சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஜனவரி, 2016

திருப்பூர் புத்தகக் கண்காட்சி : முதல் நாள் எழுத்தாளர்களுக்குப்  பாராட்டுக்கு..
---------------------------------------------------------------------------------------------------------------
           
            குழந்தைகள் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது வாழ்நாள் லட்சியமாகும்' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி சமீபத்தில் தெரிவித்தார். அவர் தொன்னூறுகளில் குழந்தைத் தொழில் ஒழிப்புப் பணியில் திருப்பூரில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன்.
ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சட்டங்கள் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து, வலுவான திட்டம் ஒன்றை உருவாக்கும் பணியில் குழந்தைகளுக்கான எதிர்காலத் திட்டங்களில் அவர் ஈடுபட்டுவருகிறார் தற்சமயம்..

இன்னும் எத்தனை நாள்களுக்குதான் திரைப்பட நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் நமது நாயகர்களாக நினைத்துக் கொண்டிருப்பது? குழந்தைகள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் புதிய தலைமுறை நாயகர்களை நாம் உருவாக்குவோம் என்கிறார் கைலாஷ் சத்யார்த்தி.


புதிய கதாநாயகர்கள் மாற்று கதாநாயகர்களாகவும் எதிர் கதாநாயகர்களாகவும் இருக்க வேண்டும். மாற்று அரசியல் , மாற்று கலாச்சாரத்தை உருவாகுக்கும் எதிர் கதாநாயகர்களாக அவர்கள் இருக்கவேண்டும். அந்தப்பணியில் இந்தப்புத்தகக் கண்காட்சியின் இந்த நூல்கள் ஈடுபடும். புதிய கதாநாயகர்களை இந்தப்புத்தகங்கள் உருவாக்கும். அதை உணர்த்தவே படைப்பாளிகளுக்குத் தரும் இந்த பாராட்டு ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.

--- சுப்ரபாரதிமணியன்