சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 12 ஜூன், 2015

கரிகாலன் விருது :
-----------------



            "புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
           மலேசியா ரெ கார்த்திகேசுவின் "நீர் மேல் எழுத்து" சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து...


                                     சுப்ரபாரதிமணியன்
--------------------------------------------------

தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம்  வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான           கரிகாலன் விருது “  பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி
 நீர் மேல் எழுத்து “

            கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் "ஊசி இலை மரம்" பரிசு பெற்றபோது அயலக இலக்கியத்திற்கு கிடைத்த கௌரவம் குறித்த பெருமிதமும் முணுமுணுப்பும் இருந்தது. அந்த முணுமுணுப்பு 2003ல் அவரின் சிறுகதைத் தொகுப்பு "ஊசி இலை மரம்" வெளிவந்த பின் அவரின் படைப்புகள் தொகுப்பாக வெளிவராரது குறித்ததாக பின்னர் இருந்தது. அந்த முணுமுணுப்பை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது இத்தொகுப்பு நீண்ட இடைவேளைக்குப்பின்.
            இரண்டாம் குழந்தைப் பருவமான முதுமையில் பெரியவர்களை மிகவும் பாதிப்பவர்களும், அவர்களுடன் இணக்கமாக இருப்பவர்களும் குழந்தைகள்தான். அக்குழந்தைகளை உலகத்தில் இதில் மூன்றில் ஒரு பங்கு சிறுகதைகளில் காட்டுகிறார். மல்லி என்ற குழந்தை மழை நிறத்தை, வயிற்றுக்குள் இருக்கும் எலியை, மூளை வளர்ச்சி குறைந்த பையனை என்று பலவற்றை அணுகும் குழந்தைத்தனமான அனுபவங்களாய் விரிகின்றன. முதுமையும் குழந்தைமையும் ஒன்றாகிறது. ரெ.கா. தொடர்ந்து விஞ்ஞானச் சிந்தனைகளை சிறுகதைகளுக்குள் கொண்டு வருகிறவர். இத்தொகுப்பில் இன்னொரு மூன்றிலொரு பங்கு கதைகள் கடவுள் என்ற மாயை மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி பற்றியும் விரிவாய் பேசுகின்றன. அணு ஆயுத மோதல் உலகையே நிர்மூலமாக்கி விடுவது பற்றிய அச்சம் விரவியிருக்கிறது. சூன்ய உலகத்தை தவிர்க்கிற முயற்சிகளை விளக்குகிறார். விஞ்ஞான தேடல் சாதாரண வாழ்க்கையை நிர்மூலமாக்குவதையும் பாலியல் உணர்வு அற்றுப் போன உலகில் ஒரு விஞ்ஞானி வாழ முடியாத ஆதங்கத்தையும் மூத்த விஞ்ஞானியை சகா இளைய வயது விஞ்ஞானி கொல்வதை உச்சமாய் எடுத்துக் காட்டுகிறார். விஞ்ஞான உலகின் இன்னொரு அபாயபுறம் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் குறிப்பாக கணினி உலகத்தில் மனிதம் மரத்துப்போய் குடும்பத்திலிருந்து அந்நியமாகும் சூழலும் காட்டப்படுகிறது. "எதிர்காலம் என்ற ஒன்று" என்ற கதை முதல் பல கதைகள் சுஜாதாவின் நீட்சியாக வெளி வந்துள்ளன. அதை சுஜாதாவும் உலகளாவிய இணையச் சிறுகதைப் போட்டியின் மூலம், அங்கீகரித்திருக்கிறார்.
            எவ்வளவு பெரிய முரடனுக்குள்ளும் ஒரு மனிதன் உள்ளார்ந்து இருப்பதை கொண்டாடும் கதைதான் 'கொஞ்சம் மனிதன்.' வேலப்பனின் முரட்டுத்தனம் உருகி கைகுலுக்கிச் செல்லும் மனிதனாக மாறிவிடுகிற அற்புதம் மனித நேயத்தை சுலபமாகச் சுட்டுவதாகும். மௌனமாய் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் முதியவர் ஒருவர் அவர் பார்வையில் வியாபார ரீதியாய் அணுகும் மகனை ஒரே வார்த்தை பதிலால் குப்புற வீழ்த்தி விடுகிறார். விளிம்பு நிலையிலான ஒரு பெண், வழக்கறிஞர் பெண்ணொருத்தி ஆகியோரை முன் நிறுத்தி நியாயங்கள் எதிர் கொள்ளும் அவமானங்கள் "சேர்ந்து வாழலாம் வா" குறுநாவலில் விரித்து சொல்லப்படுகிறது. எந்த நிலையிலான பெண்ணாக இருந்தாலும் சரி அவன் முன் நிறுத்தப்படும் துரோகங்களுக்கு எல்லையில்லைதான்.
            எழுத்தாளன் என்ற வகையில் அவன் எதிர் கொள்ளும் உலகம் அவ்வளவு உவப்பாகத்தானில்லை. எழுத்தாளனுக்கு உலகம் தரும் கௌரவமும் அத்தகையதே. அதுவும் சிறு பத்திரிகை வாசிப்பும், தொடர்ந்த செயல்பாடுகளும் மனிதனை சற்றே வக்கிரமாக்கி விடுவதும் தெரிகிறது. அதிகமாக சிறுபத்திரிகைகள் படிப்பதனால் ஏற்படும் தாக்கம் விசனத்திற்குரியதாக சிந்தனையை மாற்றி விடுகிறது. இதை பலர் குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். இதை இவரும் சில கதைகளில் குறிப்பிடுகிறார்.
            'ஆக்கலும் அழித்தலும்' கதையில் குழந்தை கிறுக்கி சுவரைக் கெடுத்துவிட்டதாக அங்கலாய்ப்பு கொள்ளும் வேளையில் அதை சுலபமாக சுத்தமாக்கி பிரச்னை தீர்வது போலத்தான் சிறுபத்திரிகை படைப்பு சார்ந்த அதீத குழப்பங்களும், சிடுக்குகளும் என்பதை சில இடங்களில் குறிப்பிடுகிறார். தான் கொண்டாடும் படைப்புகள் மேல் சுமத்தப்படும் வீணான குற்றச்சாட்டுகள் மனதை நோகடித்திருப்பதை சில இடங்களில் காணலாம். சிடுக்கான சுந்தர ராமசாமியின் கதையொன்றை முன் வைத்து எழுப்பப்படும் கேள்வி அதற்கு எதிர்வினையாக இன்னொரு கதையை பகடி செய்து எழுத வைத்திருக்கிறது.
            பிற கதைகளில் உள்ளார்ந்து விரவிக் கிடக்கும் கிண்டல் தன்மை இக்கதையில் உச்சமாகி இருக்கிறது. எளிமையும், தீர்க்கமான உண்மையும் விரிந்து பரவும் இத்தொகுப்பின் கதைகளை அவ்வகை சிடுக்கு கதைகளுக்கு எதிர்வினையாகவே அமைந்திருப்பதை தீவிர வாசகன் கண்டடைவான். அது முதிய எழுத்தாளரின் பக்குவப்பட்ட தன்மையையே காட்டுகிறது. புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது என்று ஒரு அமிர்த வரியை ஒரு சிறுகதையில் கார்த்திகேசு எழுதியிருக்கிறார். வக்கிர மனங்களின் ஆழமான வடுக்கள் எவ்வளவு அபாயகரமானது என்பதை இக்கதைகள்மலேசியா சூழலில் தீவிரமாகக் காட்டத் தவறதில்லை.


            (விலை: RM 25/- உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா.)