சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 29 நவம்பர், 2016

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) 

சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன.
சுப்ரபாரதிமணியனின் கோமணம்நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன் நாவல் கோமணம்வெளியீடு · .மற்றும் படைப்பரங்கம்..
 “ தினசரி யாத்திரை-நடை பயணம் - உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாதயாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம், இப்போது தமிழ்நாட்டில் பல கோவில்களின் விசேசங்களையொட்டி   ஆன்மீக பக்தர்கள் பக்தி யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது பழனி கோவிலுக்கு தைப்பூச சமயத்தில்  நடைபெறும் பாத யாத்திரை. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்று கேரளாவிலிருந்தும் பலர் அவ்வகைப் பயணம் மேற்கொள்கிறார்கள்.வெளிநாட்டினரும் கூட.
அப்படி பழனி பாத யாத்திரையின் போது நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்களை இந்நாவல் சொல்கிறது. பனியன் தொழிலாளர்கள், பனியன் உற்பத்தி செய்யும் சிலர், பலதரப்பட்ட பெண்கள், இளைஞர்கள் என்று பலர் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்.வெவ்வேறு வகையான சடங்குகள் தொன்மக் கதைகள் , பக்தி சார்ந்த நம்பிக்கைகள், சிறுசிறு சடங்குகள் என்று நான்கு நாட்கள் பக்திப் பயணத்தை இந்நாவல் விவரிக்கிறது. என்றார் சுப்ரபாரதிமணியன்

கோவை இலக்கியச் சந்திப்பின் 73 ஆம் நிகழ்வின் முக்கிய நிகழ்வு 27 .11.2016 ஞாயிறு காலை இடம் -சப்னா புக் ஹவுஸ் வடகோவை சிந்தாமணி அருகில் கோவை கோமணம் ( பெற 94867 32652 )

வரவேற்புரை- புவியரசு அய்யா
தொகுப்பு - இளஞ்சேரல் அவர்கள்
சுப்ரபாரதி மணியன் அவர்களின் 'கோவணம்' நாவல் வெளியீடு.
கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்' நூல் அறிமுகம் - கவிஞர் அகிலா.
கண்மணி ராசா முகம்மது அவர்களின் 'நீங்கள் அறையவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை' நூல் அறிமுகம் - பிர்தௌஸ் ராஜகுமாரன்
ஏற்புரை - கண்மணி ராசா முகம்மது அவர்கள்
கோவணம் நாவல் குறித்தும் திருப்பூர் திரைப்பட விழா குறித்தும் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.
பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவர்களின் 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' நூல் அறிமுகம் - ஸ்ரீபதி பத்பநாபா
அண்டனூர் சுரா அவர்களின் 'சிறுகதைகள்' நூல் அறிமுகம் - அம்சப்ரியா
ஏற்புரை - அண்டனூர் சுரா
நன்றியுரை - பொன் இளவேனில்