சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 ஜூலை, 2014



காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)

சுப்ரபாரதிமணியன்


             மாற்று மருத்துவம் பற்றி தீவிரமான அக்கறையை கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆங்கில மருத்துவ முறைகள் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறைபாடுகளும், மோசமான சுகாதாரமும் விளிம்பு நிலை மக்களை நிரந்தர நோயாளிகளாக்கியுள்ளன. தமிழ் மரபின் மருத்துவ முறை சித்த வைத்தியம் உலகிற்கு இன்னும் இன்றும் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவ முறை இந்தியாவில் 2003ல்தான் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் பார்வையில் அதற்கு அங்கீகாரம் சமீபமாய் கிடைத்திருப்பதை அங்கங்கு தென்படும் அக்குபஞ்சர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டு பிடிக்கிற வித்தை அக்குபஞ்சர் மருத்துவருக்கு உண்டு. நம் உடம்பிற்கான மருந்து வேறெங்குமில்லை. நம் உடம்பிலேயே உண்டு என்பதைத் தெரிவிக்கும் எளிமையான, செலவு குறைவான மருத்துவ முறை அது..
சீனாவில் காது கேளாமை, வாய் பேசாமையையும் கூட குணப்படுத்தும் வெற்றிகரமான அனுபவங்கள் மாவோவின் புரட்சிகர காலத்தில் பொதுவுடமைத் தொண்டர்களால் நடந்தேறியிருப்பதை இந்நூலில்     ( மூல ஆங்கில நூல் வெளியீடு 1972) செ. நடேசன் அவர்கள் மொழிபெயர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மாவோவின் தத்துவார்த்த முறை ஒரு மருத்துவரை சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதோடு குணப்படுத்த முடியாத நோயையும் குணப்படுத்தும் என்பது நிருபணமாகிறது. அதிசய நிகழ்வு அது. பொதுவுடமைத்தத்துவத்திற்கு அந்த வலிமை உண்டு. மக்கள் விடுதலை இராணுவத்தின் மருத்துவர் சாவோ பு யு
பெற்ற வெற்றிகளை இந்நூல் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது.இது போல் மாற்று மருத்துவம் பற்றிய பல நூல்கள் தமிழுக்குத் தேவை..சாவோ பு யு போல் சமீபத்தில் நான் அறிந்து கொண்ட ஒரு மருத்துவர் இலங்கையைச் சார்ந்த ( 1822-1884 ) சாமுவேல் பிஸ்கிரின் தமிழில் மருத்துவப் பாடத்தைப் பயிற்றுவித்தவர். மருத்துவம் பற்றியக் கட்டுரைகள் 5000 பக்கங்கள் மொழிபெயர்த்தவர் 7 அறிவியல் நூல்களை வெளியிட்டவர். பாமரருக்கும் புரியும் வகையில் மருந்து, மகப்பேறு, மகளிர் நோயியல் குறித்து மருத்துவக் குறிப்பேடுகளை வெளியிட்டிருக்கிறார்.இலங்கையின் பூர்வீகத் தமிழரிடம் தமிழ் கற்ற கிரீன் “ மனிதனால் பேசப்படும் மொழிகளிலேயே மிகத் தூய்மையான, மெருகூட்டிய மொழி தமிழ் “ என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது கல்லறையின் மீது “ தமிழருக்கான மருத்துவ ஊழியர் “ என்ற வாசகம் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டதால் அமெரிக்காவில் உள்ள அவரது வொர்ஸ்டர் கிராமத்தில் நினைவுக்கல்லொன்று இந்த வாசகங்களுடன் இருக்கிறது. சாபோ பு யு, பிஸ்க்கிரின் போல் பலர் தமிழுக்கு அறிமுகப்படுத்தட வேண்டியவர்கள்,
தோழர் செ. நடேசன் அவர்கள் ஆசிரியர் கூட்டமைப்பின் தொழிற்சங்க செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டவர். கலை இலக்கிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர். அகால மரணமடைந்த அவரின் மகனின் பெயரில் இப்பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிடுவது என்ற எண்ணத்தில் அவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவருவது அவரின் தொடர்ந்த சமூக செயல்பாடுகளின் ஓர் அங்கமாக இருக்கிறது.