சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

மு.முருகேசும், சுப்ரபாரதிமணியனும் ‘குரு அரவிந்தன் வாசகர்’ வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக வாசகர் வட்டத்தின் சார்பில் எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், டென்மார்க், கனடா, அமெரிக்கா ஆகிய 14 நாடுகளில் இருந்து திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. முதற்சுற்றில் விதிமுறைகளை மீறிய கட்டுரைகள் தவிர்க்கப்பட்டு 142 கட்டுரைகள் தெரிவாகின. இரண்டாவது சுற்றில் கட்டுரையாளர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு இலக்கமிடப்பட்டு, நடுவர்களால் தனித்தனியாகப் புள்ளிகள் இடப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 20 கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 5 கதைகளும் தெரிவு செய்யப்பட்டன. அதன்பின் ஏனைய 15 கதைகளுக்கும் பாராட்டுப் பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) கிடைத்திருக்கின்றன. பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. இதைவிட நிர்வாகக்குழுவின் ஆலோசனையின்படி இளைய தலைமுறையினர், மாணவ, மாணவிகள் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மேலதிகமாகப் 10 பாராட்டுப்பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவர்களின் பெயர்களும் அகரவரிசையில் இருக்கின்றன. வாசகர் வட்டத்தின் சார்பாக பங்குபற்றிய, பரிசுபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். அடுத்த வருடம் மீண்டும் இது போன்ற ஒரு போட்டியில் சந்திப்போம். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல, காலம் பதில் சொல்லும் என்பதைப் புரிந்து கொண்டு, தயாராக இருங்கள். நன்றி. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள். 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை 3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள் முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு 4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள் ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை 5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள் சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு 15 ஆறுதல் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன. அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு. மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை. கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம். மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு. முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை. நளாயினி நந்தகுமார். மெல்பேர்ன், அவுஸ்ரேலியா. பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு. பூர்ணிமா. சா. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு. பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு. துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு. சக்திதாசன் கனகசபாபதி. 4390 ஏஐPPநுசுழுனுஇ டென்மார்க் சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு. தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை. இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான 10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா. தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை. றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா. சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா. ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை. திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை. றிசா ஜேசுதாசன் ரொறன்ரோ, கனடா. சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி. மேலதிக விபரங்களுக்கு: சுலோச்சனா அருண் செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். Kuru Aravinthan Fanclub ...