எழுத்தாளர்கள் இருநாள் முகாம்
----------------------------------
          படைப்பிலக்கியம்
மற்றும் சுற்றுசூழல்  பிரச்சினைகள் 
எழுத்தாளர்களுக்கான இருநாள் முகாம்
திருப்பூர் அலகு மலை  சேவ்
பசுமைப்பூங்காவில்  21,22/11/15  ஆகிய தேதிகளில் நடைபெற்றது 
21/11/15 அன்று முகாமின்
துவக்கவிழாவிற்கு சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார் . இயக்குனர்
அமுதன்  “ மூன்றாம்
உலக நாடுகளின் பிரச்சினைகளும், அவற்றின் திரைப்பட வெளிப்பாடும் “என்றத்
தலைப்பிலும்,சுப்ரபாரதிமணியன் “ தமிழ் நவீன
இலக்கியப்போக்குகளில் சுற்றுச்சூழல் அக்கறை”  ,செந்தமிழ்வாணன் “ தேகமும் யோகமும்”  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
* ” கல்வி
ஏற்றத்தாழ்வுகளை   அகற்றி சமத்துவச் சமுதாயத்திற்கு
வழி கோலும் அருமையான கருவியாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரப்படுத்துகிற,
உலகமயமாக்கல் சூழலில் அதை நியாயப்படுத்துகிற சாதனமாக மாறிவிட்டது.இலக்கியம்
கல்வியின் முக்கிய பகுதியாகும் ” என்றார் சேவ்
அலோசியஸ்.
* 
” இலக்கியத்தின் கலை அழகியல் பெரும்சக்தியாக  எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம்
செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று
சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும்
இலக்கியத்தில் காணக் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில்
தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை இலக்கியப்படைப்புகள் “ என்றார்
சுப்ரபாரதிமணியன். 
-----------------------------------------------------------------------------
 ” தமிழ்க்கவிதையியல்”  என்றத்தலைப்பில் க.வை.பழனிச்சாமி,
நித்திலன்  ஆகியோரும், ” கவிதையும்
அரசியலும்  “என்ற தலைப்பில்
கனல்மைந்தனும்,           ” கவுரவக்
கொலைகளும் சாதி மறுப்பும்  “என்ற
தலைப்பில்  வழக்கறிஞர் செ.குணசேகரனும்
உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் ஆர் இரவிக்குமார் அவரின் “ இன்று நேற்று நாளை ‘
திரைப்படத்தை முன் வைத்து 
தமிழ்சூழலும்  புதிய போக்குகளும் ” என்ற
தலைப்பில் பேசினார். 
22/11/15இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்
எழுத்தாளர் ஆட்டனத்தி  “ சுற்றுச்சூழலும்
பழங்குடிகளும் ‘, கனல் “ புலிகள் சரணாலயமும், பழங்குடிகளின் வெளியேற்ற அரசியலும் ‘
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சார்ந்த சு. மூர்த்தி               “ உலகமயமாக்கலில் கல்வித்துறை
அடைந்த மாற்றங்களும் கல்வியில் அந்நிய முதலீடும் “, பேரா.மணி “ அழகியல்: அழகு ஏன்
அழகாக இருக்கிறது “, இளஞ்சேரல் ” நாவல்
அனுபவம்  “ ., சாரா “ பெண்கள் மேம்பாடும்,
கல்வி முயற்சிகளும் “  ஆகியத் தலைப்புகளில்
உரையாற்றினர்.. முகாமை நிறைவு செய்து வைத்து சேவ் இயக்குனர் அலோசியஸ்  உரையாற்றினார். வேணுகோபால் நன்றியுரை
வழங்கினார். கனவு - சேவ் இணைந்து இந்த முகாமை நடத்தின.இருதினங்களில் கீழ்க்கணட
குறும்பட, ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு அவை பற்றிய விமர்சனங்கள் , அபிப்பிராயங்கள்
முன் வைக்கப்பட்டன. கவிதை வாசிப்பும் , பாடல்கள் பாடலும்  இடம்பெற்றன. இயக்குனர் அமுதன் படங்களின்  திரையிடலை ஒழுங்கமைத்தார்.திரையிடப்பட்ட
படங்களின் பட்டியல் :
1.Mercury in mist –doc.On
Kodaikanal envi. Issues 
2. Highways doc. Dir . Amudan  on highways activites on deve.
 3.Gaon
chodah hanin –Doc. North eastern  
4. Omul ( human)  
Sf..Dir Drodtloff          
 5. Yaadhum
.. doc  –Dir Anwar
6. Final solution doc.Dir Rakesh Sharama  
7.viratnam     
sf 
8 Three of us Docu –on handihapped       
 9.
Kodai  music video dir: sofia asraf, 
10 Good story 
sf 
 11. Ant
story – sf-exploitation of children on sex 
12.Tawaaz –on muslims -doc
 13. My name
is Palaru_ doc Dir .RR Srinivasan 
 14.Start
Mexico film doc.
 15raththassuvadu –doc on salem prisoners  
16.kasadar karkaa –sf 
17.Naalum kilamaiyum sf  
 18.  At the ball of fortune  doc.
19  kadamai,sf
20 Tawaaz –on muslims-doc
21 Yadhum –Dir Anwar on Tamil muslims 
22..Start Mexico film-doc
( SF -short film,
doc-documentary  ) 


 
