சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 23 ஜூலை, 2014

வெப்பத்துள் கருகும் மனிதன்


சுப்ரபாரதிமணியன் 

veppaththul1இவ்வாண்டின அக்னி நட்சத்திர சமயத்தில் பெய்த மழை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்தது.
மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்று சமீபமாய் இருபது ஆண்டுகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபமாய் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நாடுகளுக்கிடையில் யுத்தம் வரும் என்ற புது கருத்து நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது.
யுத்தத்திற்கு முன் ஏற்பாடாக வெவ்வேறு விசயங்கள் இப்படியாக நடந்தும் வருகின்றன. இந்த ஆண்டின் கோடை கடந்த ஆண்டின் கோடைகளைவிட உட்சபட்ச வெப்பத்தைக் கொண்டிருந்தது. வெப்ப தினங்கள் அப்புறம் வெப்பக் காற்று அலைமோதி மக்களைத் திணற வைத்தது. இதன் காரணமாய் வெயிலில் சுருண்டு விழுகிற சாதாரண மக்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் காண நேரிட்டது. இறந்து போனவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள். வெயிலின் உச்சத்தைத் தாங்க இயலாமல் உயிரையும் சேர்த்து சுருண்டு கொண்டவர்கள். அதுவும் பெருநகரத்தின் சூடு சாதாரண சாலையோர மக்களையும் கருகிப் பிணமாக்கியது. மனிதர்களுக்கே இந்த கதியென்றால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை. அவை குடிக்க நீர்தேடி அலைய வேண்டியதாகிவிட்டது. காட்டு மிருகங்களும் வீதிற்கு வந்து உலவி பயம் தந்தன.
வெப்பத்தைக் குறைத்து கொள்ளலாம் என்று கோடை வாசஸ்தலங்களுக்கு பண மூட்டைகளைக் கட்டிக் கொண்டு போனவர்கள் அங்கும் சூடு ஜிங்ஜிங்கென்று ஆட்டம் போட திணற வேண்டியதாகிவிட்டது. கோடை வாசஸ்தலங்கள் நெரிசலில் சிக்கி திணறி எல்லோரையும் திரும்பி வீட்டை நோக்கிய சாலைகளைப் பார்க்கச் செய்து விட்டது. விவசாயப் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு தற்கொலை எண்ணங்களை தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருந்தது. ஏர்கண்டிசனுக்குள் எல்லோரும் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வது சாத்யமா என்ன… காற்று பதனாக்கி பொருட்கள் விலை தாறுமாறாய் உயர்ந்து சாதாரண மக்களிடமிருந்து விலகிப் போய் விட்டன. காற்று பதனாக்கி தரும் இதத்தை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வந்து சேரும் வியாதிகளுக்கும் குறைவில்லையென்றாகிவிட்டது. நிலங்கள் பாலைவனமாகிக் கொண்டிருக்க, வீடுகள் பாலைவனங்களுக்கு இடையில் கட்டப்பட்டவை போலாகிவிட்டன. வீடுகளின் அடிப்பாகத் திடம் சுருங்கிப் போக அவற்றின் மொத்த ஸ்திரத் தன்மையும் சற்றே நிலைகுலைந்து போக ஆட்டம் கண்டு கொண்டிருந்த அஸ்திவாரங்கள் மோசமாக பல பழைய கால வீடுகள் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் நடுங்கி சரிந்தன. நீர் நிலைகள் காய்ந்து போக எதிர்காலத்தில் முன்பு நிகழ்ந்தது போல காய்ந்த ஏரிகளும், குளங்களும் புது பேருந்து நிலையங்களும், அடுக்குமாடி வணிகக் கட்டிடங்களும் கட்ட தயார் செய்யப்பட்டது போலாகிவிட்டன. சூடு தொற்று நோய்களை சுலபமாகப் பரப்பும் என்பதால் தொற்று நோய் சார்ந்த சிரமங்கள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்பட்டு சிரமங்கள் விளைவித்தன. கடலோரங்களில் வறட்சி, கடலை உள்வாங்கச் செய்து கடலையொட்டிய கட்டிடங்களை நிலை குலையச் செய்து தரையோடு வீழ்த்தின. அவற்றின் சாட்சிகளை தொலைகாட்சிகளில் காண நேர்ந்தது.
பருவநிலைகளும், பருவ மழைகளும் தாறுமாறாய் மாற வெள்ளமும், வறட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல மாறி மாறி அலைக்கழித்து வருகின்றன. நீர் மின்சாரம் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள பற்றாக்குறைக்கு இன்னும் உதவியாயின அவை. இவையெல்லாம் சேர்ந்து பலவகை சொத்துகளுக்கு சேதம் விளைவித்து விட்டன.
veppaththul2மிகுந்த வறட்சி நிலத்தின் நீர்த்தன்மையை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு சாதாரணமாகிவிட்டது. மலைப்பிரதேசத்திற்கு வரும் வாகனங்கள் அதிகமாகி விட்டதால் மலைச்சரிவுகள் பிடிப்பை இழந்து மனிதர்களை சரிந்து விழச் செய்து வேடிக்கை பார்த்தன. சாவுகளும், பயிர்களின் நாசங்களும் அரசாங்க மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நிலைகுலைய வைத்திருக்கின்றன. பெரும் லாபம் நோக்கியே ஆரம்பிக்கப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கான இழப்பை சரிகட்டிக் கொள்ள முடியாமல் கடைகளை மூடிக் கொண்டு தப்பித்துப் போக வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. பயிர் மற்றும் நிலம் சார்ந்த காப்புரிமைத் திட்டங்களை அவை கைவிடுவதற்கான ஆயத்தங்களில் மூழ்க ஆரம்பித்துள்ளன. காடுகள் தீப்பற்றி எரிவதும் காட்டுப் பயிர்கள், மூலிகைச் செடிகள் கருகி நாசமாவதும் நிகழ்ந்து வருகிறது.
இந்த பாதிப்புகள் நம்மை சுற்றி யாருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுடன் நமக்கு பிணக்கை ஏற்படுத்தி போர் வெடிக்கலாம் என்று பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு என்ற அய்..நா.வின் துணை அமைப்பொன்று பல ஆய்வுகளுக்குப் பின் தன் முடிவைத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் அந்தமான் சென்று வந்த நண்பர் ஒருவர் பருவநிலை மாற்றத்தால் அங்குள்ள பல தீவுகளில் காணப்படும் பவளப் பாறைகள் சிதைந்து விட்டதைப் பற்றிச் சொன்னார். கண்ணாடிகள், மூக மூடிகள் அணிந்து கடல் நீருள் சென்று பவளப் பாறைகளின் அழகை ரசிக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன் என்றார். பவளத்திட்டுகள் அளவில் சிறிதாகி வருகின்றன. அவற்றின் நிறங்களில் காணப்படும் பளிரிடும் தன்மை குறைந்து மங்கலாகக் காட்சியளிக்கின்றன. மேற்கு வங்க சுந்தரக் காட்டு கடல் பகுதிகளில் பல தீவுகள் மூழ்கிவிட்டன. இந்தியாவின் ஜீவநதிகள் வறட்சிக்கு உள்ளாகிவிட்டன. கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு இமயமலை பனி உருகுவதால் ஏற்படுவதும் தொடர்ந்து பின் வறட்சியைக் கொண்டு வந்து விடுவதற்கான ஆயத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. இமய நதிப் பாசன பகுதிகளில் நன்னீர் ஆதாரம் குறையும் என்பதால் இதுவே தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் கசப்பை விதைத்து போருக்கு கூட வழிவகுக்க வாய்ப்புகள் இருப்பதாலேயே பருவநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலும் காரணங்களாக இருக்கும்.
கடல் மட்டம் உயர்ந்தால் நாம் கேரளத்திற்கு சுற்றுலா செல்வது கூடத் தடைபடலாம். சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் கடலுக்குள் கேரள நகரங்கள் மூழக் நூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றால் மும்பை, கலகத்தா போன்ற பெரு நகரங்கள் அதற்கு பின் 50 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயங்களைக் கொண்டிருக்கிறது. நாம் சுவைத்து சாப்பிடும் கடல் மீன்கள் குறைந்து விடும். கடலின் உயிரினங்கள் 50 ஆண்டுகளில் கண்காட்சியில் வைக்கப்படும் அளவிற்கு அபூர்வமாகிவிடும்.
புவி சார்ந்த பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்வது சாதாரணமல்ல. உள்நாட்டின் உற்பத்தின் சரிவும், அதனால் வருமான இழப்பும் சாதாரணமாகிவிடும். வருமான இழப்பு ஏழைகளையும் வறுமைக் கோட்டையும் தளர்த்தி 32 ரூபாய், 26ரூபாய் என்ற இலக்கைத் தாண்டி ஏழ்மையை விரித்துக் கொண்டே சென்றுவிடும். உணவுப் பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதால் அவற்றின் விலை வெகுவாக உயரக்கூடும். நிச்சயம் உயரும்.
பருவநிலை மாறுதல்கள் தரும் சேதங்கள் ஏற்படுத்தும் குப்பைகளும், கழிவுகளும் அகற்றவும், இல்லாமல் செய்கிற முயற்சிகளுக்காகவும் புது வகை வரி சுமத்தப்படுவது பற்றி பல நாடுகள் யோசித்து வருகின்றன. வருமான வரி, கம்பனி வரி, கரிம வரி போடப்படலாம். வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என்று எல்லாவற்றிலுமே எரிபொருள் உபயோகத்திற்காக சட்டரீதியான நடவடிக்கைகளும், சட்டத்திருத்தங்களும் செய்யப்படவேண்டியிருக்கிறது. காற்றில் மாசு உருவாவதும், கலப்பதும் வெகுவாக குறைக்க அச்சட்டங்கள் பயன்படும்.
வளிமண்டலத்தில் கரியமிலவாயு அடர்த்தி அதிகரிக்கிறது. நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு, மீதேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அதீத வெளியீட்டால் இந்த வெப்பநிலை உயர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பு இந்த வெப்ப நிலை சிரமங்களுக்கு மனிதன் காரணம் என்ற குற்றச் சாட்டை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு பல ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இந்த கேடுகெட்ட நிலைக்குக் காரணம் மனிதர்களின் நடவடிக்கைகள்தான் என்று முடிவுக்கு வந்திருக்கின்றன. அறிவியலாளர்கள் பல காரணங்களை ஆய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். 60 நாடுகளைச் சார்ந்த 800 அறிவியலாளர்களின் ஆய்வு இந்த முடிவிற்கு வந்து மனிதனின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை அடையாளம் காட்டியது சென்றாண்டில்தான்.