சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 11 நவம்பர், 2025

எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர் ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம் இவர் எம் எஸ் சி படித்துவிட்டு என்னுடைய ஆரம்ப கால பட்டதாரி படிப்பில் கணிதம் எடுத்தார் .இவர் கணித பேராசிரியர்.. ஆனால் கணிதவகுப்பில் பாரதியார் பாரதிதாசன் திருக்குறள் என்று பல விஷயங்களை வகுப்பு முடிந்த பின் கலவையாக்கிதந்து தீர்ப்பார். இவர் கொங்கு மண்டலத்தின் வட்டார இலக்கிய தந்தை ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி மகன் இவர் அடிக்கடி திருக்குறளை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார் அது என்னை மிகவும் பாதித்தது பிறகு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிநூலகத்தில் திருக்குறள் பேழை.. தினந்தோறும் ஒரு அதிகாரத்தை புதுப்பித்து வைப்பார்கள் அதைப் பற்றி எழுதியவர்களுக்கு பரிசு உண்டு .அந்த வாசிப்பு அனுபவங்களை நான் எழுதினேன் ஆண்டுதோறும் எனக்கு திருக்குறள் பேழை பரிசு கிடைத்தது இன்னொரு சண்முகசுந்தரம் நான் பிசப்பு உகாரசாமி உயர் நிலப் பள்ளியில் படித்த போது தமிழாசிரியராக இருந்தார். அவர் வியாழக்கிழமைகளில் சாய்பாபா பக்தராக தன்னை காட்டிக் கொண்டு கையேந்தி வகுப்பில் மாணவரிடம் காசுகள்கேட்பார் கையிலுள்ள காசுகளை மாணவர்கள் அவரிடம் தருவார்கள் அப்படி சேர்த்த தொகையை ஆண்டுக்கு ஒரு முறை கல்வித் தொகை கட்ட முடியாமல் இருக்கிற ஏழை குழந்தைகளுக்கு தருவார் அவர் செயல் மிகவும் உயர்ந்தது அவர் வகுப்பில் நுழையும் போதும் பின்னால் வகுப்பு முடிகிறபோதும் திருக்குறளை சொல்லி அதன் கருத்தை சொல்லுவார் இந்த இரண்டு சண்முக சுந்திரங்களும் என் காதில் திருக்குறளை விழவைத்த பெருமை கொண்டவர்கள் இன்றைய திருக்குறள் உரையில் நான் இதைப் பற்றி பேசினேன் 2 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் பாலஸ்தீன பயணத்தில் 3000அடி உயர ஒலிவிய மலைக்குச் சென்றேன். இயேசுவின் பிரசங்கங்களில் முக்கியமான இடம்.அங்கு இயேசுவின்10 கட்டளைகளை 23 உலக மொழிகளில்எழுதியிருந்தனர். இந்திய மொழியில் தமிழில் எழுதப்பட்டிருந்ததைச் சொன்னார் கள் இஸ்ரேலில் சில இடங்களில் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள் இஸ்ரேலியர்கள் திருக்குறளை சரியாகப்படித்திருந்தால் காஸாவில் உங்களைப்போன்ற பள்ளிக்குழந்தைகள் இன்று பட்டினி கிடக்கும் நிலை வந்திருக்காது 00000 எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர் ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம் இ