சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 13 ஆகஸ்ட், 2016

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி 

காலை பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் …..
ஓவியர் மேட்டுப்பாளையம் தூரிகை சின்ராசு ” ஓவியக்கலையும் இலக்கியமும் “என்ற தலைப்பில் பேசினார். “ எல்லா மொழிகளுக்கும் பொதுவாக விளங்கும் மொழி ஓவியம். அது மனதின் சிறந்த வெளிப்பாடு.. அரசியலோ, சமூக நிகழ்வுகளோ ஓவியம் மற்றும் கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சிக்கப்படுவதைப் போல் . எங்கும் வெளிப்பட்டதில்லை.ஓவியம் கலைகளில் மிகவும் முக்கியமானதும் தலைசிறந்ததும் பழமையானதும் கூட . அது எப்போதும் , கணிணி யுகத்திலும் உயிர்ப்போடு இருப்பதற்குக் காரணம் அது இதயத்திலிருந்து வெளிப்படும் நேரடி மொழியாக இருப்பதுதான் “ என்றார். 


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” குழந்தை இலக்கியம் “ பற்றிப் பேசியது: ” தமிழ் நாவலுக்கு 130 வயதாகிறது .அதில் குழந்தை நாவலுக்கு மிக முக்கியப்பங்கு உள்ளது .கவிதை, பாடல் என்றிருந்த தமிழ் இலக்கியக் போக்கு மேற்கத்திய இலக்கியங்களின் பாதிப்பில் நாவல் வடிவத்தை எடுத்தது. சுதந்திர எழுச்சி வேண்டிய நாவல்கள், திராவிட பகுத்தறிவு கருத்து நாவல்கள், யதார்த்த நாவல்கள்., நவீனத்துவ நாவல்கள் என்று வளர்ந்து இன்று இந்திய இலக்கியத்தின் முக்கிய பகுதியாக தமிழ் நாவல் விளங்குகிறது. விளிம்புநிலைமக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இன்றைய நாவல்கள் விளங்குவது சிறம்பம்சமாகும்.. அதில் கொங்கு நாவல்களின் பங்கு உலகமயமாக்கலில் பாதிக்கப்பட்ட, நுகர்வு சார்ந்த மக்களின் வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதல் இன்றைய நவீன நாவல்கள் வரை மக்களின் குரலாக தமிழ் நாவல் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் குழந்தை நாவல்களில் கொங்கு நாட்டைச் சார்ந்த பூவண்ணன் போன்றோரும், குழந்தைப்பாடல்களில் கோவையைச் சார்ந்த செல்வகணபதி, அழகுதாசன் போன்றோரும் உயர்ந்த சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். “ என்றார்
ஆசிரியை மோகனப்ரியா நன்றி கூறினார். 

17/8/16 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. வரும் நாட்களில் ” கதை சொல்லி “ நிகழ்ச்சிகள், பறவைகள் உலகம் காணொளி கண்காட்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ” புத்தக வாசிப்பு “ போன்றவை நடைபெற உள்ளன. சுற்றுச்சூழலாளர் சின்ன சாத்தன்., பின்னல் சவுந்தர பாண்டியன், பாரதி, , செந்தமிழ்வாணன், சு.மூர்த்தி., , மகேந்திரன் , , கராத்தே நாட்ராயன், ஓவியர் மருதபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,, என்பிடி போன்ற பதிப்ப்கங்களின் குழந்தை நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
Photos : In Face book : Kanavu Subrabharathimanian Tirupur