சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 20 பிப்ரவரி, 2019

கோவை இலக்கியச்சந்திப்பு 100 -இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சாந்தன் 24/2/19 கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர்
ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார்.

இவரது நூல்கள்[தொகு]
சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]
பார்வை - யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
கடுகு - 1975
ஒரே ஒரு ஊரிலே - சாகித்யமண்டலப் பரிசு பெற்றது - 1975
முளைகள் - என்.சி.பி.எச், சென்னை - 1982
கிருஷ்ணன் தூது - இலக்கியத்தேடல் வெளியீடு, பாளையங்கோட்டை - 1982
இன்னொரு வெண்ணிரவு - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1988
காலங்கள் - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1994
யாழ் இனிது - கோரி வெளியீடு, சென்னை - 1998
ஒரு பிடி மண் - நர்மதா, சென்னை - 1999
எழுதப்பட்ட அத்தியாயங்கள் - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
சாந்தனின் எழுத்துலகம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2006
சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2014
என் முதல் வாத்து (மொழிபெயர்ப்புக் கதைகள்) -கொடகே பிரசுராலயம், கொழும்பு. 2016
புதினங்கள்[தொகு]
ஒட்டுமா - வரதர் வெளியீடு - 1978
ஆரைகள் (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2007
கட்டுரை நூல்கள்[தொகு]
ஒளி சிறந்த நாட்டிலே (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
உலக இலக்கியம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2010
ஆங்கில நூல்கள்[தொகு]
The Sparks (Collection of short stories) - 1990[1]
In Their Own Worlds[1] (Collection of short stories - State literary Award winner) - Godage Bros. Colombo - 2000
Survival and Simple Things (Prose poems) - 2002
The Northern Front[1] (Collection of short stories) - Godage Bros. Colombo
The Whirlwind[1] (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010
Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo[2] - 2015
Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999
விருதுகள்[தொகு]
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - ஒரே ஒரு ஊரிலே - 1975
முதல் பரிசு - இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டி - 1982
State literary Award - In Their Own Worlds - 2000
Gratiaen (Short Listed) - The Whirlwind - 2010
Gratiaen (Short Listed) - Rails Run Parallel - 2014
Fairway Best Novel Award - Rails Run Parallel - 2015
Godage Best Novel Award - Rails Run Parallel - 2015
சாகித்திய ஸ்ரீ விருது - India Intercontinental Cultural Association - 2016
வாழ்நாள் சாதனையாளர் விருது (கொடகே தேசிய சாகித்திய விருது, 2017)



சாகித்திய அகாதமி: பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் இந்த ஆண்டு இலங்கை தமிழ் எழுத்தாளர் சாந்தன் ஐயாத்துரை அவர்களுக்கு

 சாந்தன் அய்யாதுரை அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார். சார்க் நாடுகளில் உள்ள ஒரு எழுத்தாளருக்கு இந்த பெல்லோஷிப்  வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு  சாந்தன் அய்யாதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில்  வசித்து வரும் சாந்தன் அய்யாதுரை அவர்கள் ,இந்த அங்கீகாரம் கிடைத்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியோடு இருக்கிறார். இன்று காலை புதுடில்லியில் சாகித்திய அகாடமியின் இலக்கியவிழாத் தொடக்க நிகழ்வில் அவரும்  பங்கெடுத்துக் கொண்டார். காலையில்  வந்த நாதஸ்வர கலைஞர்களின் இசையோடு நிகழ்வு தொடங்கியது ‘’அந்த மெல்லிய பனியில் நாதஸ்வர இசை முழங்க , இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாட்டுப்புறக் ,கலைஞர்கள் மொழிபெயர்ப்பாளர்கள், கல்வியாளர்கள் என்று நிரம்பி இருந்த சூழலில் தான் பங்கெடுப்பது தனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை த்தந்தது என்று மிகவும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் , இந்த ஃபெல்லோஷிப் ஒரு அங்கமாக அவர் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இலக்கியவாதிகளோடு தனித்த இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒரு பண்பாட்டு பகிர்வாகவும் அந்த நிகழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம்  22 ம் தேதி யில் இருந்து மார்ச் 17 வரை அவர் தமிழகத்தில் இருப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது  .நாளை நடைபெற உள்ள சாகித்ய அகாடமி  விருது வழங்கும் விழாவில் அவர் உரை நிகழ்த்த உள்ளார். thanks net services