சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 14 ஏப்ரல், 2011

வாகன நெரிசல்

அண்டைவீடு : பயண அனுபவம் :



டாக்காவிலிருந்து 29கி.மீ. தொலைவிலான பழைய பானம் நகரைப் பார்க்கச் செல்வதற்கு நான்குமணி நேரம் பிடித்தது. தினமும் இந்த அனுபவம்தான் எங்களுக்கு. டாக்கா நகரத் தெருக்களின் வாகன நெரிசல் பயமுறுத்தக் கூடியதாக இருந்தது.

பானம் நகரம் 13ம் நூற்றாண்டு வரை இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன் பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத் தலைநகராக்கியிருக்கிறது. துணிகளுக்குப் பெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம் கூட்டிச் செல்கிறார்கள். வங்கதேசத்தின் நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவிற்குச் சென்று விட்டதால் வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து போய் சிதிலங்களாக நிற்கின்றன. பழம் மசூதியொன்றும், நாட்டுப்புறவியல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் , நடந்து சென்று இளைப்பாறக்கூடிய தோட்டங்களும் முக்கியமானவை.





டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக பலவற்றைச் சொல்லலாம். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான சாலையின் " பேபி டாக்ஸி" என்ப்படும் இரட்டை என்ஜின் குட்டி வாகனங்கள். இவை தரும் புகையும் புழுதியும் அபரிமிதமானவை. ஒரு பேபி டாக்ஸி 30 சாதாரணக் கார்களுக்குச் சமம். அவ்வளவு சுற்றுச்சூழல் சிரமம் தருபவை. அவற்றை மாற்றும் திட்டத்தில் பச்சாசை டாக்ஸிகள் சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது. கால்களில் மிதித்துச் செல்லும் ஏழு லட்சம் ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவை அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.

பின்னலாடைத் தொழிலாளர்களில் 80% பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களை ரிக்சா மிதிக்க இட ஒதுக்கீடு செய்து கொண்டவர்கள் போல என்று எங்கள் குழு தலைவர் அயெண்டியூசி தண்டபாணி கூறினார் (அங்கங்கே தொழிலதிபர்களைச் சந்திக்கிற கூட்டங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு வெளியேறிவிடுவார் அல்லது போலாம் என்று அவசரப்படுத்துவார். காரணம் கேட்டால் பொய் சொல்லறத எத்தன நேரந்தான் கேட்டுகிட்டிருக்கிறது என்பார்).

சுத்திகரிக்கப்படாத பெட்ரோல் உபயோகத்தின் அபரிமிதம், டீசல் விநியோகத்தில் குறைபாடுகள், முறையான கட்டமைப்புகளுடன் தொழிற்சாலைகள் அமையாதது, சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இவை தரும் சப்தக் கேடு நாராசமாகிறது. டாக்கா வீதிகளில் நாள் முழுக்க ரிக்சாக்களின் மணியடிச் சப்தங்கள் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். 45% ரிக்சாக்களால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. ரிக்சாக்களுக்கு இணையாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களால் வீதிகள் நிரம்பி வழிகின்றன. புதிதாய் வருகிற கார்களை 5 வருடம் கழித்துதான் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தால் வீதிகளில் ஓடும் வெளிநாட்டுக் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தொலைபேசித்துறை, மின்துறை போன்றவற்றின் தொடர்ந்த குழிதோண்டும் செயல்பாடுகள், முறையில்லாத பார்க்கிங், கி.மீட்டர் கணக்காக வீதிகளில் தொங்கிச் செல்லும் கேபிள் இணைப்புகளின் ஒயர்களை சரிசெய்வோரின் கூச்சல், வீதியோரத்து மினி ஒர்க்சாப்புகள் ,நடைபாதை மீறி தாறுமாறாய் செல்லும் மக்களின் இயல்பு நெரிசலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. வங்கதேசம் முழுவதும் 5 மெட்ரிக் டன் வாகனங்கள் இருக்கிறதென்றால் டாக்காவில் மட்டும் 1 மெட்ரிக் டன் வாகனங்கள் ஓடுகின்றன.




அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் நகரை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. டிராபிக் ஜாம் ஏற்படும் போது ரிக்சாக்காரர்களும் , கார்காரர்களும் அவற்றை தண்ணீர் ஊற்றிக் கழுவுவது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு அந்த நேரத்தை வீணாக்காமல் ஒதுக்குகிறார்கள். டிராபிக் ஜாம் நேரங்களில் எங்கள் வாகனத்தின் சுற்றிலும் நெருக்கும் ரிக்சாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களின் பொழுதுபோக்காக இருந்தது.