சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 ஜூன், 2020

திக்குத் தெரியாத உலகில்—
சுப்ரபாரதிமணியன்
இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு……
ஆறாவது பிரளயம் எப்போது ?
கொரானா மிரட்டல் வேறென்ன.
அதுதான் ?
கொரானாதான் ஆறாவது பிரளயம் என்று நம்பும் கட்சியினர் அதிகரித்து வருகிறார்கள் .
கல்கியின் பத்தாவது அவதாரம் பற்றிக்கூட பலர் தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.2012 இப்போது மறுபடியும் என்று அவர்களே சொல்லுகிறார்கள் .

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலுள்ள புராதனமான மயன் நாள்காட்டியின்படி, உலகம் 2012இல் அழிந்து விடும் என்று கூறினர். மயன் நாள்காட்டியின் பல கணிப்புகள் நடந்துள்ளதாகவும் சிலர் வாதிட்டனர். 2012லிருந்து தப்பித்தோம் .

2012 என்றத் திரைப்படத்தில் ஒரு காட்சி: உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் சொல்கிறார்கள் அதில் .. திரைப்படத்தில் கப்பலில் இடம் பிடித்து தப்பிப்பிழைப்பவர்கள் குன்றாகக் குறுகிப்போய் நிற்கும் எவரெஸ்டை தமது கப்பலில் பார்வையிட்டுச் சுற்றித்திரிவார்கள் .



முந்தின ஐந்து வகையான பிரளயங்கள், கல்கி பற்றி.......
உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது.. நைமித்திக பிரளயம்;
. அவாந்தர பிரளயம்; மத்திம பிரளயம். மகா பிரளயம் போன்றவை அதில்.

   கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் பதினேழாம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய இருபத்தொன்பதாவது சதுரயுகத்தின் முதலாவதுயுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தொரு சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட இரண்டாயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும். இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்  “ (கீதா கோவிந்த தாஸி )
என்றார்கள் முன்பே .
 கலியுகம் என்பது ஒட்டுமொத்தமாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அதில் 5000 வருடத்துக்கு முன்பாக தான் கலியுகம் ஆரம்பித்திருக்கிறதாம் .அதனால் இந்த பூமியில் கல்கி அவதரித்து அழிப்பதற்கு இன்று சில லட்ச வருடங்கள் ஆகும் என்ற கதையை நம்பும் பெரும் மக்கள் தொகையினர் இந்தியாவில் இருக்கிறார்கள் .

அதற்குள்  2012, மயன் காலண்டர், கொரானா குத்தல் என்று மறுபடியும் தொடர்கிறது.

புதிய வைரஸ்களால்  இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருகிறது

மனிதன் இயற்கையுடன் சேர்ந்து இணைந்தே வாழ்க்கையை ஓட்டுகிறான் அவனுக்கான தேவைகள் இயற்கையிடம் இருக்கின்றன. மொழி,  பண்பாடு பழக்க வழக்கம் எல்லாம் அவன் வாழ்கிற இயற்கை சூழலைச் சார்ந்தே வளர்கிறது.
 பயோடைவர்சிட்டி -உயிர்ப் பன்மயம் என்பது -பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றியது. அந்த உயிர்ப் பன்மயத்துடன் மனிதர்களின் வாழ்க்கையையும் இணைந்து இருப்பதை உயிர் பண்பாட்டு மையம் பயோ கல்சரல் டைவர்சிட்டி  என்கிறார்கள்.
 பின்னால் சொல்லப்பட்டதை மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள் அதில் பண்பாடும் மொழியும் கூட முக்கியத்துவம் பெறுகிறது
1. பூமியில் சுமார் 100 லட்சம் வெவ்வேறு வகையான உயிரின வகைகள் இருக்கின்றனவாம் உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்  கோளம் –பயோஸ்பியர் - என்கிறார்கள் .உயிரிப் பன்மயம் என்பதை உயிரினங்களுக்கு இடையில் உள்ள  வித்தியாசங்களை குறிக்கிறது..  இதில் விலங்குகள்,  நுண்ணுயிர்கள்,  தாவரங்கள் அனைத்துக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை குறிப்பதாகும்
2. ஒருவன் புழங்கும் மொழி அவன் இருக்கும் மதம்,  சாதி மற்றும் வாழும் சுற்றுச்சூழல் அவன் சார்ந்த இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் பல பண்பாட்டுக் குழுவில் இருப்பார். பல்வேறு பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எத்தினோஸ்பியர் - மனிதப் பண்பாட்டு கோணம் என்பதாகும் .வெவ்வேறு மனிதர்களுக்கு இடையே நிலவுகின்ற வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வெவ்வேறு வாழ்க்கை முறை,  பேச்சு வழக்கு,  வெவ்வேறு உணவு முறை , வெவ்வேறு உடை,  வெவ்வேறு நம்பிக்கைகள் என இவையெல்லாவற்றையும் ஒரு சேரக் கொண்டது பண்பாடு.
 பண்பாட்டு பன்மையம் என்பது மனிதர்களுக்கு இடையில் உள்ள வெவ்வேறு வித்தியாசங்களைக் கோடிடுகிறது.

3. இந்த பூமி இதுவரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்துத் தப்பியிருக்கிறது . கடைசியாக பேரழிவு நடந்தது பல  கோடி ஆண்டுகளுக்கு முன்பு . இப்போது ஆறாவது பிரளயம் மனிதனின் செயல்களால் நிகழலாம் என்கிறார்கள் முன்பு.  
இம்முறை கொரானா அவ்வகைப்பேரழிவே என்போர் பலர்.
முந்தின ஐந்து முறை பேரழிவும் இயற்கையாக நடந்தவை.  இம்முறை அழிவில் உயிரினங்கள் , பண்பாடும் மொழியும் இடம்பெற்றுள்ளன
கடந்த 50 ஆண்டுகளில் உலக மொழிகளில் 20% அழிந்திருக்கிறது.  பெரிய ஆதிக்க மொழிகளின் வளர்ச்சியில் சிறிய மொழிகள் அழிந்திருக்கின்றன .மொழி பண்பாட்டு அறிவு இயற்கையுடன் மனித விரிசலை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அழிவதற்குக் கொண்டு செல்கிறது.
 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாட்டு மாடுகளைக் காப்பது முக்கியக் கோரிக்கையாக இருந்தது . நாட்டு மாடுகளை இல்லாமல் ஆக்கி இறக்குமதி செய்யப்படும் மாடுகளால் கால்நடை வளத்தை நிரப்புவது சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும்.  இந்த ஒற்றைத் தன்மையை கால்நடையை  விடுத்து மொழி,  பண்பாடு,  இனம் பழக்கவழக்கம் என்று ஒற்றைத் தன்மையைத்  திணிப்பதால் உலக சமனற்ற நிலைக்குச் செல்லும்.
ஒற்றை மயமான உலகு ,ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை,  ஒற்றைமயமான அரசியல் போன்றவற்றின் தொடர்ச்சியாய்  எல்லாம் நிகழ்கிறது. அவை  இயற்கையைப் பாதிக்கிறது.  ஒற்றை மைய திணிப்பு காரணமாக ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துவதைச் சொல்ல்லாம் .சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாடு,  மொழியை பாதித்துவிடுகிறது .

 செம்மரக்காடோ  தேக்கு மரக் காடோ  மட்டும் இருப்பது காட்டின் அடையாளத்தை முழுவதும் அழித்துவிடுவது போலத்தான் பண்பாடு,  மொழி,  சுற்றுச்சூழல் விஷயத்திலும் நிகழ்கிறது.  எனவே பன்முகத்தன்மை எல்லா விஷயங்களிலும் தேவையாக இருக்கிறது .
கலப்பின மாடுகளை நம் நாட்டில் இறக்குமதி செய்வது ஆரம்பித்துவிட்டது  அபாரமானதாகும்.. கலப்பின மாடுகளின் பால் கறக்கும் கொள்ளளவு அதிகம் . பண நோக்கம் கருதி அந்த மாதிரி அந்நிய வகை கறவைப் பசுக்களை வாங்கினர் பலர். விவசாயத்தில் பலவகை இயந்திரங்கள் குறிப்பாக கதிரடிப்பு  இயந்திரம்,  டிராக்டர் போன்றவை உழவு மாடுகளின் அவசியத்தை இரண்டாம்பட்சமாகி விட்டது. நாட்டுப் பசுமாடுகள், நாட்டுக்காளை மாடுகள் பயன்பாட்டைத் திட்டமிட்டுக்  குறைத்து விட்டனர்.
 கொங்கு பகுதியில் காங்கேயம் காளை,  தென்னகத்தில் கழுகுமலைக் காளைகள் , மயிலைக் காளை மச்சக்காளை,  கோம்பைக்  காளை என சுமார் 100 வகையான காளை  இனங்கள் பாரம்பரியமாக இருக்கின்றன.  ஆனால் சிந்தி,  ஜெர்சி  போன்ற கலப்பின மாடுகள் வந்து பாலைத் தரும் செயற்கை மாடுகளை அதிகரிக்கிறத் திட்டம் கால்நடை விவசாயத்தில் ஒற்றை தன்மையை நிர்பந்தப் படுத்துகின்றன
 இந்தியா போன்ற பன்முக்க் கலாச்சாரம் கொண்ட நாட்டில் ஒற்றைத் தன்மையை நிர்பந்திப்பது சமநிலையைக் குலைப்பதை  மொழி பண்பாடு சார்ந்து செய்யப்படும் மாறுதல்கள் விளைவித்திருக்கும் சீர்குலைவை மக்களின் எதிர் விளைவுகள் மூலம் அறியமுடிகிறது.
 சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பதும் உயிரின வேறுபாட்டைக் பாதுகாப்பதும் வெப்பச் சூழல் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதலும் உயிர் பண்பாட்டு பன்மையத்தைக் காப்பாற்ற உதவும்.
 .பிற்போக்குத் தனங்களை நிராகரித்து
ஆரோக்கியமான உயிர் பண்பாட்டுச்சூழல் உருவாக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பூமியில் மனித உயிர்கள் இயல்பாய் வாழ அந்த நீண்ட பாதை தெரிந்து கொண்டே இருக்கிறது.

             அதற்கு மத்தியில் இயற்கையின் சூழல் சங்கிலி அறுபட்டு வருவது கொரானா தொற்றால் தெளிவாகவேத் தெரிகிறது.