சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 6 டிசம்பர், 2016

கனவு   : இலக்கிய நிகழ்வு


4/12/16 ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம்   வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்.

- பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி  கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார்.  பேராசிரியர் செல்வி ஏற்புரையில் தமிழகப்பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார்.

நூல்கள் அறிமுகம்:
சேவ் வெளியிட்ட களவாடப்பட்ட குழந்தைப்பருவம்   ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ) ,சுப்ரபாரதிமணியனின்  சிவப்புப் பட்டியல் “ ( அழியும் உயிரினங்கள்) பற்றியது ) அண்டனூர் சுராவின் ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.          

              “ கறுப்புப்பணமும்  பொதுமக்களின் கஷ்டங்களும் “ என்பது பற்றி அருணாசலம் பேசினார்.

திருப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழா பற்றி விரிவாகப்பேசினார் சுப்ரபாரதிமணியன். சமூக யதார்தத்திற்கு மாறாக கலைப்படைப்புகள்  எழுப்பும்  தார்மீகக் கேள்விகளை இத்திரைப்பட விழாவும்  எழுப்பியது.. வரலாற்றுக் கலாச்சாரத்தோடு இணைந்த சர்வதேச மனிதனாக மாற்றும் முயற்சியில் இப்படங்கள் அமைந்திருந்தன.  “ என்றார். தமிழர்களின் வாழ்க்கையை பிராஞ்ச் தேசத்தில் எடுத்துக்காட்டிய தீபன் படம் பற்றி எடுத்துரைத்தார். தீபன் என்ற பிரான்ஸ் தேசத்துப்படம் இலங்கையிலிருந்து  அகதியாகசெல்லும் ஒரு பெண் ( யாழினி )  தன்னோடு குடும்பம் என்று காட்டி ஒரு ஆணையும் ஒரு குழந்தையையும் கூட்டிச் சென்று  பிரான்சிற்குச் சென்று அவலப்படுவதைச் சொன்னது.  இலங்கையின்  போர்ச்சூழலை விட்டு விலக ஆசைப்பட்டிருந்தாலும் பிரான்ஸில் காணப்படும் போதைப்பொருள் கடத்துகிறவர்களின் மத்தியலான யாழினியின் வாழ்க்கை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறின  சிவதாசனின்  ( எழுத்தாளர் ஷோபாசக்தி இப்பாத்திரத்தில்)   மனச்சிரமங்களோடு சொல்லியது. மூன்று பேரும் குடும்பமில்லை . ஆனால் ஒரே குடும்பமாக காட்டிக் கொள்ளும் சூழலில் இரு பெண்களின் நிலை இதில். தமிழ் வசனங்கள், பல தமிழ்ப்பாடல் வரிகள் பெரும்பான்மையாக இடம்பெற்று இத்திரைப்படவிழாவில் தமிழ்ப்படம் இல்லாதக் குறையைப் போக்கியது எனலாம்.இலங்கையிலோ பிரான்ஸிலோ அந்நியப்பட்டுப்போன  மனிதர்களை காட்டியது.      பேராசிரியர் செல்வியின் குறும்படங்களின் வெளிப்பாட்டுத்தன்மை குறித்து துருவன் பாலா பேசினார்.  அவரின் குறும்படங்கள் திரையிடப்பட்டன                                                              


- பேராசிரியர் செல்வியின் படைப்புலகம் ( கோவை செல்வியின் இரு குறும்படங்கள் , மூன்று நூல்கள் ) பற்றி  கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார்.  ஏற்புரையில் தமிழகப் பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார். சேவ் வெளியிட்ட களவாடப்பட்ட குழந்தைப்பருவம்   ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் நூல் பர்றிய அபிப்ராயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில்  பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் குழந்தைகளை தொழிலாளிகளாக்காதீர்கள். வெளிநாடுகளில் குழந்தைகள் முழு ஆளுமையுடன் வளர்கிறார்கள். வாழ்கிறார்கள், குழந்தை ஆளுமை முழு வாழ்வின் ஆதாரம்.  அறிவு பள்ளிப் படிப்பில் மட்டும்  இல்லை . பொது புத்தக வாசிப்பில் இருக்கிறது.அனுபவத்தில் இருக்கிறது.பயிற்சியை தொழிலாளச் செய்தால் அது தீமை.குழந்தைகளைத் தொழிலாளிகளாகும் பெற்றோர் அடிப்படை உரிமையில் கைவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்கள் அவர்களை பிறகு வன்முறைகளாக்குகிறது.அது வேண்டாம்..குழந்தைகளாகவே வளர விடுங்கள் என்றக்கருத்து வலியுறுத்தப்பட்டது. .

..(ஒருங்கிணைப்பு ஜோதி 90255 26279 , மனோகர் 81242 83081 )