சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 11 நவம்பர், 2025
ரோஜா முத்தையா நூலகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி
திருவாளர்கள் ஆர் பாலகிருஷ்ணன் நடிகர் சிவகுமார் உட்பட பல கலந்து கொண்டார்கள்
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் முன்னெடுப்பில் நடந்த இந்த கூட்டத்தில் ரோஜா முத்தையா நூலகத்தின் கட்டிட வளர்ச்சிக்காக நிதி கோரப்பட்டது
வணிக நிறுவனங்கள் சார்ந்த பெரியவர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் 40 கோடியில் உருவாக்குவது இந்த மையம்
கோவை பேரூர் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
சு.வேணுகோபால்.சுப்ரபாரதிமணியன். காசு வேலாயுதம் பாரதியார் பல்கலைக்கழக முனைவர் சித்ரா போன்றவரும் கலந்து கொண்டார்கள்
கட்டிட நிதிக்கு முதல் தவணையாக ஈரோடு சக்தி மசாலா 25 லட்சம்
நடிகர் சிவகுமார் 10 லட்சம்
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் 10 லட்சமும் வழங்க ஒப்புதல் தந்தனர் மற்றும் இதற்கு கீழே உள்ள தொகையை பலர் வழங்கினார்கள் பலர்அறிவித்தார்கள்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு,[2] 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.[3]
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில்[4] இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது. மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ. கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. 1994இல்[5] தொடங்கப்பட்ட இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது.[6]
நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[7]
நூலகம்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகும், இது மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்நூலகம் ஒரு தனித்துவமான தொகுப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் ஒரு மாதிரி நூலகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோஜா முத்தையாவின் ஒரு சிறிய தொகுப்பாக, நூலகம் இப்போது 3,00,000 நூல்களைக் கொண்டுள்ளது, மேலும் வரலாற்று காப்பகத்தை தொடர்ந்து பாதுகாத்து விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா செட்டியாரின் முன்னோடி முயற்சிகளில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது .[8] முத்தையா ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் பழங்கால புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார். மற்றும் 1950 இல் பழங்கால தமிழ் இலக்கியங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1992 இல் அவர் இறக்கும் போது, இந்தத் தொகுப்பில் தமிழில் கிட்டத்தட்ட 1,00,000 நூல்கள் இருந்தன, அதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பல இலக்கியங்கள் இருந்தன. நூலகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மதிப்புமிக்க உள்ளடக்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துக்கொண்டு சிகாகோ பல்கலைக்கழகம் 1994 இல் முழு தொகுப்பையும் வாங்கியது. இருப்பினும், நூலகம் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், ஒரு ஆராய்ச்சி நூலகத்தின் கருவை உருவாக்குவதற்கு இந்த தொகுப்பு தமிழகத்தில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் முத்திரைகளின் இந்த அரிய தொகுப்பை பராமரிக்கிறது.
தொகுப்புக்கள்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள பரந்த தொகுப்பு தமிழ் அச்சு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பாகும், இது 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நூல்களைக் கொண்டுள்ளது, 1804 இல் வெளியிடப்பட்ட 'காந்தரந்ததி' என்ற தலைப்புள்ள ஒரு நூல் இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது.. மொழி மற்றும் இலக்கியம், சுதேச மருத்துவம், மதம், நாட்டுப்புறவியல், பிரபலமான கலாச்சாரம், இயற்பியல், காந்திய ஆய்வுகள், பெண்கள் ஆய்வுகள் மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. திருமண அழைப்பிதழ்கள் மற்றும் தனியார் கடிதங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புதான் மற்ற நூலகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து தமிழுக்கு ஒரு தொன்மை மொழியின் அந்தஸ்து வழங்கப்படுவதையும், உலகளவில் அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ் பேசுவதையும் கருத்தில் கொண்டு, நூலக ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக தன்னை முன்வைக்கிறது.
மனித வளம்
[தொகு]
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை (ஆர்.எம்.ஆர்.எல்.டி) சிந்து அல்லது ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2007 ஜனவரியில் சிந்து ஆராய்ச்சி மையத்தை (ஐ.ஆர்.சி) நிறுவியது. சிந்து எழுத்துகளில் நன்கு அறியப்பட்ட ஆராய்ச்சியாளரான ஐராவதம் மகாதேவன்[9] தனது ஆயுட்காலம் வரை இந்த மையத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார். இது இந்த துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் அனைத்து நேர்மையான அறிஞர்களுக்கும் திறந்திருக்கும்.[10]
Subrabharathimanian Endownment Talk in Gandhigramam Univercity, Madurai
Talk on works of va keera by Tamil manavalan in December
Novel .. குமரி : எழுத்தாளரும் இயக்குனருமான கீரா
1
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த நாவல் வியப்பூட்டுகிறது. நம்மிடம் இப்போது இல்லாதுபோன அலங்கு என்கிற நாய் இனம், பலவிதமான யாளிகளான மகர (ஆடு) யாளி, சிம்ம யாளி, யானை யாளி பற்றிய இந்த நாவலில் வரும் விவரணைகள், அழிந்துபோன டைனோசர்கள், சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் விலங்கு, நற்றினையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன ஜப்பானியர்கள் உருவகப்படுத்துகிற டிராகன் ஆகியவைபோல, தமிழ் இலக்கியங்கள் பேசுகிற யாளிகள் கற்பனை மிருகமா அல்லது அப்படி ஒரு விலங்கு வாழ்ந்து அழிந்துவிட்டதா? வரலாற்றின் மீதான புனைவுகள் மிக அவசியமான ஒன்று. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சேர சோழ பாண்டியர்கள் மீதான புனைவுகளுக்கே பழக்கப்பட்ட நமக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளின் மீதான புனைவு என்ற வகையில் ‘குமரி’ மிகவும் அவசியமான ஒன்று. -கரன் கார்க்கி
2
எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய நண்பர்கள் ஆனோம். என்னிடம் அவர் சொன்ன கதைகள், சம்பவங்களை வைத்தே குறைந்தது மூன்று செறிவான புதிய கதைக்களன் கொண்ட பெரிய நாவல்களை அவர் இந்நேரம் எழுதியிருக்க முடியும். சினிமாவும், சினிமா எடுப்பதற்கான கடுமையான பிரயத்தனமும் மட்டும் அவரது படைப்புகள் முற்றிய நாட்களில் பெரும்பகுதி எடுத்துக்கொண்டது உண்மை. ஆனாலும் அவருக்குள் இருக்கும் தீவிர படைப்பாளியை அவ்வப்போது சிறுகதைகளாக வெளிபடுத்தினார்.தமிழு, நிறமற்றவளின் கண்கள், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஒரு சைக்கிளின் கதை போன்ற அவரது கதைகள் யதார்த்த தளத்தில் அமைந்த துள்ளிய காட்சி சித்திரிப்பை அளித்து தெரிந்த விளம்புநிலை மக்களின் தெரியாத வாழ்க்கையை கூறின. கதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் அவர் மெனக்கெடவில்லை. பின்னர் நண்பர்களின் தொடர்ந்து நச்சரிப்பும், யாவரும் பதிப்பக ஜீவகரிகாலன்,வேல்கண்ணன் போன்ற நண்பர்களின் தொடர் முயற்சியால் மோகினி என்ற பெயரில் தொகுப்பு 2017 ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளிவந்து பரவலான கவனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் அவரது படப்பிடிப்புகள், கதை விவாதம், லொகேஷன் பார்க்க போதல் என்று சினிமா அவரின் பெரும்நேரத்தை எடுத்துக் கொண்டது. அவருடன் இரவு நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பெரிய நாவலான ‘’குமரி’’ குறித்து என்னிடம் விவாதிப்பார். அதன் காட்சிகளை கேட்கும் போது, ‘’ விரைவில் எழுதி முடியுங்க தோழர், நீங்க சொல்லும் போதே விரைவில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’’ என்பேன். ஒரு சிறிய புன்னைகையை பதிலாக கொடுப்பார். யாவரும் சிறுகதை போட்டியில் கொரனோ காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக அவரது ‘’ சதுரங்க வட்டம்’’ தேர்வு பெற்றது. பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறந்த கதை இது. விரைவில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து யாவரும் பதிப்பகம் புத்தகமாக கொண்டு வர இருக்கிறது. அந்த தொகுப்பில்‘’ சதுரங்க வட்டம்’’ இடம் பெறுகிறது. போன வருட(2020) கொரனோ லாக் டவுனில் குறுநாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து இருப்பதாக கூறினார். அதுதான் ‘’பாரி ஆட்டம்’’ குறுநாவல்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2021இல் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சியில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரவலான வாசகர்களால் விரும்பியும் வாங்கப்பட்டது. முக்கியமாக திரைப்படத் துறையை சேர்ந்த பல நண்பர்கள் வாங்கிப் போனார்கள். கதைப்போக்கில் அமைந்திருந்த ஒருவகையான திரில்லர் தொனி அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் வெகுஜன நாவல் வகைமைக்குள் பாரி ஆட்டத்தை சேர்க்க இயலாது. தீவிரமான மன உணர்வுகளை அளிக்கும் வாழ்க்கை முறையையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார். பின் நவீனத்துவம் கொடுத்திருக்கும் கதை சொல்லலின் சுகந்திரம், கதையின்றி கதை மொழிதல், சில வரிகளில் ஒரு கதாபாத்திரங்களை வரையறுத்தல், தேவையற்ற விளக்க உரைகளை தவிர்த்தல் ஆகிய நுட்பங்கள் அனைத்தும் பாரி ஆட்டத்தில் துணிந்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார் வ,கீரா. இந்த நுட்பங்கள் எதுவும் வாசகனை உறுத்தாமல் சீரான கதை சொல்லலால் தடையின்றி வாசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் குறுநாவல் வடிவத்தில் தான் அதிகமும் சாதனைகள் நிகழ்த்திருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தி.ஜானகிராமனின் அடி, அசோகமித்திரனின் இன்று, கி.ராஜாநாராயணனின் கிடை, ஆர்.சண்முகசுந்திரத்தின் அறுவடை , லாசாராவின் புத்ர, வண்ணநிலவனின் கம்பாநதி, ஜெயமோகனின் டார்த்தீனியம், சு. வேணுகோபாலின் கூந்தப்பனை போன்று இன்னும் பல வரிசையில் உள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்( நீல. பத்மநாபனின் தமிழ்மொழி பெயர்ப்பு) மலையாள மொழிபெயர்ப்பு என்றாலும் குறுநாவலின் உச்சபட்ச சாதனைக்கும் வடிவத்துக்கும் துல்லியமான எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
போன வருடம் குற்றப் பின்னனியில் அமைந்த இரண்டு குறுநாவல்களை படித்தேன். ஒன்று சீரியல் கில்லரை( தொடர் கொலைகாரன்) யாரென்று கண்டுபிடிக்கும் வகையில் அமைந்த நந்தன் ஸ்ரீதரனின் படுகளக் காதை, அவரின் திரைக்கதை ஒன்றை குறுநாவல் வடிவில் மாற்றி எழுதியிருந்தார். ஒரு மனிதனின் வாழும் சூழல் எவ்விதம் குற்றப் பின்னணியில் சிக்க வைக்கிறது என்பதை மெல்லிய நீரோட்டமாக எழுதியிருந்த என்.ஸ்ரீராமின் அத்திமரச்சாலை. இந்த இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது பாரி ஆட்டம்.
முப்பது வருடங்களுக்கு முன் நடக்கும் யாரும் சொன்னாலும் நம்ப முடியாத கிராமிய கதை, இன்னொருபுறம் சமகாலத்தில் கொடைக்கானலில் வயதுப்பெண்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் பற்றி எந்த துப்பும் கவலர்களுக்கு கிடைக்காமல் அலைகிறார்கள். இவ்வாறு இரண்டு கால கட்டங்களில் கதை சொல்லப்பட்டு ரயில் பாதையின் இரு வேறு தண்டவாளங்கள் இணைவது கதையின் முடிவை நோக்கி கோர்த்திருக்கிறார் கீரா. கடந்த காலத்தின் கதைக்கு வாய்மொழி கதைமொழியின் கூறல் முறையையும், நிகழ்காலத்தின் கதைக்கு விறுவிறுப்பான மர்மநாவலின் கூறல் முறையையும் பயன்படுத்தி எழுதியிருக்கிறார் கீரா. ஆனால் கதாபாத்திரங்களின் மன ஒட்டத்தை மிக துல்லியமாக சித்தரித்து எழுதியிருப்பது நாவலை மிகுந்த நம்பகத் தன்மைக்குள் கொண்டுவந்து விடுகிறது.
மாச்சாப்பு, வெள்ளையன், மாரியாயி என்ற மூவரை மையமாக வைத்து கடந்த கால கதை நகர்கிறது. சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் அண்ணன், தம்பிகள். மழை வந்தால் விவசாயம், இல்லையென்றால் ஆடுகளை மேய்த்து அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். அண்ணனுக்கு எந்த இடத்திலும் பெண் அமையவில்லை. அதனால் தம்பி வெள்ளையனுக்கு திருமணம் செய்துவிட முடிவெடுக்கிறான். ஆனால் தம்பி வெள்ளையன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான், சில சம்பவங்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் மாரியாயியை மணந்து கொள்ளும் சூழல் வருகிறது. ஊரார் கேலி பேசினாலும் மாரியாயி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரையும் தீர்க்கமான முடிவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். குடிசை வீட்டின் கூரையை மாற்றி, அவர்கள் நிலத்தில் கடன் வாங்கி கிணறு தோண்டி, அறுவடை செய்து புகுந்த வீட்டை கரை ஏற்றிவிடுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் மகிழ்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டம் தனது மகன் படக்கூடாது என தங்களின் வசதிக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். செட்டிக்குளம் என்ற கிராமத்தில் இந்தக்கதை நடக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராமிய வாழ்வை அப்படியே அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு இரு ஆண்களை திருமணம் செய்யமுடியும் என்கிற இடத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலை மிகுந்த துல்லியத்துடன் எழுதியிருக்கிறார். மாரியாயி அவளின் அம்மா எடுக்கும் முடிவுகளும் அதை இயற்கையாக நகர்த்தி சென்ற விதமும் எழுத்தாளனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இப்படி நிகழுமா? என்கிற போது நிகழும், நிகழ்த்திருக்கிறது என்று ஒரு கதையை நம்பகத் தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் நிலத்தில் கிணறு வெட்ட நீர்ப்பிடிப்பு பார்க்க வரும் சன்னாசி, துண்டில் தேங்காயை போட்டு முறுக்கிக் கொண்டு பார்க்கிறார். அந்த நிலத்தில் இருக்கிற கரையான் புற்று தான் நீரை கண்டுபிடித்து தருகிற வித்வான் என்கிறார். கிணறு தொண்டி நீர் கசிய ஆரம்பித்ததும் மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டு முதல் நீரை அருந்தக் கொடுப்பது போன்ற மறைந்து போன அல்லது மறந்து போன நாட்டுப்புற சடங்குகள் அனைத்தையும் நுட்பமான விவரணைகள் மூலம் நினைவுபடுத்தியிருக்கிறார் கீரா.
நிகழ்காலத்தில் நடைபெறும் கதையில் கொடைக்கானலில் தொடர்ந்து இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்குகளை விசாரிக்கும் இளம் ஆய்வாளன் கார்த்திக் எந்த துப்பும் சரியான முறையில் கிடைக்காமல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேலதிகாரிகளிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். சினிமாவுக்கு முயற்சி செய்து தோற்று வேறுவழியில்லாமல் கொலையுண்டவர்களை காவலர் தரப்பின் சாட்சிகளுக்குக்காக படம் பிடிக்கும் முருகனின் கதையும் சொல்லப்படுகிறது. இப்படி நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைத்து விளையாடும் ஆட்டத்தை பாரி ஆட்டம்(கிராமங்களில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டு) குறுநாவலில் அந்த விளையாட்டைப் போலவே குற்றங்களின் தோற்றுவாயை துல்லியமாக சொல்லியிருக்கிறார் கீரா.
பொதுவாக குறுநாவல் எழுத்தாளருக்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வடிவம்! சிறுகதைக்குரிய வேகமும், நாவலுக்குரிய களமும், சிக்கலும் இருந்தாக வேண்டும். ஆனால் நாவலுக்குரிய இடம், பக்கங்கள் இங்கு இருக்காது. 70, 80 பக்கங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும். இதை எந்த நுட்பமும் குறையாமல் எண்பது பக்கங்களில் அனாசயமாக சாதித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வ.கீரா. மிக புதிய களம், நுட்பமான விவரணைகள், இரு விதமான கதை சொல்லல் என ஒரே அமர்வில் படிக்க வைத்து புதிய அனுபவத்தை தருகிறது பாரி ஆட்டம் குறுநாவல். இந்தப் பிரதி இன்னும் இவரிடம் இருந்து வீரியமான படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கிறது.
– விஜய் மகேந்திரன்
நூலாசிரியர் குறித்து:
1.
கீரா திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ‘’பச்சை என்கிற காத்து’’, ‘’மெர்லின்’’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ள கீரா, சமீபத்தில் ''பற'' என்னும் திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான சமூத்திரக்கனியை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு இயக்கிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதைகளை தொகுத்து “மோகினி” எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை யாவரும் பதிப்பகம் 2016- ஆம் ஆண்டு வெளியிட்டது.
'கலகம் - தேசிய கலை இலக்கியத்தடம்' என்ற அமைப்பை ஆரம்பித்து பல எழுத்தாளர்களின் சிறந்த புத்தகங்களுக்கு கூட்டங்கள் நடத்தியுள்ளார். கலகம் விருதுகளையும் வருடந்தோறும் பல்வேறு கலை, இலக்கிய சமூக தளங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கி வருகிறார்.
0
3
கீரா முதலில் கிராமப்புற நாடகமான பச்சை எங்கிரா காத்து (2012) இல் புதுமுகங்கள் முன்னணி வேடத்தில் நடித்தார். படத்தின் தயாரிப்பின் போது, அவர் படத்தின் அறிமுக நடிகை சரண்யாவுக்கு தேவதை என்ற மேடைப் பெயரைக் கொடுத்தார். [ 1 ] 2010களின் பிற்பகுதியில், கீரா சமுத்திரக்கனி தலைமையிலான கௌரவக் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட எட்டுத்திக்கும் பரா (2020) என்ற சமூக நாடகத் திரைப்படத்தில் பணியாற்றினார். இந்தத் திரைப்படம் மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது மற்றும் COVID-19 தொற்றுநோய் ஊரடங்கை ஏற்படுத்துவதற்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இறுதிப் படங்களில் ஒன்றாகும் . [ 2 ] [ 3 ]
டிசம்பர் 2018 இல், முன்னாள் நடிகர்-அரசியல்வாதி எம்.ஜி.ராமச்சந்திரனின் தூரத்து உறவினரான ஜூனியர் எம்.ஜி.ஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் குறவன் என்ற திட்டத்தில் தான் பணியாற்றி வருவதாக கீரா அறிவித்தார் . பழங்குடி ஆர்வலர்களின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த திட்டம் இரும்பன் (2023) என்ற பெயரில் தொடர்ந்தது. படத்தின் வெளியீட்டின் போது, கீராவின் பெயர் விளம்பர சுவரொட்டிகளில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டது, இதனால் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், பணம் செலுத்தப்படாததாகவும் அவர் குற்றம் சாட்டினார். [ 4 ] [ 5 ]
ஜனவரி 2023 இல், தனது அடுத்த திட்டத்திற்கு "வீமன்" என்று பெயரிடப்படும் என்று அறிவித்தார் , இது யானைப் பாகன்கள் பற்றிய ஒரு கதை.
திரைப்படவியல்
[ திருத்து ]
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2012 பச்சை எங்கிரா காத்து
2018 மெர்லின்
2020 எட்டுத்திக்கும் பாரா
2023 இரும்பன்
Thirai kathi
உடுமலை வட்டாரத்தில் ஜீலை மாதத் தொல்லியல் பயணம்: சுப்ரபாரதிமணியன்
1. சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது.
2. . கிராம வாழ்க்கை பற்றிய ஏக்கம் தொடர்கிறது . மாயையல்ல அது.
3. பயணம் எப்போதும் ஆசுவாசம்தான்
0 ஐவர்மலை.
பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்ர்களையும் உள்ளடக்கியது..
0
சமணர்கள் தங்கியிருந்த அயிரமலையை பிள்ளைமார் எல்லாம் சேர்ந்து பஞ்ச பாண்டவரை குறிக்கும்
ஐவர் மலை என்றும்
திரௌபதி அம்மன் கோயில் என்றும் மாற்றிவிட்டனர்.perur jayaraman
ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.
சங்ககாலம்
ஐயூர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். முடம் பட்டிருந்த இந்தப் புலவர் உறையூர் வேந்தன் கிள்ளி வளவனைக் காணச் செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனைக் கண்டார். வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் எனக் கேட்ட புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். [1] ஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட தான்தோன்றிமலை வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
தல வரலாறு
வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுவதால் இம்மலை ஐவர் மலை எனப் பெயர்பெற்றதாக கூறுகின்றனர். போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.
தல சிறப்பு
1. ஐவர்மலை தலத்தில் சூரியபுஷ்கரிணி,சந்திர புஷ்கரிணிகளின் அமைப்பு சிறப்பானது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்து கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக நம்புகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
2. மற்றொரு சிறப்பு உச்சிப்பிள்ளையார் சன்னதியில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
3. ஐவர் மலை தலத்தில் விநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
4. பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் துவாபரயுகத்தில் இங்கு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.
தலபெருமை
1. போகர் பழனி மலைகோவிலில் உள்ள முருகனை இந்த மலையில் தங்கியிருந்து உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் எந்த ஆதாரமுமில்லை. ஐவர்மலை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
2. நாராயணபரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றை கட்டுகிறார். நாராயணபரதேசி மட்டும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள். மற்றும் அவர் சீடர் பத்மநாபா களஞ்சிகாட்டில் முக்தியடைந்துள்ளார்கள்.
3. பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா, போன்றவற்றை கற்பித்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இங்கு பெரியசாமிக்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. பெரியசாமியின் ஒரே சீடர் பெருமாள்சாமி குடும்பத்துடன் ஐவர் மலையில் வசிக்கிறார்.
4. இப்போது இம்மலையில் யோகா, தியானம் ஆகியவற்றை யாரும் சொல்லித் தரவில்லை. தற்போது இங்கு சாந்தலிங்கம் என்ற இளந்துறவியும் பயனர் யோகிசிவம் ஆக இருவர் மட்டும் உள்ளனர்.
5. இம்மலையின் மேற்கு பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
6. கூன் பாண்டியன் காலத்தில் துரத்தியரடியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார்கள். இதனை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
7. இடும்பன் சன்னதி பழனியைப்போலவே இங்கும் சிறப்பு.
8. ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூத தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
9. யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையை குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் சன்னதியில் விளங்கும் பஞ்சபூத அமைப்பு
[தொகு]
நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம்,
நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).
நெருப்பு -ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம்
காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் ஆடாது அணையாது.
ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.
பஞ்ச பூதங்களும் ஒன்று கூடும் ஆடி அமாவாசை வழிபாடு பஞ்சபூத தலங்களுக்கு போய் வந்த பலன் தரவல்லது.
wikkipiidiyaa
0
2..கொழுமம் தாண்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
]
இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொழுமம் என்னுமிடத்தில், அமராவதி ஆற்றின் தென்கரையில், அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் சங்கர ராமநல்லூர் என்றழைக்கப்பட்டது. குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது.அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கூறுவர். [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக தாண்டேசுவரர் உள்ளார். இவர் சோழீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரிய நாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மகாசிவராத்திரி பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]
அமைப்பு
சிதம்பரத்தில் உள்ளது போல நடராசர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். அவர் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காணப்படுகிறார். இந்த அமைப்பின் காரணமாக இத்தலம் தென் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. மூலவருக்கு இடது புறம் தனி சன்னதியில் இறைவி உள்ளார். அவருக்கு முன் ஜேஷ்டாதேவி, திருச்சுற்றில் சுந்தர விநாயகர், பால முருகன், அய்யப்பன், மகாவிஷ்ணு, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள், மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். கல் மண்டபம் போன்று காணப்படுகின்ற கருவறையின் பின்புறம் அக்னீசுவரர் சன்னதி உள்ளது.[1]
0
wikipidia
0
கணியூர் சொக்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கணியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[
இக்கோயிலில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
0
நாலு நாள் பயணம் . பல கோயில்கள், பல கல்வெட்டுகள்
சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது
நெசவுச் சிறுகதைகள் / சுப்ரபாரதிமணியன்
தொகுப்பாசிரியர் : பொன் குமார்
0
பொன் குமார் தொகுப்பு நூல்களின் சிகரம்.இந்த நூல் சிகரத்தில் ஒரு முத்து.
இதில் 18 முத்தான கதைகள் நெசவாளர் வாழ்வியலைச்சொல்லும் கதைகள். ஆர். சண்முகசுந்தரம் முதல், சுப்ரபாரதிமணியன், பல்லவி குமார் வரைக்கும்.
ஆர். சண்முகசுந்தரம் கதை:
பரிகாரம் ஜீவனம் : ஆர். சண்முகசுந்தரம் கொங்கு மண்ணின் மனிதர்களைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் சார்ந்த முதலியார் சமூகத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். இதுலயும் சென்னியப்ப முதலியார் என்ற நெசவாளர் பற்றிய கதை எழுதி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தினசரி நெசவு வேலைகள் பற்றி எழுதி இருக்கிறார் மனிதருடைய வாழ்க்கையில் தூக்கம் பாதிவாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்பார்கள் ஆனால் தூக்கம் இல்லாத இருந்தால் என்னவாக இருக்கும் என்று அந்த கதை முடிகிறது. சிறந்த கதை
வாழ்வுக்கே ஒரு நாள் என்ற ஒரு கதை தொமுசி ரகுநாதன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய பஞ்சும் பசியும் தமிழின் முதல் சோசலிச யதார்த்த வகை நாவல் என்பதாக உள்ளது இதில் உள்ள சுப்பையா முதலியார் என்ற ஒரு நெசவாளியை பற்றி கதையைச் சொல்கிறார். இவர் சேலையை விற்பவராக இருக்கிறார் ஆனால் அந்த சேலை தீபாவளி சமயத்தில் கூட சரியாக விற்பதில்லை ஆனாலும் அவர் மனைவியிடம் காட்டும் சிறு அன்பு என்பது எப்போதைக்குமானதாக இருக்கிறது.
சுப்ரபாரதி மணியனின் துண்டு துணி என்ற கதையில் சேலையில் நெய்கிற போது மிச்சமாகிற துண்டுத் துணியை பெண்கள் ஜாக்கெட்டாக பயன்படுத்துவார்கள் அல்லது அதை விற்று சினிமா பார்க்க பயன்படுத்துவார்கள். இந்த அனுபவம், ஒரு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களை பற்றி இந்த கதை சொல்கிறது
பார்வைகள் என்ற சுப்ரபாரதி மணியனின் கதையில் ரங்கசாமி என்ற நெசவாளர் பற்றி சொல்லப்படுகிறது. தங்களுடைய கூலி சார்ந்த போராட்டம் பெரிதாக ஆகும் என்று பயந்து அவர்கள் மனது நடுங்குவது பற்றிய சித்திரங்கள் இந்த கதையில் உள்ளன சுப்ரபாரதி மணியின் கீறல் கதையில் ஒரு கோயிலில் இருக்கும் வேலையில் வைக்கப்படும் பூஜைப் பொருட்களும் அதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளும் பற்றி பேசுகிறது.
மிச்சமிருக்கும் . ஒருவன் என்ற லட்சுமி சரவணகுமாரின் கதை சிப்ட் முறையில் நெசவு ரிசர்வ் செய்யும் தொழிலாளரைப் பற்றி, இருக்கிறது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான நெசவு தொழில் முறைகள் இருக்கின்றன .லட்சுமி சரவணகுமார் அவர் பகுதி நெசவாளர்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதில் வருகிற கூலி நெசவு செய்யும் ஒருவன் ஏழை. கூலி நெசவு செய்யும் ஒருவன் மீது மையம் கொள்ளும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆனால் அவன் ஊருக்கு விடுமுறையில் சென்றவன் திருமணமாகி வருவதும் அவனுக்கு அந்த நெசவுக்கொட்டகையில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அன்பளிப்பு தருவதும் என்று நெகிழ்ச்சியை தருகிற கதையாக இருக்கிறது.
வீதி சமைப்போர் என்ற வெண்ணிலாவின் கதையின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது. நெசவாளர்கள் பாவு போடுவதற்காக நிறைய நேரம் ஒதுக்குவார்கள் பலர் சேர்ந்து அதை செய்வார்கள் அப்படி பாவு போடுகிற நாளில் நடக்கிற விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார்
ஊடு பாபு என்ற கதையில் பாரவி அவர்கள் தஞ்சாவூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுகிறார் அதில் கஷ்ட ஜீவனம் நெசவாளர்களோடு இணைந்து வருகிறது. தேநீர் கடைக்காரர்கள் வாழ்க்கையும் . தேர் பார்க்க போக முடியாமல் இருக்கிற அவஸ்தையும் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
கஞ்சி தொட்டி கதையில் சேலம் வின்செண்ட் அவர்கள் சேலம் பகுதி மக்களுடைய வாழ்க்கையை சொல்லுகிறார். ஒரு பகுதி நெசவாளர்கள் கன்னடம் பேசுபவர்கள். இந்த கதையில் பல உரையாடல்கள் கன்னடத்திலேயே வருவது சிறப்பாக இருக்கிறது நெசவாளர் சமூகத்தின் கஷ்டங்கள் பற்றி நிறைய பேசுகிறார் கன்னட உரையாடல்களும் கன்னட பாடல்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக போராடவும் வேண்டி இருக்கிறது என்பதை இந்த கதையிலே வின்சென்ட் அவர்கள் சொல்கிறார்
பல்லவி குமார் கதை : உதிரும் கனவுகள்;
கேரளாவுக்கு வேலைக்காக கணவன் போகிறான். நெசவு தொழில் நசிந்து போய் இருக்கிற நேரம்.
வெளியூர் போன கணவனை காணவில்லை அவனை தேடிப்போன மனைவியின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன கணவனை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை என்று குழந்தைகளைக் காப்பாற்ற மனைவி ஒரு முடிவு எடுக்கிறாள். இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை மனதில் வருகிறது
நெசவாளர் குடியிருப்பு என்ற கதையில் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்ட இடங்கள் வாங்குகிறார்கள் அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளை சொல்லி இருக்கிறார் பா ராஜா.
ஜனநேசனின் கதையில் சிறுநீரகத்தை விற்று ஏமாந்து போகும் நெசவாளர்கள் சிலரின் அவலம்.
பாரதிநாதன் கதையில் நெசவாளியின் சினிமா கதாநாயகன் பற்றிய பிம்பம் உடைபடுவது பற்றியது. நல்ல கட்டுடைத்தல்.
பட்டுச்சேலை என்ற கதையில் காதலிக்காக பட்டு சேலையை நெய்கிறான் அவன். கல்யாண பட்டு சேலை ஆனால் காதல் நிறைவேறவில்லை நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சோகம் சொல்லப்பட்டிருக்கிறது
குலப்பெருமை என்ற கதை சீனிவாசன் எழுதியது கொரோனா காலகட்டத்தில் நெசவுத்தொழில் நசிந்து போய்விடுகிறது பலர் பல தொழிலுக்குப் போகிறார்கள் முடி வெட்டும் தொழிலை செய்யலாம் என்று ஒருவன் ஒருவன் நினைப்பது அவருடைய மன அவஸ்தையைச் சொல்லுகிற கதையாக இருக்கிறது.
அசோக் குமார், பல்லவி குமர் போன்றவருடைய நீண்ட கதைகளும் உள்ளன.
மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு என்று இதை சொல்லலாம்.
நெசவாளர்களுடைய வாழ்க்கை தமிழகத்தின் பல்வேறு பகுதி சார்ந்த அவர்களுடைய வாழ்க்கை, நடை முறையில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுவது பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றியும் சிறப்பானக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த தொகுப்பு.
இந்த தொகுப்பு போல் பல தொகுப்புகளை பொன்குமார் வெளியிட்டு வருகிறார். பணச் செலவு, உழைப்பு இதெல்லாம் பெரிய அளவில் தென்படுகிறது. அவர் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் இடவேண்டும் இந்த முயற்சிகளில் அவர் ஈடுபடுவதற்காகவே அவரை நாம் பாராட்ட வேண்டும்
( தொகுப்பாசிரியர் பொன் குமார்
வெளியீடு நிவேதா பதிப்பகம் ரூபாய் 240 )
சுப்ரபாரதிமணியன்
0
ஆட்டம் ATOM ஆவணப்பட விழா கோவையில்....
ஆட்டம் காண்கிறதா திருப்பூர் தொழில் உலகம்
சுமன் இயக்கிய திருப்பூரை பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதி மற்றும் பின்னலாடை சார்ந்த அதிபர்கள் புலம்பினார்கள். அழுது தீர்த்தார்கள் திருப்பூரில் இன்றைய நிலைமை பயம் தருகிறது. தொடர்ந்து தாறுமாக தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பருத்தி, நூல் விலை, அதன் காரணமாக செயற்கை இலை ஆடை உற்பத்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற மவுசு. அவை மலிவாக இருப்பதால் நுகர்வோர் அவற்றை அதிகம் வாங்குவது
மத்திய அரசின் தொழில் கொள்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பனியன் தொழில் வளர்ச்சி தொழிலாளர்கள் சிக்கல் என்று பலவற்றை இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
உள்நாட்டு வணிகம் என்பது அதன் தலைப்பு. இரண்டு உற்பத்தியாளர்கள் பணி தொழில் சிக்கல் பற்றி பேசுகிறார்கள் ஒருவர் செகண்ட் ஃபீஸ் சார்ந்த தொழில் நடத்துபவர் முதலாளியாக இருந்து பல லட்சம் சொத்துக்களை இந்த தொழிலில் சமீப காலத்திய போக்குகளால் இழந்தவர் ஒரு சிறு மளிகை கடை நடத்தி தன் குடும்பத்தை காப்பாற்றுவதாக சொல்கிறார். தன் மகன்களுக்கு பள்ளிக்கு பணம் கட்ட கூட பணமில்லாமல் தவிப்பதாகவும் நன்றாக இருந்த காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து இருப்பதையும் திருப்பூரில் நிலைமை மிக மோசமாக இருப்பதையும் சொல்லி அழுகிறார் அவர் அழுவதை பார்த்து அவருடைய குழந்தைகளும் கண்ணீர் விடுகின்றன. திருப்பூர் நிலைமை எப்போது மாறும் என்ற கனவு அவருடைய கண்ணீரில் கரைந்து இருப்பதை இந்த படம் காட்டுகிறது
திருப்பூரின் இந்த வியாபாரம் போக்கு அவ்வப்போது நிகழும் ஏறிம் இறங்கும். ஆனால் இறங்கி கொண்டிருக்கும் திருப்பூரில் தொழில்முகத்தை இவர்கள் அதிர்ச்சி சார்ந்த விஷயங்களால் நிரப்பி இருந்தார்கள் .இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தரவுகள் பல்வேறு நேர்காணல்கள் மூலமாக திருப்பூர் நிலையை சொல்லியிருந்தார்கள்
திருப்பூர் செயற்கைஇழை உற்பத்தி மூலம் புது சந்தை உருவாக்கி இருக்கிறது ஆனால் பருத்தி துணிகளின் புறக்கணிப்பு என்பது எல்லோர் மத்தியிலும்.. பீதியான செய்திகளை கிளப்பி இருப்பதை இந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது
இந்த திரைப்பட விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தூக்கி வைத்தார் நிறைவு விழாவில் ஆவணப்பட இயக்குனரும் ஜெமினி கணேசன் பேரனுமான அருண்வாடி மற்றும் பாண்டிச்சேரி ஆரோவில் இயற்கை காப்பாளர் சரவணன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பாரு கழகு இயக்கம் பாரதிதாசன், ஈரோடு சக்தி வேல் போன்றோர் கலந்து கொண்டார்கள் கோவை ரத்தனம் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆவணப்பட விழாவில் உலக தரத்தில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட்டன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ..சுப்ரபாரதி மணியன்
சுற்றுச்சூழல் திரைக்கதைகள்
சுப்ரபாரதிமணியன்
1. இயற்கை எனும் இளையக்கன்னி.
கேரளா அட்டப்பாடி பள்ளத்தாக்கின் அருகிலான சைலண்ட் வேலி பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா செல்லும் தமிழக கல்லூரி பெண் ஒருத்தி அதன் அழகில் தன் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.அங்கு வாழ ஆசை ஏற்படுகிறது .
அங்குள்ள எளிமையானக் குடும்பத்தைச் சார்ந்தவனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.
பின்னால்..
அந்தப்பகுதியின் நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது.
அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது.
பிரசவத்திற்கு சென்ற மனைவி அங்கு குழந்தையுடன் மீண்டும் வர மறுக்கிறாள். காடுகள் மரங்கள் அழிக்கப்பட்ட வெப்ப பூமியை தான் விரும்பவில்லை.. தான் விரும்பியது இயற்கை சூழல் உள்ள பகுதி என்று தன் முடிவை கணவனிடம் சொல்கிறாள்..பிரிந்து போகத் தயாராகிறாள். அப்போது என்ன நடந்தது அங்கு ..
சாயத்திரை
(சுப்ரபாதிமணியின் சாயத்திரை நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது. இது கஸார்கள் பிரதி * )
கதைச்சுருக்கம்:
வெளிநாட்டிலிருந்து பின்னலாடை துறை ஆய்வு சார்ந்த வரும் ஒரு வழிகாட்டு பெண்ணின் பார்வையில் ஆரம்பமாகிறது. அவளுக்கு வழிகாட்டும் பக்தவச்சலம் என்பவனின் பனியன் கம்பெனி மற்றும் வேலையில்லாத வாழ்க்கை என ஓடுகிறது
ஆனால் இடம்பெயர்ந்து வந்து அங்கிருக்கும் ஜோதிமணி என்ற பெண்ணுடன் அவன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான். அந்தப் பெண்மணி கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. சுற்றுசூழல் பாதிப்பும் மக்களின் அவல் நிலையும் தொழில் தாறுமாறாக சூதாட்டமாக போய்க் கொண்டிருப்பதும் அதில் பகடைக்காய்களாக சாதாரண தொழிலாளர்கள் இருப்பதும் இந்த கதையில் மையமாக இருக்கிறது.
(* கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு. சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி “ )
0
நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே...
நதி மகிழ்ச்சியை தருகிற இடமாக இருக்கிறது. ஆனால் இன்று கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிட்டது. அந்த நதியில் ரத்த ஆறுகளும் கல்ந்து ஓடுகின்றன.
இரண்டு வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்கள் நண்பராக இருந்து பனியன் வியாபாரத்தில் பெரிய பணக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். சிறிய பிரச்சனைகள் காரணமாக பிரிந்து போகிறார்கள்.ஆனால் அவர்களின் ரத்த உறவுகள் ஆண்களும் பெண்களும் சிறுவயது முதல் நட்போடு இருக்கிறார்கள் .காதல் புரிகிறார்கள்.
காதலுக்கு சாதி தடைதானே .சாதி பிரச்சனை காதலர்கள் காரணமாக பல வழக்குகளை உண்டு பண்ணுகிறது.
அந்த ரத்த உறவுகள், காதல் என்ன ஆகிறது. காதலர்களை இரு சாதிகளைச் சார்ந்த பணக்காரர்கள் அனுமதித்தார்களா. ரத்தம் ஓட விட்டார்களா. காதலர்கள் என்ன ஆகிறார்கள். நதி இது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?
-0
( பூமிக்கு மனிதன் தலைவனா )
கிராமத்துப் பள்ளிக்கூடம். அருகில் நீர்நிலைகள்.இயற்கையை காக்க வேண்டும் என்று ஆசிரியர் பாடம் எடுக்கிறார். முன்பு இந்த இடத்தில் கடல் நீர் வந்து சூழ்ந்து கொண்டது. ஆகவே அங்கிருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.படகில் போய் படித்த குழந்தைகள் வேறு இடத்திற்கு போக வேண்டி இருக்கிறது படகோட்டிகள் கூட செத்துப் போகிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படித்த ஒருவன் வளர்ந்து ஆசிரியராக வருகிறான்.
இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன.. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதும் கேள்விக்குறியாகிறது. ... மக்களின் பரிதவிப்பு காலநிலை மாற்றத்தால் என்ன ஆனது..
0
நாடோடி காற்று"
காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி.
பாறுக்கழுகுகள் உள்ள பகுதி அது. . அவை இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் அங்கே நீடிக்க முடிந்ததா. காலம் அவர்களைக் காட்டுக்குள் விட்டு வைத்ததா
எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர்
ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம்
இவர் எம் எஸ் சி படித்துவிட்டு என்னுடைய ஆரம்ப கால பட்டதாரி படிப்பில் கணிதம் எடுத்தார் .இவர் கணித பேராசிரியர்.. ஆனால் கணிதவகுப்பில் பாரதியார் பாரதிதாசன் திருக்குறள் என்று பல விஷயங்களை வகுப்பு முடிந்த பின் கலவையாக்கிதந்து தீர்ப்பார்.
இவர் கொங்கு மண்டலத்தின் வட்டார இலக்கிய தந்தை ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி மகன் இவர் அடிக்கடி திருக்குறளை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார் அது என்னை மிகவும் பாதித்தது
பிறகு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிநூலகத்தில் திருக்குறள் பேழை.. தினந்தோறும் ஒரு அதிகாரத்தை புதுப்பித்து வைப்பார்கள் அதைப் பற்றி எழுதியவர்களுக்கு பரிசு உண்டு .அந்த வாசிப்பு அனுபவங்களை நான் எழுதினேன் ஆண்டுதோறும் எனக்கு திருக்குறள் பேழை பரிசு கிடைத்தது
இன்னொரு சண்முகசுந்தரம் நான் பிசப்பு உகாரசாமி உயர் நிலப் பள்ளியில் படித்த போது தமிழாசிரியராக இருந்தார். அவர் வியாழக்கிழமைகளில் சாய்பாபா பக்தராக தன்னை காட்டிக் கொண்டு கையேந்தி வகுப்பில் மாணவரிடம் காசுகள்கேட்பார் கையிலுள்ள காசுகளை மாணவர்கள் அவரிடம் தருவார்கள் அப்படி சேர்த்த தொகையை ஆண்டுக்கு ஒரு முறை கல்வித் தொகை கட்ட முடியாமல் இருக்கிற ஏழை குழந்தைகளுக்கு தருவார்
அவர் செயல் மிகவும் உயர்ந்தது அவர் வகுப்பில் நுழையும் போதும் பின்னால் வகுப்பு முடிகிறபோதும் திருக்குறளை சொல்லி அதன் கருத்தை சொல்லுவார்
இந்த இரண்டு சண்முக சுந்திரங்களும் என் காதில் திருக்குறளை விழவைத்த பெருமை கொண்டவர்கள்
இன்றைய திருக்குறள் உரையில் நான் இதைப் பற்றி பேசினேன்
2
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் பாலஸ்தீன பயணத்தில் 3000அடி உயர ஒலிவிய மலைக்குச் சென்றேன்.
இயேசுவின் பிரசங்கங்களில் முக்கியமான இடம்.அங்கு இயேசுவின்10 கட்டளைகளை 23 உலக மொழிகளில்எழுதியிருந்தனர். இந்திய மொழியில் தமிழில் எழுதப்பட்டிருந்ததைச் சொன்னார் கள்
இஸ்ரேலில் சில இடங்களில் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்
இஸ்ரேலியர்கள் திருக்குறளை சரியாகப்படித்திருந்தால்
காஸாவில் உங்களைப்போன்ற பள்ளிக்குழந்தைகள் இன்று பட்டினி கிடக்கும் நிலை வந்திருக்காது
00000
எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர்
ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம் இ
சுப்ரபாரதிமணியன்
0
தொட்டால் கை மணக்கும் என்றார்கள்
கேட்டால் செவி மணக்கும் என்றார்கள்
பேசினால் வாய் மணக்கும் என்றார்கள்
படித்தல் கண் மணக்கும் என்றார்கள்
நினைத்தால் நெஞ்சு மணக்கும் என்றார்கள்
அப்படி மனம் நிறைத்து
எண்ணும் எழுத்தும் கண் என்று வாழ்வோரை அடையாளம் காட்டியது ( பொருள் ) திருக்குறள்
வாழும் நல்லார்க்கு
அறிவியலும் கலை இயலும் சிறந்த கண்கள்
என்றது அது.
கற்றதை பழுதறக் கற்றலும்
மற்றும் கடை பிடித்தலும்
உடம்பு போல் திடம் தரும் என்று காட்டியது
நல்ல வாசகர்
நல்ல தலைவருக்கான அடையாளம் என்று
சொன்ன உலக மாந்தர் அடையாளம்
நம் முக அடையாளம் (பொருள்) திருக்குறள்
உன்னை மறவாதிருக்க எதையாவது எழுத்தில்
பதிவு செய் என்றது குறள்.
இல்லையெனில் பிறர் எழுத சில நற்செயல்களைச் செய்து விட்டுப் போ என்றும் சொன்னது குறள்
0
சுப்ரபாரதிமணியன் 9486101003
பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல்
பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு )
0
கதாவிருது பெற்ற படைப்பாளர், சுப்ரபாரதிமணியன் அவர்களின் "பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல் (புதினம்) வெளியீடு ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார்.என் சி பி எச் பதிப்பகத்தின் பொன் விழா சாதனைகளைப் பட்டியலிட்டார்
*அவ்விழாவில் 50 நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று தான் "பள்ளிக்கூடம் போகலாமா?"*
சுப்ரபாரதிமணியன் திரை நாவல் என்ற வடிவம் பற்றியும் திரைத்துறையும் ஆட்சி அதிகாரம் பற்றியும் பேசினார்.
"பள்ளிக்கூடம் போகலாமா? *60 பக்க குறும் புதினம். அழுத்தமான, வலி நிறைந்த வாழ்வியலைப் பேசுகிறது.*
*நம்மில் பெரும்பாலோனோர் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறோம்.*
*அது குறித்து மனதில் பட்ட சொற்கற்களை எடுத்து உடனே வீசியும் விடுகிறோம். அதனால் பலர் மனம் புண்ணவதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.*
*ஆனால், ஒரு படைப்பாளி அப்படிக் கடந்து போகிறவன் அல்ல. நாணயத்தின் மறுபக்கத்தைத் தடவிப்பார்த்து அதிலுள்ள மேடு பள்ளங்களை உணர்ந்து, அதை உரக்கச் சொல்பவனே படைப்பாளி ஆவான்!*
*தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வடமாநிலத் தொழிலாளர் வாழ்வியல் மிகவும் சிக்கல் நிறைந்தது என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது தெரியவில்லை.*
*நம்மவர்களின் சோம்பேறித்தனத்தாலும், வறட்டுப் பெருமையாலும் விட்ட இடத்தை, அவர்கள் இட்டு நிரப்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதுதான் உண்மை!*
*வறுமைக்குப் பயந்து வந்த கடுமையான உழைப்பாளிகள் என்ற உண்மை ஒரு புறம் இருப்பினும், வடக்கே உள்ள சாதிக்கொடுமைகளுக்குப் பயந்து வந்தவர்கள் என்னும் உண்மைக்கு ஒளிக்கீற்றுப் பாய்ச்சி வெளிக்காட்டுகிறது இப்புதினம்.*
*இந்த உண்மை புரியாத சில ஆசியர்களால் தமிழ்நாட்டில் கல்வி பெறுவதில் வடவர் குழந்தைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் புதினம் வெளிப்படுத்தத் தவறவில்லை!*
வட மாநிலத் தொழிலாளர்கள் குழந்தைகளின் படிப்பு சார்ந்தும் அவர்களுக்கு கல்வி தரப்படாமல் இருக்கும் தமிழக கல்விச்சூழல் பற்றிய விமர்சனமாகவும் இந்த புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.அவர்களுக்கு கல்வி சென்றடையாத மொழி, கலாச்சார சிக்கல்கள் பற்றிப் பேசுகிறார். இதில் இடம் பெறும் வடமாநில பெண்களின் துயரங்களும் கல்வியில் அக்கறை கொண்ட இளைஞன் ஒருவனின் சில முயற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன
*வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை, வடவர்களே வாய்ச்சான்றாகக் கூறும்படியாகயும் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் படைத்திருக்கும் இப்புதினத்தைப் படிக்க வேண்டும் அனைவரும்!*
*-பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு )
( விலை ரூ 70 என் சி பி எச் பதிப்பகம் , சென்னை)
*08-08-2025*
சுப்ரபாரதிமணியனின் திரில்லர் திரைப்படங்கள்
- தூரிகை சின்னராஜ்
சுப்ரபாரதி மணியனின் பல கதைகள் தமிழ்த்திரைப்படங்களில் தழுவப்பட்டு வெளிவந்துள்ளன, பல கதைகள் திருடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
“ வட போச்சே “ என்று அலறிக் கொண்டிருப்பதை விட வடையை சுட்டு எப்படி தழுவுபவர்களுக்கு, திருடுபவர்களுக்கு நேரடியாகத் தரும் விஷயத்தை சமீப காலமாக சுப்ரபாதிமணியன் அவர்கள் செய்திருக்கிறார்,
அப்படித்தான் இதுவரை அவரின் பத்து திரைக்கதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் சுமார் 100 திரைக்கதைகள் உள்ளன ,
இந்த திரில்லர் திரைக்கதை நூல் வரிசையில் 5 திரில்லர் திரைக்கதைகள் உள்ளன இவை பல திரைக்கதைகள் திரைப்படங்களாகும் முழு தகுதி பெற்றவை. எளிமையான வடிவங்களில் குறைந்த காட்சிகளை வைத்து எழுதப்பட்டுள்ளன.. இவற்றை இன்னும் விரிவுபடுத்தி முழு திரைக்கதைகளை உருவாக்கிக் கொள்ளலாம்
சுப்ரபாரதி மணியன் அவர்களுடைய படைப்பிலக்கிய உழைப்பின் இன்னொரு பகுதியாக இந்த திரைக்கதைகளைச் சொல்லலாம். சிறுகதை நாவல் போன்ற படைப்பிலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபட்டு வேறு வடிவ முயற்சியில் இந்த திரைக்கதைகள் அமைப்பு உள்ளன என்று அவர் கூறி வருகிறார்
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இதுபோல் சில தேக்கங்கள் ஏற்படுகிற போது வேறு வடிவத்திற்கு சென்று எழுதுவது என்பது இயற்கை. தான். அப்படித்தான் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் இப்போது திரைக்கதை என்ற ஒரு புதிய வடிவத்திலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்
இந்த திரில்லர் திரைக்கதை நூலில் 5 திரைக்கதைகள் உள்ளன. .இவற்றை எடுத்துக் கொண்டுள்ள முக்கியமான மையங்கள். இன்றைய திரைப்பட உலகங்களுக்கு தேவையான விஷயங்க.ள் இதில் உள்ளன. ஜாதி பிரச்சனை, காதல் பிரச்சனை முதற்கொண்டு வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றை இதில் திரைக்கதைகள் ஆக்கியிருக்கிறார். படைப்பில் வித்யாசத்தன்மை காட்டும் அவரின் வித்தியாசத்தன்மை உள்ள திரைக்கதைகளில் உள்ளன இந்த நூலில் திரில்லர் வகை திரைகதைகளைத் தந்துள்ளார்.
முதல் திரைக்கதை அவரின் ஒரு நாவலை ( 14/40 கொண்டை ஊசி வளைவு ) எடுத்துக் கொண்டு அதை திரில்லர் கதையாக்கியிருக்கிறார் .
மற்றவை அவரின் புதிய களன்களைக் கொண்டவை.
இளைஞர்களின் வேலையின்மை மற்றும் அலைக்கழிதல் அவர்களை பிரச்சினைகளுக்குள் மாட்டி அலைக்கழிப்பதை இன்னொரு திரைக்கதை சொல்கிறது.
முரண்களை மையமாகக் கொண்டு நல்ல திரைக்கதை திருப்பங்களை இவை கொண்டிருக்கின்றன. மருத்துவ ஊழல் சார்ந்த ஒரு திரைக்கதையும் முக்கியமானது
இயக்குனர் தங்கம் சமீபத்தில் ஒரு கருத்தை சொல்லியிருந்தார் : “ சுப்ரபாரதி மணியனின் இப்படி திரைக்கதைகளை நூலாக வெளியிட்டு இருக்கிறார். இதில் எத்தனை திரைப்படங்கள் ஆகுமோ. எத்தனை திரைக்கதைகளத் தழுவி படம் எடுப்பார்களோ எத்தனை திரைக்கதைகளை அப்பட்டமாக காப்பியடித்து திரைப்படம் எடுப்பார்களோ. சுப்ரபாraதிமணியின் எத்தனை வழக்குகள் போடுவாரோ” என்று ஒரு உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இன்னொரு கருத்து இயக்குனர் ஞானராஜசேகரன் IAS இப்படி குறிப்பிடுகிறார் :
“ திரைக்கதைக்கு அடிப்படை முரண் அல்லது CONFLICT என்பதை தெளிவாக புரிந்துகொண்டு திரைக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள்..
ஆனால் தமிழ் சினிமாவில் திரைப்படத்தைக்
குறித்து புரிதல் ஒன்றுமின்றி தாறுமாறாக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
உங்களைப்போன்ற
GENUINE கதையாசிரியர்களை
அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திருடுவதற்கு
நிச்சயம் முனைவார்கள்
என்பதில் சந்தேகமில்லை.”
அது உண்மைதான் இந்த திரைக்கதைகள் நல்ல தமிழ் திரைப்படங்களாக ஆகும் தகுதி கொண்டவை. இந்த திரைக்கதைகளை படிக்கிற போது தமிழ் திரை உலகம் எப்படி இருக்கிறது என்பதும், கதை பஞ்சத்தில் இருக்கிற தமிழ் திரை உலகம் எப்படி வெவ்வேறு வகையான கோணங்களில் இவ்வகைமையங்களை எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இந்த திரைக்கதை நூல் அமைந்திருக்கிறது.---- தூரிகை சின்னராஜ்
( தூரிகை சின்னராஜ் – ஓவியர்/ ஆசிரியர்/ குழந்தைகள் நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். அவரின் பல ஓவியக்கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன )
( ரூ 220 கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை
பிரதிகளுக்கு : 90430 50666)
சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் “ சுற்றுச்சூழல் கட்டுரைகள் :பாகம் 1
பசுமைஇலக்கிய வெளியில் தோன்றியமுன்னெடுப்புகளில்சுப்ரபாரதிமணியன்
- தியடோர் பாஸ்கரன்
தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதி மணியம்
அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம்
மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய
கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப்பிணைத்துள்ளன என்பதையும்
சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்கள் தான் என்பதையும் அவர்
படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விட துல்லியமாக வேறு எந்த இடத்திலும்
பார்க்க முடியாது எனலாம்
இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப் பூர்வமான பிணைப்பு.
இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப்
போய்விட்டோம். . நம்மைச்சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம்
கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டு பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்திப்பூச்சி, மரத்தில்
வந்தமரும் கரிச்சான் குருவி, நீல வானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையுமே நாம்
பார்ப்பதில்லை.. இன்று பெளர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து
கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று
அலையும் நமக்கு இவை தெரிவதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழியல் கொடுமைகளுக்கு
இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம்.
அறுந்து போன இந்தப்பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும்,
வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும்
உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும்.. ஆனால் தமிழ்நாட்டில்
சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்த
பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும்
இங்கு பெரிதாக உருவாக வில்லை (கூடன்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதி
விலக்கு). இந்தப்பின்புலத்தில்தான். சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க
வேண்டும்.
சீரழிக்கப்பட்டு மறைந்து வரும் ஆறுகளைப்பற்றி எழுதின்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்
ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி இன்று அழிந்து போய்விட்டது. அதே போலத்தான்
நஞ்சராயன் ஏரி பற்றி இவர் எழுதுயிருப்பதும். தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளுக்கும் இதே
கதிதான். ஏரிக்கு வரும் சிறு சிறு கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி விடுவதால் ஏரிகள்
வரண்டு போகின்றன; நீரற்று கிடக்கும் இந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆகிரமித்து
விடுகின்றார்கள். கோயம்பத்தூரில் பரந்திருந்த வாலாங்குளத்தின் இன்றைய
நிலையைப்பருங்கள்., வலசை வரும் மனிதர்களைப்பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும்
கட்டுரை அண்மையில் நம் நாட்டில் நிகழ்ந்த அவலத்தைபற்றிய தீர்க்கதரிசனம் போலுள்ளது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்ற
கருதுகோள்களைப்பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன.
சுற்றுச்சுழல்பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்த கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்
இல்லை.
( ரூ 330 . வெளியீடு : கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை
பிரதிகளுக்கு : 90430 50666)
Thiriller screen plays
SubrabharathiManian
Cash, Crush & Chaos / The currency trap
He is a man who has known loss — a widower working a modest government job, quietly hoping for a promotion that seems forever out of reach. His life carries on with quiet routine, but responsibilities continue to grow. His lover, a determined woman, works as an assistant professor in a college. Though she pours her heart into teaching, her job remains temporary — and securing it permanently comes with an unspoken price: a bribe.
Together, they care for his daughter, now a college student with dreams of her own. Like any young woman, she wishes for a scooter — a symbol of freedom and belonging. These are ordinary dreams, shared by countless families. But behind each of them, there lies a common need — money.
When their small salaries fail to meet these mounting hopes, frustration brews. One day, in half-serious jest, they speak of printing counterfeit money — a silly thought tossed between tired shoulders. But what begins as a joke takes a sharp turn. A shadowy gang hears of their desperation and makes a tempting offer: “We’ll print the fake notes. You just distribute them.”
It sounds simple. It sounds like a solution.
It becomes their downfall
As fake notes pass from hand to hand, so do consequences — legal and personal. Slowly, the trap tightens. The man, the woman, and the child — each must now face the reality of the choices made in the name of love, ambition, and survival.
Do they get what they longed for? Did the man earn his promotion? Did the woman secure her future as a professor? Did the daughter receive her scooter
இந்த வாரம் பயணித்தவை:
1. உத்தரகோசமங்கை 2. திருப்புல்லாணி 3. ஏர்வாடி 4. மதுரை
1. மாணிக்கவாசகர் எனும் எழுத்தாளர்:
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.[2][3] இது உலகின் பழமையான சிவன் கோயில் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிடும் அளவுக்குப் பெருமை வாய்ந்த திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.
இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.
இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாற்றப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு./[சான்று தேவை]
இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் துணைக்கோயில்களும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட அரசகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.
0
மாணிக்கவாசகர் (Manikkavacakar) சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். இவர் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]
மாணிக்கவாசகர் பாடிய பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.[2] சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.[3]
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.[4]
2. பழ்மையான வைணவத்தலம்
திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[2] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.[3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°16'57.7"N, 78°49'27.8"E (அதாவது, 9.282700°N, 78.824400°E) ஆகும்.
• புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு இராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
• சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க, மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால், அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே, கரையில் மூன்று நாட்கள் இராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார். இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.
இக்கோயிலில் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாசனி சன்னதிகளும், ஆண்டாள், தர்ப்ப சையனராமர், சந்தானகிருஷ்னர், பட்டாபிஷேகராமர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு, கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.
3. ஏர்வாடி : மனநல மையம்
ஏர்வாடி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் . இது கீழக்கரை தாலுகா மற்றும் பேரூராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது . மதுரையுடன் தொடர்புடைய வரலாற்று ஆட்சியாளரான குதுப்-உஸ்-சுல்தான் சையத் இப்ராஹிம் பாட்ஷா ஷாஹீத்தின் கல்லறை மற்றும் சன்னதியைக் கொண்ட கிராமம் இது . [ எப்போது? ]
ஏர்வாடி முதலில் கடலாடி சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது , இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது . 2009 ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர்வாடி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய்க்கு ஏர்வாடி இரண்டாவது பெரிய பங்களிப்பாளராகக் கருதப்படுகிறது.
சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது ஆட்சிக் காலத்தில் ஏர்வாடியில் அச்சிட்ட நாணயம்.
உள்ளூர் மரபுகளின்படி, சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது தளபதி சிக்கந்தர் பாதுஷாவை மதுரையில் உள்ள பாண்டிய ஆட்சியாளர் திரு பாண்டியனிடம் இஸ்லாத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் அனுப்பினார். இந்த சலுகை நிராகரிக்கப்பட்டபோது, ஒரு போர் வெடித்தது, இதன் விளைவாக ஷாஹீத்தின் படைகள் வெற்றி பெற்று சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மதுரையின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார் .
இதைத் தொடர்ந்து, ஷாஹீதின் படைகள் பவுத்திராமணிக்கப்பட்டினம் (இன்றைய கீழக்கரை ) நோக்கி முன்னேறின. அங்கு, ஷாஹீத் மன்னர் விக்ரம பாண்டியனை இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ராஜா மறுத்து ஷாஹீதை ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறச் சொன்னார், ஆனால் ஷாஹீத் மறுத்துவிட்டார், தனது பணியை நிறைவேற்றாமல் தான் வெளியேற மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து தொடர்ச்சியான போர்கள் நடந்தன, ஒவ்வொன்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடித்த பத்து போர்கள். இந்த மோதல்களின் போது, ஷாஹீத்தின் ஒரே மகன் சையத் அபு தாஹிர், அவரது சகோதரர் சையத் இஸ்மாயில், அவரது மைத்துனர் ஜைனுல் அபிதீன் மற்றும் பல அமைச்சர்கள் உட்பட அவரது குடும்பம் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 2 ] [ சிறந்த ஆதாரம் தேவை ]
இறுதியில், மன்னர் விக்ரம பாண்டியன் மற்றும் அவரது மகன்களான இந்திர பாண்டியன் மற்றும் சந்திர பாண்டியன் ஆகியோர் கொல்லப்பட்டனர், ஷாஹீத் வெற்றி பெற்றார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் பௌதிராமணிக்கப்பட்டினத்தை ஆட்சி செய்ததாகவும், தெற்கு தமிழ்நாட்டில் இஸ்லாம் பரவுவதில் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது . சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத்தின் ஆட்சியின் போது அச்சிடப்பட்ட நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 3 ] [ சிறந்த ஆதாரம் தேவை ]
மதீனாவின் மன்னராகவும் , இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் 18வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் நம்பப்படும் அல் குத்புல் ஹமீத் வல் கௌசுல் மஜித் பாதுஷா சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நபியின் விருப்பத்திற்கு இணங்க இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்துடன், இந்தியாவிற்கு ஒரு பயணத்தின் போது எர்வாடிக்கு (அப்போது பௌதிராமணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது) [ எப்போது? ] வந்ததாகக் கூறப்படுகிறது . [ 4 ]
ஏர்வாடி சந்தனக்கூடு விழா
[
உருஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தர்காதர்கா வளாகத்திற்குள் ஒரு மினாருடன் கூடிய மசூதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா இஸ்லாமிய மாதமான துல்-கீதாவில் நடத்தப்படுகிறது . இந்த விழா குதுப் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹித் பாதுஷாவின் "ஷஹாதத்" (தியாக நினைவு நாள்) நினைவாக நடத்தப்படுகிறது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் கூட்டாகக் கொண்டாடப்படுகிறது. [ 5 ] ( இணைய தளக்குறிப்புகள்
4. மதுரை
குறளினி : சுப்பரபாரதி மணியன்
வணக்கம்.
குறளினி அவர்களின் பேச்சு திறமையை அவருக்கு திருப்பூரில் இளையோர் விருது தரப்பட்ட நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டேன்.அவரின் படைப்பாற்றல் பற்றி அவரின் முந்திய நூல்களில் தெரிந்துகொண்டேன். அவர்களின் கற்பனை உலகமும் குழந்தைகளின் இயல்பான எதார்த்த வாழ்க்கையும் எளிமையாக கொங்கு நாட்டு இயல்பு மொழியில் சொல்லப்பட்டு இருந்தன. இந்த நூலும் அப்படித்தான். கொங்கு மொழியில் குழந்தைகளில் அனுபவங்கள் வெகுளி தானமாகவும் எதார்த்தமாகவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.
நல்ல படைப்புகளின் உச்சத்திற்குச் செல்லும் அருமையான வாய்ப்புகளை நோக்கி குறளினியுடைய பார்வை இருக்கிறது என்பதற்கு இந்தக் கதைகள், இந்தக் கட்டுரைகள், இந்தப் படைப்புகள் சாட்சி, அவருக்கு கிடைத்து வரும் அங்கீகாரமும் விருதுகளும் தொடர்ந்து கிடைக்கவேண்டும்.
அவை இன்னும் பல இளைய தலை முறையினருக்கு எழுதுவதற்கான ஊக்குவிப்பாக அமையும்.
வாழ்க அவருடைய தளம்!
-சுப்பரபாரதி மணியன் திருப்பூர்.
திருப்பூர் இலக்கிய விருது 2025 விழா
” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”
என்று திரைப்பட இயக்குனர் வ. கீரா “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார். அவரின் வீரா நாவலுக்காக அவருக்கு “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ வழங்கப்பட்டபோது ஏற்புரையில் இவ்வாறு பேசினார். ( வீரா நாவல் டிஸ்கவரி புக் பேல்ஸ் , சென்னை வெளியீடு )
மற்றும் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி உட்பட30 படைப்பாளிகளுக்கு நேற்று அவ்விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் ” என்ற சுற்றுச்சூழல் நூலை அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.அந்த நூலை சென்னை கோரல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூ330.
விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தனுபவங்களை விவரித்தனர். முத்துபாரதி நன்றி கூறினார். கீழ்க்கண்டோர் “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பெற்றனர்.
ஓவியர் புகழேந்தி, தொல்லியலாளர் மூர்தீஸ்வரி, திரைப்பட இயக்குனர் வ.கீரா, திருக்குறள் க.காமராசு, பேரா. ரமணி
எழுத்தாளர்கள் கோ.கலியமூர்த்தி மு.யாழினிஸ்ரீ,,ஞானசூரியன், மலர்வதி, ஆர்னிகாநாசர், அய்யனார் ஈடாடி, கோவை தனபால், சசிகுமார், இலக்கியா நடராஜன், ராணி சீதரன்,
கோவை ஆனந்தன்,செந்திரு, க.ஜெய்சங்கர், மா. காளிதாஸ், ரம்யா அருண்ராயன், பிரசாந்த்.வே , ஆங்கரை பைரவி, துவாரகா சாமிநாதன், காப்பியன், நாகஜோதி, செல்வராஜா, லீலா...கோ
மொழிபெயர்ப்பாளர்கள் சுந்தரராமன், கன்னிமாரி தினேஷ், ஆர். முத்துமணி
இடம்: சேவ் அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனை வீதி., கலைஞர் அறிவாலயம் அருகிலான கிளை வீதி, தாராபுரம் சாலை, திருப்பூர்
சேவ் அலோசியஸ், சுசிலா, கிரிஜா சுப்ரமணியன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எழுத்தாளர்கள் கீழ்க்கண்டத் தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.
0 கவிதை அரசியல்
0 சோறு அரசியல்
0 கை வரை ஓவியங்கள் மதிப்பிழந்து விட்டனவா,.
0 ஆடியோ புத்தகங்கள் இன்றைக்கு ஏன் தேவை
0 தொல்லியல் அரசியலாகி விட்டதா.
0 இன்னும் திருக்குறளை பரப்ப வேண்டி உள்ள அவலம் ஏன்
0 பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா
0 விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா
0 0 பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது
0 மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா
0 சுற்றுச்சூழல் இலக்கியம் போதுமானதாக வருகிறதா
0 திரைப்பட அனுபவங்கள் இலக்கியத்திற்கு சவாலா..
****
புகைப்படம் :
திரைப்பட டைரக்டர் வ.கீரா பேசுகிறார். . மேடையில் சுப்ரபாரதிமணியன், சேவ் இயக்குனர் அலோசியஸ், சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி
புத்தக வெளியீடு: அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.
சாந்தாதத் சிறுகதைகள்
குடும்ப அமைப்பு பாதுகாப்பானது என்று கருதுகிறவர் சாந்தாதத் அவர்கள். குடும்ப அமைப்புக் கொள்கைகளும் , நடைமுறை வாழ்க்கை விஷயங்களும் என்று பலவற்றை கதைகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். .குடும்ப அமைப்பை தாண்டி அவர் வாழும் ஊர் சார்ந்த கதைகளையும் அவர் சுற்றுலா என்ற வகையில் வெளியூர் செல்கிற போது அந்த அனுபவங்களையும் அவரின் பார்வையில் பாடும் நிகழ்வுகளையும் பல சிறுகதைகளாக எழுதி இருக்கிறார்
பெரும்பாலும் நடுத்தர வாழ்க்கைக் குடும்ப உறவுகளை பற்றி எழுதியிருக்கிறார் என்று தோன்றினாலும் செகந்தராபாத் ஹைதராபாத் விளிம்புநிலை மக்களை பற்றியும் எழுதி இருக்கிறார் என்று அடையாளப்படுத்தலாம்
இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அது அடையாளமாக வழங்குகின்றன. வெளி மாநில ஊர்களில் அலையும் போது கண்டடைகிற அனுபவங்களையும் உள்ளூர் அனுபவங்களையும் கதைகளாக்கிக் கொண்டிருக்கிறார்
இது அவரின் ஆறாவது சிறுகதை நூல். அறுபதாவது நூலாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நான் 120 நூல்களை எழுதி விட்டேன்
அவரும் அவ்வளவு அனுபவங்களை வைத்திருப்பவர், அவரும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன்
அனுபவம் தரும் கதைகளையும் மையங்களையும் கொண்டு எழுதி இருக்கிறார் அதில் ஒரு பகுதியாக இந்த கதைகள் உள்ளன
இந்த கதைகளின் தொடர்ச்சியாக நிறைய நாவல்களும் அவர் எழுத வேண்டும்
மொழிபெயர்ப்பில் சிகரம் தொட்டவர், படைப்பிலக்கியத்திலும் சிகரங்களைக் காட்ட வேண்டும் இனியும்.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன் 9486101003
Amirtha issue
சிறுகதை
பனிரெண்டு மணி நேரம் : சுப்ரபாரதிமணியன்
0
”துபாய் கரன்சிக்கு என்ன பெயர் “
‘ திர்ஹாம் “
“ இந்திய பணத்தில் எவ்வளவு இருக்கும் “
“ இருபத்தைந்து ரூபாய் சுமாராய் “
“ ஒரு காபி சாப்பிட அங்கு பத்து துபாய் ரூபாய் என்றால் இந்தியப் பணம் எவ்வளவு ஆகும்”
“ இருநூற்றைம்பது ரூபாய் “
“இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து காபி சாப்பிட மனம் வருமா ‘
“ இந்தியப் பணத்தில் கணக்கு போட்டால் சாப்பிட முடியாது. ,மனம் வராது. திர்ஹாம் நோட்டை சாப்பிடவா முடியும். ஆனால் சம்பளமும் அப்படித்தானே வரும். அதையும் கணக்குப் போட்டுக்கொள் நிலா “
“ சரிதான். அங்கு என்னவெல்லாம் இருக்கிறது பார்க்க “
“ நிறைய இருக்கும். பாலைவனம் எங்குமாயிருக்கும். மூவாயிரம் அடி உயரம் கொண்ட புர்ஜ்கலிபா கட்டிடம்...பாம்ஜிமேரா “
“ அதென்ன.. “
“ மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு...பனை மரம் போல்....பனை உருவத்தில் கட்டிடங்கள். தீவு அது.l அப்புறம் துபாய் மெரினா “
“ மெட்ராஸ் மெரினா ஒரு முறை பார்த்தது. இன்னொரு முறை அங்கே போகணும் அல்லி “
“ போலாம் நிலா. துபாயிலிருந்து வந்த பின் போகலாம் “
“ சினிமாக்களில் காட்டப்படும் பாய்மரக்கப்பலை ஒத்த ஹோட்டல்..”
“ அதுவும் இருக்கும். இப்போதைக்கு ஒரு ஹோட்டல் நம் பசியைத் தீர்க்க தேவை நிலா “
இரவு நேர மின்னொளியில்,ஜொலித்துக்கொண்டிருந்தது கோவை மாநகரம். போக்குவரத்துகள் நிறைந்த அவினாசி சாலையில் தனக்கு முன்னால் சென்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து போய் கொண்டிருந்தது அந்த பல்சர் பைக்.
பைக் ஒரு உயர்தர ஓட்டல் முன்பு நிற்க,பைக்கில் இருந்து இறங்குகிறான் அல்லிராஜ். நிலாவும் இறங்குகிறாள் அவளது பின்புறம் பார்ப்பதற்கு எடுப்பாக கவர்ச்சியாக இருந்தது.அது சிலரின் பார்வைக்குப் படுகிறது. அல்லிராஜ் தனது ஹெல்மெட்டை கழற்றிவிட்டு,நிலாவை பார்க்கிறான்...பின்புறம் கண்ணாடியில் தெரிந்த அளவு அழகாக அவளது முகத்தில் பொலிவு தெரியவில்லை. அவளது முகம் சுமாரான அழகில் தான் இருந்தது. சுமார் முஞ்சி என்று அவளே அவ்வப்போது சொல்லிக் கொள்வாள்.
"வா நிலா" என அழைத்தபடி ஹோட்டல் உள்ளே நுழைகிறான் அல்லிராஜ்.அவனை தொடர்ந்து நிலாவும் உள்ளே நுழைகிறாள்.இருவரும் பேமிலி ரூம் என எழுதியிருந்த அறையின் கதவை திறந்து,உள்ளே சென்று,ஒதுக்குப்புறமான மேஜையில் போய் அமர்கிறார்கள்.
"நிலா என்ன சாப்பிடுறே"
"நீங்க விரும்புறதெ சொல்லுங்க" என சொல்ல,அங்கு வரும் பேரரிடம்,"இரண்டு மசால் தோசை.ஒரு காளான் கிரேவி.அப்புறம் என்ன வேணும் நிலா?" என கேட்க,"இது போதும் " என சொல்ல,பேரரை நோக்கி,"இதக் கொண்டு வாங்க" என சொல்ல,"ஓ.கே" சார் என்றபடி பேரர் செல்வது.
"என்ன நிலா.எதுவும் பேசமா மௌனமா இருக்கெ? நாளைக்கு இந்நேரம் நான் துபாயில இருப்பேன்."
அல்லிராஜ் சொல்ல,நிலா மேஜை மீது இருந்த அவனது கைகளை தனது கைகளால் தழுவது.முகம் வாடி வருந்துவது.கண்களில் நீர் துளிகள் கசிந்தது.
,"நீங்க என்னெ திருமணம் செய்தது என்னோட பாக்கியம்.ஆனா,இன்னைக்கு என்னெ பிரிஞ்சு வெகுதூரம் கடல் கடந்து போகுறதெ நினைச்சா,மனசு வலிக்குதுங்க.",
" அழாதெ நிலா.இரண்டு வருஷம் தானே.கண்மூடி திறக்கும் முன் உன் கண்முன்னே இருப்பேன்.கண்ணெ தொட" என்று நிலாவுக்கு ஆறுதல் சொல்ல,பேரர் ஆர்டர் செய்த உணவுகளுடன் வருவது.
.நிலா தனது கைகளால் அல்லிராஜின் இடுப்பை சுற்றி வளைத்தபடி அவளை நெருக்கினான்.,
" நாம காதலிச்ச காலத்துல,நாம இதுமாதிரி எத்தனமுறை ஹோட்டல்ல வந்து சாப்பிட்டிப்போம்"
," அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல.ஆனா,நாம ரெண்டு பேரும் ஒருநாள் ராத்திரி மழையில நனைஞ்சு, ஒதுங்க இடமில்லாம யாரும் இல்லாத பழைய கட்டிடத்தில ஒதுங்கி,அந்த மழையில் நனஞ்ச உன் உடம்பை பார்த்து,நான் உன்னை கட்டிபிடிக்க,நீ என்னெ கட்டி பிடிக்க,அன்னைக்கு நமக்கு நடந்த்து மட்டும் தான் ஞாபகம் வருது"
அவர்களின் நினைவுகள் அவர்களின் முகங்களின் போக்கை மாற்றி விட்டது. முன்னால் இருந்த உணவுத்தட்டுகளைப் பார்த்தார்கள்.
2
அல்லிராஜ்,நிலாவின் முகத்திலிருந்து,முத்தமிட்டபடியிருக்க , ,நிலா உணர்ச்சி பிழம்பாய் மாறி அல்லிராஜை இறுக கட்டி அணைத்தான்.. அல்லிராஜ் இனி இரண்டு வருடங்கள் நிலாவை தொட முடியாது என்பதனை உணர்ந்தவனாக ஆக்ரோஷத்துடன் இருந்தான் ,அவளும் அந்த முரட்டுதனத்தை விரும்பியவளாக அல்லிராஜீக்கு ஈடுகொடுக்கிறாள்.
,அல்லிராஜ் மிகுந்த களைப்புடன், படுக்கையில் படுக்கிறான்.நிலாவும் பெருமூச்சு விட்டபடி,எழுந்து தண்ணீர் குடிக்கிறான்.
"நிலா,உன்னெ ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா"
, "இது கஷ்டமில்லைங்க.சுகம்.இந்த சுகத்துக்காக எவ்வளவு வேணுமின்னாலும்,கஷ்டப்படலாம்" என சொல்ல,அல்லிராஜ் கடிகாரத்தை பார்க்க, இரவு மூன்று .மணி.
"நிலா,அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்.சீக்கிரம் ரெடியாகனும்" என்றபடி எழுந்து குளிக்க செல்வது.
.
" என்னங்க தினமும் எனக்கு போன் பண்ணணும்.மறந்திடக்கூடாது.நான் உங்க போனுக்காக காத்திட்டு இருப்பேன்.",
"வேல முடிஞ்சதும் அடுத்த வேலெ,என் நிலாவுக்கு போன் செய்யுறதுதான்.எனக்கு இருக்குற ஒரே கவலை அந்த அமாவாசை தான்."
"அமாவாசை வந்தா உங்களுக்கு என்ன?",
"அன்னைக்கு நிலா வானத்துல தெரியாது." என்றபடி நிலாவை முத்தமிட,அதை கண்ணாடியில் பார்த்தான்,டாக்ஸி டிரைவர்,
"சார்.மேடத்தோட பேரு நிலாவா?".
"எப்படி கண்டுபிடிச்சே"
,"நீங்க பேசுன டயலாக்கை வெச்ச தெரிஞ்சுக்கிட்டேன்." , "கில்லாடி தான்யா நீ".,வண்டி,கோவை ஏர்ப்போர்ட் வாசலில் நின்றது..
நிலா காரில் அமர்ந்தபடி கண்களை மூடி ஏதோ யோசனையில் இருக்கிறாள்,
"மேடம்,சார் என்ன வேலைக்கு துபாய் போறார்",
"டெக்ஸ்டைல்ஸ் ஓர்க்தா...நம்ம பனியன் கம்பெனி வேலையை துபாய்ல செய்யப் போறாரு.",
"சரி மேடம். ஆனா நல்ல சம்பளம் கெடைக்கும். கொஞ்சம் மிச்சம் பண்ணலாம்"
“ ஆமா.. திர்ஹாம்லே மிச்சம் பண்ணனும். “
“ திர்ஹாம்ன்னா “
“துபாய் பணத்துப் பேரு..”
3
அன்றைக்கு அவனின் துபாய் பயணம் முழுமையாகவில்லை. தடைபட்டது.
ஒர்க் பர்மிட் சரியாக இல்லையென்று அங்கு சென்ற பிறகு தடுக்கப்பட்டான். திரும்ப வேண்டியதானது.
அதற்குப் பிறகு அவன் முயற்சி செய்யவில்லை மறுபடியும் துபாய் பயணத்திற்கு.
முந்தின பயணத்திற்காக அவன் வாங்கியிருந்த கடனை அடைக்க அவன் நீண்ட நாட்கள் பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியிருந்தது.. ஓவர் டைம் செய்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தான். அப்போதே அவனின் வேலை நேரம் பத்து மணி நேரமாக இருந்தது.
அதன் பின்னால் பனிரெண்டு மணி நேர வேலை என்பது அமுலுக்கு வந்தபோது கடனை அடைக்கிற வகையில் பல திட்டங்கள் பற்றி யோசித்தான். அவற்றை அமல் படுத்தும் போது மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது.
அவள் வேலைக்குப் போன பனியன் கம்பனி டீ சர்ட்டுகளில் அவள் அச்சான திர்ஹாம் நோட்டுகளைக் கண்டாள்.
அதை மெசின் எம்ப்ராய்டரி செய்யும் வேலை அவளுக்கு கச்சிதமாக அமைந்து விட்டது. பனிரண்டு மணி நேரமும் திர்ஹாம் நோட்டுகள் அவள் கண்களிலேயே இருந்தது.
0
uyirmmai
கெடா கறி : சுப்ரபாரதிமணியன்
மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ.
தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.
கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு.
0
” அடுச்சாச்சா.. அடிக்கனுமா ”
”என்ன “
” கட்டிங் அடிச்சாச்சா . அடிக்கனுமா “
சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை உலுக்கி விட்டக் கேள்விதான்.
0
புரட்டாசி மாதம் சுந்தரனை உலுக்கிவிட்டது. ஒரு மாதமாய் அசைவ உணவு உண்ணவில்லை. வீட்டில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது அசைவ உணவு இருக்கும். அதுவும் நண்டும் மீனும் வாங்கி வந்து விட்டால் நல்ல புளி போட்டு இரண்டு தினங்களுக்கு இருக்கும். பிறகு மட்டன், சிக்கன் ஒரு நாள் இருக்கும்
இப்படிச் சாப்பிட்டுப் பழகிய வழக்கமான மாதங்களில், புரட்டாசி மாதம் என்பது எதுவுமே சாப்பிட முடியாமல் செய்துவிட்டது முன்பெல்லாம்
புரட்டாசி மாதங்களில் கட்டுப்பாடு காரணமாக வெளியே சாப்பிட்டுக்கோ என்று மனைவி சொல்லிக் கொள்வாள் அப்படித்தான் அவனும் வெளியே சென்று எதையாவது சாப்பிட்டு திருப்திப்படுத்திக் கொள்வான். ஆனால் ஒரு முறை காடை என்று சாப்பிட்டு போக அது வயிற்றைக் கழுவி விட்டது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது அதனால் அசைவ உணவை வெளியில் சாப்பிடுவதை அவன் தவிர்த்து இருந்தான். பிரியப்பட்டது ஏடாகூடமாய் ஏதாவது ஆகி விடக்கூடாது என்று அவனுக்கு பயம். அவனுடைய பயத்தில் செலவு என்பது மிக முக்கியம்.. கொஞ்சம் சிக்கனக்காரன்தான். அதனால் இது எல்லாம் வேண்டாம் என்று அவனும் தன் விருப்பத்தை மனைவியுடன் சேர்ந்து பயந்து எதிர் கொண்டிருந்தான்.
புரட்டாசி மாதம் முடிகிற போது தான் அந்த விபத்து நடந்தது இரண்டு வீதி தள்ளி இருக்கும் அவன் சித்தப்பா ஒருவர் இறந்து விட்டார். அவர் இறந்த நேரம் சரியில்லை அடைப்பு என்று சொல்லிவிட்டார்கள். அடைப்பு மூன்று மாதத்திற்கு இருக்குமாம். அதற்குப் பின்னால் சாமி கும்பிட்டு விட்டு அசைவ உணவுக்குப் போக வேண்டும் என்றார்கள். வேறு வழி இல்லை.. இன்னும் மூன்று மாதத்திற்கு காத்திருக்க வேண்டுமா என்றிருந்தது ஆனாலும் நல்ல அசைவ உணவு கிடைத்தால் நல்ல ஹோட்டலாக இருந்தால் சாப்பிட்டு விடலாம் என்று தான் அவனுடைய தீர்மானம்., மனைவியும் ஒத்துவந்தாள் அது சரியென்றாள்.
அப்படித்தான் அந்த்த் தீர்மானத்தை மனதை கொண்டு வந்து பார்த்துக் கொண்டே இருந்தான். நல்ல ஓட்டல் எதுவும் அமையவில்லை. இருப்பவை அதிக செலவு வைக்கக் கூடியவை.
அப்போதுதான் பேக்கரி மோகன் குமார் மதுரைக்கு போகலாம் என்று அழைத்தார். ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஆயிரம் ஒரு ஆளுக்கு என்றார். எதற்கு என்றேன் கோவிலுக்கு போகும் செலவு என்றார்
மதுரை என்றால் எனக்கு ஞாபகம் வருபவர் மீனாட்சி தான். பலமுறை போயாச்சு இப்போது தேவையில்லை என்றேன்..
அது இல்ல ,,பாண்டி கோயில் போகலாம்
பாண்டி கோயிலா அது என்ன புதுசா இருக்கு
பாண்டி முனீஸ்வரன் சக்தி வாய்ந்தவர் ஏக கூட்டம் வரும் தினசரி 100, 200 கிடா வெட்டு.. நடக்கும். வாங்க ..யார் வேணா போய் சாப்பிட்டுக்கலாம். அசைவ உணவு நல்ல விருந்து சாமி கும்பிடலாம்
நான் அவர்கூட ஒத்துக் கொள்ளவில்லை பலமுறை மதுரைக்கு சென்று இருந்தாலும் கூட பாண்டி கோயிலைப் பற்றி அவன் கேள்விப்படவில்லை. ஆனால் அவர் அவருடைய தெருவில் உள்ளவர்களுடன் சென்று விட்டு வந்து முனீஸ்வரன் தரிசனம் அபாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பிரசங்கத்தை தவிர்க்க முடியாது. அவருடைய பேக்கரியில் ரசாயன பொருள்கள் கலக்காமல் இனிப்புகள் செய்வார் அதை வாங்குவதற்காக அவ்வப்போது அவன் அங்கு செல்வான் அதனால் மோகன் குமாரின் பேச்சை, பிரசங்கத்தை எந்த வகையிலும் தவிர்க்க முடியாது
ஒரு மாதம் கழிந்திருக்கும் அப்போதுதான் புரட்டாசி முடிந்திருந்தது. அப்புறம் சித்தப்பா மரணமும் சாம்பலாகியிருந்தது..
மதுரைக்குப் போகும் வேறு வேலை அமைந்துவிட்டது சனிக்கிழமை அந்த வேலை.. பாண்டி கோவில் போவதற்காக ஞாயிற்றுக்கிழமையும் ஒதுக்கிவிட்டான் நூறு இருநூறு கிடாவெட்டுகள் நடக்க ஒரு கை அசைவசோறு கிடைக்காமல் போகுமா என்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் பல சமயங்களில் அது மாதிரியும் நடந்திருக்கிறது
சின்னதாராபுரத்தில் கண்மணி வீட்டு விசேஷத்திற்கு போயிருந்தான் அமராவதி ஆற்றின் ஓரத்தில் இருக்கும் கோவிலில் வைத்து அவளின் பையன்களுக்கு மொட்டை அடித்தார்கள் காது குத்தினார்கள்.. பக்கம் இருந்தவர்கள் கெடாவெட்டி பொங்கல் வைத்து விருந்து போட்டார்கள் கண்மணி அசைவிருந்து இல்லை என்றாள். சரி இவ்வளவு பேர் அசைவ உணவு சமைக்கிறார்கள். யாராவது கூப்பிட மாட்டார்களா அல்லது எந்த பந்தியிலாவது போய் உட்கார்ந்து கொண்டால் யார் என்ன என்று கேட்கவா போகிறார்கள்என்று நினைத்தான்.
ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. யாரும் கூப்பிடவில்லை அவனும் எந்த பந்தியிலும் போய் உட்காரவில்லை. பல பந்திகள் நடந்து கொண்டுதான் இருந்தன அதுவே மனதில் வந்து தொண்டைக்குழிக்குள் நின்று கொண்டிருந்தது
பாண்டி கோவிலுக்கு போக மாட்டுத்தாவணியில் இருந்து இலவசப் பேருந்துகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்றார் மோகன்குமார். அல்லது ஆட்டோவுக்கு 20 ரூபாய் போதும் .ஷேர் ஆட்டோவில் போய்விடலாம் என்று சொல்லி இருந்தார்
அவன் மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்க்குப் போனபோது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவனை தரையில் கிடைக்கும் எச்சில் இலையைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.. அப்படி எல்லாம் ஆட்டோ போகாது அங்கெல்லாம் பஸ் போகாது என்றார்கள். பஸ் எங்கிருந்து போகும் என்று கேட்டபோது வெகு தூரத்தை காட்டினார்கள் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இரண்டு மூன்று பூக்கள் விற்கும் பூக்காரிகளிம் கேட்டான் அவர்கள் அருப்புக்கோட்டை பஸ் போகும் என்றார்கள்.. அது பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அந்த இடத்தை தேடி போனான். புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பேருந்து அவன் கவனத்திற்கு வந்தது.. அங்கிருந்த காக்கி சட்டைக்காரரிடம் போய் பாண்டி கோவில் போக வேண்டும் என்றான் இந்த வண்டி போகும் என்றார் அவர். ஆனால் வண்டியில் போகும் இடம், நிறுத்துமிடம் என்ற விபரங்களில் இடங்களில் பாண்டி கோவில் இல்லை. ஆனாலும் அவர் காக்கி சட்டை போட்டவர் அதிகாரப்பூர்வமாக தான் சொல்கிறார் என்பதாய் யூகித்துக் கொண்டு அவனும் ஏறி உட்கார்ந்தான்
அந்த நிறுத்தத்தில் இறங்கிய போது கோவிலுக்கு போய் சேர முடியுமா என்ற வகையில் கூட்டம் அபரீமிதமாக இருந்தது அந்த இடத்திற்கு முன்பே ஒரு கிலோமீட்டர் பேருந்துகள், வாகனங்கள் அணிவகுத்து சாலையின் இரு பக்கங்களிலும் நின்றன பெரிய கோயிலாக தான் இருக்கும் பெரிய விசேஷமாகத்தான் இருக்கும் என்பதை உறுதி செய்து கொண்டான்
அவன் நுழைந்த அந்த மண்டபத்தில் அப்போது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர்கள் பக்கம் போன போது இலைகளில் நான்கு விதமாக அசை உணவுகளும் தென்பட்டன.. நல்ல விருந்துதான் என்று நினைத்தான். ஆனால் யார் போடுகிறார்கள்.,. என்ன போடுகிறார்கள் என்று தெரியவில்லை. வலது பக்கத்தில் ஒரு மேசையில் உட்கார்ந்து இருந்தவர் பெரிய நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார் பணத்தை வாங்கி போட்டுக் கொண்டிருந்தார் அது அன்பளிப்பாக இருக்கும் என்று நினைத்தான். .அப்படித்தான் மெல்ல தலை நீட்டி பார்த்தபோது அந்த நோட்டில் 501, 1000, 1051 என்று நன்கொடை எண்கள் இருந்தன நூறு இருநூறு என்று எந்த நன்கொடையும் இல்லை. ஏதோ விசேஷம் என்று மனதில் கொண்டான்
கோயிலுக்கு போனால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும்.. சாப்பிடத்தான்.. ஏதாவது அசைவ வழி கிடைக்கும் .. கோயில் எங்கே இருக்கிறது என்று ஒரு கிழவியிடம் கேட்டான். அந்த கிழவி வாயில் இருந்த பற்களை எல்லாம் இழந்து வெறும் சொற்களை மட்டும் காற்றாய் தருபவளாக இருந்தாள். அவள் கையை நீட்டி அடுத்த வீதியில் இருக்கிறது என்றாள்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெயிலில் இங்கே வருவதற்கு சிரமப்பட வேண்டியது அதிகம்தான் . இன்னொரு தெருவை கடந்து போக வேண்டுமா என்பதில் அயற்சி வந்து விட்டது வெளியே வந்து குறுக்காக தென்படும் ஒரு மண்பாதையைப் பார்த்தான் அங்கு விறகு கட்டைகள் எரிந்து கொண்டிருந்தன தீயில் காய்ந்து கொண்டிருந்த பாத்திரங்கள் சமைக்க தயாராக இருந்த அசைவ உணவு வகைகள் என்றெல்லாம் அவன் கண்ணில் பட்டன.. சாக்கு முதல் பிளாஸ்டிக் தட்டிகள் வரை தரையில் கிடக்க அவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும் நிழல் தேடியும் பலர் இருந்தார்கள்.
சட்டெனக் கடந்து போன போது அந்த பாண்டி கோயில் குறுக்காக வந்துவிட்டது அவனுக்கு அதிர்ஷ்டமாகத் தான் தோன்றியது
வெயிலில் அலைந்து திரிய வேண்டியதில்லை. அவனுக்கு முன் இருந்த கூட்டம் எங்கு போகிறது என்று தெரியவில்லை எல்லோர் கைகளிலும் தட்டுகள். தட்டுகளில் பெரிய பெரிய மாலைகள். அந்த மாலைகள் விற்கும் பூக்கடைகள் ஏராளமாக கண்ணில் பட்டன. வழக்கமான தேர்த்திருவிழாவுக்காக இருக்கும் கடைகள் அங்கே இருந்தன. அந்தக் கூட்டம் எங்கே சென்று முடிகிறது என்று பார்ப்பதற்காக அவன் புழுதி பறக்கும் அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தான்.
கும்பல் போய் சேரும் இடத்தில் ஒரு முறையான வரிசை வந்து விட்டது அந்த வரிசை பாம்பு போல் பல விதங்களில் வளைந்து போனது .எங்கேயாவது போய் கூட்டிச் செல்லும்.
இறுதியில் உள்ள கறபகிரகம்தான் பாண்டி முனீஸ்வரனின் ஸ்தலமாக இருக்கக்கூடும் என்று நினைத்தான்
ஆனால் போகிறவர்கள் செருப்புகளை தாறுமாறாக விட்டுப் போயிருந்தார்கள். இந்த செருப்புகளை வந்து மறுபடியும் தேர்வு செய்ய முடியுமா. கொஞ்ச தூரத்தில் அவனை தடுத்து நிறுத்திய வயதானவர் உனக்கெல்லாம் அறிவு இருக்கா என்று கேட்டார். அவன் புரிந்து கொண்டான். .செருப்பைப்போட்டு அவன் கோயிலுக்குள் வந்து விட்டதை பார்த்தவர் சத்தம் போடுகிறார் என்று தெரிந்தது.. வேறு வழியில்லாமல் பின்னோக்கி வந்து கொஞ்சம் தூரம் நடந்து போனான் செருப்பை பாதுகாக்க வேண்டும். 699 ரூபாய் செருப்பு. அதைப் பாதுகாக்க ஏதாவது இடம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் அந்த இடத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
10 , 15 பேர் தரையில் உட்கார்ந்து கொண்டு எதையோ வெட்டுகிற பாவனையில் இருந்தார்கள் அருகில் சென்று பார்த்த போது அவர்கள் கோழிகளையும் ஆடுகளையும் வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆட்டுத்தலைகளை கருக்கிக் கொண்டிருந்தார்கள் சிலர்.
ஆட்டின் தலை கருகிற வாசம் எங்குமாக இருந்தது கருத்தத் துகள்கள் உட்கார்ந்திருந்தவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. ஆட்டுக் கழிவுகளின் மத்தியில் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.
அப்பா வீட்டில் தலைக்கறி செய்கிற போது ஞாபகமாய் அடுப்பின் பக்கம் போய் உட்கார்ந்து தீயில் கருக்குவார்.. .கத்தியால் சுத்தம் செய்வார். இங்கே அடுப்பு பூந்துருத்தியாக இருந்தது. ஒருவர் சக்கரத்தை சுற்ற பூந்துருத்தி உலை காற்று தீயை வெளி கொட்டிக் கொண்டுள்ளது.. அதை எடுத்து சிலர் கழுவிக்கொண்டிருந்தன. சீக்கிரம் ஆட்டுத்தலைகள் கருகி தூரம் போய் விழுந்தன. அவற்றை சுரண்டி இன்னொருவர் சுத்தம் செய்தார்.. இன்னொரு புறத்தில் ஆட்டின் பாகங்கள் சில துண்டுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முழுக்கோழிகள் தோல்களை இழந்து நிர்வாணமாகிக் கொண்டிருந்தன எல்லோரும் கழிவுகளுக்கு மத்தியில் தான் இருப்பதாக தோன்றியது.
இப்போதெல்லாம் இந்த கோழி கழிவுகளை வாங்கி தின்ன வடநாட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள் கோழி கழிவுகளை எடுத்து சுத்தம் செய்து மற்றும் குடல்களை சுத்தம் செய்து தனி சமையல் பாவமாக அவர்கள் ஆக்க பழகி இருந்தார்கள்
கோழிகளின் கழிவுகளை சிக்க்னம் கருதி வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரில் வாங்குவதைக் கவனித்திருக்கிறான். அப்படி இந்த ஊரில் கூட வடநாட்டு தொழிலாளர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இது உணவாகக் காத்திருப்பதாக நினைத்தான். அவர்கள் இந்த ஊர்களிலும் நிறைய இருக்கிறார்கள்.
இங்கே கிடா வெட்ட, சமையல் செய்ய இடம் வாடகைக்கு தரப்படும் என்ற பலகை வெளிச்சம் போட்டு காட்டியபடி இருந்தது. அதில் இரண்டு மூன்று எண்கள் இருந்தன.. அவன் அந்த எண்களை கைபேசியால் படம்பிடித்தான் அப்போது உள்ளே இருந்து வந்தவர் எதுக்கு படம் பிடிக்கிறாய் என்றார் நம்பர் வேண்டி இருந்தது என்றான். எந்த ஊரு.. கோயம்புத்தூர் பக்கம். என்னன்னு பார்க்க வந்தேன்
” பாக்குறீங்க என்ன இருக்கு பாக்க “
“ இல்ல கடா வெட்டணும் அதை பார்க்க வந்தேன் அதான் பாத்துட்டு போயிட்டு ஊர்ல பெரியவங்க கிட்ட சொல்லணும்”
“ அப்படியா சரிங்க “
“ இங்க கிடா வெட்டி சமையல் பண்றதுக்கு இடம் கிடைக்குதா” ” அதுக்குத்தா நான் இருக்கேன் சமையல் பண்ணிட்டு இருக்காங்க பாருங்க. அந்த இடத்துக்கு 2000 ரூபாய் வாடகை காலையிலிருந்து சாயங்காலம் வரை வச்சுக்கலாம். கோழி வெட்டலாம். அறுக்கலாம். ஆடு வெட்டலாம் சமையல் பண்ணலாம் சாப்பிடலாம். வசதி இருக்கு . சீட்டு ஆடக் கூடாது.. எவ்வளவு பேர் வருவாங்க “
“ ரெண்டு பஸ் அளவு. சமையல் பண்ண ஆள் கிடைப்பாங்களா”
” வழக்கமா அஞ்சு பேர் வருவாங்க 12,000 ரூபா. கெடா கிளின் பண்ண எட்டு நூறு ரூபா . எப்போ வருவீங்க “
“ஊருக்கு போய் பெரியவங்க கிட்ட கேட்டு தான் சொல்லுவேன்: ”
“சரி உட்காருங்க எங்க நம்பரை எடுத்துக் கொண்டு போங்க ”அவனின் எண்ணை எழுதினான் . அவன் வருகிறபோது வாங்கிய தனியார் பேருந்தின் பயணச்சீட்டு அதற்கு பயன் உள்ளதாக இருந்தது. அதில் 10 எண்கள் வருகிறதா என்று அந்த நிலத்துக்காரர் எண்ணி எண்ணிப் பார்த்தார்.
“ 2000 ரூபாய் வாடகை .ஒரு 500 ரூபாய் குறைக்கலாம் சமையல் ஆட்களுக்கு 12,000 ரூபாய். அதிலெ 1000 குறைக்கலாம் அவ்வளவுதான் பண்ண முடியும் வேற ஒன்னும் பண்ண முடியாது “
“செலவு பெருசா இருக்கு இல்ல”
“ ஆமா நல்ல காரியம் பண்றது எல்லாம் செலவு கணக்குலெ வராது செலவு பண்ணி தான் ஆகணும் கெடா வெட்டி பொங்க வைத்து நாலு
பேருக்கு சமைத்து போட்டா அதுல வரும் புண்ணியத்துக்கு ஈடு எங்க இருக்கு. அதுவும் அந்த முனீஸ்வரன் அருளாலே எல்லா கஷ்டமும் தீர்ந்து போயிடாதா”
“ ஆனா செலவு தான் அதிகமா இருக்கு. சமையல் பாத்திரங்கள் ”
“ அது அந்த 12000 ரூபாய்லே வந்துரும் உங்களுக்கு வேண்டிய சமையல் பாத்திரங்களை நீங்க வாங்கிக்கலாம்”
அவன் சுற்றிலும் பார்த்தான் பல குழுக்கள் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். சில பேர் பலவகையான பழைய பிளக்ஸ் போஸ்டர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
“ சீட்டாடலாமா “
“ அதெல்லாம் பண்ண முடியாது தண்ணி அடிக்கிறது இதெல்லாம் முடியாது”
“ எங்க ஆளுங்க தண்ணி கூட அடிக்காம இருப்பாங்களா”
“ அது எங்காவது போய் மறைவா பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.. பொதுவான இடத்துல பண்ணக் கூடாது எப்ப கெடா வெட்டு வக்கிறீங்க சொல்லுங்க “
“ நான் ஊருக்கு போயி மத்தவங்க கிட்ட பேசிட்டு சொல்றன்”
“ எப்ப வருவீங்க எத்தனை பேர் “
“ ஒரு பஸ், ரெண்டு பஸ்ஸோ. எவ்வளவு ஆள் சேர்ராங்களோ அதைப் பொருத்து .. சரி இங்க எல்லாம் வந்து பொதுவான சமையல் இல்லையா.. பொதுவா சமைக்கிறங்க எடத்திலெ சாப்பிட வசதி இருக்கா”
“ கோவிலில் அன்னதானம் போடுவாங்க ஒரு அம்பது பேருக்கு டோக்கன் கொடுப்பாங்க . அவ்வளவுதான் ஐம்பது பேருக்கு முடிஞ்சா அவ்வளவுதா “
பத்து நூறு கிடாய் வெட்டி சுற்றிலும் சமைக்கிறார்கள்
கோவிலில் அன்னதானம் என்றால் அதுவும் அசைவ உணவாகத் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அந்த அன்னதான உணவு நிச்சயம் ருசியாகத்தான் இருக்க வேண்டும் ஆகவே இன்றைக்கு அசைவ உணவை ஒரு பிடி பிடித்து புரட்டாசி மாதம் விட்ட ருசியை ஐப்பசியில் தொடரலாம் என்று நினைத்தான்
“ அந்த அன்னதானத்துக்கு எல்லாம் எப்படி போலாம்”
” கோவிலுக்குள்ள போனீங்கன்னா இடது புறத்திலெ இருக்கு கடைசியில்”
“ அன்னதானத்துக்கு தான் வந்தீங்களா ”
” இல்ல தெரிஞ்சிக்கலாம்னு. இங்க போன 100, 200 கெடா வெட்டுவாங்க.நீங்க வேணும் சாப்பிடலாம் யார் வேணாலும் சாப்பிடலாம்ன்னு சொன்னாங்க . அதுதா “
“ போய் பாருங்க “
அவனுக்கு செருப்பு ஒரு பெரிய தடையாக இருந்தது இதை எங்கே விட்டுவிட்டு செல்வது என்பது தெரியவில்லை. எல்லா இடங்களிலும் செருப்புகள் குவிந்திருந்தன எண்ணும்படி அவன் கண்களில்பட்டது. . இந்த செருப்புகளை எல்லாம் தாண்டி அவன் செருப்பை பாதுகாப்பது கஷ்டமான வேலை.699 ரூபாய்க்கு வாங்கியது.
இடது புறம் சென்ற போது கோயிலின் இன்னொரு வாசல் வந்து விட்டது செருப்பை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவன் செருப்புடனே நடந்தான் எங்கு பார்த்தாலும் செருப்புகள் அவற்றுள் தன் செருப்பை மறுபடியும் தேடுவது சிரமமாகும் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.அதனால் காலில் இருப்பதே பாதுகாப்பு என்று நினைத்தான்.
அறுக்கப்படுவதற்காக கட்டப்பட்ட கோழிகள் கரகரப்புச் சப்தத்துடன் விழிகள் வெறிக்க கால்களை உதறியபடி இருந்தன. கயிறுகள் கால்களை நகர முடியாமல் செய்தன. பல கம்பிக் கூட்டுக்குள்ளும் இருந்தன. எங்கு பார்த்தாலும் கழிவுகள் இருந்து கொண்டே இருந்தன.மாமிச கழிவுகளை மிதிக்காமல் செல்வது பெரிய சாசகம் என்பது போல் அவன் நடந்தான்
கிணறுகளும் அதனடியில் சமையல் பாத்திரங்களும் தனித்தனியாக தென்பட்டன. தனியாக இல்லாதபடி மனிதக்கூட்டம் வேறு திசையை நோக்கிப் போய்க்கொண்டேயிருந்தது.. எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவன் அந்த எல்லையை ஜாக்கிரையாகக் கடந்து கொண்டிருந்தான் அப்போதுதான் அன்னதானம் மண்டபம் என்று தென்பட்டது சரியான இடத்துக்கு தான் வந்து விட்டோம் என்று நினைத்தான் அன்னதான மண்டபத்திற்கு முன்னால் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். பெரிய கூட்டம் இல்லை ஆகவே வரிசையில் நிற்பது பெரியதாய் சிரமமாக இருக்காது என்ன நினைத்தான்.. தூரமிருந்து பெண்களின் வீரிடல் இருந்து கொண்டேயிருந்தது.
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஒரு மணி என்பது இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் அதற்குள் ஆசுவாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று அவன் நினைத்தான்.
மதியம் ஒரு மணி சீக்கிரம் வந்து விட்டது. டோக்கன் பெற்றிருந்த சில பேர் முன்பாக சென்றார்கள் அவன் முறை வந்தபோது அந்த அமர்வு முடிந்து விட்டது என்றார்கள்
” அவ்வளவுதானா ”
“இல்ல இன்னொரு 50 டோக்கன் கொடுப்போம். இன்னும் அரை மணி நேரம் காத்திருக வேண்டும்”
ஆனால் அதற்குள்ளாகவே இன்னொருவர் வந்து டோக்கன் கொடுத்து இங்கு எல்லாம் சாப்பிட வாங்க என்றார்
ஒரு நல்ல அசைவ உணவுக்காக அவன் நின்று கொண்டிருந்தான்
அப்போதுதான் முனீஸ்வரன் ஸ்தலத்திற்கு செல்லும் வரிசையை முழுமையாகப் பார்த்தான். பெண்கள் கைகளில் தட்டுகளும் பூஜை சாமான்களும் இருந்தன. ஏதாவது ஒரு கூச்சல் இருந்து கொண்டே இருந்தது அவையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கூச்சலாக இருந்தன. சாமி வந்துவிட்டது ஆடுகிறார்கள். இந்தக் கூச்சலை தவிர்த்து விட்டு அவன் தலை குனிந்து கொண்டாலும் அந்த கூச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது .அந்த கூச்சல் ஒருவருக்கான கூச்சல் அல்ல .பலருக்கான கூச்சல். ஒருவர் சாமி வந்து ஆடும் போது கூச்சலிடுவதும் அது வீழ்ந்து விட்டால், அல்லது முடிவுக்கு வந்து விட்டால் இன்னொரு வீரிடல் தொடங்குவதுமாக சாதாரணமாகியது
இந்த வீரிடலில் இருந்து தப்பிப்பது இந்த அன்னதானத்தை தவிர்க்க செய்து விடும் என்று காதுகளில் பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் வேர்வை வழிய முனீஸ்வரன் ஸ்தலத்திற்குப் போகிற வரிசை ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் சின்ன வரிசை அன்னதான மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அவன் தன் முன்னால் வந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான். அதில் முட்டை கோஸ் பொரியல் இருந்தது இன்னொருவர் கையில் இருந்த இளம் நெஞ்சுக் கத்திரிக்காய் அவனுக்கு பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.
என்ன அசைவ சமையலாக இருக்கும் என்றால் இப்படி முட்டை கோஷ் கத்திரிக்காய் இங்கு எதற்கு வருகின்றன. இந்த சுற்று முடிந்து விட்டால் அசைவ உணவு என்று நினைத்தான்.
பிறகு சாதம் போடப்பட்டது சாம்பார் பருப்பு ஊற்றப்பட்டுள்ளது அப்போதும் அவன் அடுத்த ரவுண்டு அசைவ உணவாக தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினான்..கத்தறிக்குழம்பு. ரசம் வந்துவிட்டது பக்கத்தில் ஒருவர் மோர் வாங்கி விட்டார். இதற்கு பிறகும் நப்பாசை இருந்தது அசைவம் வரும் என்று. கடைசியில் கறி வருவலோ வேற ஏதாவது வரும் என்று இருந்தான் ஆனால் எதுவும் இல்லை. எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அவனுக்கு யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
நூறு டோக்கன் முடிந்து விட்டதால் அங்கிருந்த கும்பல் மெல்ல வடிய ஆரம்பித்தது
கைகழுவும் போது என்ன அசைவ விருந்து எல்லாம் இல்லையா என்றான். பக்கமிருந்த நடுத்தர வயதுக்காரர் கைகளை துடைத்தபடி ”கோயில் அன்னதானம் இங்கே. எப்படி அசைவு விருந்து எல்லாம் வரும். வெளிய போனா போடுவாங்க “ என்றார்.
ஆஹா உண்மை முன்பே தெரிந்திருந்தால் கோயில் சுற்றி இருக்கும் இடங்களுக்குப் போயிருக்கலாம். அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் இப்போது கூட அவருடைய வயிறு மூன்றில் ஒரு பங்கு காலியாக தான் இருந்தது. சைவ உணவு என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டது. நல்லது என்று பட்டது.. வெளியில் போய் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்து காலியாக வைத்துக் கொண்டது கூட நல்லது. அடுத்த சுற்றாய் அசைவ உணவு எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்
பல கல்யாண மண்டபங்கள் இருந்தன பல உணவுக் கூடங்கள் இருந்தன அவற்றையெல்லாம் கடந்து அவன் போனான் எல்லாவற்றிலும் குறிப்பிடப்பட்ட சில பேர் இருந்தார்கள் சில இடங்களில் அவனும் நின்று பார்த்தான். யாராவது கூப்பிடுவார்களா அல்லது உள்ளே போகலாமா என்று யோசித்தான். அப்படியெல்லாம் போனால் விட்டுவிடுவார்களா .கேவலமாகி விடும் என்று அவன் மெல்ல நடந்து கொண்டே இருந்தான். வாய்விட்டு கேட்கலாம் என்று நினைத்தான் ஆனால் வருகிறவர்கள் வணக்கத்தை பெற்றுக்கொண்டு சாப்பிடும் இடங்களுக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு தான். ஆனால் இதெல்லாம் ஒரு அழைப்பால் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படி அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் யாரும் போய் சாப்பிடலாம் அசைவ உணவு கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனைப்போலவே சிலர் பார்வையில் ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.
அவன் இப்படித்தான் போன மாதம் பெங்களூர் சாய்பாபா மருத்துவமனை சென்றிருந்தான். அவருடைய நண்பர் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்கு எல்லாமே இலவசமான சிகிச்சை என்று அவரை அழைத்துக்கொண்டு போயிருந்தான் அவருக்கு வயது 85 அவரை அழைத்துக்கொண்டு போவது, பேருந்து ஏறுவது, தொடர்வண்டியில் ஏறுவது இதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது
பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது மட்டும் அப்போது சுவாரஸ்யமாக இருந்தது கிருஷ்ணராஜ சாகர் இணையத்தில் இறங்கி வீதிகளை கடந்து மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்று இருந்தான். அப்போது கூட வந்து இருந்த நண்பர் நடப்பதற்கு சிரமப்பட்டார். மூச்சிரைப்பு ஏற்பட்டது. ஆட்டோவிற்கு 400 ரூபாய்க்கு குறைவாக யாரும் கேட்கவில்லை.
சாய்பாபா மருத்துவ மனைக்கு பத்து மணிக்கு சென்றான் ஆனால் அங்கே மருத்துவமனை உள்ளே விடவும் மறுத்தார்கள் அங்கிருந்த பலகையில் ஒரு எண் இருந்தது அந்த எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள். அந்த எண்ணில் உங்களுடைய வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கன்னடத்திலும் இந்தியிலும் திரும்பத் திரும்ப சொன்னார்கள்.
“ அட்மிஷன் எல்லாம் கிடைக்காதா”
“ அதெல்லாம் கிடைக்காது . நாளாகும். தகவல் வரும் “
” போனா உடனே அட்மிட் பண்ணிக்குவாங்க சொன்னாங்க”
“ அந்த டோக்கன் முறை எல்லாம் போயிடுச்சு இப்போ போன்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கு தகவல் வரும் போங்க “
திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளைக் கேட்டான் ஆகவே அந்த அந்த எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த எண்ணில் பதிவு செய்தான். திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட குரல்கள் தான் கேட்டன நண்பர் நாம் காத்திருந்து இங்கே அறை போட்டுத் தங்கி என்ன பிரயோஜனம் ஊருக்கு போய் விட வேண்டும். பின்னர் . தகவல் தருவார்கள் என்று சொல்கிறார்களே என்று சொன்னார் அவர் மனதில் செலவாவது ஓடிக்கொண்டிருந்தது இந்த மருத்துவ செலவுக்காக அவர் பல நண்பர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கித் தான் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பலாம் என்ற தீர்மானத்தை அவர் சொல்லிவிட்டார்.
சாய்பாபா மருத்துவமனைக்கு போனால் எல்லாம் இலவசம், சிகிச்சை இலவசம், உடனே எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.. பயனில்லாமல் போய் விட்ட்து.பல முறை பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. சாயிபாபா நண்பரைக் கைவிட்டார்
. அப்படித்தான் இப்போது பாண்டி கோவில் வந்தால் எங்கு போனாலும் அசைவ உணவு கிடைக்கும் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தததும் ஞாபகம் வந்தது .
சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று அவனை கேட்ட ஓரிருவர் பசியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் எதிரில் தென்பட்ட திருமண மண்டபங்களை காட்டினார்கள். ஆகவே அவர்கள் அங்கு போய் கேட்பதும் ஏமாறுவதுமாய் பின்னர் நகர்ந்து போவதும் தெரிந்தது.
. ஆனால் இது எல்லாம் தாண்டி அசைவம் சாப்பிடாமல் போய்விட முடியுமா என்பது மனதில் வந்தது ஏதாவது ஹோட்டலுக்கு புகுந்து தான் சாப்பிட்டாக வேண்டும். இந்த புரட்டாசி மாத ஆசையை தவிர்க்க முடியாது. ஆனால் பக்கத்தில் எங்கும் ஹோட்டல் என்பது தென்படவில்லை.. எல்லாம் கெடா வெட்டுச் சமாச்சாரங்கள்.
தூரத்தில் தெரிந்த பசுமையான மரங்கள் இந்த வெயில் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசம் படுத்தும் என்று நினைத்தான். என்ன மரம் என்று பார்க்க முடியாதபடி வெயிலில் கண்கள் கூசின. கொஞ்சம் நகர்ந்த போது பார் என்று இடப்பட்டிருந்த பெரிய போர்டு அவனின் கண்களில் பட்டு ஆசுவாசத்தை கொண்டு வந்தது. சரிதான் செலவு செய்து அசைவ உணவை சாப்பிட்டு புரட்டாசி மாதக் கனவை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று நகர்ந்தான்
அப்போதுதான் அது அரசு மதுபான கடையல்ல தனியார் மதுபான கடை ஏதோ கிளப் என்று போட்டிருந்தது தெரிந்த்து.
அவர் கைக்கு வந்த பீர் சில்லென்று இல்லாமல் சாதாரணமாக இருந்தது. ரொம்ப கூட்டம்..இந்த ஆறிப்போன பீரங்கி குடிப்பதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டுமா இன்னும் ஆறிப்போன கோழிக்கறி சாப்பிட தான் வந்திருக்கிறமா என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. டெட் பீர், டெட் சிக்கன் ..
அவன் எதிரில் வந்து உட்கார்ந்தவன் ஒரு தனி டம்ளரில் ஐஸ் கியூப்கள் வைத்திருந்தார். அவன் அதிலிருந்து இரண்டை எடுத்துக்கொண்டு பீர் பாட்டிலில் போட முயற்சி செய்தான் அது பாட்டிலுக்குள் செல்லாமல் அதன் முகப்பில் நின்றது. உள்ளங்கையால் குத்தி சிறு துகள்கள் ஆக்க ஆசைப்பட்டான். ஆனால் அவை அவள் கைகளுக்குள் அகப்படாமல் தப்பித்து வெளியே போய் விழுந்தன
“ உங்களை எங்கையோ பாத்திருக்கேனே “
“சாப்புட இடம் தேடிக்கொண்டிருந்தேன் மனைவியுடன்.
” நீங்களும் அலஞ்சீங்க “
“ இல்லெ இல்லெ , நான் ஒன்னும் அலையலே. வேடிக்கை பார்த்தேன். நீங்க சாப்பிட்டிங்களா “
“ இல்லையில்லை. அலஞ்சு பாத்தம். யாரும் வான்னு கூப்புடலே. அப்படி பொதுவா போட ஆள் இல்லே “
“ ஆமாம் . அப்ப நீங்களும் சாப்புடலே.. மனைவி “
“ அவங்களும் சாப்புடலே “
“இப்போ அவங்க எங்க”
“ வெளியிலெ வெயிட் பண்றாங்க . இளனி குடிச்சாங்க . எண்பது ரூபா வாங்கிட்டான் “
“ அவங்களுக்கு இளனி. உங்களுக்கு பீர்”
“ ஆமா”
“ அப்புறம் சாப்பாட்டுக்கு எடம் தேடணும்”
“ பக்கம் ஓட்டல் ஒண்ணும் காணம் “
“ பத்து நூறு கெடா வெட்டற எட்த்திலெ ஓட்டல் இருக்குமா “
” சரி நான் தனியா போய் குடிக்கறன். டிஸ்டர்ப் ஆயிட்டன் “
“ அசைவம் கெடைக்காத்துனாலயா “
“ ஆமா. இங்க அசைவம் கெடைக்கும்.மனைவிக்கும் வாங்கிட்டு போகணும்”
அப்போது அங்கு வந்த சர்வரிடம் கொஞ்சம் ஐஸ் குயூப் வேண்டும் என்றான்
“ வேற என்ன வேணும் சிக்கன் மசாலா, , பிரைட் அயிட்டம் வேண்டாமா “
“ வேண்டாம் இது போதும் “
சின்ன சின்னதான ஐஸ் கூப்புகளை எடுத்து அவன் பாட்டில்கள் போட்டு பாதி தீர்ந்திருந்த பீர் பாட்டிலைக் குளுமையாக்கிக் கொண்டான்
அப்படி குளிர்ந்த பீர்குடிப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிக்கன் அளவும் அதிகமாக தான் இருந்தது எலும்பு அதிகமாகத் தான் தென்பட்டது. எப்படியோ ரொம்ப நாளைக்கு பிறகு கறி சாப்பிடுகிற ஆசை தீர்ந்தது என்றபடி அவன் சர்வரிடம் ஒரு சிகரெட் கேட்டான்
“ என்ன சிகரெட் எவ்வளவு ரூபாய் சிகரெட் ”
“ அதெல்லாம் தெரியாது எப்போவோ வாயில் வைக்கிறது உண்டு. ஏதாச்சும் “
“ சரி ”
சிகரட்டை வாயில் வைத்து ஊதிய போது அது கொடுத்த வலுத்த இருமல் அவன் சாப்பிட்ட அசைவத்தை வெளியே கொண்டு வந்து விடும் போல் இருந்தது
0 subrabharathi@gmail.com
திருச்சூர்/ திரூர் : சென்றிருந்தேன் எழுத்தச்சனுக்கு அஞ்சலி செய்யும் விதமாக..நல்ல சூழல் ( இயற்கை மற்றும் இலக்கியச் சூழல் )
திரூர் துஞ்சன் பறம்பு என்பது கேரளாவில் உள்ள திரூரில் அமைந்துள்ள ஒரு முக்கிய இடமாகும். இது மலையாள மொழியின் தந்தை என்று கருதப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் அவர்களின் பிறப்பிடமாகும். இங்கு எழுத்தச்சனின் நினைவாக ஒரு நினைவிடம் உள்ளது. மேலும், துஞ்சன் பறம்பில் ஒரு வருடாந்திர இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது, மேலும் "வித்யாரம்பம்" போன்ற பல சடங்குகள் இங்கு நடைபெறுகின்றன.
• வரலாற்று முக்கியத்துவம்:
இது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் பிறப்பிடமாகும்.
• இடங்கள்:
• எழுத்தச்சன் பயன்படுத்திய இரும்பு எழுத்தாணி.
• அவர் சீடர்களுக்கு கற்பித்ததாகக் கூறப்படும் பழைய இஞ்சா மரத்தடி.
• அரிதான நூலகங்களைக் கொண்ட ஒரு நினைவு மண்டபம்.
நிகழ்வுகள்:
• டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் வாராந்திர இலக்கிய விழா.
• "வித்யாரம்பம்" போன்ற குழந்தைகள் தொடர்பான கற்றல் விழாக்கள், குறிப்பாக விஜயதசமி அன்று.
துஞ்சத்து எழுத்தச்சனின் பிறப்பிடமான திரூரில் உள்ள துஞ்சன் பறம்பு மைதானத்தில் துஞ்சன் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
மலையாள மொழியின் தந்தையாகக் கருதப்படும் துஞ்சாத்து எழுத்தச்சனின் பிறப்பிடமான திருரூரில் உள்ள துஞ்சன் பறம்பு மைதானத்தில் துஞ்சன் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. பறம்பு அல்லது சதி 1964 ஆம் ஆண்டு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு இப்போது ஒரு முழுமையான ஆராய்ச்சி மையமாக செயல்படுகிறது. நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சொத்து, அறக்கட்டளை அலுவலகம், ஆராய்ச்சி மையம், இலக்கிய அருங்காட்சியகம், கிராந்தபுரா (கையெழுத்துப் பிரதி நூலகம்), உட்புற ஆடிட்டோரியம் மற்றும் மாநாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் வெளிப்புற மேடை, சரஸ்வதி மண்டபம், குழந்தைகள் நூலகம், விருந்தினர் அறைகள், ஓய்வு அறைகள் மற்றும் திறந்தவெளிகளையும் கொண்டுள்ளது.
மலையாள மொழியின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் இலக்கிய அருங்காட்சியகத்தில் உள்ளன. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் தொடர்புடைய பல்வேறு கருவிகள் மற்றும் கட்டுரைகளை இங்கே காணலாம். மலையாள மொழியின் வரலாறு பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தியது முதல் அரிதான, பழைய மலையாள புத்தகங்கள் வரை, நூலகத்தில் ஒரு பெரிய தொகுப்பு உள்ளது.
இந்த கிராந்தபுரம், பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட தனித்துவமானது. எழுத்தச்சன் எழுதப் பயன்படுத்திய இரும்பு எழுத்தாணி மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவர் தனது கவிதைகளை இயற்றிய பண்டைய காஞ்சிரா மரம் இன்னும் உள்ளது. இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையின் போது கற்றலின் தொடக்கத்தைக் குறிக்கும் வருடாந்திர வித்யாரம்பம் விழாவும், துஞ்சன் திருவிழாவும் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
0
துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகம்: மொழி மற்றும் கலாச்சாரத்தின் மரபு துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகம், கேரள அரசால் 2012 நவம்பர் 1 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது, மேலும் துஞ்சத் எழுத்துச்சன் மலையாளப் பல்கலைக்கழகச் சட்டம் 2013 ஆல் முறைப்படுத்தப்பட்டது. இந்த முன்னோடி நிறுவனம் மலையாள மொழி மற்றும் கலாச்சாரத்தை சமகால சூழலில் வளப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தொடக்க துணைவேந்தராக மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான திரு. கே. ஜெயக்குமார், ஐஏஎஸ் இருந்தார்.,internet views
0
கேரளா திரைப்பட விழாவில் குறிப்பிடதக்கப் படங்கள் 1
பெமினிஸ்ட் பாத்திமா:
கடலோர நகரமான பொன்னானியில் வசிக்கும் இல்லத்தரசி பாத்திமா, தனது மரபுவழி கணவர் அஷ்ரப்பின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வசிக்கிறார். அவரது மகன் அவர்களின் பழைய மெத்தையை நனைக்கும்போது, அதை மாற்ற பாத்திமா முயற்சிப்பது மோதலைத் தூண்டுகிறது. முதுகுவலி மற்றும் வளர்ந்து வரும் விரக்தி இருந்தபோதிலும், அஷ்ரப் ஒவ்வொரு திருப்பத்திலும் அவளைத் தடுக்கிறார். இறுதியில், பாத்திமா மெத்தை ஆறுதலை மட்டுமல்ல, அது தனது சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும் என்பதை உணர்ந்தார். இறுதியாக அதை வாங்குவதன் மூலம், அவள் ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கிறாள்
இயக்குனர் : பாசில் முஹம்மது
*பெண்ணிய பாத்திமா* என்ற திரைப்படத்தின் மூலம் ஃபாசில் முகமது இயக்குநராக அறிமுகமாகிறார். இது வீட்டு வேலையாட்களின் வாழ்க்கையையும் அவர்களின் அன்றாட போராட்டங்களையும் ஆராய்கிறது. கடலோர நகரமான பொன்னானியைச் சேர்ந்த ஃபாசில், உள்ளூர் கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டு வருகிறார், இந்தக் கூறுகளை கதையில் புகுத்துகிறார். இந்தப் படம் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை ஆராய்வது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் துன்பங்களைத் தாங்குவதில் அவர்களின் மீள்தன்மை மற்றும் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இயக்குவதைத் தவிர, திரைப்படத் தயாரிப்பில் தனது பல்துறைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், ஃபாசில் திரைப்படத்திற்கான எழுத்தாளர் மற்றும் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். பல பிரபலமான படங்களுக்கு ஸ்பாட் எடிட்டராகவும், புகழ்பெற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றிய பல வருட அனுபவத்துடன், ஃபாசிலின் இயக்குனர் பதவிக்கான மாற்றம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. *பெண்ணிய பாத்திமா* என்பது அவரது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கலாச்சார நுண்ணறிவு இரண்டையும் பிரதிபலிக்கும் ஒரு சிந்தனையைத் தூண்டும் படைப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
2. sangla: maraaththi padam:
கிணற்றின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள நீர் 'சங்கலா' (அடி நீர்) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மகாராஷ்டிராவின் மராத்வாடா போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், அனைத்து சிரமங்களையும் மீறி தனது பசுக்களுக்கு தீவனம் தயாரிக்கும் ஒரு வயதான சுயமரியாதை விவசாயியின் கஷ்டங்களைப் பற்றிய ஒரு எழுச்சியூட்டும் கதை.
0
வேலைகள்
சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
தேவனும் வாசுகியும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னான்.
“ வாசுகி இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவ “
” வழக்கமா தான். ஏதாவது சுமூகமாகப் பேசி முடிச்ச கேஸ் அகப்ப்ட்டா திருப்ப்தியாக்க் கிளம்புவேன். நீங்க பிரிச்சுப் போட்டுடு கிளம்புவீங்களே ”
“ ஆமா ஏதாவது படத்துக்கு போலாமா “
“ ஓட் டிடடியில் வருகிற படங்களை பார்த்தால் போதும் தியேட்டருக்கு போறதுக்கு செலவு. நம்ம சம்பாதிக்கிறதிலெ தியேட்டர் செலவு இன்னும் வரல அப்படித்தானே “
“ ஆமா “
டாக்ஸி ஒரு இடத்தில் நின்ற போது வாசுகி இறங்கி கொண்டாள். வாசுகினுடைய அலுவலகம் அந்த பக்கம் இருந்தது அந்த அலுவலகம் வாடகை இடம்தான்
இன்னும் பத்து நிமிடம் பயணம் செய்து தேவன் அவனுடைய அலுவலகத்தை அடைவான். அதுவும் வாடகை கட்டடம் தான் இன்னைக்கு உபர் கிடைக்காமல் ரொம்ப சிரமம் தாமதம். சாலையில் வாகன நெரிசல் ரொம்ப சிரமமாக இருந்தது.
“ இப்படி சிரமப்படுவதற்கு நாமளே ஒரு கார் வச்சுக்கலாம் “
“ ஆமா சம்பாதித்து ஒரு கார் வைக்கணும். இந்த வாடகை ஆபீஸ் விட்டு சொந்தமாக ஆபீஸ் வேணும்.. கவனிக்கணும்”
“ ஆமா உங்க ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கும். என் ஆபிஸ் ஒரு பக்கம் இருக்கும். அது சரியா இருக்கும். ஒரே பில்டிங்கில் ஒரே ஆபீஸ்ல ரெண்டு பேரும் வேலை செய்ய முடியாதல்லவா “
இது வழக்கமான உரையாடலில் ஒன்றாக இருக்கும்.
சீக்கிரத்தில் உபர் டாக்ஸி தொடர்ந்து தன்னை காலியாகி கொண்டு மறைந்து கொண்டிருந்தது .
0
தேவன் விவாகரத்து சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அலுவலக வைத்திருந்தான். விசேசமாக விவாகரத்துதான். விவாகரத்து செய்ய வேண்டும் என்று வருகிற தம்பதிகள் வழக்குகள் அவனிடத்தில் வரும் அவற்றை அவன் சரியாக பார்ப்பான்.
வாசுகி திருமணம் சம்மந்தமான மற்றும் பிரிந்து போனவர்கள் இணைப்பது சம்பந்தமாக ஆலோசனை சொல்வதற்காக என்று தன் வேலையை எடுத்துக் கொண்டாள். ஒரு பக்கம் தேவன் விவாகரத்து தருவதாக இருந்தால் இன்னொரு பக்கம் வாசுகி பிரிந்து இருக்கிற தம்பதிகளை சேர்க்க ஆலோசனை சொல்வதாக இருந்த்து.
இப்படித்தான் அவர்களுடைய வேலைகளும் அமைந்திருந்தன.
0
உங்கள் பிரச்சனை எப்படி போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டாள் வாசுகி வந்திருந்த இருவரும் தேவகியின் அழுத்தமான முகப்பூச்சைப் பார்த்துக் கொண்டார்கள். அவள் அலுவலகம் வந்த் பின்னர் ஒரு முறை முகத்தைக் கழுவி பவுடர் போட்டுக்கொள்பவள்.
“ நான் கொஞ்சமாக மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் “ என்றான் அவன்
“நான் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் “ என்றாள் அவள்
“ அதைத்தான் முதலில் சொன்னேன் இருவரும் ஆங்கிலத்தில் பேசுவதை தவிருங்கள் என்று ‘
“ அதை ஆரம்பித்து விட்டோம் இப்போது அவள் மலையாளத்தில் பேசுகிறாள் நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன் நானும் தமிழில் பேசுகிறேன் அதை அவளும் கொஞ்சம் புரிந்து கொள்கிறாள் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து விட்டோம். நானும் கொஞ்சம் மலையாளத்தில் சில வார்த்தைகளை பேச ஆரம்பித்திருக்கிறேன் “
“ நானும் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்திருக்கிறேன்” என்றாள் அவள். இருவரும் ஒருனித்துச் சிரித்துக் கொண்டார்கள் புன்னகை சிரிப்பாக வந்துவிட்டது.
இருவருக்கும் தேநீரை ஊற்றி கொடுத்தாள்
“ வாசுகி இதே வகையில் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் தொடர்ந்து செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முதலில் மொழியில் இருந்து ஆரம்பிக்கலாம் “ என்றாள் ஆமாம் என்றாள்
அவன் பிறகு நான் உன்னை காதலிக்கிறேன் என்று மனைவியைப் பார்த்து மலையாளத்தில் சொன்னான் அவளும் திரும்ப நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை அழகாகத் தமிழில் சொன்னாள்
“ இரண்டு பேரும் மொழியை அழகாகத்தான் பயன்படுத்துகிறீர்கள் வாழ்க உங்கள் தாய்மொழி பெற்று வளர்க உங்களுடைய வேற்று மொழி பற்றும் கூட” என்றாள் வாசுகி
0
தேவன் முன்னாள் உட்கார்ந்து இருந்த அந்த பெண்ணை பார்த்தால் உங்கள் கணவரை இரண்டு மணிக்கு வரச் சொல்லி இருக்கிறேன் நீங்கள் சொல்லுகிற விஷயங்களை வைத்துக் கொண்டுதான் நாம் பேச வேண்டும் என்றான்.
பேச என்ன இருக்கிறது விவாகரத்து தான் முடித்துவிடலாம் என்றாள் அவள்
ஆனாலும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே
” நீங்கள் விவாகரத்து வாங்கித் தந்தால் உங்களுக்கு சன்மானம் கிடைக்கும் கூலி கிடைக்கும் அதை விட்டு ஏன் இந்த சமரசம்”
” கொஞ்சம் பேசிப் பார்ப்பது பிரிப்பதை விட சேர்ப்பது கூட நல்ல தானே.
“ அதற்கும் சில பேர் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் செல்லாமல் உங்களிடம் வந்து இருப்பதற்கு காரணம் நீங்கள் சீக்கிரம் விவகாரத்து வாங்கி தந்து விடுவீர்கள் என்று பரவலாக பேசப்படுவதால்.. இந்த விஷயத்தில் நீங்கள் வெற்றிகரமானவராக இருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டு தான் வந்தேன்”
“ சரிதான் என் வருமானத்தை நான் இழக்க விரும்பவில்லை உங்கள் விவாகரத்தில் நான் அக்கறை கொள்வேன் சீக்கிரம் வாங்கிக் கொள்வேன் என் கூலியை “
” கணவர் வந்தால் இதையே சொல்ல வேண்டும் “
” கண்டிப்பாக சொல்வேன் “
” கணவருக்கு எப்போது நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள் “
” இரண்டு மணிக்கு ”
” அந்த நேரத்தில் அந்த மனிதர் சாப்பிட்டு விட்டு தூங்கும் நேரம். தூங்கும் நேரத்தில் அவருடைய காதுகளில் நீங்கள் சொல்வதெல்லாம் பட வேண்டும்”
” காதுக்கு நிச்சயமாக படும். கேட்கும். கொஞ்சம் பொறுத்து இருங்கள் நீங்கள் எப்படி போகப் போகிறீர்கள் ”
” வழக்கமான என்னுடைய ஸ்கூட்டி வண்டியில் தான் “
” நீங்கள் ஸ்கூட்டி விட மாட்டீர்கள். எப்போதும் துணை “
” ஆமாம் அந்த ஸ்கூட்டியில் அவரை அழைத்துச் செல்லும் போதெல்லாம் பிரச்சனையாக இருக்கும் அவருக்கு ஸ்கூட்டி பிடிக்காது இதெல்லாம் ஒரு வண்டியா. இதெல்லாம் ஒரு பயணமா என்று கேட்பார். அப்படித்தான் அவர் வைத்திருக்கிற எல் எம் எல் வெஸ்பா. அதில் உட்கார எனக்கு பிடிக்காது அதை ஏதோ ஒரு மிருகத்தை கையாளுவது போல கையாள்வார். அதன் கனத்த என்ஜின் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு அவரை எப்போதும் விழ வைத்து விடும். அவர் விழுவதைப் பார்த்து நான் சிரிப்பேன். அதெல்லாம் அவருக்கு எரிச்சலா இருக்கும். இருவரும் பொதுவாக ஒரு வாகனத்தை வைத்துக் கொள்ளலாம். யோசனை எடுபட்டதில்லை”
” இருவரும் வேலை செய்வது வேறு வேறு இடங்களில் அல்லவா” ”ஆனாலும் பொதுவான வாகனம் என்பது நல்லது தான் என்றான் தேவன்
0
இப்படித்தான் இருவர் சார்ந்த வழக்குகளும் போய்க் கொண்டிருந்தன.
0
மாலையில் உபர் சீக்கிரம் கிடைத்துவிட்டது
“ இன்று எப்படி இருந்தது “ என்றான் தேவன்
“வழக்கம் போல் தான் கெஞ்சி கெஞ்சி சேர்க்க முயல்கிறேன் உங்களுக்கு வழக்கம் போல் தான் வெட்டு ஒன்று தொண்டு ரெண்டு என்றுதான் எல்லாரும் கேட்பார்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இப்படி விவாகரத்து வாங்கி தருவது, ஒட்டச் சொல்வது இதெல்லாம் பிடிக்கவில்லை இதெல்லாம் விட்டு ஓடிவிட வேண்டும் போல் இருக்கிறது. “
“ எனக்கும் தான் கெஞ்சி கெஞ்சி அவர்களை சேர்க்க வேண்டி இருக்கிறது என்ன பிழைப்பு. எதற்காக இப்படி மன்றாடுவது எதற்காக இப்படி பிச்சை எடுப்பது என்று இருக்கிறது.”
“ நாம் பிச்சை எடுப்பதை தவிர்க்க கொஞ்சம் பணம் சம்பாதித்தால் போதும் பிச்சை எடுப்பது நிறுத்தி விடலாம் பொதுவான இன்னொரு வேலையை தேடிக் கொள்ளலாம் ”
‘அந்த வேலை என்னவாக இருக்கும்”
“ திருமணம் என்று வைத்துக் கொள்ளலாமே அல்லது முதல் இரவு ஏற்பாடுகள் செய்யும் ஏஜென்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது திருமணம் ஏ டு இசட் “
“ நன்றாகத்தான் இருக்கிறது என்றாள் அவள்
உபர் டாக்ஸி அவருடைய பேச்சில் கலந்து கொண்டு நிதானமாக ஓடிக்கொண்டே இருந்தது
0
விரைவில் வேலையை மாற்றிக்கொண்டு விடுவார்கள் என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது.
இப்படி பலமுறை, பல நாட்கள் பேசியிருக்கிறார்கள்.
அன்றைக்கும் பேசினார்கள்.
அதற்குள் வாடகை வீடு வந்தால் பேச்சு முற்றுப்புள்ளி பெற்று விடும். சொந்த வீடு, சொந்த கார் கனவோடு உபர் டாக்சியை விட்டு இறங்கிப் போவார்கள்.
அன்றும் அப்படித்தான் இறங்கினார்கள்.கனவுகளோடு வாடகை வீட்டுக்குள் நுழைந்தார்கள்
Reply
Forward
Add reaction
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

