என்சிபிஎச் வெளியீடு
காற்றில் கலந்த பேரோசை அடைபட்ட காகிதக்குப்பிகள்
:                        த ஸ்டாலின் குணசேகரன் கட்டுரைகள் -சுப்ரபாரதிமணியன்
பொதிகைத் தொலைக்காட்சியில் “ தமிழ் விருந்து “ என்றப் பகுதியில்  66 நாட்கள் பேசிய  உரைககளின் கட்டுரை வடிவம் இந்நூல்.அரசியல்,, அறிவியல், அறவியல், வரலாறு, கல்வி குறித்தவையும் , முக்கிய ஆளுமைகள் பற்றியும் உள்ள  இக்கட்டுரைகள் கவிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள், நாடகச் சிற்பிகள், புத்தகங்கள் பற்றியத் தலைப்புகளில் அமைந்துள்ளன. எட்டு நிமிட உரைகள் நாலு பக்க கட்டுரைகளாகியிருக்கின்றன.தொலை
வெகுசன சிந்தனைக்கு விருது போடும் விசயங்கள் அவருக்கு அத்துப்படி. ஆனால் தேடிக்கண்டு பிடிக்கும் முத்துக்களை தீவிரமாக மூழ்கிக்கொண்டெடுத்துக் கோர்த்திருப்பதில் சாதனை அம்சங்கள் உள்ளன.அதில் நதி நீ இணைப்பின் முன்னொடியான காளிங்கராயன்,ஆங்கிலியர் அந்தாதி எழுதிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,மீன் மார்க்கெட்டில் திருமணம் அம்பேத்கார் , பதுங்கு குழியில் எழுத்து வேள்வி வெ.சாமிநாத சர்மா, இங்கிலாந்து இளவரசியும் இசைப்பேரரசியும் சுந்தரம்மாள் போன்றக்கட்டுரைகள் அவ்வகையிலானவை.விபுலானந்த அடிகள், ஆர்கே சண்முகம் செட்டியார், அப்துல்கலாம், ம.பொ. சி போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட ஆளுமைகளின் சிறப்பமசங்களை விளக்கும் கட்டுரைகள் பொது வாசகனுக்குத் தீனி போடுபவை. தொமுசி ரகுநாதன் ” பஞ்சும் பசியும் “  நாவலை எழுதுகையில் கைலாசமுதலியார் என்ற பாத்திரம் இறந்ததால் தேம்பித்தேம்பி அழுததை  வாசிக்கிறவர்கள் அழுகிற அளவில் விவரித்திருக்கிறார். அவர் நவீன இலக்கியத்தில் கண்ணீர் வரவழைக்கும் நூல்களையும் இது போல் அறிமுகப்படுத்தலாம். ஜெயகாந்தனுக்குப் பின்னால் நகராமல் இருப்பது நியாயமல்லவே.தமிழ்சமூகத்தின் பெருமைகளைப் பறை சாற்றுபவை இக்கட்டுரைகள். நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதையும் காட்டுபவை கூட
- சுப்ரபாரதிமணியன்
 ( என்சிபிஎச் வெளியீடு, 274 பக்கங்கள், ரூ230  )


 
