சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 ஏப்ரல், 2016

                                                                 கனவு இலக்கிய வட்டம்  

             3 புதிய  நூல்கள் வெளியீட்டு விழா

     3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா 17/4/2016 ஞாயிறு 5 மணி  சமரச சன்மார்க்க சங்கக் கட்டடம் , மங்கலம் சாலை , அறிவுத் திருக்கோயில் பின்புறம், கருவம்பாளையம் , திருப்பூரில் நடைபெற்றது.


*  சுப்ரபாரதிமணியனின் “ வெள்ளம் “ ( சிறுகதைத் தொகுதி )
*  புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின்
அருவிச்சரம் ( கவிதைத் தொகுதி ).,  தவம் செய்த தவம் ( கட்டுரைத் தொகுதி ) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நூல்களை தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் ( செயலாளர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ) வெளியிட்டுப் பேசினார். நூல் பிரதிகளை  ஜேசிஸ் தேவராஜ், கதிர்வேலு, பாண்டிச்செல்வம், வழக்கறிஞர் ரவி, அருள் செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் பேசியது :  “ தமிழுணர்வுடன் கூடிய  உலகப் பார்வை நமக்குத் தேவை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொதுமரபில் வளர்ந்த தமிழ்ச்சமூகத்தின் இன்றைய எழுத்தாளர் தலைமுறை உலக இலக்கியத்தின் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றது. படைப்பு உணர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவை. படைப்பிலக்கிய உணர்ச்சி நிலையானது. பொருள் உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள் நிலையற்றவை. எனவேதான் படைப்பிலக்கியம் நீடித்து நிற்கிறது. அதே போல் தீங்கு செய்யாத சமய முறைகளே நிலைக்கும். சமூக அக்கறையுடன் கூடிய படைப்பிலக்கிய முயற்சிகளே காலத்தின் குரல்களாக நிற்பதால் அதுபோன்றப் படைப்புகளே நமக்குத் தேவை என்றார்.  

                       
நூல்கள் குறித்து   கேபிகே பாலசுப்ரமணியன் ( திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் ) மதிப்புரை வழங்கினார். சித்ரா மு. ராமசாமி ( தலைவர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ) தலைமை தாங்கினார். ர.தங்கவேல் ( தலைவர், திருக்குறள் அறக்கட்டளை ) ,          பா. ஜீவானந்தம்  ( பொருளாளர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ), டிட்டோனி முத்துசாமி, கவிஞர்கள் ஜோதி, துருவன் பாலா, மனோகர், நாவலாசிரியர்  சிவராஜ், அன்பரசன், தலைமையாசிரியர் பொ.கருப்பசாமி  ஆகியோரும் பங்கு பெற்றனர். 

நூல்களின் ஆசிரியர்கள் சுப்ரபாரதிமணியன், சொக்கலிங்கம் ஆகியோர் எற்புரை வழங்கினர். விஜயா நன்றி கூறினார். கனவு இலக்கிய வட்டம்   --   சமரச சன்மார்க்க சங்கம், திருப்பூர் இணைந்து இவ்விழாவை நடத்தின.


புகைப்படங்கள்: முகநூல் :Kanavu subrabharathimanian tirupur
செய்தி : கே ஜோதி