சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 ஜூலை, 2014



மீத்தேன் எமன்

சுப்ரபாரதிமணியன் 


meeththen3
“மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
அழகாய தென் மதுரை” என்று பாடப்பெற்ற தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகளில் மீத்தேன் எடுக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி எப்படியிருக்கும்?
meeththen1மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டியக் கட்டாயத்தால் குடிநீர், விவசாயத்திற்கான நீர் வெகுவாகக் குறைந்து போய் காவிரி படுகை வறட்சியானதாகிவிடும். பாலைவனமாக ஆகக் கூட வாய்ப்புகள் உள்ளன. வெகு ஆழமாய் உள்ள நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்போது அந்நீர் கடல் நீரைவிட அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால், உப்பு படிவது ஏற்படும். வயல் வரப்புகள், கால்வாய்களில் பெருமளவில் உப்பு படிந்து விடும். நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டதால் நிலத்தடி நீர் இல்லாத வெற்று இடத்தில் கடல் நீர் புக வாய்ப்பு இருப்பதால் மிச்சம் இருக்கும் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறும். நிலத்துக்கடியில் பக்கவாட்டில் பல கி.மீ என்று குழாய்கள் போட்டு உறிஞ்சப்படுவதால் (500 அடு முதல் 1700 அடி வரை) சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீர் குறையும். நீர்த்தொகுப்புகளும் வறண்டு போகும். வறண்டத்தனம், நில நடுக்கம், மண்ணை உள்வாங்கிக் கொள்ளுதல், நிலச்சரிவு, பள்ளங்களையும் உருவாக்கும்.. உப்புத் தன்மை நிலத்தடி நீரில் அதிகமாவதால் வெளியேறும் இரசாயனக் கழிவு புற்று நோய், கதிரியக்க நோய்கள் மூளை பாதிப்பு நோய்களைச் சுலபமாக உருவாக்கும்.
திருவாரூரில் அமைக்கப்பட்டிருக்கும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது 2013ன் இறுதியில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை எடுத்துவிட்டு மீத்தேன் உறிஞ்ச போடப்பட்டக் குழாய்களைக் கண்டேன். மத்திய தர உணவு விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது புதிதாய் இருந்த என்னையும் வேறொரு நண்பரையும் மீத்தேன் வாயு சம்பந்தமான கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்ரேசன் நிறுவனம் சார்ந்தவரா என்று கேட்டார்கள். புதியவர்கள் யார் தட்டுப்பட்டாலும் அப்படித்தான் கேட்பார்களாம். அது மத்திய தர விடுதி என்றாலும், குளிரூட்டப்பட்டது என்றாலும் அந்த விடுதி உணவுக்கட்டணம் அதிகமில்லாமல் இருந்தது. அந்த விவசாய பகுதியின் பொருளாதார நிலையும், மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடத் திட்டங்களில் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் திணறுவதையும், செம்மொழித் திட்டத்தின் உதவி மாணவர்களைக் காப்பாற்றுவதாயும் பேரா.ஜவஹர் சொன்னார் பெரும்பான்மை மாணவர்கள் விவசாயக் கூலிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதை வைத்து அந்த உணவு விடுதிக் கட்டணத்தை நான் யூகித்துக் கொண்டேன்.
meeththen2500அடி முதல் 1700 அடி ஆழம் வரை காவிரிப் படுகையில் வளமான நிலக்கரி படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை ‘நீரியல் விரிசல்’ முறையில் எடுக்கிற திட்டம் பாண்டிச்சேரி அருகிலான பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிலத்துக்கடியில் 2000 அடி வரை துளையிடுவது, பக்கவாட்டில் இரண்டு கி.மீ வரை குழாய்களைச் செலுத்துவது, நிலக்கரி பாளங்களை நொறுக்குவது என்பது அதன் ஆரம்பநிலை செயல்கள் கூடவே பல வேதிப் பொருட்களை கொண்ட கலவையை பீச்சி இதை சுலபமாக்க வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. இதில் முக்கால்பகுதி வேதிப் பொருட்கள் நிலத்துக்கடியில் தங்கி நிலத்தடி நீர் முழுவதையும் நச்சாக்கும் என்பது இன்னும் அபாயகரமானது. 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயு இதன் மூலம், இங்கு எடுக்கப்படும். ஆனால் 50,000 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் 35 வருட காலம் நடைபெறும். அதற்குள் அப்பகுதி பாலைவனமாகிவிடும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக் அரசு அறிவித்தது. மீத்தேன் வாயு நச்சுத் தன்மை வாய்ந்ததால் வாயு கசிவு ஏற்படுவது அணுசக்தி மின் நிலையங்களில் ஏற்படும் கழிவுக்கு இணையானது என்பதால் மக்களும் பயப்படுகிறார்கள். 690 சதுர கி.மீ பரப்பளவும் பாலையாகும்.
இந்த 690 சதுர கி.மீ பரப்பின் தன்மையை அமெரிக்காவின் வயோமிங், மோண்டானா மாநில நிலக்கரி படுகையை ஒப்பிடுகிறார்கள். மீத்தேனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தண்ணீரில் இருக்கும் சோடியம் மண் வளத்தை வெகுவாக பாதிக்கும். கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என்கிறார்கள். வெளியேற்றப்படும் தண்ணீரில் பல ரசாயன்ப் பொருட்கள் நச்சுத் தன்மை உடையனவாக இருக்கின்றன. தண்ணீரில் கரையக் கூடிய கதிரியக்கம் கொண்டதாகவும் அவை உள்ளன என்பது பேராபத்தாகி்றது.
மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதிகளில் பல முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது மன்னார்குடிப் பகுதியை மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் பாதித்து நீர்த்தாரைகள் சேதப்படுத்தப்பட்டு சென்னை முதல் ராமேஷ்வரம் வரை குடிநீருக்கும் சிக்கல்கள் ஏற்படும். வளைகுடா நாடுகளில் மண்வளம் இல்லை. மழை இல்லை. எனவே அங்கு நிலத்தைத் தோண்டி எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் வெற்றி பெறலாம். மழையும், இயற்கைச் செழிப்பும் உள்ள தஞ்சை பகுதி மண் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
meeththen4ஆழ்குழாய் கிணறுகளின் மூலம்தான் மீத்தேன் எடுக்க முடியும் என்ற தவறான கருத்துக்கு மாறாக மனிதக் கழிவுகளிலிருந்து எடுக்கலாம் என்ற மாற்று வழியை சீக்கிரம் பணம் பண்ணும் கும்பல் அக்கறை எடுப்பதில்லை.
இதை எதிர்த்து பல வகைப் போராட்டங்கள் தொட்ர்ந்து நடந்து வருகின்றன. போராளி நம்மாழ்வார் மரணமும் மீத்தேன் வாயு படுகையில் தான் போராட்டத்தின் குறியீட்டால் நடந்துவிட்டது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வெளியிடப்படும் இது போன்ற திட்டங்கள் மக்களை விரட்டியடிக்கும் திட்டங்களாக இருக்கிறது. உலகமய பொருளாதாரக் கொள்கை  எவ்வளவு சீக்கிரம் பணம் சேர்க்க முடியுமோ அந்த வழிமுறைகளைப் பின்பற்றும் ’ குரோனி சேப்ட்டலிசத்’ தில்   மீத்தேன் துரப்பணம் ’ தூரப்பணமாக’  பலருக்கு பிரகாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.சாதாரண மக்களின்  வாழ்நிலைக்கு இருட்டையும் கூட.