சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 14 ஜூலை, 2025

குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு அல்ல “ ” குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங்க் கார்டு அல்ல . வணிக நோக்கமின்றி எடுக்கப்படுவதால் அவை கேளிக்கை மீறி செய்திகளையும் முன் வைக்கின்றன. வாழும் காலத்திலேயே சாதனை மனிதர்களைக் கொண்டாட ஆவணப்படங்கள் அவசியம்” என்று 17ஆம் ஆண்டின் திருப்பூர் குறும்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய குறும்பட , ஆவணப்பட இயக்குனர்கள் குறிப்பிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேருக்கு விருதுகளை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வழங்கினார். நிகழ்வுக்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.நூலகர் இந்துமதி, சமூக ஆர்வலர் ராஜேந்திர பாபு, கவியரசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நன்றியுரை : முத்துபாரதி வழங்கினார் முன்னதாக ” குறும்படங்களும், திரைப்படங்களும் “ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கினை எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஜீவன் நடராஜன் தொடக்கி வைத்து திரைப்படப் பயிற்சிகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சிக்கல்லூரிகளின் செயல்பாடுகளை விவரித்தார். குறும்பட அனுபவங்களை விருது பெற்றவர்கள் கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கில் கீழ்க்கண்டோர் விருதுக்கள் பெற்றனர். திருவாளர்கள் எம்.கவுரிசங்கர் சென்னை கவின் ஜெரோம் கோவை இயக்குனர் எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர் வி சீதாராமன் நடிகர் கோவை மூர்த்தி, நடிகர் பி கே சூர்யா இயக்குனர் ஜான்சி, நடிகை திருப்பூர் ம. அசோக் , கோவை ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை வி. இளைய பாரதி, நடிகர் நவீன் சந்தர், இயக்குனர் கோவை க.விசுவன், ஊட்டி சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம் ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம் அய்யாறு ச புகழேந்தி இயக்குனர் அரவிந்தன் தஞ்சை இயக்குனர் 0 - கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம் ஆகியவை இணைந்து இந்த விருது விழாவை பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடத்தின திருப்பூர் குறும்பட விருதுகள் 2025 விழா 17ஆம் ஆண்டில்.. 13/7/25 ஞாயிறு காலை 10 மணிக்கு. முன்னிலை: சுப்ரபாரதிமணியன் ( கனவு ) , தூரிகை சின்னராஜ் , இந்துமதி (டாப் லைட் நூலகம் ) 0 ” குறும்படங்களும், திரைப்படங்களும் “ உரைகளும் உரையாடல்களும் : கருத்தரங்கில் பங்கு பெற்று பேசுவோர் விருது பெறும் படைப்பாளிகள் : திருவாளர்கள் எம்.கவுரிசங்கர் சென்னை கவின் ஜெரோம் கோவை இயக்குனர் எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர் வி சீதாராமன் நடிகர் கோவை மூர்த்தி, நடிகர் பி கே சூர்யா இயக்குனர் ஜான்சி, நடிகை திருப்பூர் ம. அசோக் , கோவை ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை வி. இளைய பாரதி, நடிகர் நவீன் சந்தர், இயக்குனர் கோவை க.விசுவன், ஊட்டி சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம் ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம் அய்யாறு ச புகழேந்தி இயக்குனர் அரவிந்தன் தஞ்சை இயக்குனர் 0 மாலை 4 மணிக்கு.. விருது வழங்கும் விழா 0 தலைமை: கே. பி. கே. செல்வராஜ் ( திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் ) 0 நன்றியுரை : முத்துபாரதி ஒருங்கிணைப்பு / தொடர்புக்கு : 96882 63329 / 95667 11643 - வரவேற்கும்: கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம்