சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 24 ஜூன், 2015

ஊடகக் கல்விக்கான ஆதாரங்கள்

அ.ஸ்டீபன் நூல் பற்றி : சுப்ரபாரதிமணியன்

 வெகுஜன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை அளிக்கிற விதத்தில் கேளிக்கையையும் சேர்ந்தே தருகின்றன.பெரும் இடைவெளிகளை உருவாக்கும் வர்க்க நிலையில்  பெரும் வணிக சமூகத்துடன் சமரசப்போக்குடன்  எதிர்ப்பின்றி செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றன.ஆதிக்கச் சக்திகளின் பார்வையை சாதாரண மக்கள் மீது திணித்து  ஒரு வகை செயலாக்கமின்மையை உருவக்குகின்றன.  .ஊட்கங்கள் தரும் விசயங்களின் ஒப்புதலை உற்பத்தி செய்து சமரச உலகிலேயே உலகச் செய்கின்றன. இதை நோம் சோம்ஸ்கி                  “ ஒப்புதலை உற்பத்தி செய்தல்என்கிறார்.முதலாளித்துவ சக்திகள் தொடர்ந்து சொத்துக்களைக் குவித்துக் கொள்வதற்கும், நுகர்வு மனப்போக்கை சாதாரண மக்களிடம் விதைத்து  அடிமைகளாக நிலைத்து  நிற்பதற்கும் வழிகளைக் கோலுகின்றன.

இவ்வகை ஆதிக்கப் பிடியில் சாதாரண மக்களும், உலகமும் சிக்கிக் கொண்டிருக்கிறது. கோடிகளில் நிதி ஆதாரமாய் முதலீடு செய்யப்படுகிறது.விளம்பரம் தரும் மாயை நுகர்வுத் தன்மைக்கு சுலபமாக வழி கோருகிறது. தகவலே வாழ்வாதாரம். ஊடகமே பொருளாதாரம் . என்று மெய்ப்பிக்கப்படுகிறது. திரும்பத்திரும்ப சொன்ன விசயங்களையே சொல்லி அதை உறுதியாக்குகிறதுஊடகத்தின் பிடியில் பார்க்கிற வாசகன் திணறிப் போகிறான். வாய்ச் சொல்லாய் வயிற்றை நிரப்பச் சொல்கிறார்கள்.கைப்பிடிக்குள் உலகம் மாறிப்போய் விட்ட்து. நிழல் நிஜமாகி விட்ட்து.பெண் எந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதுநுகர்வு வியாதி தொற்றிப் பரவுவதாய் சுலபமாய் மாறிப் போய் விடுகிறதுஇதைச் சிறு சிறு வாக்கிய அமைப்புகளுடன் ஒரு வகையில் புதுக்கவிதையின் உரைநடையை பிரித்துப் போடும் தன்மையில் ஒரு சிறு படத்துடன்  ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக் கொண்டு இந்நூல் விளக்குகிறது.  கூரிய சமூக விமர்சனங்களாக அவை விளங்குகின்றன.. 49 தலைப்புகள்.   ஊடகம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்ற விசயம் ஒவ்வொரு கருத்திலும் தொனிக்கிறது.  கோட்டோவியங்கள் நறுக்குத்தறித்த விசயங்களைச் கட்டியமாகச் சொல்லி விடுகின்றன. “ ஊடகம் மக்களுக்காக . தொடர்பு மாண்புக்காக “ என்பதை இவை வலியுறுத்துகின்றன. ஊடகத்தின் பிடியில் அகப்பட்டிருக்கும் இளைய தலை முறை புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலின் வெளிப்பாட்டு முறை அமைந்திருப்பது அதை வெற்றிகரமாக்குகிறது.  ஒரு உதாரணம்: : மீனுக்கேற்ற வலை, ஆளுக்கேற்ற வடிவம் . குறைந்த வரிகளில் குறுஞ் செய்தி. சிறு கோட்டோவிம். சட்டென ஒரு நகைச்சுவை, எள்ளல். நுகர்வு சந்தையில் ஷாம்பு பற்றி சொல்ல ஆரம்பித்து  அது கிரிக்கெட் வரைக்கும் நீள்கிறது. ஊடகத் துறையில் 20 ஆண்டுகாலமாய் தொடர்ந்து பணி புரிந்து வரும் அ. ஸ்டீபனின் இந்நூல் ஊடகம் பற்றின எள்ளல் பார்வை விமர்சனமாக பரவியுள்ளது.  இவர் இதற்கு முன் வெளியிட்ட இடைவேளை, ரசிகர் மன்றங்கள், பாபா மயக்கமும் சில படிப்பினைகளும், போன்ற நூல்களும் தீவிரமாக இவை பற்றியே பேசுகின்றன. ஊடகக் கல்விக்கான ஆதார நூல்களில் ஒன்றாக அமையும் தீவிரத்தைப் பெற்றது ஸ்டீபனின் இந்நூல். இதுவரை இவ்வகையில் 10 நூல்களை    ஸ்டீபன் வெளியிட்டிருக்கிறார்.

( ரூ 25,  பக்கங்கள் 108 .அ. ஸ்டீபன் : ஊடகச் சிந்தனைகள், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல் )