சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 14 ஜூலை, 2025
இலக்கியக் கருத்தரங்கம் 29/6/25
” விஞ்ஞானம் கற்பனையை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.விஞ்ஞானக் கதைகளை படிப்பதன், எழுதுவதன் மூலம் இளைஞர்கள் கற்பனையை விரித்துக் கொண்டு புதிய சிந்ததைகளை உருவாக்கலாம். படைப்புத்தளத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்த வகையில் விஞ்ஞானக் கதைகள் வாசிப்பு இளைஞர்களுக்கு உதவும் “ என்று விஞ்ஞானக்கதை நாவலாசிரியர் ஆர்னிகா நாசர் ஞாயிறு நடைபெற்ற திருப்பூர் பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டார்.
“ விஞ்ஞானக்கதைகள் விஞ்ஞானசெய்திகளை அடைப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை ஒருவகை… இன்னொரு வகை பேண்டசியும் கேளிக்கையும் கொண்டது. அது மனதை குதூகலிக்கச் செய்யும் “ என்று அவர் குறிப்பிட்டார்.
ராஜேந்திர பிரபு கருத்தரங்கைத் துவக்கிப் பேசுகையில் தத்துவங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றார்.
நூலகர் இந்துமதி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
கவிதையியல் வாழ்வில் செய்யும் மாயங்கள் பற்றி கவிஞர் அம்சப்ரியா பேசினார்.
சிறார் இலக்கிய எல்லைகளை எப்படி நாங்கள் மீறினோம் என்பது பற்றி
பூங்கொடி பாலமுருகன் , சரிதா எஸ் ஜோ ஆகியோர் பேசினர்.
தரவுகளும் தொல்லியலும் சரித்திர கதைகளை இயக்குவது எப்படி
சரித்திர நாவலாசிரியர் பவுசியா இக்பால் தன் உரையில் குறிப்பிட்டார்.
பயணநாவல் வகையில் சுப்ரபாரதிமணியன் அவரின் சில நாவல்கள் எழுதிய அனுபவத்தைச் சொன்னார்.
கனிணியும் இயந்திரங்களும் ஓவியனை முடக்கி விட முடியுமா . ஓவியர்கள் உலகம் படைப்பிலக்கியத்தோடு இணைந்தது என்று ஓவியர் தூரிகை சின்ன ராஜ்தன் உரையில் குறிப்பிட்டார்.முத்துபாரதி இலங்கை அகதியியல் சார்ந்த நாவல் அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.
யாழி இந்துமதி எழுதிய இரு வாழ்வியல் அனுபவ நூல்கள் வெளியிடப்பட்டன. கனவு இலக்கிய இதழின் 39ஆம் ஆண்டு மென்னிதழ்- 120 வெளியிடப்பட்டது. தூரிகை சின்னராஜ் எழுதிய வானவில் வாழ்க்கை -ஓவியர்கள் உலகம் நூல் வெளியிடப்பட்டது
கவிஞர் மதுராந்தகன் நன்றி கூறினார்.கனவு இலக்கிய அமைப்பும் டாப் லைட் நூலகமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின