சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஜூலை, 2020

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம்
புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் திங்கள் கிழமை தோறும் காணொளி ஒன்றை வெளியிடுகிறார்கள். சுவாரஸ்யமாக உள்ளது .இலக்கியம் இணைய தளம் வழியே  என்பதாக..
அதில் புதுவை யுகபாரதி  பலவற்றைப் பற்றிப் பேசுகிறார். 
ஒருவாரம் அவர் வசிக்கும் ஜீவானந்தபுரம் என்ற சிறிய  பற்றி ஒரு புதையல் இருந்தது. தோழர் ஜீவாவின்  புதுவை அனுபவங்கள், ஜீவானந்தபுரம் சூழல், பெயர் சூட்டியக் காரணங்கள்,  அப்பகுதியில் வசிக்கும் எழுத்தாளர்கள், படைக்கப்படும் இலக்கிய வகைகள் பற்றிப் பேசியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் இப்படி  எழுத்தாளர்கள், சரித்திர நிகழ்வுகள் , சரித்திர இடங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் என்று இவை வாராவாரம் விரிந்து ஒரு நகரம்/ மாநிலம்  பற்றிய விபரங்கள் அபூர்வமானவை.
அதிலும் சமீபத்தில் கேட்டதில் நான் என்பதை முன்னிலைப்படுத்தியும், தத்துவச்சிந்தனையாகவும் தந்தது சிறப்பாக இருந்தது . இன்னொரு சுவாரஸ்யமானப் பேச்சு கபிலனின் திரைப்பாடல்கள் பற்றியது .
பாண்டிச்சேரியின் பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அதிலும் மூத்த படைப்பாளிகள் என்ற வகையில் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்ஒளி வாணிதாசன், உசேன் போன்றவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் ,,பாண்டிச்சேரி சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்புகளின்  செயல்பாடுகள் பாண்டிச்சேரி சமயங்களும் பொதுவுடமை இயக்கங்களும் பற்றியகட்டுரை போன்றவையெல்லாம் மனதில் வரும் போதே இது போன்ற உரைகள் /காணொளிகள் பாண்டிச்சேரி சார்ந்த ஒரு முக்கிய ஆவணமாக மனதில்  வந்து நிற்கிறது. அதை தவிர சில உரைரைகள் மட்டுமே பொதுவான அர்த்தத் தளத்தில் உள்ளன.அவையும் இந்நூலுக்கு உரம் சேர்ப்பவை
நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெருமை தரத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக பாண்டிச்சேரியில் தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த உரைகள்  சொல்கிறது
நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் நண்பர்கள் பாராட்டுக்குறியவர்கள்