சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 3 டிசம்பர், 2025

1 கனவு, டாப் லைட் நூலகம் ஏற்பாடு செய்திருந்த கவிதை முகாம் :30/11/25 இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. 1.சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்த “ சுற்றுச்சூழல் பிரார்த்தன” போப் ஆண்டவர் எழுதிய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு அது. 2. தூரிகை சின்னராஜ் எழுதிய “ இயற்கைக்கு செயற்கையாக சிரிக்கத் தெரியாது “ பிரபல ஓவியர்கள் பற்றியக் கட்டுரை இரண்டும் திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு பல்லடம் எஸ் எல் முருகேசு இயக்கிய “ தண்ணி டம்ளர் “ குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது இது குடிக்கு எதிரானக் குரலை முன்வைத்தது.இவர் முன்பே முப்பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவர். சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட பள்ளி மறு திறப்பு , இரக்கம் உள்ளிட்டவை அவை. 0 கவிதை வாசிப்பு.. கல்லூரி மாணவி சிந்து நதி கவிக்கோ ஆவணப் படம் திரையிடல். பல்லடம் புத்தகக் கண்காட்சி முத்திரை வெளியீடு இவற்றுடன் கவிதை முகாம் தொடங்கியது ஐந்து குறும்படங்களால் களை கட்டியது கவிதை முகாம் குறும்பட முகாம் ஆகிப் போனது 0 அமளி துமளி 2009ல் வெளிவந்த தாண்டவகோன் குறும்படம் திரையிடப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடிகர்கள் துள்ளல் மிகுந்த ஆரவாரமான படம் எங்கோ சென்றிருக்க வேண்டியவர் கொஞ்சம் பிசகி விட்டது இனி மான் வேகம் தான் 0 முகாமின் துவக்கமாக கவிக்கோ அப்துல்ரகுமான் பற்றிய ஒரு மணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது. Oபொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம். ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது. எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ. அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார். மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார். அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..dinamalar ட மாலையில் நடைபெற்ற படிப்போம் பகிர்வோம் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அறிமுகம் செய்து பலர் பேசினர். நூலகர் இந்துமதி .. தூரிகை சின்ன ராஜ்.சிரிராம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு.
[ ] പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക് അവതാരിക [ ] ഡോ സി ഗണേഷ് പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക് കുഞ്ഞുങ്ങളെ നയിക്കുന്ന ചെറിയ നോവലാണ് ചൂട്. പരിസ്ഥിതി സ്നേഹിയായ ശോഭ പ്രേംകുമാറിനാണ് ഈ പുസ്തകം സമർപ്പിച്ചിരിക്കുന്നത്. അധ്യാപികയും ചിത്രകാരിയും ബാലാവകാശ പ്രവർത്തകയും മനഃശാസ്ത്രജ്ഞിയുമായ ശോഭ പ്രേംകുമാറിന് ഈ പുസ്തകം സമർപ്പിക്കുന്നതിലൂടെ രചയിതാവായ സുപ്രഭാരതി മണിയൻ വലിയൊരു സന്ദേശം നൽകുന്നു. പ്രകൃതി സ്നേഹത്തിന്റെ മഹത് പൈതൃകം അടുത്ത തലമുറയിലേക്ക് കൈമാറേണ്ടതുണ്ട് എന്ന സന്ദേശമാണത്. കുട്ടികൾക്കായി രചിക്കപ്പെട്ടിരിക്കുന്ന ഈ നോവൽ വായിക്കുന്ന ഏതൊരു കുട്ടിയും കാലാവസ്ഥാ വ്യതിയാനത്തെക്കുറിച്ചും നമ്മുടെ പരിസ്ഥിതിയിൽ ഉണ്ടാകുന്ന മാറ്റങ്ങളെക്കുറിച്ചും കൂടുതൽ ചിന്തിക്കും. ഇത് അവരുടെ പരിസ്ഥിതി സ്നേഹത്തെ മാത്രമല്ല മാനവിക സ്നേഹത്തെയും മൗലികവും പുതുമയുള്ളതുമാക്കും. "ഭൂമി നമ്മുടെ അമ്മ നമ്മുടെ അമ്മയെ ബഹുമാനിക്കുക പരിസരത്തെ നമ്മൾ സംരക്ഷിക്കും" ഇങ്ങനെ ഒരു വാചകത്തോടെയാണ് ഈ ലഘു നോവൽ ആരംഭിക്കുന്നത്. കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ ഒരു ചെറിയ വിദ്യാലയമാണ് രംഗം. അവിടെ പഠിക്കുന്ന പ്രവീണിന്റെ കാഴ്ചപ്പാടിലൂടെയാണ് കഥ വികസിക്കുന്നത്. തുടക്കത്തിൽ ചൊൽപ്പൊരുളിന്റെ അർത്ഥ വ്യാപ്തിയെക്കുറിച്ച് പറയുന്നുണ്ട്. കഥ മുന്നോട്ട് പോകുമ്പോൾ കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ വിദ്യാലയം നേരിടുന്ന വലിയ പ്രതിസന്ധി ബോധ്യപ്പെടുന്നു. പ്രകൃതി ചൂഷണം കൊണ്ട് അന്തരീക്ഷ താപനില വർദ്ധിക്കുകയും കടൽ ക്ഷോ ഭിക്കുകയും വിദ്യാലയത്തിന്റെ നിലനിൽപ്പ് വരെ അപകടത്തിൽ ആവുകയും ചെയ്യുന്നു. പ്രവീൺ എന്ന വിദ്യാർത്ഥി സയൻസ് അധ്യാപകനായി പഠിച്ച അതേ സ്കൂളിൽ എത്തുന്നതോടെ അതിജീവനത്തിനായുള്ള ശ്രമങ്ങൾ ആരംഭിക്കുന്നു. ഈ വിഷയമാണ് അതീവ വായനായോഗ്യമായ നോവലിലൂടെ എഴുത്തുകാരൻ അവതരിപ്പിക്കുന്നത്. ഓരോ അധ്യായത്തിലും സംക്ഷിപ്തമായി നൽകുന്ന പ്രകൃതി പാഠങ്ങളും നിരീക്ഷണങ്ങളും വായനയെ ഒരു പുതിയ തലത്തിൽ എത്തിക്കുന്നു. കുട്ടികൾ ഒരുപോലെ ആസ്വദിച്ച് വായിക്കാവുന്ന നോവലാണ് ചൂട്. തമിഴ് ഭാഷയിൽ നൂറിലധികം കൃതികൾ എഴുതിയ സുപ്രഭാരതി മണിയന്റെ ഈ കൃതി സ്വാഭാവികമായ മലയാളത്തിലേക്ക് തർജ്ജമ ചെയ്ത ഷാഫി ചെറുമാവിലായി വലിയ അഭിനന്ദനങ്ങൾ അർഹിക്കുന്നു. ഈ പുസ്തകം കൊച്ചു കൂട്ടുകാരുടെ മുമ്പിലും മുതിർന്നവരുടെ മുമ്പിലും സ്നേഹപൂർവ്വം അവതരിപ്പിച്ചുകൊള്ളുന്നു. ഡോ. സി ഗണേഷ് പരീക്ഷാ കൺട്രോളർ തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാള സർവകലാശാല തിരൂർ മലപ്പുറം കേരളം.
வெளிவர உள்ள புதிய நாவலில் ஒரு பகுதி : டாலர் பவுண்ட் ரூப்பியா.. நாவல் சுப்ரபாரதிமணியன் 0 எண்ட் ஆப் லைப்.. . எண்ட் ஆப் லைப் லிவிங் லைஃப். .ஸ்டில் ஐ அம் கீபிங்.. வாக்கிங்............ அந்த முதியவர் பெரிய வர்ணமயமான கேக்கின் மீது பல மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அவற்றை பார்த்த படியே பேசிக்கொண்டிருந்தார் ” எனக்கு ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருக்கிறது ஹெல்ப் உண்டு வாழ்க்கை வாழ்க்கை இன்னும் போர் அடிக்கவில்லை என்னுடைய பொறுப்புகள் எல்லாம் முடிந்து விட்டன வாழ்வதற்காக .எனக்கு பாரங்கள் எதுவுமில்லை. நான் சூப்பர் மேன் அல்ல சாதாரண மனிதன் தான் வாழ்க்கை நதி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது நான் ஓய்வு பெறுவதற்கு காரணம் மரணத்தை நோக்கி செல்வதற்கு. அல்ல மரணத்தை எதிர் கொள்ளல்மனதில் இருக்கிறது ..எதுவும் .. அறுபது வயது ஆகிவிட்டால் தற்கொலைக்கு போய்விடலாம் என்று பல மேற்கத்தியத் தத்துவங்கள் சொல்கின்றன. நமது சாமியார்களும் வாழ்வே மாயம் என்று தான் சொல்கிறார்கள் .அப்படித்தான் மரணத்தை எதிர்கொள்கிறார்கள் .என்னுடைய ஆப்ஷன்ஸ் இல்லாமல் போகிற போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” அதை ஒருவர் இடை மறித்தார். ”இப்படி எல்லாம் பேசாதீர்கள். நான் கேன்சர் பேசன்ட் நானே வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு இப்படியான ஓய்வு நானும் இன்னும் கேக் சாப்பிடுகிறேன் மெழுகுவர்த்திகளை அணைத்து கொள்கிறேன் இதில் உங்களுக்கு என்ன சிக்கல் “ “ எனக்கு எதுவும் இல்லை நான் தொழுது கொண்டு இருக்கிறேன் ஏதோ நான் ஓய்வு பெற்றதால் முடங்கி விடக்கூடாது என்று பலரும் முணு முணுக்கிறார்கள் அது நல்லதல்ல “ இவ்வுலகை விட்டு நீங்கும் போது, கூறப் போகும், எனது பிரிவுரை இதுவாக இருக்கும்: பூமியில் நான் கண்டது உன்னத மானது! தாமரைப் பூவில் மறைந்துள்ள தேமதுவைச் சுவைத்தேன்! விரிந்து அது ஒளிக் கடலாய்ப் பரவியது எனக்கோர் வெகுமதி! பிரிவுரை யாகட்டும் அதுவே! முடிவில்லாத வடிவங்கள் கொண்ட, பந்தய அரங்கில் முடிந்தது என் விளையாட்டு! வடிவ மற்ற ஆதிமூலனின் மகத்தான தோற்றத்தைக் கண்டேன்! எவருக்கும் எட்டாத அவனது தொடுகையால் என் உடல் பூராவும், எனது உறுப்புகள் எல்லாமும், பூரித்துப் பொன்னூஞ்சல் ஆடின! அதுவே என் பிரிவுரை ஆகுக! ஆயுள் முடியட்டும், நீங்கும் வேளை எனக்கு நெருங்கி விட்டால்! “ தாகூர் கவிதை இது. என் வாழக்கை அனுபவம் கூட எந்த எழுத்தாளனின் எழுத்தும் யாரோஒருவனின் அனுபவம் தானே ” கேன்சர் முதியவர் கவிதையைச் சொல்லியபடி அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் ஏதோ வலியால் அவதிப்படுபவர் போல் சாய்ந்தார். சிலர் அவரின் நாற்காலி அருகில் நெருங்கினர். அவர் புன்னகையை உதிர்த்தார். ஆங்கிலத்தில் அந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்தது .பிரான்சிஸ் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்து உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் . விடுதியின் அறைக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற குளிர் பிரதேசங்களில் பேன் பயன்படுத்தப் படுவதில்லை .இந்த சூழலில் ஜன்னலை திறக்கலாம் என்று மெல்ல ஜன்னல் பக்கம் போய் அவற்றை விடுவித்து பார்த்தார் .ஆனால் எல்லாம் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன திறக்க முடியாதபடி ஏதோ செய்து இருக்கிறார்கள். அறைக்குள் உட்கார முடியாது என்று தோன்றியது வரவேற்பறைக்கு தொலைபேசி செய்து தகவல் சொன்னபோது ஒருவர் வந்து திரும்பத் திரும்ப ஏசி மேல் மூடியை நீக்கி பார்த்தார் அது வேலை செய்யவில்லை “ எலித் தொல்லையாக இருக்கும் ஏதாவது மின்சார ஒயரை கடித்து விட்டுப் போயிருக்கும் பார்க்க வேண்டும் ” ”பார்க்க வேண்டுமா நான்.. இரவில் எப்படி தூங்குவது ஏதாவது பேன் .தர தயார் செய்ய முடியுமா” ”பேன் நாங்கள் பயன்படுத்துவது இல்லை ” ”அப்புறம் பனையோலை விசிறி “ ”சார் கிண்டல் வேண்டாம் முயற்சி செய்கிறோம். தூங்குவதற்குள் இதை சரிசெய்ய பார்க்கிறோம் .அறை சாவி வேண்டாம் எங்களிடம் மாஸ்டர் கீ இருக்கிறது நீங்கள் வெளியே போவதாக இருந்தால் போய்விட்டு வாருங்கள் அப்படித்தான் இரண்டாவது மாடியில் வந்து நின்றபோது அந்த பிருந்தாவின் ஹால் கண்ணில் பட்டது. நுழைந்து பார்க்கலாம் என்று நினைத்தான் பிரான்சிஸ் .இதுபோன்ற பல இடங்களில் சர்வசாதாரணமாக பிரான்சிஸ் நுழைந்திருக்கிறார் அழைப்பில்லாமல் இருந்தால்கூட போய் உட்கார்ந்து கொள்வது சாப்பாடு கிடைத்தால் போய் சாப்பிடுவது என்பதெல்லாம் அவனுக்கு சாதாரணமாகி விட்டது யாராவது கேட்டால் ஏதாவது பதில் சொல்லலாம் . இப்படி சொரணை கெட்டு போய் விட்டாயே என்று கூட சில சமயங்களில் கேட்டுக் கொள்வான் எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு சரிவுகள் எவ்வளவு காயங்கள் இதையெல்லாம் தாண்டி தான் இங்கு வந்திருக்கிறோம். இவர்கள் கேட்கிற நீ யாரென்ற சாதாரணமான கேள்விக்கு சாதாரணமாகவே பதில் சொல்ல முடியும் என்பது தான் அவனின் சமாதானமாக இருந்திருக்கிறது இங்கு வரும்போது அப்படித்தான் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுவிட்டது. ஊரிலிருந்து ஹீரோ ஹோண்டாவின் இங்கே வந்து விடலாம் என்றுதான் புறப்பட்டான் மேட்டுப்பாளையம் குன்னூர் அன்னூர் என்பதை எல்லாம் கடந்து மெல்ல வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் குமரன்குன்று சென்றான் அங்கிருக்கிற முருகன் கோவிலின் உச்சியைப் நின்று வேடிக்கை பார்த்தான். திருப்பூருக்கு நீர் வருகிற பெரிய நீர்த் தொட்டி தொட்டிகள் எல்லாம் சவுரி பாளையத்தில் பார்த்தான் .மேட்டுப்பாளையத்தில் வந்து ஊட்டி பேருந்து பக்கம் சென்ற போது பெரிய வரிசை இருந்தது . ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு நண்பரை பார்க்கப் போனான் அவர் ஊரில் இல்லை அங்கிருந்த பெண்மணி வந்தால் என்ன சொல்வது என்றாள் நானே தொடர்பு கொள்கிறேன் என்று வந்துவிட்டான். கல்லாறு பழப்பண்ணை பூங்கா பல வருடங்கள் முன்னால் சென்றது வாகனத்தை நிறுத்துவதற்கு வசதி இருப்பதாக தெரியவில்லை..பக்கத்தில் இருந்த அகத்தியர் மடத்திற்கு செல்லலாம் என்று நினைத்தான் அங்கு தியாகராஜன் என்ற நண்பர் இருந்தார்., சமீபத்தில்தான் செத்துப்போனார் அவர் ஒரு காலத்தில் பெரிய பட்டிமன்ற பேச்சாளராக இருந்தார் பட்டிமன்றத்தில் பேசும் அந்த இன்னொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு தனியாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார் பட்டிமன்றம் சலித்துப் போனது போல திடீரென்று சாமியார் ஆகிவிட்டார். கல்லாறு பழப்பண்ணையில் எதிரில் ஓர் இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரின் ஓர் ஆசிரமம் இருந்தது .அந்த ஆசிரமத்தில் சென்று ஒரு நாள் தங்கியிருந்தார் .பக்கத்தில் இருக்கிற ஆற்றில் சென்று குளித்தான் மலை ரயில் செல்லும் பாதையில் ரொம்ப நேரம் நடந்தான் ஒரு நாள் இரவு வந்து தங்கி இருந்தான் தியாகராஜனின் வாழ்க்கை முழுவதும் மாறிப் போயிருந்தது கொஞ்சம் யோகா கொஞ்சம் மந்திரம் சொல்வது கொஞ்சம் பூஜை என்று தொடர்ந்து கொண்டிருந்தார் . அப்பெண்மணி அவர் கூடத்தான் இருந்தார். தியாகராஜனின் குடும்பம் திருப்பூரில் தனியாக இருந்தது அவர் மனைவி பனியன் கம்பெனிக்குப் போய் இரண்டு பெண் பிள்ளைகளை வாழவைத்துக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு கேள்விப்பட்ட போது அந்த ஆசிரமத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டது தெரிந்தது. அங்கு போனபோது அதன் பரப்பளவு அவனை ஆச்சரியப்படுத்தியது பெரிய விக்கிகரமாய் அம்மன் ;விக்கிரகம்.. மகாலட்சுமி இருந்தாள் அவரை சந்திப்பதற்காக பலர் வரிசையில் இருந்தார்கள். பூஜை புனஸ்காரம் என்று சுற்றிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தன பூஜை புனஸ்காரங்கள் ஹோமம் என்று அந்த பகுதியே திணறிக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தியாகராஜனை போய் பார்ப்பது நல்லதா என்று தோன்றவில்லை தியாகு சாமிகள் பிசியாக இருக்கிறார் என்று திரும்பத்திரும்ப சொல்லப்பட்டது இந்த முறை அவர் காலமாகி விட்டார் என்பதை அவன் அங்கு போய் இருந்தபோதுதான் அறிந்து கொண்டான் இப்போ ஆசிரமம் யார் பொறுப்பில அதாம்மா இருக்காங்களே.. மாதாஜி மாதாஜி ஓட கருணையுள்ள ஆசிரமம் நல்லா நடக்குது ஏழை குழந்தைகளுக்கு படிப்பு.. .படிப்பு உதவி அப்படின்னு போயிட்டு இருக்கு குன்னூரில் சிம்ஸ் பார்க்கப்போனால் மெல்ல வெளியில் அலைந்து கடந்து வரும் போது மிகவும் களைப்படைந்து விட்டான் ஆனால் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதை விட இப்படி பயணப்படுவது சிறந்தது என்று தான் அவனுக்கு தோன்றியது.அதுதான் அப்பயணம் ஆனால் விரைவில் தனக்கு பின்னால் லாரி தொடர அவனுடைய பயணம் சிரமமாக இருந்தது .ஒரு லாரி ஒன்று இரும்புச் சாமான்களை சுமந்து கொண்டு வந்தது அவன் வழி விட்டு கையை காண்பித்தாலும் அது பின்னாலேயே நகர்ந்து கொண்டிருந்தது .சிறு குறுகலான பாதைகளில் அவனை சங்கடப்படுத்தியது என்ன நோக்கத்திற்காக அவன் பின் தொடர்கிறான் என்று கூட சந்தேகம் வந்தது ஒரு வளைவில் அப்படித்தான் அவன் தடுமாறி கீழே விழுந்து விட்டான் அந்த லாரி பின்னால் இருந்தது .அவன் விழுந்ததை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு அதிலிருந்து அவர்களின் சிரிப்புடன் கடந்து சென்றது தன்னை கீழே தள்ளிவிட்டுக் காட்டுவதற்காகத்தான் அவன் எந்த மாயம் செய்திருக்கிறார் .என் காயம் சிராய்ப்பு அவருக்கு சிறு சந்தோசத்தை தந்திருக்கிறது என்று அவன் நினைத்தான் நல்லவேளை சிரமமில்லாமல் அவன் சூரிய விடுதிக்கு வந்து விட்டான் இரண்டு நாட்களாக அவரின் ஹீரோ ஹோண்டா வாகனம் பத்திரமாக இருக்கிறதா என்று அந்த விடுதியின் பின்புறம் பகுதியை சென்று பார்த்து விட்டான் அது பத்திரமாக தான் இருந்தது. தானும் பத்திரமாக தான் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது“ SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
Mannudam November issue இறப்பிற்குப் பின் மனிதன் ( சூழலைப் பாதுகாக்க......)சுப்ரபாரதிமணியன் என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தியானம் என்பதாகும். அது தாமரை இதழில் வந்தது. தனிமையில் முதுமையில் கஷ்டப்படும் ஒருவரை பற்றி.. தன்னுடைய சாவும் தான் அடக்கம் செய்யப்படுவதும் கௌரவமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார். பலருக்கும் சொல்வார். கல்யாண முதல் சாவு வரை காரியங்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவார் .என் சாவுக்கு பின்னால் த்ன்னுடைய உடல் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை பற்றி அதில் எழுதுவார். தன்னுடைய சாவுக்கு பின்னால் தன்னுடைய உடல் கேவலப்பட்டு போய்விடக்கூடாது முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதற்காக பணம் சேர்த்து வைத்து தகவல் சொல்லுவார்.. இப்படி பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சில நிறுவனங்கள் வந்திருக்கின்றன. தாராள மனப்பான்மையுடன் அவர்கள் செயல்படுகின்றன.. மத வேறுபாடு இல்லாமல் ஜாதி வேறுபாடு இல்லாமல் இறந்த மனிதர்களின் பிணங்களை சரியாக அடக்கம் செய்ய அவை உதவுகின்றன இதை பெரிய சேவை என்று தான் சொல்லலாம். ஏனென்றால் யாரும் கவனிக்கப்படாமல் கிடக்கும் பிணங்கள். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள். பரவும் அபாயம் இதிலிருந்து உடல்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை செய்யும் நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும். இப்போதெல்லாம் புதை குழிகளில் புதைக்க சரியான ஆள் கிடைப்பதில்லை. பழைய அரசாங்க கல்லறைகள் மூடப்படுகின்றன அல்லது அவை மின் மயான்ங்களாக மாற்றப்படுகின்றன.. கல்லறைகளில் புதைக்க ஆள் கிடைப்பதில்லை அல்லது நிறைய பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.. அதை மீறி மென்மையான தீர்ப்பு கொண்டு மின் மயானத்திற்கு கொண்டு சென்று உடலை சாம்பல் ஆக்கி விடக்கூடாது புதைக்கத்தான் வேண்டும் என்று விரும்புகிற பழைய தலைமுறை இப்போதும் இருக்கிறார்கள். என்னுடைய சகோதரர் ஒருவர் அப்படித்தான் தன் இறுதி ஆசையாக தான் மின் மயானத்தில் எரிக்கப்படக்கூடாது புதைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அவரின் ஆசையை நிறைவேற்ற நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. நகரின் மத்தியில் இருந்த அரசாங்க்க் கல்லறைக்கு போய் ஆட்களை பிடிப்பது சிரமமாக இருந்தது, பிறகு அதன்பின் வந்த சடங்களுக்கும் அங்கு செல்வது அங்கு இருக்கிற ஆட்களை பயன்படுத்துவது என்பதில் பல சிரமங்கள் இருந்தன, அது எல்லாம் ஒரு சிறுகதையாக்க் கூட எழுதலாம், திருப்பூரில் நான்கு மின் மயானங்கள் வந்துவிட்டன முதலில் வந்த ஒரு அரிமா சங்கத்தின் மின்மயானத் துவக்க விழாவில் வைரமுத்து வந்து மரணம் பற்றி ஒரு கவிதை பாடினார். அது பற்றிப் பேசினார் அது கல்வெட்டில் இடம்பெறு வகையில் முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்ட.து. அந்த காணொளி பல லட்சம் மக்களை கவர்ந்திருக்கிறது. மரணம் பற்றிய வைரமுத்துவின் கவிதையும்.. .. இப்போது திருப்பூரில் நான்கு மின்மயானங்கள் வந்துவிட்டன. ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசிய ஒரு முக்கியமானவர் அவர் அதைச் சார்ந்திருக்கிறார். மின்மயானம் நான்கு உலைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் இரண்டிற்கு பிணங்கள் வருவதில்லை அதை கவனிக்க முடியுமா கேட்டுக் கொண்டார். முன் வரிசையில் இருந்த நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.. அது அவருக்கு எரிச்சல் ஊட்டியது பல லட்சம் பணம் முதலீடு செய்து மின்மயானங்களை போட்டு இருக்கிறோம் ஆனால் அவை பயன்பாட்டுக்கு இல்லாமல் சும்மா கிடக்கின்றன அதனால் தான் என்னுடைய வேண்டுகோளை வைத்தேன். சிரிக்கிறீர்கள் இது சிரிப்பதற்கான விஷயங்களை என்று சொன்னார்... அவருடைய கவலை அவருக்கு . கொரோனா காலத்தில் இந்த மின்மயானங்கள் எப்படி பயன்பட்டது என்பது நமக்கு தெரியும் அப்போது அந்த பிணங்களின் மதிப்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும். பிணங்கள் என்றால் அருவருப்பு தான் .ஆனால் கொரோனா காலத்து பிணங்கள் இன்னும் அருவருப்பையும் பக்கத்தில் நெருங்க முடியாத படி செய்துவிட்டன. மின் மயானம் சென்று. திரும்புகிறவர்கள் அவசியம் சாம்பலைக் கேட்கிறார்கள் வீட்டு சடங்குகளுக்கும் பின்னால் அதை நதிகளில் கரைக்கவும் தேவையாக இருக்கின்றது. பல நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக அந்த சாம்பல் இருக்கிறது .ஆனால் அப்படி பிணங்களின் சாம்பலை நதிகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பற்றியும் பல விஷயங்கள் உள்ளன. எப்படி இருந்தாலும் பிணங்களை அடக்கம் செய்வதற்கான கல்லறைத் தோட்டங்கள் குறைந்து விட்டன பல பழைய கல்லறை தோட்டங்களை இடித்து விட்டு அங்கேயே மீண்டும் மீண்டும் படங்களை புதைக்கிறார்கள். இதெல்லாம் தேவையா என்று பெரும்பான்மையோர் மின் மயானத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆனால் பிணங்களை எரிப்பதில் மற்றும் புதைப்பதில் உள்ள சுற்றுச்சூழல் சிக்கல்கள் நம்மை சிரமப்படுத்தி கொண்டே இருக்கின்றன. . இப்போது இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிணங்களை அடக்கம் செய்யும் முறை பற்றி கேட்டு கீற்று இணையதளத்தில் வந்த செய்தி ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவிலும் இதுபோன்று பிணங்களை அடக்கம் செய்யும் முறைகள் வந்தால் ஆறுதலாக இருக்கும். வெட்டியான்களைத் தேடி போக வேண்டாம். ஒரு கைப்பிடி சாம்பல் வேண்டும் என்று சில ஊழியரிடம் கெஞ்ச வேண்டாம். சாவுச் சடங்குகள் இன்னும் கொஞ்சம் சுலபமாகி விடும் பிணங்களை மண்ணிலிருந்து போக்குவதற்கு. இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது. ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன. சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை.. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன. ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. "சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் கூறுகிறார். 1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் “ஆண்டுகள் கணக்கில்” என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது. வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது. 0
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். 0 கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில் இவ்வாண்டில் சிறப்பு விருது சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அம்பை, லோகமாதேவி, க. ரத்னம் உள்ளிட்டோர் இவ்வாண்டில் விருது பெறுகிறார்கள். பத்து லட்சம் ரூபாய் விருதுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.வாழ்த்துக்கள். -நற்பவி வாசகர் வட்டம், பாண்டியன் நகர், திருப்பூர் 0 தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தமிழின் வளம் தமிழர் நலம் என்னும் நோக்கோடு கோயம்புத்தூரைச் சார்ந்த கல்வியாளர் மருத்துவர் பழனி நல்லசாமி கோயம்புத்தூரில் 2013ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாள் தொடங்கிய தமிழ்த் தொண்டு நிறுவனம் இதுவாகும். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கமாக, • இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சந்திப்புகளை நடத்துதல் • தமிழ் நூல் வெளியீடு • சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவருக்கு ஆண்டு தோறும் விருது வழங்குதல்[1][2] 27/12 /25 காலை இந்த விருது விழா நடைபெறுகிறது. சிற்பி 90 விழாவின் ஒரு பகுதியாகவும் இதில் இடம் பெருகிறது. தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்