சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

• அல்லிக்கேணி.. ராம்ஜி _ சுப்ரபாரதிமணியன் நாவல் என்று நினைத்துப்படிக்க ஆரம்பித்தேன். வடமொழிச்சொற்கள், அதீத ஆங்கிலச் சொற்கள் அப்படியே என்ற உறுத்தல்களைத் தவிர்த்து விட்டு , எளிமையான நடை என்று வந்த போது முகநூல் குறிப்புகள்தான் என்றறிந்து குறைகளை மனதில் கொள்ளாமல் சுலபமாகப்படிக்க முடிந்தது..நாவலாக்கிக் கொள்ளலாம் என்றும் மனது சொன்னது .சுவாரஸ்யம் இருந்தது சம்பவங்களில் ..ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி சம்பவங்கள் வாய்த்து விடும் அதுவும் சென்னை திருவல்லிக்கேணிக்காரர்கள், பிராமணர்கள் என்றால் இவ்வகை சமையல், சாப்பாடு, கோயில் , சென்னை தொழில் அனுபவச் சமாச்சாரங்கள் என்றால் குறைவிருக்காது. அப்படி வாசிப்பில் குறை வைக்காத சுவாரஸ்யமான சம்பவங்கள், ஒவ்வொரு அத்யாயமுடிவிலும் கவித்துவமானதாய் ஒரு சிறு விசயம்.அல்லது சிறு சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து திருப்பூர் டு உடுமலை 2 மணி நேரப் பேருந்து பயணத்திலேயே நூலை முடிக்க முடிந்தது ஆசுவாசம் ( அருந்ததி ராயின் The ministry of Utmost Happiness- தமிழ்ப்பதிப்பு பெருமகிழ்வின் பேரவை - நூலை எடுத்து 15 நாட்களாகின்றன். அதன் இறுக்கத்தால் ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படித்து விட்டு மூடிவிடுகிறேன் . அவ்வளவு சிரமம் கூட ). டெலிபோன் முந்நாள் ஊழியர் என்ற வகையில் 78ம் பக்க வீட்டிற்கு டெலிபோன் வந்த சாமாச்சாரம், ரத்னா கபே சமாச்சாரங்கள் 228 பக்கம், துக்கங்கள் ஊசிப்பட்டாசு போல் வெடிக்காது என்றப் பட்டியல்கள் 237 ம்பக்கம் என்று பல பக்கங்கள். மனக்கோலங்கள், சித்திரங்கள், மனித மன விசித்திரங்களை பல்வேறு தொழில் அனுபவங்கள்,திரைப்பட தயாரிப்பு உட்பட பல துறை அனுபவங்களின் விவரிப்பில் சுவாரஸ்யத்துடன் அமைந்திருப்பது வாசகனுக்கு ஒரு நல் பயன்தான் அதுவும் 250 பக்க நேர்த்தியான நூலை 200 ரூபாய்க்கு பெற முடிவதும் இலக்கியப் பயன்தான் . வாழ்த்துக்கள் முதல் எழுத்து நூல் வடிவத்திற்கும். ( எழுத்துப் பிரசுரம் சென்னை )