சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

பிரமிளும், சுப்ரபாரதிமணியனும் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் ..சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் குறித்து “ கணத்தில் மொக்கவிழும் காலாதீதம் “ என்ற தலைப்பில் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அக்டோபர் மாதத்தில் 0 0 0 இயக்குனர் தங்கம் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் இயக்குனர் தங்கம் அவர்களின் வேங்கை சாமி என்ற திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது . இந்தக்குறிப்புகள் விடுதலை படத்தின் டைட்டிலிலும் இடம்பெறுகின்றன வெற்றிமாறனின் விடுதலை 1 , விடுதலை 2 ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட படங்களிலும் இயக்குனர் தங்கம் பணிபுரிந்து இருக்கிறார் . பாலு மகேந்திரா அவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர் .அவர் இயக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைநேரம் தொடரில் பெரும் பங்கு வைத்தவர் ... பல திரைக்கதைகளை உருவாக்கியவர் ..இறைவன் என்பது வரம் என்ற இவருடைய கதையை இப்போது அமீர் அவர்கள் திரைப்படமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் ..புதிய திரைப்படம் ஒன்று இயக்குகிற வேலையில் தங்கம் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார் ....தொடர்ந்து இலக்கியவாசிப்பிலும் அக்கறையும் கொண்டவர் பிரமிள் அவர்களுடைய மறைவுக்கு பின்னால் அவர் நினைவிடத்தில் சமாதி ஒன்று எழுப்பி இருக்கிறார் . ஓவியர் சந்துவை வைத்துக்கொண்டு பிரமிள் அவர்களுடைய சிலை ஒன்றை நிறுவி இருக்கிறார் ...அது அவருடைய சமாதி நினைவு மண்டலத்தில் விரைவில் வைக்கப்பட உள்ளது .பிரமிள் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்றையும் கால சுப்பிரமணியம் போன்றோரின் ஒருங்கிணைப்பிலும் ஆலோசனையிலும் எடுத்து வருகிறார் .அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது . 0 இயக்குனர் தங்கம் :உரை : சென்ற நூற்றாண்டில் பாரதிக்கும் புதுமைப்புத்தனுக்கும் பிறகு பிரமிள் என்ற ஒரு கருத்தை பலரும் வெளிப்படுத்துகின்றனர் த.மிழ் மரபிலிருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர்களான மேற்கண்ட முப்பெரும் மகனார் தமிழை தத்தமது வாழ்கால மாற்றங்களுக்கு இசைவுறும்படியும் வருங்கால மாற்றங்களை மேற்கொள்ளும்படியும் புத்தாற்றலூட்டிய புதுக்கியவர்கள் என்பதால் இணைமதிப்பீட்டுக்கு உரியவர்களாகிறார்கள் என்பது வரலாற்றில் நிலைத்து விட்ட பார்வை. . இது எவரது மதிப்பீட்டு புலனாய்வுத் துறை கொண்டும் துப்பறிந்து மேலே கொண்டுவரப்பட்ட மறைவு உண்மையும் அன்று பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய போக்கியின் எதிர்காலத்தில் நேரடியாக பங்கு செலுத்துகின்றனர் தாக்கமானது பெரும் இலக்கிய போக்குகளோடு மட்டும் நின்று விடுகிற ஒன்று அல்ல. முன்னையர் இருவரை காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் பழைய காலத்தில் குடும்ப சோதிடர் என்றவர் இருப்பாரே அதுபோல் தமிழினத்தின் தமிழ் சமூகத்தின் எதிர்கால கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்று ஆன்மீக மதவாத விபத்துக்களை குறித்து ஆருடம் சொன்னவர் .உலக வரலாறாது தமிழின வரலாற்றை ஒருவழிக்க போகிறது என்பதையும் தமிழ் சமூகம் இந்த பூவில் அழியாது உயிர் தரிக்க வேண்டுமானால் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டாக வேண்டிய அகவடிப்பு குறித்தும் ஒரு மாயக்காரனைப் போல குறிப்புகள் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் அதனால் தான் முப்பெரும் மகனான பிரமிள் தனி பெரும் மகனார் என்று ஆகிறார் இப்படி சொல்வதனால் முன்னைவரை விட இவர் பெரிய ஆளாக்கும் என்பதே அல்ல பொருள் . புதுமையும் நவீனமும் கலந்தவர் பாரதியும் புதுப்பித்தாலும் பிரமிளும் ஒரே ஆற்றலே என்றும் வெவ்வேறு கால வெளிகளின் வெவ்வேறு வடிவுகள் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம் என்று பிரமிடு கவிதைகளைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டு உரையை ஆரம்பித்து விரிவாகப் பேசினார். 0 சுப்ர பாரதி மணி யன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான ” அப்பா ”வில் தொகுப்பில் இடம்பெற்று இருந்த சேவல் சண்டை பற்றிய கதைகள் எங்களின் கோவை நண்பர்களை மிகவும் உலுக்கியது அவர்கள் சொல்ல நானும் அந்த தொகுப்பில் உள்ள சேவல் சண்டை மற்றும் பிறகதைகளை வாசித்தேன் .பிடித்தைருந்தன. அவரை அப்போதே கோவையில் சந்தித்திருக்கிறேன். அவருடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “ திண்டுக்கல் சின்னாளப்பட்டி கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த மக்களைப் பெற்றது. சமீபத்தில் அவரில் ஆயிரம் பக்க நாவல் சிலுவை வெளிவந்திருக்கிறது. அதனை விலைக்கு வாங்கி இருக்கிறேன் விரைவில் படித்து முடித்து விடுவேன் . தொடர்ந்து நான் அவர் படிப்புகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் சமீபத்தில் சுப்ரபாரதிமணியன் தன்னுடைய நாவல்களை திரைக்கதைகள் ஆக்கி நான்கு புத்தங்களை வெளியிட்டு இருக்கிறார் . தமிழ் நாவல்களில் இருந்து சின்ன விஷயங்களை திருடிக் கொண்டு திரைப்படமாக்குகிற போக்கு இருக்கிறது ..இந்த சூழலில் நாவல்களை முழு திரைக்கதைகள் ஆக்கிக் கொண்டு நூலாக வெளியிட்டு இருக்கிறார் சுப்ரபாரதிமணியன் ...இதிலிருந்து எவ்வளவு திருடு போகப் போகிறது எவ்வளவு பேர் மீது இவர் வழக்கு என்று வழக்காடு மன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்குகள் பதிவு செய்ய இருக்கிறாரோ . .இவரின் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் இந்த நாவல்களை திரைக்கதை ஆக்கும் அம்சமும் முக்கியமாகும் . திரைக்கதைக்கும் இலக்கியத்திற்குமான இடையிலான பொருத்தப்பாடுகளையும் வேறுபாடுகளையும் உணர்ந்த முடித்தவன் என்கிற முறையிலும் திரை கதைக்கும் இலக்கியத்திற்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவன் என்ற முறையிலும் இந்தப் பார்வை கோணம் சுப்ரபாரதிமணியனின் திரைக்கதை நூல்களில் இருக்கிறது . (திண்டுக்கல் காந்திகிராமம் அறக்கட்டளையில் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியின் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அப்போது பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் ” ) சுப்ரபாரதிமணீயன் நடத்தி வரும் பல இதழ்களில் பிரமிள் அவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவரின் படைப்புகளுக்கு அவருக்கான பொருளாதார உதவியை மனதில் கொண்டு சன்மானங்கள் வழங்கியிருக்கிறார். இந்த விசயத்தை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “ கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பில் கூடத் தெரிவிட்த்துள்ளார். “ கனவு “ இலக்கிய இதழ் முதல் 25 ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் 400 பக்கத் தொகுப்பாகும் அது பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் சுப்ர பாரதி மணியன் அறக்கட்டளையின் சொற்பொழிவின் போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் பேசும்போது : சுப்ரபாரதி படைப்புகள் பற்றி அவரின் ஹைதராபாத் மற்றும் திருப்பூர் மைய படைப்புகளை வைத்துக்கொண்டு இரட்டை நகர்களின் கதை சொல்லி என்று நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறேன். திருப்பூர் நெசவாளர்களின் மற்றும் விவசாயிகளின் பூமியாக இருந்தது .அது பின்னலாடை நகரமாக மாறிய பின்னால் விவசாய சீரழிவும் சுற்றுச்சூழல் சீரழிவும் எப்படி நடந்தது என்பதை இவரின் சாயத்திரை நாவல் விளக்குகிறது .நெசவாளர்களின் வாழ்விடமாக இருந்த பூமி இயந்திர பூமியாகி விட்டது. இப்போது வெளிவந்திருக்கும் அவரின் ஆயிரம் பக்க நாவலான சிலுவையில் கூட நெசவாளர் வாழ்க்கை பற்றி அதிகம் பேசுகிறார் கொங்கு பூமி என்றால் அது கவுண்டர்களின் விவசாய வாழ்க்கை சொல்லப்பட்ட இலக்கிய பிரதிகள் அதிகம் என்ற நிலையில் நெசவாளர் வாழ்க்கை பற்றி இவருடைய நாவல்கள் பெரும்பாலும் பேசி இருக்கின்றன . இன்றைக்கு உலகமயமாக்களுக்கு பின்னால் வணிகம் என்பது எல்லா நகரங்களுக்கும் சாதாரணமாகிவிட்டது .எல்லா நாடுகளுக்கும் பொதுவாகிவிட்டது இந்த சூழலில் பல வெளிமாநில மக்கள் வந்து தொழிலாளராக பணிபுரியும் இடமாக இருக்கிறது திருப்பூர் நைஜீரிய ஆப்பிரிக்கர்கள் வந்து குடியேறியிருக்கிற பிரதேசமாகவும் இருக்கிறது .இப்படி தமிழக நகரம் இந்தியாவின் பல மாநில தமிழ் அடையாளங்களை , பிரச்சனைகளை உள்ளடக்கிய நகரமாக திருப்பூர் மாறி இருப்பதை இவரின் படைப்புகள் சொல்கின்றன. தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன வட்டார முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன .உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன சுப்ர பாரதி மணியன் அறக்கட்டளையின் சொற்பொழிவின் போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் பேசும்போது : சுப்ரபாரதி படைப்புகள் பற்றி அவரின் ஹைதராபாத் மற்றும் திருப்பூர் மைய படைப்புகளை வைத்துக்கொண்டு இரட்டை நகர்களின் கதை சொல்லி என்று நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறேன். திருப்பூர் நெசவாளர்களின் மற்றும் விவசாயிகளின் பூமியாக இருந்தது .அது பின்னலாடை நகரமாக மாறிய பின்னால் விவசாய சீரழிவும் சுற்றுச்சூழல் சீரழிவும் எப்படி நடந்தது என்பதை இவரின் சாயத்திரை நாவல் விளக்குகிறது .நெசவாளர்களின் வாழ்விடமாக இருந்த பூமி இயந்திர பூமியாகி விட்டது. இப்போது வெளிவந்திருக்கும் அவரின் ஆயிரம் பக்க நாவலான சிலுவையில் கூட நெசவாளர் வாழ்க்கை பற்றி அதிகம் பேசுகிறார் கொங்கு பூமி என்றால் அது கவுண்டர்களின் விவசாய வாழ்க்கை சொல்லப்பட்ட இலக்கிய பிரதிகள் அதிகம் என்ற நிலையில் நெசவாளர் வாழ்க்கை பற்றி இவருடைய நாவல்கள் பெரும்பாலும் பேசி இருக்கின்றன . இன்றைக்கு உலகமயமாக்களுக்கு பின்னால் வணிகம் என்பது எல்லா நகரங்களுக்கும் சாதாரணமாகிவிட்டது .எல்லா நாடுகளுக்கும் பொதுவாகிவிட்டது இந்த சூழலில் பல வெளிமாநில மக்கள் வந்து தொழிலாளராக பணிபுரியும் இடமாக இருக்கிறது திருப்பூர் நைஜீரிய ஆப்பிரிக்கர்கள் வந்து குடியேறியிருக்கிற பிரதேசமாகவும் இருக்கிறது .இப்படி தமிழக நகரம் இந்தியாவின் பல மாநில தமிழ் அடையாளங்களை , பிரச்சனைகளை உள்ளடக்கிய நகரமாக திருப்பூர் மாறி இருப்பதை இவரின் படைப்புகள் சொல்கின்றன. தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன வட்டார முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன .உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. (திண்டுக்கல் காந்திகிராமம் அறக்கட்டளையில் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியின் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அப்போது பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் ” )