சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 27 ஜூன், 2015

புத்தகத்தின் மீதான  தடையை நீக்குக : கோரிக்கை

கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம் வியாழன் மாலை சக்தி பில்டிங், பாண்டியன் நகரில் நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். சக்தி மகளிர் அறக்கட்டளையின்  தலைவர் கலாமணி கணேசன்  .கனவு இலக்கிய இதழின் 29 ஆண்டின் முதல் இதழை வெளியிட்டார். .கனவு  திருப்பூரிலிருந்து வரும் இலக்கிய காலாண்டிதழாகும் . 29 ஆண்டுகளாக வெளிவருகிறது ( 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602 ஆண்டுச் சந்தா ரூ 100 )
 கு.செந்தில் எழுதிய பழந்தமிழரசும் மரபும் (  மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் ) நூல் அறிமுகம் செய்யப்பட்டது . அவர் இதற்கு முன் எழுதிய       “ மீண்டெழும் பாண்டியர் வரலாறு “ நூல் மீதான தமிழக அரசின்  தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
. இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்ற பேர்டு மேன் பட அறிமுகத்தை சுப்ரபாரதிமணியன் நிகழ்த்தினார்.. சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.

செய்தி ; கா .ஜோதி