சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஒரு நிகழ்ச்சி :
-------------------
கலைஞன்   பதிப்பகம் : 60ம் ஆண்டு விழா

மலேசியா பல்கலைக்கழகம்,, சென்னை  கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் சர்வதேசக் கருத்தரங்கு : மலேயா பல்கலைக்கழகத்தில்..

கோலாலம்பூர் 26, 27/2/2006
60 எழுத்தாளர்கள், 60 நூல்கள் வெளியீடு கலந்து கொள்கிறேன். மலேசியா எழுத்தாள, வாசக நண்பர்களையும் அழைக்கிறேன்   


ஒரு விருது 
-----------------

மொழிபெயர்பிற்கான சாகித்ய அகதமி விருது :” மீட்சி “

கௌரி கிருபானந்தன் அவர்களின் மின்னஞ்சல்:
வணக்கம்
2015 ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்பிற்கான சாகித்ய அகதமி விருது திருமதி ஓல்கா அவர்களின் விமுக்தா என்னும் படைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பான 'மீட்சி' க்காக எனக்கு கிடைத்துள்ளது.
இந்த அங்கீகாரம் எனக்கு கிடைததற்கு நீங்கள் அளித்த ஊக்குவிப்பே முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
கௌரி கிருபானந்தன்

ஒரு ஓவியக்கண்காட்சி
------------------------------------


காடுகள் : உலகின் உயிர் மண்டலம்
ஓவியர் ந.தமிழரசனின் சுற்றுச்சூழல்  ஓவியக்கண்காட்சி  
ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  

கே .சரவணன்( முதல்வர் ), பி.சிவகுமார் ( முதன்மை செயல் அலுவலர்)
ஓவியர் ந.தமிழரசன் , பேரா.சதீஷ்குமார்  ஆகியோரும் இயறகையைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர்.

ஓவியர் ந.தமிழரசன்  மாவட்டத்தில் ஒரு நாள் என்று தமிழகம் முழுவதும் இக்கண்காட்சியை நடத்தி  வருகிறார்.  நேற்று திருப்பூரில் நட்த்தினார்.

 அவர் பேசுகையில் ;

நாட்டின் எதிர்கால சந்ததிகளான மாணவ சமுதாய்ம் இயற்கையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும, அதற்கான மன எழுச்சியை இது போன்ற கண்காட்சி மூலம் பெற வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பிறரிடம் ஏற்படுத்த வேண்டும்

 ஈர நிலம் “ என்ற சுற்றுச்சூழல் அமைப்பு தமிழகம் முழுவதும் இந்தக்கண்காட்சியை தினம் ஒரு மாவட்டம் என்ற வகையில் நடத்தி  வருகிறது. 
மாணவர்கள் பெரும் திரளாக கண்காட்சியைக்கண்டு நவீன ஓவியம் பற்றிய பல் எண்ணங்களியும் பகிர்ந்து கொண்டனர்.