சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 23 நவம்பர், 2009

குறு குறு குறும்படங்கள்

குறுகுறு குறும்படங்கள்
=====================

1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------

தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.


2. Stair case ( Direction : George Mangalath Thomas )

முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.


3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )

” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.


4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)

ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.