சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 3 டிசம்பர், 2025
வெளிவர உள்ள புதிய நாவலில் ஒரு பகுதி :
டாலர் பவுண்ட் ரூப்பியா.. நாவல்
சுப்ரபாரதிமணியன்
0
எண்ட் ஆப் லைப்.. .
எண்ட் ஆப் லைப் லிவிங் லைஃப். .ஸ்டில் ஐ அம் கீபிங்.. வாக்கிங்............
அந்த
முதியவர் பெரிய வர்ணமயமான கேக்கின் மீது பல மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அவற்றை பார்த்த படியே பேசிக்கொண்டிருந்தார்
” எனக்கு ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருக்கிறது ஹெல்ப் உண்டு வாழ்க்கை வாழ்க்கை இன்னும் போர் அடிக்கவில்லை என்னுடைய பொறுப்புகள் எல்லாம் முடிந்து விட்டன வாழ்வதற்காக .எனக்கு பாரங்கள் எதுவுமில்லை. நான் சூப்பர் மேன் அல்ல சாதாரண மனிதன் தான் வாழ்க்கை நதி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது நான் ஓய்வு
பெறுவதற்கு காரணம் மரணத்தை நோக்கி செல்வதற்கு.
அல்ல மரணத்தை எதிர் கொள்ளல்மனதில் இருக்கிறது
..எதுவும் .. அறுபது வயது ஆகிவிட்டால்
தற்கொலைக்கு போய்விடலாம் என்று பல மேற்கத்தியத்
தத்துவங்கள் சொல்கின்றன. நமது சாமியார்களும் வாழ்வே மாயம் என்று தான் சொல்கிறார்கள் .அப்படித்தான் மரணத்தை
எதிர்கொள்கிறார்கள் .என்னுடைய ஆப்ஷன்ஸ்
இல்லாமல் போகிற போது
அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
அதை ஒருவர் இடை மறித்தார்.
”இப்படி எல்லாம் பேசாதீர்கள். நான் கேன்சர் பேசன்ட் நானே வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன்.
எனக்கு இப்படியான ஓய்வு
நானும் இன்னும் கேக் சாப்பிடுகிறேன்
மெழுகுவர்த்திகளை அணைத்து கொள்கிறேன்
இதில் உங்களுக்கு என்ன சிக்கல் “
“ எனக்கு எதுவும் இல்லை நான் தொழுது கொண்டு இருக்கிறேன் ஏதோ நான் ஓய்வு பெற்றதால் முடங்கி விடக்கூடாது என்று பலரும் முணு முணுக்கிறார்கள் அது நல்லதல்ல
“ இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
கூறப் போகும்,
எனது பிரிவுரை
இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக் கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
பிரிவுரை யாகட்டும் அதுவே!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!
வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் எல்லாமும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அதுவே என் பிரிவுரை ஆகுக!
ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை
எனக்கு
நெருங்கி விட்டால்! “
தாகூர் கவிதை இது. என் வாழக்கை அனுபவம் கூட எந்த எழுத்தாளனின்
எழுத்தும் யாரோஒருவனின் அனுபவம் தானே ”
கேன்சர் முதியவர் கவிதையைச் சொல்லியபடி அவர் உட்கார்ந்திருந்த
நாற்காலியில் ஏதோ வலியால் அவதிப்படுபவர் போல் சாய்ந்தார். சிலர்
அவரின் நாற்காலி அருகில் நெருங்கினர். அவர் புன்னகையை உதிர்த்தார்.
ஆங்கிலத்தில் அந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்தது .பிரான்சிஸ் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்து உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் . விடுதியின் அறைக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற குளிர் பிரதேசங்களில் பேன் பயன்படுத்தப் படுவதில்லை .இந்த சூழலில் ஜன்னலை திறக்கலாம் என்று மெல்ல ஜன்னல் பக்கம் போய் அவற்றை விடுவித்து பார்த்தார் .ஆனால் எல்லாம் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன திறக்க முடியாதபடி ஏதோ செய்து இருக்கிறார்கள்.
அறைக்குள் உட்கார முடியாது என்று தோன்றியது வரவேற்பறைக்கு தொலைபேசி செய்து தகவல் சொன்னபோது ஒருவர் வந்து திரும்பத் திரும்ப ஏசி மேல்
மூடியை நீக்கி பார்த்தார் அது வேலை செய்யவில்லை
“ எலித் தொல்லையாக இருக்கும் ஏதாவது
மின்சார ஒயரை கடித்து விட்டுப் போயிருக்கும் பார்க்க
வேண்டும் ”
”பார்க்க வேண்டுமா நான்.. இரவில் எப்படி தூங்குவது ஏதாவது
பேன் .தர தயார் செய்ய முடியுமா”
”பேன் நாங்கள் பயன்படுத்துவது இல்லை ”
”அப்புறம் பனையோலை விசிறி “
”சார் கிண்டல் வேண்டாம் முயற்சி செய்கிறோம். தூங்குவதற்குள் இதை
சரிசெய்ய பார்க்கிறோம் .அறை சாவி வேண்டாம் எங்களிடம் மாஸ்டர் கீ இருக்கிறது நீங்கள் வெளியே போவதாக இருந்தால் போய்விட்டு வாருங்கள்
அப்படித்தான் இரண்டாவது மாடியில் வந்து நின்றபோது அந்த பிருந்தாவின் ஹால் கண்ணில் பட்டது. நுழைந்து பார்க்கலாம் என்று நினைத்தான் பிரான்சிஸ் .இதுபோன்ற பல இடங்களில் சர்வசாதாரணமாக பிரான்சிஸ் நுழைந்திருக்கிறார் அழைப்பில்லாமல் இருந்தால்கூட போய் உட்கார்ந்து கொள்வது சாப்பாடு கிடைத்தால் போய் சாப்பிடுவது என்பதெல்லாம் அவனுக்கு சாதாரணமாகி
விட்டது யாராவது கேட்டால் ஏதாவது பதில் சொல்லலாம்
. இப்படி சொரணை கெட்டு போய் விட்டாயே என்று
கூட சில சமயங்களில் கேட்டுக் கொள்வான் எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு சரிவுகள் எவ்வளவு காயங்கள் இதையெல்லாம்
தாண்டி தான் இங்கு வந்திருக்கிறோம். இவர்கள் கேட்கிற நீ யாரென்ற
சாதாரணமான கேள்விக்கு சாதாரணமாகவே பதில் சொல்ல முடியும்
என்பது தான் அவனின் சமாதானமாக இருந்திருக்கிறது
இங்கு வரும்போது அப்படித்தான் அவருக்கு லேசான காயம்
ஏற்பட்டுவிட்டது. ஊரிலிருந்து ஹீரோ ஹோண்டாவின் இங்கே வந்து
விடலாம் என்றுதான் புறப்பட்டான்
மேட்டுப்பாளையம் குன்னூர் அன்னூர் என்பதை எல்லாம் கடந்து மெல்ல
வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் குமரன்குன்று சென்றான் அங்கிருக்கிற முருகன் கோவிலின் உச்சியைப் நின்று வேடிக்கை பார்த்தான். திருப்பூருக்கு நீர் வருகிற பெரிய நீர்த் தொட்டி தொட்டிகள் எல்லாம் சவுரி பாளையத்தில் பார்த்தான் .மேட்டுப்பாளையத்தில்
வந்து ஊட்டி பேருந்து பக்கம் சென்ற போது
பெரிய வரிசை இருந்தது .
ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு நண்பரை பார்க்கப்
போனான் அவர் ஊரில் இல்லை அங்கிருந்த
பெண்மணி வந்தால் என்ன சொல்வது என்றாள்
நானே தொடர்பு
கொள்கிறேன் என்று வந்துவிட்டான். கல்லாறு
பழப்பண்ணை பூங்கா பல வருடங்கள்
முன்னால் சென்றது வாகனத்தை
நிறுத்துவதற்கு வசதி இருப்பதாக தெரியவில்லை..பக்கத்தில்
இருந்த
அகத்தியர் மடத்திற்கு செல்லலாம் என்று நினைத்தான்
அங்கு தியாகராஜன் என்ற நண்பர் இருந்தார்., சமீபத்தில்தான்
செத்துப்போனார் அவர் ஒரு காலத்தில் பெரிய
பட்டிமன்ற பேச்சாளராக இருந்தார் பட்டிமன்றத்தில் பேசும்
அந்த இன்னொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு தனியாக வாழ்க்கை நடத்த
ஆரம்பித்தார்
பட்டிமன்றம் சலித்துப் போனது போல திடீரென்று
சாமியார் ஆகிவிட்டார். கல்லாறு பழப்பண்ணையில் எதிரில் ஓர் இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரின் ஓர் ஆசிரமம் இருந்தது .அந்த ஆசிரமத்தில் சென்று ஒரு நாள்
தங்கியிருந்தார் .பக்கத்தில் இருக்கிற ஆற்றில் சென்று குளித்தான்
மலை ரயில் செல்லும் பாதையில் ரொம்ப நேரம் நடந்தான்
ஒரு நாள் இரவு வந்து தங்கி இருந்தான்
தியாகராஜனின் வாழ்க்கை முழுவதும் மாறிப் போயிருந்தது
கொஞ்சம் யோகா கொஞ்சம் மந்திரம் சொல்வது கொஞ்சம் பூஜை என்று
தொடர்ந்து கொண்டிருந்தார் . அப்பெண்மணி அவர்
கூடத்தான் இருந்தார். தியாகராஜனின் குடும்பம் திருப்பூரில் தனியாக
இருந்தது அவர் மனைவி பனியன் கம்பெனிக்குப் போய் இரண்டு பெண்
பிள்ளைகளை வாழவைத்துக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு
கேள்விப்பட்ட போது அந்த ஆசிரமத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டது
தெரிந்தது. அங்கு போனபோது அதன் பரப்பளவு அவனை
ஆச்சரியப்படுத்தியது
பெரிய விக்கிகரமாய் அம்மன் ;விக்கிரகம்.. மகாலட்சுமி இருந்தாள்
அவரை சந்திப்பதற்காக பலர் வரிசையில் இருந்தார்கள். பூஜை
புனஸ்காரம் என்று சுற்றிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தன பூஜை
புனஸ்காரங்கள் ஹோமம் என்று அந்த பகுதியே
திணறிக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தியாகராஜனை போய்
பார்ப்பது
நல்லதா என்று தோன்றவில்லை
தியாகு சாமிகள் பிசியாக இருக்கிறார் என்று திரும்பத்திரும்ப
சொல்லப்பட்டது
இந்த முறை அவர் காலமாகி விட்டார் என்பதை அவன் அங்கு போய்
இருந்தபோதுதான் அறிந்து கொண்டான்
இப்போ ஆசிரமம் யார் பொறுப்பில
அதாம்மா இருக்காங்களே.. மாதாஜி மாதாஜி ஓட கருணையுள்ள ஆசிரமம்
நல்லா நடக்குது ஏழை குழந்தைகளுக்கு படிப்பு.. .படிப்பு உதவி அப்படின்னு
போயிட்டு இருக்கு
குன்னூரில் சிம்ஸ் பார்க்கப்போனால் மெல்ல வெளியில் அலைந்து
கடந்து
வரும் போது மிகவும் களைப்படைந்து விட்டான்
ஆனால் வீட்டில் சும்மா
உட்கார்ந்து கொண்டிருப்பதை விட இப்படி பயணப்படுவது சிறந்தது என்று
தான் அவனுக்கு தோன்றியது.அதுதான் அப்பயணம்
ஆனால் விரைவில் தனக்கு பின்னால் லாரி தொடர அவனுடைய பயணம்
சிரமமாக
இருந்தது .ஒரு லாரி ஒன்று இரும்புச் சாமான்களை சுமந்து கொண்டு
வந்தது அவன் வழி விட்டு கையை காண்பித்தாலும் அது பின்னாலேயே
நகர்ந்து கொண்டிருந்தது .சிறு குறுகலான பாதைகளில் அவனை
சங்கடப்படுத்தியது
என்ன நோக்கத்திற்காக அவன் பின் தொடர்கிறான் என்று கூட சந்தேகம்
வந்தது ஒரு வளைவில் அப்படித்தான் அவன் தடுமாறி கீழே விழுந்து
விட்டான் அந்த லாரி பின்னால் இருந்தது .அவன் விழுந்ததை ஒரு நிமிடம்
நின்று பார்த்துவிட்டு அதிலிருந்து அவர்களின் சிரிப்புடன் கடந்து சென்றது
தன்னை கீழே தள்ளிவிட்டுக் காட்டுவதற்காகத்தான் அவன் எந்த மாயம்
செய்திருக்கிறார் .என் காயம் சிராய்ப்பு அவருக்கு சிறு சந்தோசத்தை
தந்திருக்கிறது என்று அவன் நினைத்தான்
நல்லவேளை சிரமமில்லாமல் அவன் சூரிய விடுதிக்கு வந்து விட்டான்
இரண்டு நாட்களாக அவரின் ஹீரோ ஹோண்டா வாகனம்
பத்திரமாக
இருக்கிறதா என்று அந்த விடுதியின் பின்புறம் பகுதியை சென்று பார்த்து
விட்டான் அது பத்திரமாக தான் இருந்தது. தானும் பத்திரமாக தான்
இருப்பதாக அவனுக்குத் தோன்றியது“
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199

