கனவு இலக்கிய வட்டம்   
             3 புதிய  நூல்கள் வெளியீட்டு விழா 
     3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா 17/4/2016
ஞாயிறு 5 மணி  சமரச சன்மார்க்க சங்கக்
கட்டடம் , மங்கலம் சாலை , அறிவுத் திருக்கோயில் பின்புறம், கருவம்பாளையம் ,
திருப்பூரில் நடைபெற்றது.
*  சுப்ரபாரதிமணியனின் “ வெள்ளம் “ (
சிறுகதைத் தொகுதி ) 
*  புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் 
அருவிச்சரம் ( கவிதைத் தொகுதி ).,  தவம்
செய்த தவம் ( கட்டுரைத் தொகுதி ) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
நூல்களை தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் ( செயலாளர் , சன்மார்க்க சங்கம்,
திருப்பூர் ) வெளியிட்டுப் பேசினார். நூல் பிரதிகளை  ஜேசிஸ் தேவராஜ், கதிர்வேலு, பாண்டிச்செல்வம்,
வழக்கறிஞர் ரவி, அருள் செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் பேசியது : 
“ தமிழுணர்வுடன் கூடிய  உலகப்
பார்வை நமக்குத் தேவை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொதுமரபில் வளர்ந்த
தமிழ்ச்சமூகத்தின் இன்றைய எழுத்தாளர் தலைமுறை உலக இலக்கியத்தின் முக்கிய பக்கங்களாகத்
திகழ்கின்றது. படைப்பு உணர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவை. படைப்பிலக்கிய
உணர்ச்சி நிலையானது. பொருள் உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள் நிலையற்றவை. எனவேதான்
படைப்பிலக்கியம் நீடித்து நிற்கிறது. அதே போல் தீங்கு செய்யாத சமய முறைகளே
நிலைக்கும். சமூக அக்கறையுடன் கூடிய படைப்பிலக்கிய முயற்சிகளே காலத்தின் குரல்களாக
நிற்பதால் அதுபோன்றப் படைப்புகளே நமக்குத் தேவை ” என்றார்.  
நூல்கள் குறித்து   கேபிகே பாலசுப்ரமணியன் ( திருப்பூர்
முத்தமிழ்ச்சங்கம் ) மதிப்புரை வழங்கினார். சித்ரா மு. ராமசாமி ( தலைவர் ,
சன்மார்க்க சங்கம், திருப்பூர் ) தலைமை தாங்கினார். ர.தங்கவேல் ( தலைவர்,
திருக்குறள் அறக்கட்டளை ) ,          பா.
ஜீவானந்தம்  ( பொருளாளர் , சன்மார்க்க
சங்கம், திருப்பூர் ), டிட்டோனி முத்துசாமி, கவிஞர்கள் ஜோதி, துருவன் பாலா,
மனோகர், நாவலாசிரியர்  சிவராஜ், அன்பரசன்,
தலைமையாசிரியர் பொ.கருப்பசாமி  ஆகியோரும்
பங்கு பெற்றனர். 
நூல்களின் ஆசிரியர்கள் சுப்ரபாரதிமணியன், சொக்கலிங்கம் ஆகியோர்
எற்புரை வழங்கினர். விஜயா நன்றி கூறினார். கனவு இலக்கிய வட்டம்   --   சமரச சன்மார்க்க சங்கம், திருப்பூர் இணைந்து இவ்விழாவை நடத்தின. 
புகைப்படங்கள்: முகநூல் :Kanavu
subrabharathimanian tirupur 
செய்தி : கே ஜோதி


 
