சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 20 மே, 2008

"எண்ணும் எழுத்தும்"



திருப்பூரில்
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி

திருப்பூர்,மே.13
எழுத்து தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எழுத்துக்க‌ளை க‌ற்றுக் கொடுக்க‌வும் , எண்க‌ள் தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எண்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும்,'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப்ப‌யிற்சியை த‌மிழ்நாடு முழுவ‌தும் யுரேகா இய‌க்க‌ம் தொட‌ங்கி வ‌ருகிற‌து.அதுபோல் இந்த‌ இய‌க்க‌ம் 'க‌ன‌வு'அமைப்புட‌ன் இணைந்து 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப‌யிற்சியை பெருமாந‌ல்லூரில் தொட‌ங்கி உள்ள‌து. இதை எழுத்தாள‌ர் சுப்ர‌பார‌திம‌னிய‌ன் தொட‌ங்கிவைத்தார். இந்த‌ தொட‌க்க‌ விழாகூட்ட‌த்தில் பெருமாந‌ல்லூர் நூல‌க‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ த‌லைவ‌ர் சுப்பு, க‌விஞ‌ர் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன், தொலைபேசி பொறியாள‌ர் சேக‌ர் , நூல‌க‌ர் ஜெய‌சித்ரா,யுரேகா ப‌ணியாள‌ர் செல்வ‌குமார் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.

செய்தி: தினத்த‌ந்தி
13/05/2008