சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 11 நவம்பர், 2025
ரோஜா முத்தையா நூலகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி
திருவாளர்கள் ஆர் பாலகிருஷ்ணன் நடிகர் சிவகுமார் உட்பட பல கலந்து கொண்டார்கள்
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் முன்னெடுப்பில் நடந்த இந்த கூட்டத்தில் ரோஜா முத்தையா நூலகத்தின் கட்டிட வளர்ச்சிக்காக நிதி கோரப்பட்டது
வணிக நிறுவனங்கள் சார்ந்த பெரியவர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் 40 கோடியில் உருவாக்குவது இந்த மையம்
கோவை பேரூர் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
சு.வேணுகோபால்.சுப்ரபாரதிமணியன். காசு வேலாயுதம் பாரதியார் பல்கலைக்கழக முனைவர் சித்ரா போன்றவரும் கலந்து கொண்டார்கள்
கட்டிட நிதிக்கு முதல் தவணையாக ஈரோடு சக்தி மசாலா 25 லட்சம்
நடிகர் சிவகுமார் 10 லட்சம்
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் 10 லட்சமும் வழங்க ஒப்புதல் தந்தனர் மற்றும் இதற்கு கீழே உள்ள தொகையை பலர் வழங்கினார்கள் பலர்அறிவித்தார்கள்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு,[2] 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.[3]
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில்[4] இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது. மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ. கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. 1994இல்[5] தொடங்கப்பட்ட இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது.[6]
நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[7]
நூலகம்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகும், இது மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்நூலகம் ஒரு தனித்துவமான தொகுப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் ஒரு மாதிரி நூலகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோஜா முத்தையாவின் ஒரு சிறிய தொகுப்பாக, நூலகம் இப்போது 3,00,000 நூல்களைக் கொண்டுள்ளது, மேலும் வரலாற்று காப்பகத்தை தொடர்ந்து பாதுகாத்து விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா செட்டியாரின் முன்னோடி முயற்சிகளில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது .[8] முத்தையா ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் பழங்கால புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார். மற்றும் 1950 இல் பழங்கால தமிழ் இலக்கியங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1992 இல் அவர் இறக்கும் போது, இந்தத் தொகுப்பில் தமிழில் கிட்டத்தட்ட 1,00,000 நூல்கள் இருந்தன, அதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பல இலக்கியங்கள் இருந்தன. நூலகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மதிப்புமிக்க உள்ளடக்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துக்கொண்டு சிகாகோ பல்கலைக்கழகம் 1994 இல் முழு தொகுப்பையும் வாங்கியது. இருப்பினும், நூலகம் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், ஒரு ஆராய்ச்சி நூலகத்தின் கருவை உருவாக்குவதற்கு இந்த தொகுப்பு தமிழகத்தில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் முத்திரைகளின் இந்த அரிய தொகுப்பை பராமரிக்கிறது.
தொகுப்புக்கள்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள பரந்த தொகுப்பு தமிழ் அச்சு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பாகும், இது 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நூல்களைக் கொண்டுள்ளது, 1804 இல் வெளியிடப்பட்ட 'காந்தரந்ததி' என்ற தலைப்புள்ள ஒரு நூல் இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது.. மொழி மற்றும் இலக்கியம், சுதேச மருத்துவம், மதம், நாட்டுப்புறவியல், பிரபலமான கலாச்சாரம், இயற்பியல், காந்திய ஆய்வுகள், பெண்கள் ஆய்வுகள் மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. திருமண அழைப்பிதழ்கள் மற்றும் தனியார் கடிதங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புதான் மற்ற நூலகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து தமிழுக்கு ஒரு தொன்மை மொழியின் அந்தஸ்து வழங்கப்படுவதையும், உலகளவில் அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ் பேசுவதையும் கருத்தில் கொண்டு, நூலக ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக தன்னை முன்வைக்கிறது.
மனித வளம்
[தொகு]
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை (ஆர்.எம்.ஆர்.எல்.டி) சிந்து அல்லது ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2007 ஜனவரியில் சிந்து ஆராய்ச்சி மையத்தை (ஐ.ஆர்.சி) நிறுவியது. சிந்து எழுத்துகளில் நன்கு அறியப்பட்ட ஆராய்ச்சியாளரான ஐராவதம் மகாதேவன்[9] தனது ஆயுட்காலம் வரை இந்த மையத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார். இது இந்த துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் அனைத்து நேர்மையான அறிஞர்களுக்கும் திறந்திருக்கும்.[10]

