சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு 0 இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அஹ்லாம் பஸ்ஹாரத் (Ahlam Bsharat) அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஜெய்னா ஹாஸ்ஸன் பெக் (Zeina Hashem Beck) ஆங்கிலம் வழி தமிழில் : எஸ்.வி.ராஜதுரை இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அங்கேயே அதை விட்டுவிட்டேன் இறந்துபோன ஒரு சாலையை தரையிலிருந்து எப்படித் தூக்குவது என்பதையோ பதினான்கு தளங்களைக் கொண்ட ஒர் கட்டடத்தை நடுங்கிக் கொண்டே எப்படிக் கையில் வைத்திருப்பது என்பதையோ யாரும் எனக்குச் சொல்லித் தரவில்லை. * பீதியுற்ற என் நண்பர்களை அழைப்பதற்கு அஞ்சுகிறேன் ஏனெனில் அவர்களிடம் கடசி வார்த்தையென்று எதைச் சொல்ல வேஎண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை எப்படியிருந்தாலும் அப்படி ஒன்றும் இருக்காது அது உண்மை. * போரில் தப்பிப் பிழைத்த ஒரு மீனைப் பற்றி எழுதுகிறேன் அதை எழுதுவது எளிது: அந்த மீன் போரில் தப்பிப் பிழைத்தது * பீதியுற்ற பெயரில்லாத ஒரு பூனையின் புகைப்படத்தைப் பகிர்கிறேன் இது நல்லது: பெயரில்லாமல் இருப்பது எனவே சாவு உங்களை அழைக்காது * எனது நண்பர்கள் பசு எனப் பெயரிடப்பட்ட ஒரு பூனையைப் பற்றிச் சொல்கிறார்கள் ஆம், போரின் நடுவே பசு என்ற சொல்லைக் கேட்பது எனக்குத் தேவைப்பட்டது ஏனெனில் இந்த பயங்கரம் அனைத்துக்கும் பிறகு பால் என் நெஞ்சை வறண்டுபோகச் செய்துவிட்டது * பேட்மேன் , பாண்டா என்ற இரு பெயர்களைக் கொண்ட ஒரு பூனையைத் தூக்கிக் கொண்டிருக்கும் காஸாவின் குழந்தையொன்றின் வீடியோவைப் பார்த்தேன் இரண்டு பெயர்களைக் கொண்டிருப்பது நல்லது * அவற்றில் ஒன்றால் சாவு உன்னை அழைக்கும்போது , நண்பனே இன்னொன்றுடன் ஓடு * பூனையே சாவு உன்னை பேட்மேன் என்று அழைக்கும்போது வேகமாக ஓடு ஏனெனில் உன் பெயர் பாண்டா ஆக்கிரமிப்பினால் பாண்டா என்ற பூனையைக் கொல்ல முடியாது. குறிப்பு: காஸா மீது 2011 மே மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் வான் வழித் தாக்குதல் நடத்தியபோது எழுதப்பட்டது. Translated by SVR நன்றி: ArabLit from ArabLit’s Wednesday Poetry, https://arablitpoetry.substack.com/p/wednesday-poetry-raad-abdul-qadirs?utm_campaign=email-half- post&r=2hqww&utm_source=substack&utm_medium=email