சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 11 நவம்பர், 2025
சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் “ சுற்றுச்சூழல் கட்டுரைகள் :பாகம் 1
பசுமைஇலக்கிய வெளியில் தோன்றியமுன்னெடுப்புகளில்சுப்ரபாரதிமணியன்
- தியடோர் பாஸ்கரன்
தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதி மணியம்
அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம்
மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய
கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப்பிணைத்துள்ளன என்பதையும்
சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்கள் தான் என்பதையும் அவர்
படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விட துல்லியமாக வேறு எந்த இடத்திலும்
பார்க்க முடியாது எனலாம்
இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப் பூர்வமான பிணைப்பு.
இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப்
போய்விட்டோம். . நம்மைச்சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம்
கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டு பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்திப்பூச்சி, மரத்தில்
வந்தமரும் கரிச்சான் குருவி, நீல வானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையுமே நாம்
பார்ப்பதில்லை.. இன்று பெளர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து
கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று
அலையும் நமக்கு இவை தெரிவதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழியல் கொடுமைகளுக்கு
இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம்.
அறுந்து போன இந்தப்பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும்,
வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும்
உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும்.. ஆனால் தமிழ்நாட்டில்
சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்த
பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும்
இங்கு பெரிதாக உருவாக வில்லை (கூடன்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதி
விலக்கு). இந்தப்பின்புலத்தில்தான். சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க
வேண்டும்.
சீரழிக்கப்பட்டு மறைந்து வரும் ஆறுகளைப்பற்றி எழுதின்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்
ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி இன்று அழிந்து போய்விட்டது. அதே போலத்தான்
நஞ்சராயன் ஏரி பற்றி இவர் எழுதுயிருப்பதும். தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளுக்கும் இதே
கதிதான். ஏரிக்கு வரும் சிறு சிறு கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி விடுவதால் ஏரிகள்
வரண்டு போகின்றன; நீரற்று கிடக்கும் இந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆகிரமித்து
விடுகின்றார்கள். கோயம்பத்தூரில் பரந்திருந்த வாலாங்குளத்தின் இன்றைய
நிலையைப்பருங்கள்., வலசை வரும் மனிதர்களைப்பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும்
கட்டுரை அண்மையில் நம் நாட்டில் நிகழ்ந்த அவலத்தைபற்றிய தீர்க்கதரிசனம் போலுள்ளது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்ற
கருதுகோள்களைப்பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன.
சுற்றுச்சுழல்பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்த கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்
இல்லை.
( ரூ 330 . வெளியீடு : கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை
பிரதிகளுக்கு : 90430 50666)

