபாரதிமணியன் படைப்புகள் விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் அவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு அவர் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம்
1
திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார் –பிரபஞ்சன்
2
வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.
சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.
வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார். -சி ஆர் ரவீந்திரன்
விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும்.
இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.
1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.- பிரேமா நந்தகுமார்
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறிவகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும்.
இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில். - பொன்னீலன்
அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம்
திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாraதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார்.
அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது’’
.இவர்களின் கூற்றுகள் மூலம் திருப்பூர் சார்ந்த இயற்கை சிதைவுகள்எப்படி நிகழ்ந்துள்ளன அன்று தன் நாவல்களில் விவரிப்பதன் மூலமாக சுப்ரபாரதிமணீயனின் சாயத்திரை, புத்துமண், வெப்பம் ஆகியவை சுற்றுச்சூழல் படைப்புகளாக விளங்குகின்றன.. ( சுய அறிமுகமாய் இக்கட்டுரை தொகுப்புதிவ்யா பி ., ஆய்வாளர் )
Pesum puthiya sakthi june 2025
நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா ..சுப்ரபாரதிமணியன்
நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை ஆகியுள்ளன. இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .
திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது
திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள் முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது. எப்படி முடிகிறது .இப்படித்தான் அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் .
திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல் 2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது தற்போது என்றார் ஒரு நண்பர் .
மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில் மறைந்த பூசிக்காயாய் இருக்கின்றன.
பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது.
. இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .
New Centuary Book publishers, Tiruppur
நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம்..
வணக்கம்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் “ உங்கள் நூலகம் “ஜீன் மாத இதழில்
வேரல் பதிப்பகம் வெளியிட்ட, சேலம் பொன் குமார் தொகுத்த “ திருப்பூர் சிறுகதைகள் “ ” நூல் பற்றிய அறிமுகத்தை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார்.
அந்த நூலில் தங்கள் சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதை எழுதிய தங்களைப் பாராட்டுகிறோம்.
உங்கள் படைப்புப் பயணம் தொடர வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து தங்களின் இலக்கியப் பயணத்தின் மூலம் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்.
உங்களைப் போன்றோரின் நூல்களை விற்பனை செய்யவும்,தங்கள் நூல்கள் விற்பனையிலும் வெளியீட்டிலும் பங்கு பெறவும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் விரும்புகிறது.
உங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துகிறோம். உங்கள் நூலகம் மாத இதம் ஆண்டுச்சந்தா ரூ540.
அன்புடன்,
குணசேகரன் ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் )(8098426515)
ராமசாமி ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் ( 9363044117 )
திருப்பூர் சிறுகதைகள்
Thiruppuu sirukathaikal : veral books
01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன்
02. அப்பா - சுப்ரபாரதி மணியன்
03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம்
04. அரூப நெருப்பு - கே. என். செந்தில்
05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு
06. அரசாங்கம் - தாண்டவக்கோன்
07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி
08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ்
09. பெண் வலிமையானவள் - ரா. தீபன்
10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன்
11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன்
12. முக்கோணம் - அ. இளஞாயிறு
13. மன்னிப்பு - சிவதாசன்
14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர்
15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம்
16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர்
17. டயர் வண்டி - வெண் புரவி
18. தக்காளி - பிரபாகர்
19. இயலாமை - முத்துபாரதி
20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி
21 பெருசு - முரளி குமார்
22. செத்தவன் - இரா. சிந்தன்
23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி
24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு
25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்ட
புலி மனிதர்: சுப்ரபாரதிமணியன்
அந்த புலி மனிதரை திருச்சூர் திரைப்பட விழா படமொன்றின் மூலம் அறிந்தேன். புலிகளின் தேசம் என்ற படமே அவரை அறிமுகப்படுத்தியது.
அந்தப்படம் புலிகளின் களம், புனித நீர், தெரியாதக் கடல், பாலைவன் ராஜ்யம்,கடவுள்களின் மலைகள், பருவ மழைக்காடுகள் ஆகிய பகுதிகளைக்கொண்டிருந்தது,
இந்தியாவின் இயற்கை சரித்திரங்களின் ஒரு பகுதியானார் அவர். இமாலயம் முதல் இந்தியாவைன் காடுகளில் அலைந்தவர்.முதல் பாகப் படத்தில் குஜராத்தில் வங்காளப்புலி ஒன்று குட்டிகளுடன் வாழ்வதையும் அதன் வேட்டை லாவகங்களையும் பற்றிச் சொல்கிறார். வேட்டையிலும் தோல்விகள் இருக்கும் என்பதைச் சொன்னவர் தன் வாழ்க்கைத் தோல்விகளையும் பற்றிச் சொல்கிறார்.கங்கை பிரம்மபுத்திரா பகுதி காட்டுவாழ்க்கையை நுணுக்கமாகச் சொன்னார் இதில்.
புலிகளுடன் வாழ்தல்
(Living with Tigers), புலிகளின் அந்தரங்க வாழ்வு (The Secret Life of Tigers), புலி கனல்: இந்தியாவில் புலிகளின் ஐந்நூறு ஆண்டு வரலாறு (Tiger Fire: 500 Years of the Tiger in India) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அறிவியல் தகவல்களை கதை வடிவில் உணர்வு பூர்வமாக தரும் ஆற்றல் மிக்க எழுத்து வல்லமை கொண்டவர்.
இவர் இயற்கைப் பாதுகாப்பு குறித்து 30 புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.
தாப்பர், 1959ஆம் ஆண்டில் செமினார் எனும் அரசியல் இதழை நிறுவிய ராஜ் தாப்பர், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ரோமேசு தாப்பர் ஆகிய இணையரின் மகனாக மகாராட்டிர தலைநகர் மும்பையில் பிறந்தார். புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் இவரது அத்தை ஆவார்.
வால்மிக் தாப்பர் இந்தியாவின் புலிகளின் குறித்து தனது ஆய்வினைப் பல தசாப்தங்களாக தொடர்ந்தார். இவர் பதேக்சிங் இரத்தோரால் ஈர்க்கப்பட்டார்
ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தாபரின் பெரும்பாலான களப்பணிகள் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தன, அத்துடன், மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்
இரணதம்பூர் அறக்கட்டளை இவரது பணியினை அங்கீகரித்து தலைமைப் பொறுப்பை வழங்கியது. இவர் 2005-ஆம் ஆண்டு புலிகள் பணிக்குழுவில் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். புலிகள்-மனிதர்களின் சகவாழ்வின் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்துவதாக தனது கருத்து வேறுபாடு குறிப்பில் பெரும்பான்மை பணிக்குழுவின் பார்வையை இவர் விமர்சித்தார், இது இவரது பார்வையில் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை.
1973-ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம்தோல்வியடைந்ததாக இவரது பகுப்பாய்வுகள் தெரிவித்தன.[8] பெரும்பாலும் அறிவியல் ரீதியாகப் பயிற்சி பெறாத வன அதிகாரிகளின் தவறான மேலாண்மை குறித்து கவனத்தை ஈர்த்த இவர், புலிகள் திட்டத்தினை விமர்சித்தார். இவரது கடைசி புத்தகமான தி லாஸ்ட் டைகர் (ஆக்சுபோர்டு யுனிவர்சிட்டி பிரசு) இந்த கூற்றினை வலுவாக கூறுகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மீது தாப்பர் தொடர்ந்து விமர்சித்ததில் ஒன்று ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளின் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்க இது விரும்பவில்லை என்பதும், அறிவார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு காடுகளில் அனுமதி இல்லை என்பதும் மையக் கருத்தாகும்.
'மச்ச்லி' என்ற புலியுடனான புகழ்பெற்ற உறவு இவரது சில வரலாறுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தாப்பரின் மிகவும் நேசத்துக்குரிய புலிகள் பிபிசி ஆவணப்படமான மை டைகர் ஃபேமிலியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
0
திருப்பூர் சிறுகதைகள்
Thiruppuu sirukathaikal : veral books
01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன்
02. அப்பா - சுப்ரபாரதி மணியன்
03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம்
04. அரூப நெருப்பு - கே. என். செந்தில்
05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு
06. அரசாங்கம் - தாண்டவக்கோன்
07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி
08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ்
09. பெண் வலிமையானவள் - ரா. தீபன்
10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன்
11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன்
12. முக்கோணம் - அ. இளஞாயிறு
13. மன்னிப்பு - சிவதாசன்
14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர்
15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம்
16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர்
17. டயர் வண்டி - வெண் புரவி
18. தக்காளி - பிரபாகர்
19. இயலாமை - முத்துபாரதி
20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி
21 பெருசு - முரளி குமார்
22. செத்தவன் - இரா. சிந்தன்
23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி
24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு
25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்டன்
ReplyForward
Add reaction
Uyirezuthu june 2025.. சுப்ரபாரதிமணியன்
நாவல் குமாரகேசனின் வெட்டுக்காடு மருதகாளி நாவல்
நாவல் குமாரகேசனின் நாவல் நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டத்தில் நடப்பதாக அமைந்திருக்கிறது.பழனி, ஒட்டச்சத்திரம் சார்ந்த சில பகுதிகள் இந்த நாவலின் களங்களாயிருக்கிறன. பழனி ஒட்டன்சத்திரம் அதை சுற்றியுள்ள ஊர்களின் சாதாரண மக்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்களாக ஆகியிருக்கின்றனர்..
ஒரு மலைக்காட்டுப் பகுதி இரண்டு முறை எரிக்கப்பட்டு உயிர்கள் சிதைக்கப்பட்டு நிலமும் பொருட்களும் எரிந்து சாம்பலாகி கால்நடைகளும் இறந்து போக அங்கே குடியிருப்பவர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதும் மீண்டும் மீண்டும் அங்கேயே தொடரும் வாழ்க்கையும் என்று தொடர்கிறது ..அந்த சிதைந்தப் பகுதி மையமாகியிருக்கிறது.
ரத்தம் சிந்தாத மண்ணும் இல்லை. வஞ்சிக்கப்படாத மனிதரும் இல்லை என்று பல மனிதர்களின் துரோகம், அவர்களின் வரலாற்றை சொல்கிறது. ஒரு வகையில் அதிகார மனப்பான்மை தான் மையம்.. ஒரு விதவைப்பெபண்ணின் மகளான மருதகாளி தவறுதலாக கடத்தப்பட்டு ஒரு இடத்திற்கு கொண்டுவரப்படுகிறாள் அந்த பகுதி கொள்ளைக்காரர்கள் மூலம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாகிறது. காவிரி கரையில் சார்ந்தவன் ஊரை விட்டு வெளியே வந்து வாழ்க்கை நடத்துகிறான் சிவன்மலை. இன்னொரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். அந்தப் பகுதியில் வாழ்ந்த கொள்ளைக்காரர்களான தீவட்டியான், பாண்டிகூத்தன் இருவரின் செயலைப் பற்றி இந்த நாவல் அதிகம் பேசுகிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பும் விவசாய நிலங்களின் தன்மை பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.அது சார்ந்த விவசாயின் ஆழ்ந்த பார்வையும் ஆச்சர்ய்படுத்துகிறது பொள்ளாச்சி ஆழியாறு பழனி நடைஉலாவாக களன் படைக்கப்பட்டிருக்கிறது மாசாணி அம்மன் கதையும் ஒட்டன்சத்திரத்தின் பூர்வீகமும் வந்து போகிறது.
.
நிலமோ சொத்து சுகமோ இல்லாதவன் திருட்டை தான் அறுவடை செய்ய வேண்டும் என்று பலர் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் அவருடைய கட்டாயதிருட்டு வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. கொடுமுடி குருநாதர்,அந்த பகுதி ஜமீன் ஆயுத வழக்கும் தற்கொலை முயற்சிகளும் விரிவாக நாவலில் வருகிறது. நாவலின் காட்டப்படுகிற பகுதிகளும் மக்களின் இயல்புகளும் வெகு இயல்பாக சொல்லப்படுகின்றன புளிச்சோறு ரேகை பற்றிய வர்ணனை ஒரு உதாரணம்.
வண்டி ஒட்டு மனிதர்கள் சுமூகமாக தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் சந்திக்கிற பல சிரமங்களை நாவல் சொல்கிறது. திருடர்கள், திவட்டிக்கொள்ளையர்கள் வந்து போகிறார்கள். . காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் அவற்றின் குணாசம்களுடன் கூர்மையாக பழைய காலத்து ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுடைய வாழ்க்கையுடன் சொல்கிறபோது வியப்பாக இருக்கிறது.
. பல மூத்தவர்கள் இந்த சம்பவங்களை நினைவு கூறுவார்கள் அவர்களின் மனித கலாச்சாரம் நம்பிக்கைகளும் பாரம்பரிய கதைகளும் கொண்டிருப்பதை இந்த நாவல் சொல்கிறது .அப்பகுதி மக்களின் வாழ்க்கை விரிவாக இதில் உள்ளது
வடகாட்டு மலைக்கு சென்று காடுவெட்டி பயிர் தொழில் செய்து விடுவர்களை சந்திக்கிறார்கள் துன்பவியல் சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மனிதர்கள் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. அவர்கள் நிலத்தை வளப்படுத்தினார்கள். கானகப் பொருட்கள் உணவாகின. நிலத்தைக் கெடுக்கவில்லை. மரங்களை வெட்டவில்லை. ஆனாலும் அவர்கள் விரட்டப்படுகிறார்கள்
கொங்கு நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறையும் தினசரி வாழ்க்கையும் விரிவாக சொல்லப்படுகிறது சமையல் பாத்திரத்தின் மீது கல்மாரி விழுகிற சத்தம் சரியாக கேட்பது போல் இந்த பகுதி மக்களின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கின்றன .காட்டுப் பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்களும் செடி கொடிகளும் அதன் மருத்துவ குணம் மற்றும் அவற்ற அவற்றின் பயன்பாடுகள் நிறைய வந்து போகின்றன மண் குதிரை அசைந்தது கல்மாரி விழுந்ததால் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார் /அதேபோல இந்த மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் எழுச்சியாக நடந்ததா என்று சொல்ல முடியாது. ஆடி காற்று காலம் திருட்டுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது அந்த காலத்தில் நாய்களின் மோப்பசக்தை குறைவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்ற தகவல்கள் நாவல் முழுக்க இருக்கின்றன. மரம் வெட்டி கரி வண்டி ஓட்டும் வாழ்க்கை, உப்பு வண்டி ஓட்டும் வாழ்க்கை என்று பல சகோதரர்களும் வருகிறார்கள். ஆள்மாற்றத்தால் மலையில் வந்து சேரும் மருதகாளி வாழ்க்கை கண்ணாமூச்சி வாழ்க்கையாகிறது இந்த அனுபவங்களை நேர்த்தியாகவும் தன்னுடைய கொங்கு அனுபவ வார்த்தைகளோடும் நாவல் குமாரகேசன் சொல்கிறார் பிரிட்டிஷ் ஆட்சி கால சம்பவங்களால் நிறைந்திருக்கிறாய் இந்த நாவல் அந்த காலகட்டத்தில் சரித்திரச் சான்றுகளுடன் சொல்கிறது. புனைவும் கூட. இரண்டும் கலந்து அடையாளம் காட்டுகிறது மனிதர்களை.
சொந்த நிலம் இல்லாத எளிய மக்கள் வேலை வாய்ப்புக்காக வடகாட்டு மலைக்கு செல்வதும் அங்கு விவசாயத்பைல் தொழில் செய்வதும் வனக்காவலர்களால் விரட்டப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மிரட்டலுக்கும் நடுவில் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கொஞ்சம் குறிப்பையும் வைத்துப் போகிறது. இன்னும் பக்கங்கள் நீண்டு போய் சமீபகால அனுபவங்களோடு இந்த நாவல் முடிவு பெற்றிருந்தால் வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும்.
. வெட்டுக்காடு திரும்பத் திரும்ப அழிக்கப்பட்டு அதில் குடியேறுகிற மக்களின் வாழ்க்கையும் விவசாயிகளின் நிலமையும் ஒட்டஞ்சத்திரம் துண்டுப் பகுதி சார்ந்து சரியாக சொல்லப்பட்ட ஒரு கொங்கு நாவல் என்ற பெருமையை இது பெறுகிறது
( பக்கங்கள் 794.. ரூபாய் 750 அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )
சுப்ரபாரதிமணியன்
0
பெறுநர்
தமிழக முதலமைச்சர், சென்னை
வணக்கம்.10/6/25 அன்று தாங்கள் காணொலியில் சுமார் 80 நூலங்களைத் திறந்து வைத்த்து மகிழ்ச்சி தருகிறது.
அதில் இரண்டு திருப்பூர் சார்ந்தவை.
அதில் ஒன்று திருப்பூர் மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும், வந்து செல்லும் பயணிகள் மற்றும் பயன்பாட்டிற்கான ஒன்றும் என்பது மகிழ்ச்சியானது.
மேட்டுப்பாளையத்தில் உலக சிந்தனையாளர் மையம் என்ற நூலகம் பழமையானது. பழைய அபூர்வமான நூல்களும் , திராவிட இலக்கிய பொக்கிசங்களும் கொண்டது.
மேட்டுப்பளையத்தின் முதல் தி மு க சட்டமன்ற உறுப்பினர் அமரர் தூயமணி அவர்களின் இல்லத்தில்பல ஆண்டுகளாக செயல்பட்ட நூலகம் இப்போது பயன்பாடின்றிக் கிடக்கிறது.
அதை அரசு எடுத்துக் கொண்டு இன்னொரு கூடுதல் நூலகமாக மேட்டுப்பாளையத்திற்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன், சுப்ரபாரதிமணியன் , எழுத்தாளர் திருப்பூர்.9486101003
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 125 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 125 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை
நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள்
நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
kanavu subrabharathimanian tirupur
Subrabharathimanian palaniasamy
தமிழ் இலக்கியங்களில் சூழலியல் – மேலாண்மை சிந்தனைகள்
சுப்ரபாரதிமணியன்
இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை.
இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரவுகளும் சொல்கின்றன
அந்த வகையில் தமிழ் இலக்கியப்படைப்புகளில் இடம் பெற்றிருக்கும் சுற்றுச்சூழல் அம்சங்கள் பற்றி இந்த நூலின் கட்டுரைகள் சொல்கின்றன.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு துவங்கி பல இலக்கியப் படைப்புகள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன.
அந்த ஆறுதலை இந்தக் கட்டுரைகளில் நாம் அடையாளம் காண இயலும். பல்வேறு சுற்றுச்சூழல் அம்சங்களை இவை ஆராய்கின்றன.
இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த சுற்றுச்சூழல் சார்ந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன. அந்த எச்சரிக்கைகளை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன
அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன.
பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை இதன் அத்தாட்சியாக விளங்கும் படைப்புகளை இந்த கட்டுரைகள் இரு தொகுப்புகளாக அமைந்து காட்டுகின்றன.
இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் இந்த கட்டுரைகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு இந்தப் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம்
முழுக்கக் கல்வித்துறையினரின் இந்தப் பங்களிப்பு புருவங்களை உயர்த்த வைக்கிறது.சூழலியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வு மாநாட்டின் கட்டுரைகள் 1200 பக்கங்களில் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெளியீடான் இத்தொகுப்புகள் சூழலியல் சார்ந்த முக்கிய ஆவணங்களாக இத் தொகுப்பின் மூலம் விளங்குகின்றன.
சுப்ரபாரதிமணியன் 9486101003
Ungal noolakam ..june 2025-06-19
திருப்பூர் சிறுகதைகள்/ சுப்ரபாரதிமணீயன்
தொகுப்பாசிரியர் : பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322 )
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது.
இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது. அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும்
சொல்கிற கதை ..
0
அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். என்று அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது.
0
இத்தொகுப்பில் உள்ள பெண் வலிமையானவள் என்ற கதை எழுதி இருக்கிறார் தீபன். பத்திரிகையாளர் புகைப்பட கலைஞர் கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறா.ர். வழக்கமாக அவருடைய கதைகளில் விளிம்பு நிலை மக்களும் தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த மக்களும் இருப்பார்கள். இக்கதையிலும் பெண்களின் வாழ்க்கை பல்வேறு மடங்கு வறுமையும் பாலியல் சீண்டலும் சமூக சூழ்நிலையால் புறக்கணிக்கப்பட்டதும் என்று இருப்பதை பல சம்பவங்கள் மூலமாக காட்டுகிறார். அது அவரின் தனித்துவத்திற்கு இந்த ஒரு கதை.சான்று
0
ரத்தினமூர்த்தி அவர்களின் அப்பாவின் நிழல் கதை திருப்பூர் சூழலில் மையமாகக் கொண்டிருக்கிறது. திருப்பூரின் வேலை சூழலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையும் பற்றியும் பேசுகிறது ஆனாலும் எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்து இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறார். அவரின் ஒரு சிறுகதை தொகுப்பு இந்த தலைப்பில் உயிர் மெய் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள் )
0
குழந்தைவேல் அவர்களின் படைப்புகள், நாவல்கள் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பது முக்கியம் இவர்
சமீபமான சில ஆண்டுகளாக சுயநினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார், 80 வயதிற்கு மேல் இருக்கும். ஆனாலும் அவருடைய நாவல்களில் வருகிற வால்பாறை மின் தொழிலாளர் பற்றிய பிரச்சனைகளும், பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் நம்பிக்கை தருவது.இத்தொகுப்பின் கதையைப் போல.
0
)
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கோதை மணியன், வெண் புரவி, குணசுந்தரி என்ற எழுத்தாளர்கள் பெயர்கள் கேள்வி படாத இருக்கிறது.
0
கிணற்றில் குதித்தவர்கள் என்ற என் ஸ்ரீராம் கதை குறிப்பிடத்தக்க கதை. கொங்கு பகுதி சார்ந்த நிலவியலை மிக அழகாக வழக்கமாக அவர் கதைகளில் கொண்டு வந்து விடுபவர் இந்த கதையில் வரும் கிணறு ஒரு படிமமாகவே மனதில் பதிந்து விடுகிறது அவரின் முத்திரையை அழுத்தமாக பதிந்திருக்கும் ஒரு கதை
0
இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வீடு சுகந்திசுப்பிரமணியன் கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கதை வெளிவந்த சமயத்தில் அசோகமித்திரன் அவர்கள் இந்த கதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். வெகுவாகப் பாராட்டினார். பெண்ணின் இருப்பும் பாதுகாப்பின்மையும் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பெண்ணுக்கு வீடு என்பது ஒரு பாதுகாப்பான இடம் வாடகை வீடு என்பது தவிர்த்து சொந்த வீடு கனவு என ஒரு பெண்ணுக்கு இருப்பதை இந்த கதை சொல்கிறது,
0
இரா.சிந்தன் சிறுகதை சிறப்பானது திருப்பூரில் ஒரு மழை பெய்த நாளில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பலர் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த தொழிலாளர்கள் குடும்பங்களைப்பற்றியும் துயர சம்பவத்தையும் சிந்தன் அவர்கள் இந்த கதை விவரித்து இருக்கிறார்.
0
சுப்ரபாரதிமணீயன், திருப்பூர் கிருஷண், கே என் செந்தில் உட்பட 28 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
0
திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பாசிரியர்
பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322/
வேரல் புக்ஸ் சென்னை வெளியீடு
சனி, 7 ஜூன், 2025
Radio Drama gold fm Chennai 7/6/25 evg 8pm
Veppam சுப்ரபாரதிமணியனின் சிறார் drama
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த drama
சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார்.
அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்.
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
- மதுராந்தகன்
வெப்பம்: Tamil hindu
சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
- மதுராந்தகன்
ஏழை நோயாளிகள் பெங்களூரூ சாயிபாபா மருத்துவ மனைக்கு இலவச சிகிச்சைக்காக போய் விடாதீர்கள் .
எந்த எதிர்வினையும் இராது
ஓம் சாந்தி ஒம் சாந்தி என்று கண்களை மூடி படுத்துக்கொள்வது நல்லது.
0
நண்பர் மதுராந்தகன் எழுத்தாளர் வயது எண்பத்தி மூணு இதய நோய் சார்ந்து சமீப காலமாக மிகுந்த சிரமப்படுகிறார் பெங்களூர் சாய்பாபா இலவச சிகிச்சை மருத்துவமனைக்காக அவரை புதன்கிழமை அழைத்துச் சென்றேன்
அதற்கு முன்னால் பலரிடம் அவரும் பேசினார் நானும் பேசினேன் எல்லோரும் அங்கு சென்று பதிவு செய்து கொண்டால் போதும் உடனே சிகிச்சையும் தங்குவதற்கான இடமும் தருவார்கள் என்றார்கள்
ஆனால் அங்கு சென்றபோது பழைய டோக்கன் முறை எதுவும் இப்போது இல்லை அதனால் காத்திருக்க வேண்டியதில்லை உங்களுடைய பதிவை தொலைபேசியில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார்கள் அந்த தொலைபேசியில் பதிவு செய்து கொண்ட போது முன்பு பதிவு செய்யப்பட்ட குரல்கள் வந்து கொண்டே இருந்தன பலமுறை பதிவு செய்தும் இதே நிலைமை பிறகு ஒரு நாள் கழிந்தது
மருத்துவமனையின் முகப்பில் இருந்த காவலாளிகள் கன்னடம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேசினார்கள் எல்லாவற்றிற்கும் அந்த தொலைபேசி எண் தான் உதவி என்றார்கள். வேறு வழி இல்லாமல் திரும்பி விட்டோம்
நடைமுறையில் அவர்களுக்கு இருக்கிற சிக்கல்கள் நிறைய இருக்கும் ஆனால் அங்கு செல்கிறவர்களை குறைந்தபட்சம் பதிவு செய்து கொள்ள அவர்கள் ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும் தொலைபேசி பதிவின் பின்னால் உங்களை அழைப்போம் வாரங்களாகும் என்றார்கள்
இரண்டு மூன்று நாட்களாய் அந்த எண்களில் இருந்து திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட குரல்கள் வந்து நீங்கள் யாருக்கும் பணம் தரக்கூடாது லஞ்சம் தரக்கூடாது இது இலவச மருத்துவமனை என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் எப்போதும் சிகிச்சைக்காக வருவது என்று பற்றி எந்த செய்தி வருவதில்லை
குறைந்தபட்சம் குஞ்செய்திகள் மின்னஞ்சல் மூலமாக செய்து அனுப்பலாம் நீண்ட காலமாக இலவச மருத்துவமனை என்ற பெயர் பெற்ற அந்த மருத்துவமனை அனுபவங்கள் கசப்பாகத்தான் இருந்தன
சில ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூர் போன அனுபவம் பெங்களூர் மெட்ரோ ரயிலில் ஒரு பயணம். வழக்கம் போல் எல்லா ஊர்களைப் போல ஆட்டோ நண்பர்கள் அதிக கேட்கிறார்கள் கருணை இல்லாதபோது மாதிரி நடந்து கொள்கிறார்கள்
ஒயிட் பீல்டில் இருந்து மெசேஜ் மெஜஸ்டிக் சர்க்கிள் செல்லும் பேருந்தில் நீண்ட நேரம் பயணத்தில் பெங்களூரை ஒரு பார்வை பார்க்க முடிந்தது பிறகு அங்கிருந்து சேலம் செல்லும் பேருந்துக்காக சேட்டிலைட் டவுனுக்கு சென்றது இன்னொரு பயண அனுபவம் ஒரே நாளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது உடம்பை வருத்திவிட்டது சாய்பாபா இலவச மருத்துவமனை பற்றி பொது புத்தியில் இருக்கும் அபிப்பிராயங்கள் அங்கு போனால் மாறிவிடுகிறது
No response after 3 5 days also
'இங்கிலாந்தின் நதிக்கரையில்.
அகிலா அவர்களின் இந்த பயண நூல் பயண இலக்கியத்தில் ஒரு சாதனைக்கல் என்னும் அளவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
எழுத்தாளர் என்ற வகையில்பயணக்குறிப்புகள் அனுபவங்கள் சார்ந்ததாக உள்ளன.வழக்கமான சரித்திர, பூகோளக் குறிப்புகளைக் குறிப்பிடும் போதும் தனி முத்திரை தென்படுகிறது. நடைமுறை அரசியலும், சுற்றுச்சூழல் அரசியலும் இதில் முக்கியப்பங்காற்றுகின்றன. ஆறுகள், வழித்தடங்கள்,பருவங்கள், மலைகள் சார்ந்த விபரங்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பின்னணியுடன் வெளிப்பட்டிருக்கின்றன.
அசாத்திய உழைப்பு. தகவல் சேகரிப்பிலும், இங்கிலாந்தின் குறுக்கும் மறுக்குமான பயண அனுபவங்களிலும் மிளிரும் சாதனை நூல் இது. - சுப்ரபாரதிமணியன்
- எழிலினி (Emerald) பதிப்பகத்தார் வெளியிட உள்ளார்கள்
- சுற்றுச்சூழல் நூல் வெளியீடு : ஏழாம் பதிப்பு வெளியீடு
-
- சுப்ரபாரதிமணியனின் “ சூழல் அறம் “ என்ற சுற்றுச்சூழல்
-
- நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு பாண்டியன் நக்ர் நாலேஜ் செண்டரில் சனி அன்று நடைபெற்றது.
-
- கல்வியாளர் பாசிதாபானு வெளியிட்டார்.
-
- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர்.
-
- கல்வியாளர் பாசிதாபானு பேசுகையில்
-
- “ பள்ளிக்குழந்தைகள் உணவில் அக்கறை எடுத்துக் கொண்டு உடல் நலம் பேண வேண்டும் . சுற்றுச்சூழல் பேண அக்கறை எடுக்க வேண்டும் என்றார்.
-
- கனவு இலக்கிய வட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது . பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் அமைந்த நாலேஜ் செண்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
- நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு : என் சி பி எச் பதிப்பகம், சென்னை ரூ90
-
சுற்றுச்சூழல் நூல் வெளியீடு : ஏழாம் பதிப்பு வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் “ சூழல் அறம் “ என்ற சுற்றுச்சூழல்
நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு பாண்டியன் நக்ர் நாலேஜ் செண்டரில் சனி அன்று நடைபெற்றது.
கல்வியாளர் பாசிதாபானு வெளியிட்டார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர்.
கல்வியாளர் பாசிதாபானு பேசுகையில்
“ பள்ளிக்குழந்தைகள் உணவில் அக்கறை எடுத்துக் கொண்டு உடல் நலம் பேண வேண்டும் . சுற்றுச்சூழல் பேண அக்கறை எடுக்க வேண்டும் என்றார்.
” முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில் கூட சரசரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும். இப்போது இதில் உணவுப் பொருட்களும் அடக்கம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயிலிருந்து தின்பண்டங்கள் சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் கூட தொங்குகின்றன. சிறார்களின் உணவு ஆசை சட் சட்டென்று நிறைவேறிப் போகிறது. அவர்களின் வயிறும் சுலபமாக குப்பைக் கழிவாகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றை கழிவுகளின் இருப்பிடம் ஆக்கிக் கொள்கிறார்கள் இதைத் தவிர்க்க வேண்டும் என்றார்
கனவு இலக்கிய வட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது . பாண்டியன் நக்ர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் அமைந்த நாலேஜ் செண்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு : என் சி பி எச் பதிப்பகம், சென்னை ரூ90
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அருப ரூபா ( உருவம் இல்லாத உருவம் )
அல்லது
ஆரஞ்சு நிறத்தை கபளீகரம் செய்த காவி
( ஒடிய ஆவணப்படம் ) சுப்ரபாரதிமணியன்
மகிமா சுவாமியை பின்பற்றுகிறவர்கள் சிறிய ஆரஞ்சு நிற உடைய உடையை இடுப்பில் கட்டுகிறவர்கள்..எளிய வாழ்க்கையின் அடையாளம் இந்த ஆரஞ்சு ஆடை.
19ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் மகிமா சுவாமிகள் மகிமா தர்ம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்துகிறார். அப்போது இருந்த பிராமணிய ஆதிக்கம், இறுக்கமான சாதி அமைப்பு போன்றவற்றை எதிர்த்து இவர்கள் முழுக்க எதிர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.. பெரும்பாலும் துறவிகள் என்று சொல்லப்படுகிறது. ஆண்கள் மட்டுமே துறவிகள் ஆக முடியும் என்றக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தங்கள் செய்தியை பரப்புவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் அந்தச் செய்தி அன்புதான் அனைவரையும் இணைக்கும். ஜாதிகள் இல்லை என்று வலியுறுத்துகிறார்கள். இவர்களிலும் பக்தர்கள் இருக்கிறார்கள். முதல்நிலை பக்தர்கள் ஒரு ஆரஞ்சு துணியை இடுப்பில் கட்டி இருக்கிறார்கள். இரண்டாவது பக்தர்கள், மூன்றாவது பக்தர்கள் என்று வருவோர்கள் மரத்தின் பட்டையிலிருந்து வடிவமைக்கப்பட்ட துணிகளை அணிகிறார்கள். அந்த வகையில் அவர்கள் சூரியனை வணங்குவது இவர்களின் முக்கியமான கடமை என்கிறார்கள்.
கோவில்கள் என்பது அறியாமையின் அடையாளம். புத்திசாலிகள் போகும் இடமல்ல அது. உள்ளமே கோவில் என்கிறார்கள். பீகார், அசாம், சட்டிஸ்கர் போன்று ஆரேழு வடகிழக்கு மாநிலங்களில் வலிமையானதாக மகிமாதர்மம் போற்றும் இந்த இயக்கம் இப்போது திசைமாறிவிட்டது.
பழைய நாட்டுப்புற வழிபாட்டு முறை போன்றவற்றை ஞாபகப்படுத்தும் இவர்களின் நம்பிக்கையைத் தொடர்கிறார்கள் பிரபஞ்ச உரிமை ,ஆன்மீக நம்பிக்கையில் மனிதர்கள் எல்லோரும் சமமாகவும் இருக்க வேண்டும் என்றுத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.
இவர்கள் சமீபமாய் காவியால் கபளீகரம் செய்யப்படுகிறார்கள்.
எப்படி.
0
பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த மகிமா சுவாமியைபின்பற்றுகிறவர் பீமா பாய் என்ற ஒரு துறவி.. அவர் உலகத்தில் சாதிகள் இரண்டு.. ஆண் சாதி பெண் சாதி …மூன்றாவது சாதி என்று எதுவுமே இல்லை என்று மக்களை ஒரே சாதியாக காட்டியவர் . முன்னவர் சொன்ன . சாதி உருவ வழிபாடு, பக்தி யாத்திரை முறைகள்., சமூக படிநிலைகள் காரணமான அரசியல் அதிகாரம் இவற்றை எதிர்த்து இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்த கருத்துக்களை முன்வைத்து வடகிழக்கு மாநிலங்களில் இவருடைய சீடர்கள் எப்போதும் யாத்திரைகளும் பிரச்சாரங்களும் செய்து வருகிறார்கள். அவர்கள் சைவ உணவைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். சூரியன் அஸ்தமானத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும் போன்ற பழக்கங்களை வலியுறுத்துகிறார்கள். இப்படி மதம் இல்லாத ஒரு மதமாக அவர்கள் உருவாகி வளர்ந்து நிற்கிறார்கள் ஆரஞ்சு, காவி உடை தான் அவர்களுக்கு. தலை மொட்டை தான்.. வாழ்க்கையில் பிடிப்பு என்பது மற்றொருவரை அரவணைப்பது, அன்பு செலுத்துவது என்று இந்த இயக்கம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்த இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது
இப்போது இந்த இயக்கத்தின் அடிப்படை இந்து தர்மம் தான் என்று திரும்பத் திரும்ப ஆர் எஸ் எஸ் தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களின் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள் அவர்களை தங்களுடைய நிலைப்பாடுகள் இருந்து மாற்றிக் கொள்வதற்கான நிறைய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து ஒன்றிய அரசின் மத ரீதியான செயல்பாடுகளும் மற்றும் ஒன்றிய அரசு சார்ந்த கட்சியினரின் தொடர்ந்த கருத்து ரீதியான தாக்குதல்களும், நிதியுதவிகளும் தாக்குப் பிடிக்காமல் இந்த இயக்கம் தன் பழைய தத்துவங்களை எல்லாம் கைவிட்டு இந்து மதம் சார்ந்த ஒரு இயக்கமாக மாறிவிட்டது
இந்த அவலத்தை இயக்குனர் டேபா ரஞ்சன் என்ற ஒரு ஒடிய இயக்குனர் ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் .
சமீபத்தில் ஆர் பி அமுதன் ஏற்பாடு செய்திருந்த மதுரை குறும்பட ஆவணப்பட விழாவில் இந்த படத்தை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது
தொடர்ந்த அழுத்தங்கள் மூலம் ஒரு சாதாரண இயக்கம் தீர்த்துப் போய் இருப்பதையும் இந்துத்துவா இயக்கப் போக்குள் வந்து விட்ட்தையும் காண முடிந்தது தங்களை கடவுளாக நினைத்துக் கொள்வதற்கு எதிராக சாதாரண மக்களை கடவுளாக அழைக்கச் சொல்லி மகிழ அவர்கள் வலியுறுத்துகிறவர்கள் இந்து மதம் சார்ந்த அழுத்தங்களால் புதையுண்டு போகிறார்கள். ஆடு மேய்ப்பராக இருந்தவர் பார்வையில்லாமல் தடுமாற்றம் காரணமாக கிணற்றில் விழுந்துவிட்டார் அந்த இடம் கோவிலாக விட்ட்து . கும்பிடுகிறார்கள் என்று ஒருவர் இதில் பேசுகிறார் . ஆனால் கோவிலுக்கு எதிரானவர்கள் என்கிறார்கள்., இதில் உள்ள ஒருவர் பற்றியக் குறிப்பு அது. ஆடு மேய்ப்பவர்கள், விவசாயிகள் என்ன பலர் இந்த ஆவணப் படத்தில் பேட்டி தந்திருக்கிறார்கள் அந்தப் பேட்டிகளில் அவர்கள் வலியுறுத்தும் விஷயம் சகோதரத்துவம் அன்பு என்ற அரவணைப்புதான் . ஆனால் இன்றைக்கு இந்த இயக்கம் இந்து மதவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. பலருக்கு அதிர்ச்சியை தரக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அந்த அதிர்ச்சியை இந்த ஆவணப்படம் சொல்கிறது
இது போல் இந்துத்துவாக்குள் தள்ளப்பட்ட பல இயக்கபோக்குகளை இனி நாம் பார்க்க இருப்பதன் துயர அடையாளம் இப்படம் . எங்கெங்கெல்லாம் இருந்து இதற்கான
அழுத்தங்கள் கிடைக்கின்றன என்பதை நாமும் சமீபமாய் நிறையத் தெரிந்து கொள்கிறோம்.
இதன் இயக்குனர் டேபா ரஞ்சன் இந்துத்துவாவாதிகளின் கடுமையான பார்வையில் சிக்கியிருப்பவர். ஒடிய ஆதிவாசிகள், சுரங்கத் தொழிலில் சுரண்டல், விளீம்பு நிலை மக்களின் பிரச்சினைகள் சார்ந்து முன்னரே பல முறை காவல்துறையின் அச்சுறுத்தலுக்குள்ளும் ஆளானவர். கைது செய்யப்பட்டவரும் கூட
0
சுப்ரபாரதிமணியன்
0
பாதரசம் எனும் நஞ்சு / சுப்ரபாரதிமணியன்
மிகப்பெரிய பாதரச நச்சு ஆலை ஒன்று கொடைக்கானலில் பொதுவான சுற்றுச்சூழலை பாதித்தது. அதை 2000 ஆண்டுகளில் பெரிய விவாத பொருளானது. .
அந்த பாதரச தொழிற்சாலை பற்றி ஆர்.பி அமுதன் அவர்கள் இயக்கிய ஒரு ஆவணத்தை படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.. இந்த ஆவண படத்தை ஒட்டி கொடி என்ற தனுஷ் நடித்த படம் கூட வெளியாகி இருக்கிறது ஆனால் இந்த படத்தில் (கொடி) பாதரசம் என்பதுபற்றிய அடிப்படையிலிருந்து சற்று விலகி நிற்க தனுஷ் என்ற அரசியல்வாதி மற்றும் பலியாடுகள், அரசியல் வித்தைகள் பற்றிய விரிவான படமாக அது அமைந்துவிட்டது
ஈரோடு பசுமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவானந்தம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்ந்த பால் பாஸ்கர் போன்றோர் கொடைக்கானல் பிரச்சனையில் பல ஆய்வுகள் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கின்ற வகையில் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டார்கள். வழக்குகளை எல்லாம் பதிவு செய்தார்கள் என்று ஞாபகம் . இது பற்றிய பதிவு இந்நூலில் இல்லை..
கொடைக்கானல் போகிற போது இந்த பாதரச தொழிற்சாலை பற்றிய விஷயங்கள் அவ்வப்போது உறுதி கொண்டே இருக்கும் அது என்ன அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்பது நினைவில் வந்து கொண்டே இருக்கும். அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பாதரச தொழிற்சாலை கொடைக்கானலை எப்படி விஷமாக மாற்றி விட்டது என்பதை பற்றி சாவின் பக்கம் சென்று வந்த பலரின் அனுபவ்ங்கள் இதில் உள்ளன.பேரா. வின்செண்ட் அவர்கள் மொழிபெயர்ப்பில் பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் பாதரசம் எனும் நஞ்சு என்ற நூலை வெளியிட்டு இருக்கிறது
இதனுடைய மூலத்தின் ஆசிரியர் அமீர் சாகுல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் பத்திரிகையின் புலன் விசாரணையாளராக பணியாற்றியவர் கிரீன் பீஸ் இயக்கத்தினுடைய பரப்பாளராக இருந்தவர் அவர் எழுதிய நூலை இப்போதுதான் அந்த பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை சார்ந்த பிரச்சினைகள் தமிழ்நாடு அளவில் பெரிய பிரச்சனைகளாக மாறிக் கொண்டிருந்தன.அந்த சூழல் வீரிவாக இந்த நூலில் உள்ளன.
கிரீன்பீஸ் என்ற அமைப்பு ஏற்படுத்திய ஆய்வுகள் இன்னும் உலக அளவில் இந்த பிரச்சினையை வெளிப்படுத்தினர். பாதரசிவம் மாசுபட்ட இடங்களில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்டது. அங்கே இருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள், உணவு பொருட்களில் பாதரசம் சேர்ந்திருப்பது போன்றவையெல்லாம் பன்னாட்டு பத்திரிகைகளில் வெளிவந்து பலரின் கவனத்திற்கு உள்ளாகின
1980 களிலேயே இந்த பாதரசம் சார்ந்த உடல் நல குறைபாடும் சாவும் முதலில் நிகழ்ந்தன 1984 இல் முதல் சாவு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள் .பாதரச வெப்பமானங்களை உற்பத்திச் செய்யும் பிரம்மாண்டமாக அது ஓராண்டுக்கு முன்னால் தான் அங்கு தொடங்கியது. அதற்கு பின்னால் விரைவில் மரணம். இது மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை குருவிகள் பிற பறவைகளையும் பாதித்த்து. கழிவுகள் எல்லாம் தெரு வழியில் கொட்டப்பட்டன. பாதுகாப்புடன் வந்து பலர் பரிசோதனை நடந்த போது தான் மக்களுக்கு அந்த கழிவு பொருட்கள் கிடப்பதை தெரிந்தது. முன்பு நல்ல வேலையை தரக்கூடிய தொழிற்சாலை என்ற அறிமுகத்தோடு பலருக்கு அங்கு வேலை கிடைத்தது ஆனால் தொடர்ந்து சுவாசக் கோளாறுகளும் உடல் சிரமங்களும் மக்களை சாவை எட்டச் செய்தது. நல்ல எலி பொறி ஒன்று தயாரியுங்கள் உலகம் உங்கள் வீட்டினை நோக்கி வரும் என்று அமெரிக்க கவிஞர் எமர்சன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு ஆயிரக்கணக்கான எலிப்பொறிகள் அமெரிக்க வரலாற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டன. எலிப்பொறிகளைப் போன்ற்உ மனிதர்கள் சாவுப் பொறியில் மாட்டிக் கொண்டார்கள்.. இந்த எலி பொறிகளில் சாதாரண மக்கள் மட்டும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடி மக்களும் பதிக்கப்பட்டதில் இருந்தார்கள். அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது அவருடைய வேட்டையாடும் வாழ்க்கைக்கும் உடல் நலத்திற்கும் ஏதோ கேடு கேட்டு வந்து விட்டதை உணர்ந்தார்கள். குழந்தை போல் எண்ணியது தான் அது பாதரசம் என்பதை அவர்கள் அறிய தாமதம் ஏற்பட்டது ,பழங்குடி இனத்தவர்கள், உணவு சேகரிப்பவர்கள் பல நஞ்சினால் நரம்பு சிறுநீரகம் போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார்கள். அந்த பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை பற்றி ஆய்வுகளும் நடந்தன. பறவைகளை, சிறு விலங்குகளையும் கூடவே பாதித்திருப்பதை பல ஆய்வுகள் சொன்னன. காற்றில் அல்லது நீரில் பாதரசம் பரவி பழங்குடி மக்களையும் சிறு விலங்குகளையும் கூட பாதித்திருந்தன. பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் பாதரச உலோகம் தாவர இலைகளில் சேர்க்கப்படுவதும் மனிதர்களை பாதிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கை சூழலும் இதனால் பாதிப்பு அடைந்திருப்பது தெரியவந்தது .கொடைக்கானல் ஒட்டிய பல சோலை பகுதிகளில் கரடி சோலை பொதுச் சோலை போன்றவையும் முக்கியமானவை. அவற்றில் கரடிகளும் புலிகளும் அதிக அளவில் நடமாடிக் கொண்டிருக்கும் பகுதி என்பதால் அந்த பெயர் வந்தது. ஆனால் அவற்றின் அளவு குறைந்து போய் உல்லாச பயனுக்காக மக்களின் வருகைகள் அந்த பகுதியில் அதிகமாகின. அந்த பகுதி விலங்குகள் ஊரை விட்டுக்கு பயந்து ஓடிவிட்டன. கொடைக்கானல் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக அம்மலை மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்க வேண்டி இருந்தது கொடைக்கானல் என்று மலைப்பகுதி மக்களுடைய வாழ்வாதாரக்காரர் இடமாக மாற பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது அந்த பழையப் போக்கை கொண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்க வேண்டி இருக்கும். இந்த காலகட்டத்தில் மக்களுடைய பாதிப்பும் எப்படி இருந்தது அந்த பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி மக்களை நிராகரித்தார்கள், பிற தொழிற்சாலைகள் புறக்கணிக்கப்பட்ட போக்குகளும் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதும் மலைப்பகுதி தீங்கு விளைவிப்பதும் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் கொடைக்கானல் பகுதியில் வந்து ஓய்வெடுப்பதற்கான இடமாக இருந்து. பின்னால் அதுவே பாதரசம் வெப்பமானி தயாரிக்கும் இடமாக அவர்கள் மாற்றுவதற்கான ஆதாரங்கள் எப்படி இருந்தன என்பதை இந்த நூல் சொல்கிறது. பாதரசத்திற்காக இடம் தேடி பல இடங்களில் நிராகரிக்கப்பட்ட பின் அங்கு வந்து அடைக்கலமாகி இருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்.
எம்ஜிஆர் ஒரு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்காக வந்து போயிருக்கிறார். பின்னால் அவரை இந்த தொழிற்சாலை தூங்குவதற்கான ஆயத்தங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறார். அபூர்வமாக பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூ போல இங்கு வருகிற தொழிற்சாலைகள் மக்களுக்கு பயன்படும் என்று நினைத்திருக்கிறார்கள். குறிஞ்சித் தலைவன் முருகன் அவர்களையெல்லாம் காப்பாற்றுவான் என்று காலம் காலமாக வழிபடுகிறார்கள். ஆனால் பாதரசம் தந்த பாதிப்புகள் முதலில் சிறுநீர் தொல்லையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் இயங்க முடியாமல் செய்திருக்கிறது. இதில் கணிசமான பெண்களும் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பெண்களை இந்த தொழிற்சாலை வேலையில் எடுக்காமல் தவித்து இருக்கிறார்கள் என்பதும் முக்கியம்
வெப்பமாணி கழிவுகள் மூட்டைகளாக வெளியே கிடத்தப்பட்ட போதும் அவை பரவிய போதும் மக்களுக்கு அதன் ரகசியம் தெரியவில்லை ஆனால் அவர்களை உடல் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை வந்த போதுதான் தொழிற்சாலையின் அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். மகன் பாதரச மதிப்பால் சாகிறான் தந்தை தன் ஆதாரங்கள் எல்லாம் இழந்து விட்டு கதறுகிற காட்சியொன்று இங்கு விவரிக்கப்பட்ட்தில் மனம் தடுமாறியது பெண்கள் ஆண்களுடைய சாவை பார்த்து திகைத்துப் போகிறார்கள. ஆனால் அவர்களுக்கு காரணம் தெரியவில்லை. காரணம் தெரிகிற போது அவர்களை சிறு சிறு நிவாரணம் கொடுத்தும் மருத்துவ உதவி கொடுத்தும் அந்த பன்னாட்டு நிறுவனம் தவிர்த்து விட்டது ஆனால் உயிரைக் கொடுத்தவர்கள் பலர் . அங்கு வேலை செய்ய வேண்டி இருப்பதை அவர்கள் தவிர்க்க முடியவில்லை உயிரை விட்ட பிறகு தான் அதெல்லாம அவர்களுக்கு தெரிய வருகிறது
இந்த விவரங்களை எல்லாம் இந்த நூலில் பேராசிரியர் வின்சென்ட் அவர்கள் அழகான மொழி பெயர்ப்பால் தந்திருக்கிறார். இந்த பகுதி பற்றிய சில தவறான கருத்துகள், தவறான செய்திகள் பற்றி குறிப்பீடு செய்து இந்த நூலில் எழுதி இருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பவர் வெறுமனே மொழி சார்ந்து மட்டுமல்லாமல் இதுபோல இருக்கிற தவறுகளை சுட்டிக்காட்டியும் அந்த பிரதியை திருத்துவது எவ்வளவு முக்கியமான கடமை என்பதை பேராசிரியர் நிரூபித்திருக்கிறார். அவருடைய எளிமையான மொழிபெயர்ப்பு மனம் கனக்கச் செய்கிற ஒரு பெரிய விஷயத்தை சுலபமாக மனதிற்குள் கொண்டு சென்று விடுகிறது..
ஜீவா, பால் பாஸ்கர் போன்றோர் இந்த பணிகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளை இந்த நூல் எதுவும் சொல்லவில்லை அதேபோல ஆர்பி அமுதன் போன்றோர் இயக்கிய ஆவணப் படங்கள் பற்றி கூட எதுவும் சொல்லவில்லை ஆனால் அதை இந்தியன் ஏரின் ப்ரோ பீச் என்று அதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்கள். பல தரவுகளை முன் வைத்து எழுதப்பட்டிருக்கிற இந்த புத்தகம் விரிவாக கொடைக்கானல் மக்கள் பாதரச பாதிப்பால் சிரமப்பட்டு இருப்பதை பற்றி சொல்கிறது ஆனால் தமிழக அளவில் இதற்காக போராடிய மக்கள் பற்றிய அணுகுமுறை போராட்டங்கள் பற்றி குறிப்புகள் இந்த நூலில் இல்லாமல் இருக்கிறது
(
ரூ 450 எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி வெளி
சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ்
சுப்ரபாரதிமணியன்
இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 38 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான். ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை. சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன . அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். 1912இல் சிக்காகோவில் பொய்ட்ரி என்ற பத்திரிகையை ஒரு பெண்மணி ஆரம்பித்தார். அந்த பத்திரிகை இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, ஒரு மருந்து கம்பெனி பெண் தன் சொத்தில் ஒரு லட்சம் டாலரை அந்த பத்திரிக்கைக்கு எழுதி வைத்திருக்கிறார் அந்த உயில் நடைமுறைக்கு வரும் போது இரண்டு லட்சம் டாலர்கள் என்று ஆகிவிடுகிறது. அந்த பெரிய பணம் அந்த பத்திரிகையின் முதலீடாக மாறி இன்றும் அந்த பத்திரிகையை தொடர்ந்து வர உதவுகிறது. அந்த தொகை வழங்கிய அந்த பெண்மணி கவிஞராக இருந்திருக்கிறார் அவர் எழுதிய கவிதைகளைப் பிரசுரிக்க மறுத்து இருக்கிறது. இருக்கிறது ஆனால் அந்த பெண் அந்த பத்திரிகையின் தீவிர நடவடிக்கைக்காக உதவி செய்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பவுண்ட் போன்ற கவிஞர்கள் அந்த பத்திரிகைகளுக்கு படைப்புகளை வாங்கி பரிந்துரை செய்து பலருக்கு கவிதைகள் பல வெளிவர உதவி செய்திருக்கிறார்கள் டிஎஸ் எலியட், தாகூர் போன்றவரின் கவிதைகளையும் வாங்கி அந்த பத்திரிகைகளுக்கு எக்ஸ்ட்ரா பவுண்ட் சிபாரிசு செய்து அனுப்பி இருக்கிறார். தாகூரின் கவிதை அந்த இதழில் வெளிவந்த ஆண்டுக்கு பின்னால் தாகூர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது ஒரு சிறு செய்தி
பேரா சிவகுமார் ஒரு பேச்சில் தெரிவித்தார்.
நான் ஹைதராபாத்தில் என் வேலை நிமித்தமாக வசிக்க தொடங்கிய போது பம்பாய், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களில் தமிழர்களின் குரலாய் சில பத்திரிகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன், அப்போதான் ஆந்திரா தமிழர்களின் குரலாக ஒரு பத்திரிகையை நடத்தப்பட வேண்டும் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தோம் பாரதியாரின் பூர்த்தி ஆகாத சுயசரிதை கனவு என்ற பெயரில் அந்த பத்திரிகையை அப்போது ஆரம்பித்தோம் .முதல் இரண்டு இதழ்கள் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வந்தன. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை.
அந்த காலத்தில் ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் இருந்த மத்திய தர வாசகர்கள் ஆனந்த விகடன் கொண்டு பல வெகுஜனை இதழ்களில் அக்கறை கொண்டிருந்தார்கள் .அங்கிருந்த மத்திய மற்றும் உயர் குடி பிராமண பெருமக்கள் அந்த வகை பத்திரிக்கைகளை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களின் பண்பாட்டு சார்ந்த அரசியல், பண்டிகை சார்ந்த விஷயங்கள் முன்னணி பெற்றன. இந்த சூழலில் அங்கு பெரும்பகுதியான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிராமணர்கள் அல்லாத எழுத்து என மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்புகளை அபூர்வமாக எழுதினார்கள். அவர்களுக்குக் களமாக கனவு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அதற்கான வரவேற்பு இல்லாததால். மூன்றாம் இதிலிருந்து அந்த இதழை தமிழ்நாட்டு படைப்பாளிகளும் எழுத மாற்றினேன் அதுவரை ஒத்துழைப்புச் செயல் தந்து கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் விலகிக் கொண்டார்கள்.
அதற்கு பின்னாலும் நான் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்த பின்னும் கனவு இதழின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
“ வாசன் மகனுக்கு என்றால்தான் அச்சு பொறி அடிக்குமோ
காசு இருந்தால் எங்கேயும் கொண்டு போய் நிறுத்தலாம் “என்ற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று கசடதபரறமுதல் இதழில் வெளிவந்த ஞாபகம். அப்படித்தான் செகந்திராபாத் தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதாக ஆரம்பித்த கனவு இதழ் 38 ஆண்டுகளாக மாற்றுக் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை முன்னணியாகக் கொண்டு இயங்கி வருகிறது .பத்திரிகையில் மட்டுமில்லாமல் கனவு திரைப்பட இயக்கம், தமிழ்மொழி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கி தன் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது
அந்த வகையில் அமரர் மோகன் அவர்களின் நினைவுகளாக வழங்கப்படும் இந்த இலக்கிய விருது கனவுக்கு வழங்கப்படுவது ஒரு சிறு அங்கீகாரமாகவே நினைக்கிறேன், இந்த பண்பை பாராட்டும் கௌரவப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து அமர்ர் மோகன் நினைவு குழு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்
புவியரசு
வானம்பாடிக்குப் பின் புதுக்கவிதை : சுப்ரபாரதிமணியன் நூல் 1982
வானம்பாடி இயக்கம் தோன்றி, வெளிப்பட்டு, பரவலாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த பரபரப்பான காலகட்டத்தில் பலர் அதன்
இருப்பும் விளங்காமல், திசையும் தெரியாமல் இருட்டில் நின்று ஒரு மாய யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், கை சலிக்கும் வரை. இப்போதும் கூட, ஒரு சிலர் இதன் பெயரைச் சொன்னாலே காது திருப்பிக் கொள்கிறார்கள்.
எழுத்தில் பார்க்கும்போது கண்களை மூடிக் கொள்கிறார்கள். என்றாலும். இதன் தோற்றமும், செயல்பாடும் தமிழ் இலக்கிய வரலாற்றில் புறக்கணிக்க
முடியாததொரு இடத்தைப் பெற்றுவிட்டது.
இதைப் போலவேதான் ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. க.நா.சு. போன்றவர்களைக் தொடங்கிய புதுக்கவிதை இயக்கமும். வரலாற்றை அப்படியொன்றும் எளிதாக இருட்டடிப்பு செய்துவிட முடியாது.
மகாகவி பாரதி செய்யுள் சிறையிலிருந்து கவிதைக்கு விடுதலை கொடுத்தது போலவே மிகச் சிலருக்கு விளங்கக் கூடிய பூடகமான புதுக்கவிதையிலிருந்தும், கவிதைக்கு விடுதலை தந்து விசாலமானதொரு களத்தை தேடித்தந்தது வானம்பாடி
இயக்கம். வாளம்பாடி இயக்கத்தின் தோற்றத்தைப் போலவே அதன் சிதைவும், சீர்குலைவும் ஒரு வரலாற்று உண்மைதான். கசப்பான உண்மை.
ஒரு இன்றியமையாத் தேவை காரணமாகவே ஒரு இயக்கம் தோன்றுகிறது. அதன் காரியம் முடிந்ததும் அது அழித்து விடுகிறது. எந்த ஒரு அமைப்புதான் சாசுவதமானது? ஆனால் இவ்வளவு சீக்கிரம், இப்படி உடைந்திருக்க வேண்டாம். அதற்கான காரணங்களை, விருப்பு ஒளிவு வெறுப்பில்லாமல்
மறைவில்லாமல்
சொல்வதற்கான
நேரம் இன்னும் வரவில்லை.
அது ஒரு கசப்பான கதை. வேதனையான கதை. இப்போது அது வேண்டாம். மிகச் சமீபகாலம் வரைக்கும்கூட புதுக்கவிதையை
கேலி பேசி வந்த சில சரித்திர காலத்து கவிஞர்கள் பொங்கிப் பிரவகிக்கும் புதுவெள்ளப் பெருக்குக்கு எதிராக நிற்க முடியாமல், புத்திசாலித்தனமாய்,
சட்டென மதம் மாறி, கொட்டி முழக்கிக் கொண்டு
புதுக்கவிதைத் தேரேறி வலம் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.
வரட்டும்... வரவேற்புக் கூறுவோம்.
ஆனால் உண்மையான உள்ளத் துடிப்போடு இந்தச் சமுதாயத்தை கூர்ந்து பார்த்துப் பலப்பல
இளைஞர்கள் புதுக்கவிதை படைக்க முன் வந்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்யமான சூழல்.
இவர்கள் மேடை மரியாதைகளை, பட்டம் பதவி பரிசுகளை எதிர்பார்த்து வந்தவர்களல்ல.
எங்கெங்கோ இருந்துகொண்டு தம் இதயத்துடிப்புகளை வடித்துக் கொடுத்துத் கொண்டிருப்பவர்கள்....
இவர்களை அறிமுகப்படுத்தி விமர்சித்திருக்கிறார்
நண்பர் ஆர்.பி.எஸ். சுருக்கமாக.
இப்புதிய கவிஞர்களோடு பழையவர்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கூட
குறிப்பிட்டிருக்கிறார்.
தேவையான, காலத்திற்கேற்ற ஒரு படைப்பு- நண்பர் யாருக்காகவும் வளைந்து கொடுக்கவில்லை
என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.வாழ்த்துகிறேன்.
- புவியரசு.
திருப்பூரின் மூத்த எழுத்தாளர் மரணம் அஞ்சலிக்கூட்டம்
சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் குழந்தை வேலு அவர்கள், அவருக்கு வயது 89.
.. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார்
மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார்
புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை
விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார் சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார்.சுயநினைவு இல்லாமல் இருந்தார் .அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள்
காவ்யா பதிப்பகத்தில் இரண்டுநாவல்களை கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றார் ஆனால் அவருடைய படைப்புகள் எங்கும் பதிவு செய்யப்படாத சாதாரண மக்களின் அவலங்கள் அதுவும் வால்பாறை பகுதிகளில் தற்காலிக மின் ஊழியராக இருந்து மின்விநியோக கட்டமைப்பு சார்ந்த அவரை அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்
வால்பாறை பழங்குடி மக்களின் வாழ்க்கை சார்ந்து அவரின் சித்திரங்கள் அற்புதமானவை.
திருப்பூர் கனவு இதழில் சிறுகதைகள் எழுதினார். செம்மலர், தாமரை. உண்மை போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார் பகுத்தறிவு சிந்தனையோடு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அவருக்கு அஞ்சலி கூட்டம் சனியன்று பாண்டியன் நக்ர் அரசு பள்ளி எதிரிலான நாலேஜ் செண்டரில் நடைபெற்றது.
திருமதி பாசிதாபானு தலைமை தாங்கினார்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இயக்கிய ” நாணல் “ குறும்படம் அறிமுகம் செய்யப்பட்டது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய “ பாதுகாப்பு “ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது.திரைக்கதை வசனத்தை கிளமண்ட் விக்டர் எழுதினார், இதை ஒளிப்பதிவு செய்த மோகன் சென்றாண்டு அகால மரணம் அடைந்தார். சுப்ரபாரதிமணீயன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன. நாணல் அவரே இயக்கியது.
செய்தி: சுப்ரபாரதிமணியன் 9486101003
வணக்கம் .
நீர்த்துளி நாவல் மறு பதிப்பு 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே
குறைவான விலையில் தந்ததற்கு நன்றி. NCBH
மருதன்
என் “ கோமணம் “ நாவலை கிழக்கு பதிப்பகத்தில் மறு பதிப்புக்கு தந்தேன். உடனே வந்தது. அது மலையாளத்திலும் வந்த்து அப்போதே.
நீர்த்துளி நாவலை பிறகு அனுப்பினேன்.
பல முறை நினைவூட்டல்
திருப்பி அனுப்பச் சொல்லியும்
நூலகத்தில் பிரதிகளையும் கண்டேன்
சென்றாண்டு மருதன் அவர்களை திருப்பூரில் சந்தித்த போது ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வரும் என்றார்.
எந்த ஜனவரி என்று அவரும் சொல்லவிலை
எந்த ஜனவரி என்று நானும் கேட்கவில்விலை
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது கிழக்குக்கு அனுப்பி …. விடியவேயில்லை.
என் சி பி எச் பதிப்பகத்திற்கு அனுப்பி மறுபிரசுரம் வந்து விட்டது. 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே
குறைவான விலையில் தந்ததற்கு நன்றி
மருதனுக்கும் நன்றி.
Swelter: Review
Subrabharathimanian s Veppam Tamil novel – in English translation )
This heartwarming children's story follows the journey of a fisherman's son, Praveen, who grows up to become a science teacher and brings change to his coastal village. Set against the backdrop of rising tides and relentless rain caused by global warming, the narrativecaptures the real challenges faced by coastal communities. Praveen’s concern for his students and the island school’s vulnerability leads him to act decisively, seeking government help to relocate the school to safer ground. His deep understanding of science not only earns him respect but also brings tangible improvements to the village, including new homes for the fishermen. The gentle romantic thread involving his classmate-turned-attender Kavinila adds emotional depth. Through Praveen’s actions, the story celebrates the transformative power of education, the importance of climate awareness, and the strength of community-led change.
The backdrop of climate change adds urgency and realism to the narrative.With a focus on global warming and its impact on fishing communities, the story introduces young readers to environmental issues in an accessible and engaging way. The narrative is simple yet powerful, highlighting how education can spark awareness and action. Children are likely to connect with the relatable characters and be inspired by the teacher’s determination and care. The themes of climate change, community resilience, and the importance of knowledge are woven in thoughtfully by the Author. It’s a story that not only entertains but also gently awakens young minds to real-world challenges. With its message of hope and responsibility, this tale is a meaningful read for children and a valuable resource for classrooms.
Author Subrabharathi Manian, known for his socially rooted storytelling, brings authenticity and heart to this inspiring children's book that nurtures environmental awareness and empathy towards societyamong young readers.
~ Ahila
Writer, Coimbatore
Veppam.. chikdrens novel Rs 60 NCBH publications , Chennai
இளையோர் விருது வழங்கப்பட்டது.
திருப்பூர் மக்கள் சிந்தனைப் பேரவையின் 28ஆம் கூட்டம் பத்மாவதிபுரம் நேசனல் பள்ளியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. அய்யாசாமி தலைமை வகித்தார்,தங்க பூபதி வரவேற்றார்.
பிரண்ட்லைன் அகாதமியில் 5ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் இனியன் அவர்களுக்கு இளையோர் விருது வழங்கப்பட்டது.மூன்று சிறுவர் நூல்கள் எழுதியுள்ளார் . பேச்சுப் போட்டிகளிலும் பல சாதனைகள் புரிந்துள்ளார்.
ஸ்டார் குமார் தொகையுடன் விருது வழங்கினார்.
0 சுப்ரபாரதிமணியனின் கனவு இலக்கிய இதழ் சமீபத்தில் இரு மாநில அளவிலான விருதுகளைப் பெற்றதை பாராட்டி தூரிகை சின்னராஜ் பேசினார். சுப்ரபாரதிமணியன் திரைப்பட இயக்குனர் வி.கீரா எழுதிய வீரா நாவலைப் பற்றி பேசினார்.( 400 பக்கங்கள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை வெளியீடு. )
எழுத்தாளர்கள் அங்கு லட்சுமி, முத்துபாரதி கவியுழவன், சகா பாலாஜி, பேரா. கிருஸ்ணமூர்த்தி,போலீஸ் கார்த்திக் , நாவலாசிரியர் சிவராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். புத்தக விமர்சனங்கள், கவிதைகள் வாசிப்பு இடம்பெற்றன
0 திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே . சுப்பராயன்
மதிப்பு மிக்க அனுபவங்களால் தன் நாவல்களை நிரப்புகிறவர் சுப்ரபாரதிமணியன். அவரின் பயண அனுபவங்களும் அவரை பயண எழுத்தாளராக அடையாளம் காட்டுவதுண்டு.
மனித மனம் பற்றிய நுட்பமான பார்வைகளை சமூக இயல் விசயங்களுடன் எழுதி வாசகர்களின் மனங்களை ஊடுருவி உணர்த்தும் எழுத்தாளர்.
பொதுவுடமை இயக்கத்தைன் ஞானரதமான என் சி பி எச் பதிப்பகம் இவரின் 25க்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளது.
கனவு என்ற இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி தமிழ் நவீன இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருபவர் . எழுத்தால் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே . சுப்பராயன் அவர்கள் கோபியில் நடைபெற்ற மார்க்சீயக்கல்வி முகாமில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்டார். 13/5/25
0
அடையாள அரசியல்.சாதி.பாசிசம் சார்ந்த உரைகள் சிறப்பானவை..
இது சார்ந்து இடம் பெயர்ந்த தொழிலாளர் சமூக பாதுகாப்பின்மை.பின் நவீனத்துவம்.. அரசியல் கல்விஎன்று பல விடயங்களை பகிர்ந்து கொண்டேன் பின்னுரைகளில்...
தொலைபேசி ஊழியர்களுக்கு மார்க்சிய கல்வி வகுப்புகள்
இரண்டு நாட்களாக கலந்து கொண்டேன்
கோபியில்.சிறப்பான உரைகள்.. உரையாடல்கள்..
நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் உள்ளிட்டோர் வகுப்புகளை நடத்தினர்
நண்பர் சந்திரசேகர்
நண்பர் சந்திரசேகர் அவர்கள் சக தோழராக, சக ஊழியராக தொலைபேசி தொடர்பு துறையில் கூட இருந்து பணியாற்றியவர். பணியை பொருத்த அளவில் தீவிரமான மதிநுட்பமும், மனப்பயிற்சியையும், உழைப்பும் கொண்டவர், அவ்வப்போது வாசிக்கிற பழக்கமும் அவருக்கு இருந்தது,
நண்பர் சந்திரசேகர் பணி ஓய்வு காலத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய எழுத்துக்கள் எளிமையானவை. சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை... சாதாரண மக்களின் வாழ்க்கையை, எளிமையான மொழியில் தான் எழுத வேண்டும் என்பதில் அவர் திடமாக இருக்கிறார்.
எளிமையான மொழி மட்டுமல்ல, எளிமையாக எல்லோருக்கும் சென்று வாசிப்பில் சேர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அந்த வகையில் தான் இதில் உள்ள கதைகள் எல்லாம் எளிமையான மனிதர்களின் ஆசைகள், சந்தோஷம், மகிழ்ச்சி பெற்றுக் கொள்கிற போதனைகள், அறிவுரைகள், வாழ்க்கைப் பாடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.
இலக்கிய பத்திரிகை எழுத்தாளர்களின் சிடுக்கு மொழியும் சிடுக்கான மையமும், சிக்கலான மையங்களும் இல்லாமல் எளிமையான மொழியில் எளிமையான மனிதர்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு போகிறார், அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களை வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்கான மொழியையும் மையத்தையும் அவர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்.
- சுப்ரபாதிமணியன் திருப்பூர்
ஓய்வு பெற்றபின் சக தோழர்களாக இருந்த பல ஊழியர்கள் எப்படிமாறி விட்டார்கள் என்று யோசிக்கிறேன். பலர் ரியல் எஸ்டேட்காரர்கள் என்று ஆகிவிட்டார்கள். சிலர் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். பிறருக்கு தொழிற்சங்க பணிகள் ஆர்வ மூட்டுகின்றன, பலருக்கு ஓய்வூதிய சங்க பணிகள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து உழைக்கிறார்கள்.பலர் கோவில்,குளம், ஆன்மீகச்சுற்றுலா என்று பொழுதைக்கழிக்கிறார்கள்.நோய்களுக்கான சரியான மருத்துகளைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்குச் சிக்கல். இதெல்லாம் இல்லாதவர்கள் பல்செட் உதவியுடன் உணவு உண்டு, தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கி சுயநலத்துடன் தங்கள் குழந்தை, குட்டிகள், பேரன் பேத்திகளுடன் எந்தவித மனச் சிக்கலும் இல்லாமல் பொழுதைப் போக்குகிறார்கள்.இவர்களின் கடைசி இலக்கு காசி, ராமேஸ்வரம் என்பதால் எந்தச் சிக்கலும் இல்லை.
நண்பர் சந்திரசேகர் இந்த பணி ஓய்வு காலத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய எழுத்துக்கள் எளிமையானவை. சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை... சாதாரண மக்களின் வாழ்க்கையை, எளிமையான மொழியில் தான் எழுத வேண்டும் என்பதில் அவர் திடமாக இருக்கிறார்.
எளிமையான மொழி மட்டுமல்ல, எளிமையாக எல்லோருக்கும் சென்று வாசிப்பில் சேர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அந்த வகையில் தான் இதில் உள்ள கதைகள் எல்லாம் எளிமையான மனிதர்களின் ஆசைகள், சந்தோஷம், மகிழ்ச்சி பெற்றுக் கொள்கிற போதனைகள், அறிவுரைகள், வாழ்க்கைப் பாடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.
இலக்கிய பத்திரிகை எழுத்தாளர்களின் சிடுக்கு மொழியும் சிடுக்கான மையமும், சிக்கலான மையங்களும் இல்லாமல் எளிமையான மொழியில் எளிமையான மனிதர்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு போகிறார், அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களை வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்கான மொழியையும் மையத்தையும் அவர் தேர்ந்தெடுத்து கொள்கிறார். அதற்கான ஊடகப்பகுதிகளையும் தேர்வு செய்து கொள்கிறார் . இந்த பணியில் அவர் தொடர்ந்து இயங்க வேண்டும். அவரின் அனுபவங்களில் நாவல் போன்ற பெரிய தளங்களில் அவர் இயங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன . அதை அவர் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர் என்ற வகையில் இந்த தொகுப்பு வெளிவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஓய்வு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் நண்பர்களை என்றும் நேசிக்கிறேன்.
0 சுப்ரபாதிமணியன் திருப்பூர்
0
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழுவில் என் பெயரை industrial member என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
. காரணம் கேட்டபோது எழுத்து, பதிப்பகம் முயற்சிகள் இவை எல்லாம் அந்த வகைக்குள் வந்துவிட்டது என்றார்கள். Industrial…. எழுத்து பண்டமாகிவிட்டது.
நேற்று அந்தப் பாட்த்திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது..
0
.. நூல் அறிமுகம்
போராளியின் புதிய காதல் நாவல்கள்
எழுத்தாளர் பாரதிநாதன் அவர்கள் பொதுவுடமை இயக்கங்களில் இணைந்து பணிபுரிந்தவர். அவரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களை பல நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் எழுதி இருக்கிறார்
. அவர் எழுதிய நாவல் ” தறியுடன் ..” என்ற நாவலை வெற்றி மாறன் தயாரிப்பில் ” சங்கத் தமிழன்” என்று வெளிவந்தது. விடுதலை 1,2 ஆகிய படங்களின் ஆக்கத்திலும் பணிபுரிந்து இருக்கிறார். .பொதுவுடமை தத்துவார்த்த விசயங்களை எளிமையாக்கி பல நூல்களை வெளியுட்டுள்ளார். மார்க்சீயத் தத்துவ வாசகர்களுக்கு அவை பெரும் கொடையாகும்.
அவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற இரண்டு நாவல்களில் அவரின் வழக்கமான பொதுவுடமை அனுபவங்கள், , விளிம்பு நிலை மக்களின் போராட்ட அனுபவங்கள் தவிர்த்து குடும்ப உறவுகள் சார்ந்த உணர்வுகளை மையமாக்கிக் கொண்டு எழுதியிருக்கிறார்.
” பெஸ்டி “ நாவல்- நட்புக்கும் காதலுக்கும் இடையில் இருப்பது காதலனோ சகோதரனோ காட்டாத அன்பை பிறர் காட்டுகிறார்கள் என்று ஒரு ஆறுதல் சில பேருக்கு… பலர் இதைக் கொச்சையாக பார்க்கிறார்கள். ஆணின் காதலிக்கும் மனைவிக்கும் இது மனதில் தரும் போராட்டங்களை இந்த ” பெஸ்டி” நாவலில் எளிமையாக சொல்லி இருக்கிறார்..
”காதலாகி கசிந்து “ என்ற நாவலில் சேர்ந்து வாழுதல் இந்த சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறது.. இன்றைய சமூகத்தில் காதல் திருமணத்தில் முடியும் பலரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அலசல் இருக்கிறது.
இந்த நாவல்கள் இரண்டுமே எளிமையான திரைப்படக் கதைகள் என்று கூட சொல்லலாம் பொதுவுடமை இயக்கம் சார்ந்த ஒருவரின் அனுபவங்களில் இருந்து வந்திருக்கும் காதல் உணர்வு சம்பந்தப்பட்ட நாவல்கள். இவை. எளிமையானவைதான். அவரது எழுத்தின் புதிய பரிமாணத்தின் வகைப்பாடு என்றும் சொல்லலாம்
( புரட்சி பாரதி பதிப்பகம் வெளியீடு சென்னை / ரூ 135 ஒவ்வொன்றும் / 90430 50666 )
-சுப்ரபாரதிமணியன்
எக்காலத்திற்குமான நீதியின்போக்கு
தீவாந்தரம் ( நாவல் )
அண்டனூர் சுரா
- சுப்ரபாரதிமணியன்
தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என் நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வு போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ உ சி அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம் ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
வ உ சி அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது நாவல். தீவாந்தரம் என்ற தலைப்பே ஒரு வகையான தண்டனையை காண்பித்துவிடுகிறது. அந்தத் தண்டனை கைதுக்குப் பின்னால் அவர் மீது அமல்படுத்தப்படும் போதும் அதன் இடையில் ஏற்பட்ட இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடலும் அல்லது நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் உரையாடலுமாக நாவல் நின்று பேசுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வழக்கு விசாரணை அம்சங்கள் இந்த நாவலில் பல இடங்களில் ஒத்துப்போய் இந்த நாவலின் போக்கை ஒரு சமகால தன்மை உள்ளதாக கூட மாற்றி விடுகிறது அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சரித்திர விஷயத்தைச் சமீபத்திய சரித்திர அம்சங்களுடன் கலந்து தருவதில் நம்பகத்தன்மை என்பது பற்றிய ஒரு குழப்பமும் ஏற்படுகிறது. முந்தைய சரித்திர விஷயத்தை இது தேவையில்லாமல் குறுக்கிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பது விதியாக இருக்கிறது.
சமீபத்திய தூத்துக்குடி வழக்கு விசாரணையின் அம்சங்கள் பல இடங்களில் இழையோடியிருப்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அப்படியாக கண்டுகொள்ள முயலும்போது இந்த நாவல் ஒரு சமகாலத் தன்மையுடன் செல்ல முயலும் அக்கறையைத் தருகிறது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களை மனதில் கொண்டு பார்க்கிறபோது ஒருவகையில் அதை நிறுவுவதுமாகவும் அமைந்துவிடுகிறது. இவ்வகை விஷயங்களை அதாவது பழைய சரித்திர விஷயங்களையும் சமீப விஷயங்களையும் ஒன்றிணைக்கும் வடிவத்தை இவரின் அப்பல்லோ போன்ற நாவல்களிலும் பார்க்க முடிகிறது. இந்த வகையான வடிவத்தைச் சரித்திர சம்பவமும் சமகால சமூக இணைந்த போராட்டத்தைக் கொண்ட வடிவத்தை அவர் பல படைப்புகளில் கைக்கொண்டு இருக்கிறார். அது அவரின் தனித்துவமான போக்காக நின்றுவிடாமல் இந்த வகை விஷயத்திலிருந்து மாறுபட்டு வேறு வடிவங்களுக்குள் புகுவதன் மூலம் எதார்த்தத்தின் பல சிறப்புகளைக் கொள்ள வைக்கும்.
அந்த வகையில் தூத்துக்குடியில் முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டையும் இப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டையும் நினைவு கொள்ளும் விதமாய் அமைந்துள்ள விசாரணைக் காட்சிகள் இந்த நாவலின் முக்கிய பங்காற்றுகின்றன. இது நாவலின் சுவாரஸ்யமானத் தளமாகவும் அமைந்து விடுகிறது. வ உ சி அவர்களின் குடும்ப நண்பர்களுடன் உரையாடல் மற்றும் நீதி விசாரணை பதில்கள் போன்றவை கூர்மையாக சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டு சிறுவர்-சிறுமியர் சார்ந்த விசாரணை குறுக்கீடுகள் மட்டும் புனைவுத் தன்மையுடன் வார்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. மற்ற கதாபாத்திரங்கள் வ உ சி யின் குடும்ப நண்பர்களோடும் அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறார்கள்.
இந்த நாவலை கதையாகச் சொல்லுகிற அம்சங்களில் பல இடங்கள் கவித்துவ அம்சங்களாக நிறைந்திருக்கின்றன. தூய்மைப்படுத்திய குடிநீரை போல நீதி இருக்க வேண்டும் என்ற அக்கறையில் கொடுக்கப்படும் செய்திகளில் தரம் உயர்ந்ததாக இருக்கிறது. முகத்தில் சிலந்திகள் மீசையாகத் துருத்தி இருப்பது போல இந்த நாவலில் வ உ சி படும் துன்பங்கள் நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்தத் துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு சாதிகளின் அடிப்படையில் அமைந்திருப்பதை நாவல் முழுக்க பல இடங்களில் அவர் அலசுகிறார். வ உ சி குடும்பத்தினர் மிகுந்த சிரமங்களுக்கு உண்டாகி இருப்பது அறத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. மனு நீதிதான் தீர்ப்பாக வழங்கப்படுகிறது, அந்தத் தீர்ப்பு இன்று சாதிரீதியான தீர்ப்பாக அளக்கப்படுகிறது, என்பதை நாவல் குறிப்பிடுகிறது.
மனு நீதியின் தாக்கங்கள் எந்த காலத்திலும் இந்திய சமூகத்தில் இருந்து கொண்டிருப்பதில் அத்தாட்சியாக அந்த வகை கூற்றுகள் அமைந்துவிடுகின்றன. வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதையொட்டி அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பின்னால் திருநெல்வேலியில் கலவரம் நடக்கிறது. துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. அதன் பின்னால் வருகிற வழக்கு விசாரணை ஆகியவை இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்ட போதிலும் சமகால தன்மையையும் ஞாபகத்தில் கொண்டு எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பும் பின்னால் மேல்முறையீட்டு காரணமாக உயர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் விரிவாக உள்ளன. அவற்றின் இடையில் நடக்கும் விசாரணை சார்ந்த விஷயங்களும் வ உ சி குடும்பத்தினரின் சிரமங்களும் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு காலகட்டத்திய சரித்திர சம்பவங்களைச் சமகால தன்மையை இணைத்து சொல்லப்பட்டிருப்பதை தமிழக அரசியலைக் கூர்ந்து பார்க்கிறவர்கள் உணர்வார்கள். இந்தவகையில் எப்படியோ அவருடைய படைப்புகளில் அரசியல் தன்மை இடம் பெற்றுவிடும், அதை இந்த நாவலிலும் காட்டியிருக்கிறார். தொடர்ந்து இவர் அரசியல் தன்மையைத் தன்னுடைய படைப்புகளில் அடையாளம் காண தகுந்த வகையில் எழுதி வருகிறார். இந்த அரசியல் தன்மையை வேறு படைப்பாளிகளிடம் அபூர்வமாகவே காணக் கிடைக்கும். ஆனால் அண்டனூர் சுரா தொடர்ந்து சிறுகதைகளிலும் நாவல்களிலும் இந்த அம்சங்கள் ஊடகவும் படிமமாகவும் நிறைந்திருப்பதை தேர்ந்த வாசகன் உணர்வான். இந்த அரசியல் தன்மையைப் படைப்புகள் கொண்டிருப்பது வேறுவகை படைப்பாளிகள் கைக்கொள்ள வேண்டிய மாதிரி படைப்புக்கு உதாரணமாக சுராவின் படைப்புகளை சொல்ல வைப்பது அவரின் தொடர்ந்த முயற்சிகளில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. எக்காலத்திற்குமான நீதியின் போக்கு, தீவாந்தரம்.
தீவாந்தரம் ( நாவல் )
சந்தியா பதிப்பகம், சென்னை
ரூபாய் 230
சென்னை சில்க்ஸ் நிறுவனர் நூற்றாண்டு துவக்க விழா
சென்னை சில்க்ஸ் நிறுவனர் நூற்றாண்டு துவக்க விழா
அவினாசியில் வியாழன் அன்று நடைபெற்றது. விழாவில் திரைப்பட இயக்குனர் எடிட்டர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சுப்ரபாரதி மணியன் சிறப்பு மலர் வெளியிட்டில் மேடையில் பங்கு பெற்றார். அந்நிறுவன பணியாளர்களின் ஓவியங்கள் கவிதைகள் கட்டுரைகள் போன்ற படைப்புகளை உள்ளிட்டது அந்த சிறப்பு மலர்.. அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது
விழாவில்
தலைமை ஏற்று பேசினார் நிறுவன மேலாளர் டி கே சந்திரன் அவர்கள் : “ இந்த நிறுவனம் ஆர்கானிக்காக வளர்ந்ததா அல்லது திட்டமிட்டு வளர்ந்த்தா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. இன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்றவை நம் முன் நிற்கிறது “ என்று குறிப்பிட்டார்
நிறுவனத்தின் இயக்குனர் ஆறுமுகம் பேசுகிறபோது 100 சதவீதம் நேர்மை என்பது வியாபாரத்திலும் தனிமனித வாழ்க்கையிலும் வியப்பான வெற்றிகளைத் தரும். வறுமையிலும் நேர்மையாக இருக்க எங்கள் அப்பாக் கற்றுக் கொடுத்தார் பயிற்சிகளும் முயற்சிகளும் தான் ஒரு மனிதனை வடிவமைக்கும் அவமானங்கள் முன்னேற்றத்திற்கு படிகளாக இருக்கும் சமூக உணர்வும் சமூகத்துக்காக பயன்படவேண்டும் என்ற சமூக விதியை மக்களுக்காக எடுத்துக் கொள்ளாத வணிக நிறுவனங்கள் வெற்றியை தொடர முடியாமல் போய்விடும் வறுமையிலும் 100% நேர்மை என்ற தாரக மந்திரத்தை நாங்கள் கடைபிடித்தோம். வறுமையும் மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று எங்கள் வாழ்க்கை தெரிவித்தது எதற்கு தகுதி கொண்டாலும் அதற்கு சரியான இடம் நமக்கு வந்து சேரும் பெரும் ஆசைப்பட்டால் நடக்காது. அப்படி நடப்பது 2 சதவீதமாக நிறைவேறி இருக்கும். ஆசை நிறைவேறினால் பிரபஞ்ச சக்தியே முழுமையாக உணரலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அப்படி ஆசைகளை பெரிதாக நினைத்தால் நடைமுறையில் காணாமல் போய்விடும். கவலை கற்பனையாக பின்னப்பட்டது அதை மீறி உழைப்பு வெற்றியை தரும்” என்று குறிப்பிட்டார்
நிறுவனர் குழந்தைவேலு அவர்களின் எல்லா மகன்களும் மகள்களும் ஒரு சேர விழாவில் காணப்பட்டதும் மேடையில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது
திரைப்படஇயக்குனர் லெனின் பேசுகையில் நம் பாரம்பரியம் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் அது பெருமை கூட. அதில் மொழி முதல் சாதி வரை பல விஷயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாளர்களும் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டதாக அமைந்தன
சுப்ரபாரதிமணியனின் படைப்புகள்
நாவல்கள்
0
மற்றும் சிலர் 1987 நர்மதா
சுடுமணல் 1990 காவ்யா (மலையாளத்திலும் வெளியாகி உள்ளது)
சாயத்திரை 1998
காவ்யா (சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காள மொழிகளில் வெளியாகியிருக்கிறது)
பிணங்களின் முகங்கள் 2003 என் சி பி எச் , (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது. (ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது) என் சி பி எச்
சமையலறைக் கலயங்கள் (ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது) 1997 காவ்யா
தேனீர் இடைவேளை (ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது) 1998 காவ்யா
ஓடும் நதி 2007 (என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) 2000 அம்ருதா
நீர்த்துளி 2011 (ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு) உயிர்மை
சப்பரம் (இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது)
காவ்யா 2000
மாலு (இந்தியிலும் வெளிவந்துள்ளது) உயிர்மை 2010
நைரா (உயிர்மை-மலையாளத்திலும் ) 2016, என் சி பி எச்
தறிநாடா (என்சிபிஎச்) 2017
புத்துமண் (உயிர்மை) 2015
கோமணம் (முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. 2016
கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம் 2016
ரேகை (பொன்னுலகம் திருப்பூர்) 2018
அந்நியர்கள் (எழுத்து/கவிதா) (ஒரு லட்சம் ரூபாய் எழுத்து பரிசு பெற்றது.2021
1098 - (ஜீரோ டிகிரி) 2021
14/40 கொண்டை ஊசி வளைவு (உயிர்மை) 2021
முறிவு (உயிர்மை) (ஆங்கிலத்தில் சுமங்கலி, ஹிந்தியிலும் ) 2015
திசையொன்று (உயிர்மை) 2019
பெயிண்ட்பிரஷ் நெம்பர் 000 (மொழிபெயர்ப்பு நாவல்) - அஞ்சுசஜீத்-
தமிழில் ரூ 200, நோசன் பிரஸ்)
திரை (ஜீரோ டிகிரி) 2010
ஒரு கை உணவில் (டிஸ்கவரி) 2010
சிலுவை (என்சிபிஎச்) ( தமிழ்ப்பேராயம் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் )2022
கொரானா தடுப்பூ ( சிறுவர் நாவல்) கனவு-2019
ஹைதராபாத் நாவல்கள் காவ்யா 2022
வெப்பம் சிறுவர் நாவல் என்சிபிஎச் 2024
ஸ்மைல் ப்ளீஸ் பரிதி 2025
சிறுகதைகள்
வேட்டை உயிர்மை 2001
பின்னல் திருவரசு 2001
முத்துக்கள் பத்து அம்ருதா 2012
வழித்துணைகள் கனவு 1999
விமோசனம் காவ்யா 2010
ஓலைக்கீற்று காவ்யா 2017
அறிவிப்பு காவ்யா 2001
சுப்ரபாரதி மணியன் கதைகள் ராஜராஜன் 2007
நவீனம் அன்னம் 1990
மாறுதடம் காவ்யா 1990
காற்றில் அலையும் சிறகு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2005
திருப்பூர்க் கதைகள் நிவேதிதா 2019
நாதம் ராதிகா 1993
வழித்துணைகள் அன்னம் 1992
பிளிறல் கனவு 2020
சுப்ர பாரதி மணியன் கதைகள்-1 காவ்யா 2011
சுப்ர பாரதி மணியன் கதைகள்-2 காவ்யா 2019
தோட்டக்காடு பழனியப்பா 2018
மூன்று நதிகள் எழுத்து 201 8
நெசவு சிற்பி பப்ளிகேஷன்ஸ் 2019
நாலு பேரும் பதினைந்து கதைகளும் அன்னம் 1989
குகைகளின் நிழலில் கலைஞன் 2015
வெள்ளம் உயிர்மை 2016
ஆழம் காவ்யா 1997
விமோசனம் காவ்யா 2009
மணல் பழனியப்பா பிரதர்ஸ் 2017
மூன்று நதிகள் எழுத்து 2019
பார்க்க மறுத்தப் பறவைகள் எழுத்து 2023
திரைப்படக் கட்டுரைகள்
திரை வெளி அம்ருதா 2006
நாளை மற்றொரு நாளல்ல உயிர்மை 2006
திரைப்படங்கள் எனும் சுவாசம் காவ்யா 2022
பெயர்கள் இல்லாத வீடு உயிர்மை 2003
திரைக்கதை நூல் வரிசை- 1 ( 8 திரைக்கதைகள்) கனவு 2022
திரைக்கதை நூல் வரிசை- 2 கனவு 2022
திரைக்கதை நூல் வரிசை- 3 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 4 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 5 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 6 கனவு 2023
திரைக்கதை நூல் வரிசை- 7 கனவு 2023
திரைக்கதை நூல் வரிசை- 8 கனவு 2024
திரைக்கதை நூல் வரிசை- 9 கனவு 2025
திரைக்கதை நூல் வரிசை- 10 கனவு 2025
திரைநாவல்கள்:
முகப்பறவையே எங்கே சென்றாய் ( என்சிபிஎச் 2024 )
பள்ளிக்கூடம் போகலாமா ( என்சிபிஎச் 2025)
மொழிபெயர்ப்புகள்
உயில் மற்றும் பிற கதைகள் சாகித்ய அகாதெமி 2014
பூமியின் பாடல்கள் சாகித்ய அகாதெமி 2015
புலி (கவிதைகள் கதைகள்) கனவு 2020
புலம் பெயர் மணல் துகள்கள் ( மலையாளக்கவிதை ஆங்கிலத்திலிருந்து ) கனவு 2021
அரசியல்வாதியும் புறாவும் ( இந்தியக் கவிதைகள் )கவிநிலா 2018
காசிப்பூரின் நிலவு ( ஒடியா கவிதை) கனவு 2018
பேசாத.. லாமியா அஞ்சும் ( ஆங்கிலக் கவிதைகள் ) கவிநிலா 2018
பெயிண்ட் பிரஸ் 000 (அஞ்சு சஜீத் நாவல் ) நோசன் பிரஸ் 2022
அகதி முகாமில் ஓர் இரவு (ஒடியா கவிதை) கனவு 2016
பெண் உரிமைகள் ( ஐஎல் ஓ வெளியீடு ) சேவ் 2019
பயண நூல்கள்
மண் புதிது காவ்யா /என் சி பி எச் 1994
ஓ.. மலேசியா பழனியப்பா 2018
எட்டுத்திக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2015
வியட்நாம் வீரபூமி நிவேதிதா 2021
அண்டை வீடு காவ்யா 2019
பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவம் என் சி பி எச் 2021
ஓ செகந்திராபாத் ( வாழ் அனுபவம் ) என் சி பி எச் 2015
கவிதை நூல்கள்
மந்திரச் சிமிழ் காவ்யா 2011
மாயாறு கனவு 2020
நாடகம்
மணல் வீடு மணியம் 2010
பசுமைப் பூங்கா சிறுவர் நாடகங்கள் _ சிந்து சீனு 2022
சுற்றுச்சூழல் கட்டுரை நூல்கள்
மறைந்து வரும் மரங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017
சுற்றுச்சூழல் கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2202
சிவப்புப் பட்டியல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2 016
பூமிக்கு மனிதன் தலைவனா உயிர்மை 2019
பசுமை அரசியல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017
தண்ணீர் யுத்தம் உயிர்மை 2009
மேக வெடிப்பு எதிர் 2014
வேட்டையாடிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2018
நீர்ப் பாலை வைகறை 2013
பூமிக்கு தீ வைத்தோம் உயிர்மை 2013
வேர்களை இழக்கும் பூமி என் சி பி எச் 2024
குப்பை உலகம் சேவ் 2013
பச்சைப் பதிகம் 2019 வாசக சாலை
நீர்ப்பாலை 2000 வைகறை
குறுநாவல்கள்
நகரம் குமரி 1999
இருள் இசை என் சி பி எச் 1995
இலக்கியக் கட்டுரைகள்
பறந்து கொண்டிருக்கும் கழுகு 2021 காவ்யா
தற்கால தமிழ் இலக்கியக்கட்டுரைகள் ( தமிழ் வளர்ச்சித்துறை ) 2009
புதுச்சேரிக்காரர்கள் – புதுச்சேரி எழுத்தாளர்கள் பற்றி
2028 காவ்யா
மனக்குகை ஓவியங்கள் என்சிபிஎச் 2000
ஆளுமைகள் பழனியப்பா 2022
தொகுப்பு நூல்கள்
பருத்திக்காடு
மற்றும் ஐந்து தொகுப்புகள் (திருப்பூர் எழுத்தாளர்கள்)
கனவு 2016 -2019
பிஞ்சுக் கரங்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியக் கதைகள்) கனவு 1997
0 காரிகாவனம் (சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கதைகள்) காவ்யா 2020
0 ஐதராபாத் 400 வயது (ஹைதராபாத் தமிழ் வாசகர் வட்டம்) 1991
ஐதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள் கனவு 1998
0 பெண்மை (மலேசியா பெண் எழுத்தாளர்கள் கதைகள்) கவிநிலா 2019
நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் காவ்யா 1992
அகல்வரிசை திருப்பூர் கவிகள் முத்தமிழ் சங்கம் 2004
டாலர் நகரம் திருப்பூர் கவிகள் கனவு 2015
ஒரு லட்சம் கோடி ரூபாய் (கவிதைகள்) ( தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் 2019
தோழர் கே பொன்னுசாமி என்ற போராளி கனவு 2021
பாலகிருஷ்ணன் என்கிற என்ற நாடகக் கலைஞர் கனவு 2002
நெசவை தொலைத்து விட்டு (கட்டுரைகள்) கவிநிலா 2018
இறையன்பு வாசகனுபவம் காவ்யா 2019
மெய்ப்படும் கனவுகள் திருப்பூர் கவிதைகள் கனவு 2008
திருமூர்த்தி மலை ( உடுமலை நாட்டுப்புறப்பாடல்கள்) கனவு 2018
ப. க.பொன்னுசாமி என்ற படைப்பாளி ( ரீடர் .என்சிபிஎச் ) 2019
ஓ.. சிங்கப்பூர் 2017 கவிநிலா
13 நெடுங்கவிதைகள் ( கநாசு முதல் ஜெயமோகன் வரை )
0 WOMEN WORKERS IN CAGE
சுமங்கலி பாதிப்புப் பெண்கள் கதைகள் -SAVE 2007
வேர்களும் விழுதுகளும் ( இடம்பெயர்வுப் பெண்கள் சார்ந்த கதைகள் )2008
சுமங்கலி – குறும்படம் திரைக்கதை நூல் கனவு 2012
ஆ முத்துலிங்கம் பேட்டிகள் நற்றிணை 2010
ஆ முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
( மூன்று உலகங்கள் ) நற்றிணை 2010
அசோகமித்திரன் 77 அம்ருதா 2012
சுந்தரராமசாமி சிறப்பிதழ் கனவு 1994
கனவு சிறுகதைகள் நிவேதிதா 2019
கனவு கவிதைகள் கனவு மின்நூல் 2020
கனவு 25 ஆண்டுகள் தேர்வு படைப்புகள் காவ்யா 2012
கொரானா காலம் ( பலரின் கதைகள், கவிதைகள் , கட்டுரைகள் ) மின்நூல் கனவு 2022l
சிறுவர் நூல்கள்:
கதை சொல்லும் கலை சிற்பி 2010
தொலைக்காட்சி ரிமோட் சிறுகதைகள் கனவு 2021
அன்பே உலகம் சிறுகதைகள் நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை 2016
பள்ளி மறு திறப்பு சிறுகதைகள் யுரேகா 2008
வெப்பம் நாவல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2024
சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் விஜயா பதிப்பகம் 2014
பசுமைப் பூங்கா நாடகம் –சிந்து சீனு 2022
ENGLISH Books
( Translation by various translators )
Palm lines ( Regai ) Authours Press 2019
Unwritten letters ( Theeneer Idaivelai ) Save 2001
1098 Pustaka 2023
Oh Hyderabad Pustaka 2023
The Notch ( Maalu ) 2000 Authours Press
Coloured curtain ( Sayathirai ) BRPC New Delhi
Sumangalai ( Murivu ) Save 2027
Migration 2.0 Save 2008
The faces of Dead ( CIEL-Kanavu ) 1998
Sumangali (stories) Save 2016
The Lower Shadow (Poems) Kanavu 2000
The Hunt (Poem) Emerald publishers 2018
The last Symphony (Poem) Save 2008
The Banyan tree (kids stories) Sirpi Publication 2016
The art of story telling Sirpi 2024
Sumangali (stories) Save 2016
The Lower Shadow (Poems) Kanavu 2000
The Hunt (Poem) Emerald publishers 2018
Faces of the Dead (Novel) Kanavu 2009
The last Symphony (Poem) Save 2008
Palm lines Novel (Authors press) 2022
Notch (Novel) Authors press 2021
The coloured curtain (Novel) BR Publishing Corporation
The Banyan tree (kids stories) Sirpi Publication 2016
Authours speak on migrant labours 2014
In Hindi Novels
Sapparam
Maalu
Sayathirai
Murivu
In Kannada : Paanthira ( சாயத்திரை )
Malayalam : Sayathirai to Naira (6 Books)
Bengal Sayathirai
உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு ஒலிபரப்பு
7தேதி இரவு 8மணிக்கு 7/6/25
சுப்ரபாரதிமணியன் எழுதிய
பூமிக்கு மனிதன் தலைவனா
நாடகம் ஒலிபரப்பு
சென்னை வானொலி
எப் எம் கோல்டு.நிகழ்வு
சுப்ரபாரதிமணியன் எழுதிய வெப்பம் சிறார் நாவலின் வானொலி வடிவம்.என் சி பி எச் பதிப்பகம் வெளியீடு ரூபாய் 60
காலநிலை மாற்றம் சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
0
சுற்றுச்சூழல் தினம்
ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த உலகம், 516 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் என எச்சரித்துள்ள ஐ.நா., சபை 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற மையக் கருத்தை, இந்தாண்டு முன் வைத்திருக்கிறது. இயற்கையை இனிதாகப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட...dm
0
உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு ஒலிபரப்பு
7தேதி இரவு 8மணிக்கு 7/6/25
சுப்ரபாரதிமணியன் எழுதிய
பூமிக்கு மனிதன் தலைவனா
நாடகம் ஒலிபரப்பு
சென்னை வானொலி
எப் எம் கோல்டு.நிகழ்வு
சுப்ரபாரதிமணியன் எழுதிய வெப்பம் சிறார் நாவலின் வானொலி வடிவம்.என் சி பி எச் பதிப்பகம் வெளியீடு ரூபாய் 60
காலநிலை மாற்றம் சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
நல்ல சிறுகதை தொகுப்பாய் கதைகள் ஒரு இதழில்.
வெகுஜன எழுத்தின் பரப்பு அதிகம்.
முன்னணி பெற்ற கதைகள் இப்போதும் அதை சொலகின்றன இதிலும்..ok.ok.
subrabharathimanian
தமிழ்ச்சாலை
தமிழ் வளர்ச்சி மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோட்டுக்கு தமிழ்ச்சாலை என்ற பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரை மேம்படுத்தி, இரண்டு புற கரைகளிலும் ரோடு அமைக்கப்படுகிறது. இதில், வளர்மதி பாலம் முதல் நொய்யல் ஆற்றின் தென்புறக் கரையில், ஜம்மனை ஓடையைக் கடந்து, நடராஜா தியேட்டர் பாலம் வரையில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோட்டுக்கு 'தமிழ்ச்சாலை' என்ற பெயர் வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பணி முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் போது, தமிழ்ச்சாலை பெயர்ப் பலகை அமைக்கப்படும்.
பத்து எழுத்தாளர்கள்
பத்து நூல்கள் : படைப்பு அனுபவம் உரைகள்
உரையாளர்கள்; திருவாளர்கள்
அகிலா : இங்கிலாந்து நதிக்கரையில் ( பயண நூல் )
அம்சப்ரியா : தானியங்களை உதிர்த்த்கும் சுவர் (கவிதை)
ஆர்னிகா நாசர் : மனித நூலகம் ( விஞ்ஞானக்கதை )
சர்மிளா : துணிச்சல்காரி ( சிறார் நாவல் )
பூங்கொடி பாலமுருகன் : என்னைத் தொடாதே ( சிறார் நாவல் )
சரிதா ஜோ : சரஸ்வதிக்கு என்ன ஆச்சு ( சிறார் நாவல் )
பவுவியா இக்பால் – தளசிங்கம் ( சரித்திர நாவல் )
சுப்ரபாரதிமணியன் – திசையொன்று ( நாவல் )
முத்துபாரதி – அகதி ( நாவல்)
சின்னராஜ்- வானவில் வாழ்க்கை ( ஓவியர்கள் உலகம் )
29/6/25 ஞாயிறு காலை 10 மணி முதல்
டாப் லைட் நூலகம், பல்லடம் சாலை திருப்பூர்
வருக
திருத்தங்கள் இருந்தால் சொல்லவும்
எழுத்தாளர்கள் செத்துப் போனால்தான் பொதுமக்களுக்குத் தெரிகிறது.
சில அமைப்புகள் விருது பெற்றால்தான் தெரிகிறது. என் உலகம் சின்னதுதான்
'வேர்கள்'
திருப்பூர்; மண்ணரை மூளிக்குளத்தை பராமரித்து வரும், 'வேர்கள்' அமைப்புக்கு, தமிழக அரசு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், திருப்பூரை சேர்ந்த 'வேர்கள்' அமைப்புக்கு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையையும் வழங்கினார். 'வேர்கள்' அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள்சந்தீப், சதீஷ்குமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.
மூளிக்குளம் பராமரிப்பு
மண்ணரை மூளிக்குளத்தை, வேர்கள் அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். குளம் மற்றும் அணைக்கு தண்ணீரை எடுத்து வரும் ராஜ வாய்க்காலையும் பராமரித்து வருகின்றனர். அதனை பாராட்டியே, விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது.
வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
அமைப்புகளுக்கும் தாய் அமைப்பாக இருந்து வழிகாட்டி வருகிறது. அதன்படியே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம். வெற்றி அமைப்பு, ஆண்டிபாளையம் குளத்தை பராமரிப்பது போல், நாம் சிறிய மூளிக்குளத்தை பராமரிக்கலாம் என, இளைஞர்கள் இணைந்து வேர்கள் அமைப்பை துவக்கினோம்.
மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன், குளம் மற்றும் வாய்க்காலை பராமரித்து வருகிறோம்.
எங்கள் தொடர் முயற்சியால், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க, 2.90 கோடி ரூபாயில், உள்ளூர் திட்டக்குழும நிதியில், கால்வாய் பணி நடக்கப்போகிறது; ஆகாயத்தாமரை படராமல், குளம் துாய்மையாக பராமரிக்கப்படும்.
எதிர்கால சந்ததிக்கான சொத்து
இளைஞர்கள் முயற்சி எடுத்து, நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்; அது, நமது எதிர்கால சந்ததியினருக்கான சொத்து; பாதுகாப்பாக பராமரித்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன், குளம் பராமரிப்பு பணியை செய்து வருகிறோம்.
- ஒருங்கிணைப்பாளர்கள், 'வேர்கள்' அமைப்பு.
0
திருப்பூர்; திருப்பூர் சாய ஆலை கள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, பொதுநல விழிப்புணர்வுக்காக, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில், ஒரு பக்க அளவில்செய்திகள் வெளியாயின. இதில், சாய ஆலைகள் சந்திக்கும் சவால்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட சாதனை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
சாய ஆலைகளின் சவால்கள் மற்றும் தீர்வுகளை எதிர்நோக்கி, 'பசுமை அங்கீகாரம் வேண்டும் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. dinamalar
1'பசுமை அங்கீகாரம்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியுள்ளதாவது:
'தினமலர்' நாளிதழில், 'பசுமை அங்கீகாரம் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிக அருமையாக உள்ளது. அதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு, சாய ஆலைகள் சார்பில், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சாய ஆலைகள் பின்பற்றி வரும் 'பூஜ்ஜிய நிலை' சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் ஏற்படக்கூட மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை பகிர்ந்துகொள்ள, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்ற எங்களது வேண்டுகோளையும், முன்வைத்துள்ள 'தினமலர்' நாளிதழுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்தசெய்தி வெளி யானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், சாய ஆலைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நம்புகிறோம்.
இவ்வாறு, காந்திராஜன் கூறினார்.
மரண உணர்வை ஏற்படுத்தும் வறுமையின் துயரம் விடையைத் தேடி புறப்பட்டால் விடியல் பிறக்கும்!
கோடிக்கணக் கான மக்கள் வறுமையால் சாவது ஏன்? கடந்த ஆண்டைக் காட்டிலும் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இவ்வாண்டின் உணவு உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இது நமது காலத்தின் மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கப்பட்ட பின்னரும் உபரியாகவும் இருக்கும். இந்நிலையில் மனிதர்கள் வறுமைக்குத் தள்ளப்படுவது ஏன் என்பதை எவ்வாறு விளக்குவது? புள்ளிவிபர உண்மைகள் வறுமையின் பரவலான தாக்கம் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவு திட்டம், உலக சுகாதார அமைப்பு, விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதி மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி போன்ற அமைப்புகளின் ஆய்வுகளின்படி 2023ஆம் ஆண்டில் 73 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டனர். உணவு உற்பத்தியின் மிகுதி உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2022ஆம் ஆண்டு கணக்கின்படி உலக விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தக வியா பாரிகளால் 1100 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் இறைச்சி, மீன் மற்றும் 9.6 டன் அடிப்படை தானியங்களான சோளம், அரிசி, கோதுமை ஆகியவை அடங்கும். எளிமையான கணக்கு ஒரு முன்மாதிரியான எளிமையான கணக்கின் மூலம் இதைத் தெளிவுபடுத்தலாம். ஒரு மனிதர் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் கிலோ உணவினை எடுத்துக்கொள்கிறார். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கணக்கின்படி உலக அளவில் ஒரு சராசரி மனிதர் ஒரு நாளைக்கு 2800 கலோரியினை நுகர்கிறார். மேற்கண்ட கணக்கின்படி ஆண்டிற்கு ஒரு டன் உணவினை ஒரு மனிதர் எடுத்துக்கொள்ள, ஒரு ஆண்டிற்கு உலகளாவிய அளவில் 1100 கோடி டன் உணவு உற்பத்தியே போதுமானது. இதன்மூலம் 1100 கோடி மக்களுக்கு உணவு அளிக்க முடியும். தற்போதைய கணக்கின்படி உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடி. ஆகவே உலகில் வாழும் மக்கள் அனை வருக்கும் போதுமான உணவினை வழங்க முடியும். இதுதவிர உபரியாக மேலும் 300 கோடிப் பேருக்கு உணவு வழங்க முடியும். வறுமைக்கான மூன்று முக்கிய காரணங்கள் 1. போர்களின் அழிவுகரமான தாக்கம் மக்கள் ஏன் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை முதலாவதாக, உணவு மற்றும் விவசாயத்தை வழங்கிடும் விநியோக முறையினை போர்கள் அழிக்கின்றன என்பதன் மூலம் விளக்கலாம். இதுதான் மிகவும் கொடிய வறுமையினை உருவாக்குகிறது. சூடான் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவுவது ஏன்? ஆப்பிரிக்க நாடு முழுமை யும் உள்ள மக்களுக்கு உணவினை வழங்கக் கூடிய பரந்த விவசாய நிலப்பரப்பினை சூடான் கொண்டுள்ளது. அங்கு போர் மட்டும் இல்லையென்றால் ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் போதுமான உணவு பெற முடியும். போர் நிகழாதிருந்தால் எண்ணெய் வித்துக்களை (நிலக்கடலை, சோயா, சூரிய காந்தி, குங்குமப்பூ, எள் போன்றவை) பெரு மளவு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும். அரபு பசையின் ஏற்றுமதியில் 80 சதவிகிதம் சூடானின் கிராமப்புறங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படு கிறது. ஆனால் போரினால் விவசாயம் அழிக்கப்பட்டு, விவசாயத்திலிருந்து வெளி யேறிய விவசாயிகளின் கைகளில் துப்பாக்கி களுடன் போருக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2. உணவு விரயத்தின் மோசமான பழக்கம் இரண்டாவதாக நம்மிடையே உள்ள உணவுப் பொருட்களை வீணாக்கும் மோச மான பழக்கம். நம்முடைய உணவின் ஐந்தில் ஒருபகுதி கழிவுகளாகக் கொட்டப்படுகிறது - நாளொன்றுக்கு 100 கோடிப் பேரின் உணவுகளுக்கு சமம். மூன்றில் இரண்டு பங்கு உணவுக் கழிவுகள் பணக்கார நாடுகளில்தான் ஏற்படுகிறது. உலகில் 60 சதவிகிதமான உணவுக் கழிவுகள் வீடுகளில் ஏற்படுகின்றன. பணக்கார நாடுகளில் ஆடம்பர உணவு விடுதிகளிலும், வீடுகளிலும் உள்ள உணவு தட்டுகளிலிருந்து பெரிய அளவிலான உணவுக் கழிவுகள் ஏற்படுகின்றன. இதேபோல அதிகபட்சமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பார்சல்கள் எனும் பரந்த செயல்முறைகள் உணவுக் கழிவுகளுக்கு வழிவகுக்கின்றன. ஏழை நாடுகளில் மிகப்பெரிய அளவிலான கழிவுகள் விவசாய உற்பத்தி தளங்களில் ஏற்படுகின்றன. பருவகால மாற்றங்கள், பூச்சி மற்றும் நோய்களால் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் போதுமான குளிரூட்டப்பட்ட வசதி, போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கழிவுகள் அதிகரிக்கின்றன. 3. பொருளாதார சமத்துவமின்மை, வாங்கும் சக்தி வீழ்ச்சி - மூல காரணம் மூன்றாவதாக அவர்களால் ஏன் உணவு எடுத்துக்கொள்ள முடியவில்லை? உணவு உண்பதற்கான, அதை வாங்குவதற்கான பணம் இல்லாதது தான் மிக முக்கியமான காரணமாகும். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் சமத்துவமற்ற நிலை மையே வறுமைக்கு முதன்மையான காரணமாகும். உலகில் 70 கோடிக்கும் மேலான மக்கள் நாள் ஒன்றுக்கு 2.15 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுகிறார்கள் (இந்திய ரூபாயில் ரூ.170). இவர்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாது. உலகில் 304 கோடிக்கும் மேலான மக்கள் நாள் ஒன்றுக்கு 5.50 அமெரிக்க டாலருக்கும் குறை வாகவே வருவாய் ஈட்டுகிறார்கள். இவர்களால் உணவுப் பொருட்கள் போதுமானதாக வாங்க இயலாது. செல்வ ஏற்றத்தாழ்வின் அதிர்ச்சிகரமான உண்மை 2023ல் உலகின் மொத்த செல்வமானது தோராயமாக 432 டிரில்லியன் அமெரிக்க டாலராகும் (இந்திய மதிப்பில் சுமார் 363000 கோடி ). இதில் முதல் ஒரு சதவிகித பணக்கார மக்கள் தொகையினை சார்ந்தோர் கூட்டாக உலகின் மொத்த செல்வத்தில் 47.5 சதவிகி தத்தை அதாவது 213.8 டிரில்லியன் டாலரை (சராசரியாக ஒரு நபருக்கு 2.7 மில்லியன் டாலர்) வைத்துள்ளனர். அடிமட்டத்தில் 50 சதவிகிதத்தினராக உள்ள 400 கோடி மக்கள் உலகின் மொத்த செல்வத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக அல்லது 4.5 டிரில்லியன் டாலர் (நபருக்கு சராசரியாக வெறும் 1,125 டாலர்கள்) மட்டுமே கொண்டுள்ளனர். இந்த அசமத்துவ செல்வ இடைவெளி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் அவர்களின் வருவாயின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதால் குறைந்த வருவாய் உள்ளவர்களின் உணவுக்கான செலவுகள் சுருங்குகின்றன. அதிகம் பாதிக்கப்படுவோர் வறுமையில் ஆண்களைக் காட்டி லும் பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படு கின்றனர். வறுமையில் பெண்களின் சதவிகிதம் அதிகம். வீடுகளில் குறைவான உணவு இருக்கும்போது பெண்கள் குடும்பத்தின் பொறுப்பினை ஏற்பதால் உணவைக் குறை வாக எடுத்துக்கொள்கிறார்கள். உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதமாக உள்ள பூர்வகுடிமக்கள் கடுமையான வறுமை யில் சிக்கியுள்ள மக்கள் தொகையில் 15 சதவிகிதமாக உள்ளனர். மற்ற சமூக மக்க ளைக் காட்டிலும் அதிக விகிதத்தில் பாதிக்கப்படு கின்றனர். நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் போதுமான உணவுக்கான வளங்கள், அது கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் இருந்த போதிலும்கூட உலகளாவிய வறுமைக்கு உண வுப் பாதுகாப்பின்மையே முக்கிய காரணம் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக் கிறது. நீங்கள் பசியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும். 2021ல் சீன மக்கள் தங்கள் நாட்டில் வறுமை யை ஒழித்துவிட்டார்கள். 2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவின் கேரள மக்கள் தாங்கள் நிர்ணயித்திருந்த ஓராண்டிற்கு முன்பாகவே தீவிர வறுமையினை முடிவிற்குக் கொண்டு வருகிறார்கள். வியட்நாம் வறுமை ஒழிப்பிற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. புர்கினோ பாசோ நாட்டின் போராளி தாமஸ் சங்காராவின் (1949-1987) விருப்பமும் தற்போது அவரது வழித்தடத்தில் வந்துள்ள கேப்டன் இப்ராகிம் தரோரின் புதிய ஆட்சியின் விருப்பமும் இதுதான். தாமஸ் சங்காராவின் முழக்கத்தை உயர்த்திடும் வகையில் தரோர் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுக்கு எங்கள் முன்னோர்கள் ஒரு விஷயத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள் - ஒரு அடிமை தன்னுடைய சொந்த விடுதலைக்குக்கூடத் தயங்குபவன் பரிதாபத்திற்குக் கூட தகுதியற்றவனாகிறான். எனவே நாங்கள் எவர் ஒருவரையும் எங்களு க்காக வருத்தப்படுமாறு கேட்கப்போவதில்லை. புர்கினோ பாசோவின் மக்கள் போராடுவதற்குத் தயாராகிவிட்டார்கள் - தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடவும் தங்களுடைய வளர்ச்சியினை மீண்டும் திரும்பக் கொண்டு வரவும் போராடத் தயாராகிவிட்டார்கள்.” விடுதலையை நோக்கி... இதுபோன்ற புள்ளிவிபரங்கள், செய்திகள் மூலமாகக் கொடுமையான வறுமையின் பாதிப்புக்களை எதிர்கொள்கிற மனித ஆன்மாக்களின் வலிகளை விவரிக்க முடியாது. வறுமையின் துயரம் ஒரு மனிதனுக்கு மரண உணர்வினை உருவாக்குகிறது. புள்ளிவிப ரங்கள் மட்டும் வறுமையால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்களின் எதார்த்தமான கடினமான சூழ்நிலைகளை விவரிக்க முடியாது - அதை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள் ளனர். சில சமயங்களில் முதலாளித்துவக் கட்டமைப்பையும் அது உருவாக்கிய வறுமை மனித ஆன்மாவின் மீது ஏற்படுத்திய விளைவுகளை கவிதைகள்கூட சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளன. புர்கினோ பாசோவைப் போல ஒவ்வொரு நாடும் தனது வறுமையிலிருந்து விடுபடுவதற்கான காரணத்தைத் தேடிப் போராட்டத்தைத் துவங்கினால் அவைகள் வறுமையிலிருந்து மட்டுமல்ல; பல புதிய கேள்விகளுக்கும் விடையைத் தேடும். - தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம் theekathir ( pro. Vijay prasath)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)