சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 1 ஜனவரி, 2018

கனவு இலக்கிய வட்டம் நூல்கள் அறிமுகம்

-----------------------------------------------------
கனவு இலக்கிய வட்டம் “ டிசம்பர்  மாதக் கூட்டம்  பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான சக்தி மகளிர் அறக்கட்டளை அலுவலகத்தில் ஞாயிறு அன்று மாலை  நடைபெற்றது. செல்வம்  தலைமை  தாங்கினார். பாட்டாளியின் பார்வையில்..மார்க்சீய மெஞ்ஞானம் “  ஜார்ஜார்ஜ்பொலிட்சரின் தத்துவ நூல் பற்றிய uuஉரை ஆற்றினார் கவிஞர் ஜோதி.
போருக்குப் பின்னதான ஈழமக்கள் வாழ்க்கை.: .இலங்கைப் பயணம் குறித்த தன் அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார் சுப்ரபாரதிமணியன்  கூட்டத்தில் நூல் அறிமுகத்தில் : ஈழ எழுத்தாளர்களின் நூல்கள் இடம்பெற்றன.1. மேமன்கவியின் கவிதைத் தொகுப்பு, 2.ஜீவகுமாரனின் நாவல் 3. கே எஸ் சிவகுமாரனின் திரைப்படக்கட்டுரைகள் இடம்பெற்றன. கல்வியாளர் ருக்மணி, கருப்பசாமி, நடராஜன், தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகி மருத்துவர்  முத்துசாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்
செய்தி : ஜோதி .கா ( கனவு இலக்கிய வட்டத்திற்காக )
சுப்ரபாரதிமணியன்:
இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

சுப்ரபாரதிமணியனின் முறிவு நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் முறிவு நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.
- இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.
இலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன-
- யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்
- துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது
- துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன
துரோகத்தின் சாட்சியம் : 1