சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 12 நவம்பர், 2009

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்
==========================================
1. சிட்டுக்குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை: ( கோவை சதாசிவம் )‌

சிட்டுக்குருவிகளின் வகைகள், அறிவியல் பெயர், அவற்றின் சுபாவம் இவற்றோடு அவற்றின் இருப்பு குறைந்து வருவதைப் பற்றி சொல்லும் படம். அவற்றின் அழிவுக்குக் காரணமான விசயங்களையே ஆராய்கிறது. 16 நிமிட குறும்படத்தில் அவசரம் துரத்தும் தார் சாலைகளில் குருவிகளைப் பற்றின அக்கறையைச் சொல்லும் படம்


2. வறுமையின் கனவு : ( ஜோதிகுமார்)

ஜோதிகுமாரின் இரண்டாவது குறும்படம் இது. வட்டிக் கொடுமையைச் சித்திகரிக்கிறது. வட்டி வாங்குபனின் க‌ழிவிரக்கம், வட்டி கொடுப்பவனின் அதிராம் இவற்றினூடே தென்படும் மனித முகங்களை ஒருங்கே இணைத்துள்ளார். சமூக அவலம் என்ற வகையில் அதை முன்னிருத்துவதில் நிறை பெறுகிறது.எஸ்.ஏ பாலகிருஸ்ணன், நாகராஜன் போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
3. தூரம் அதிகமில்லை ( ராகுல் நக்டா)

பள்ளிச் சிறுவன் மனதில் ஏற்படும் எண்ண மாறுபாட்டையும் அதை அவன் கல்வியினூடே களைந்து கொள்வதையும் குறிக்கிறது. மாணவர்களைப் பற்றிய ஒரு கல்லூரி மாணவனின் படம்.

4. த‌க்காளி : ( து சோ பிர‌பாக‌ர் )

ம‌டிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் அதன் வேராய் இருக்கும் தொழிலாள‌ர்களையும் த‌ட்டி எழுப்பும் சிறு முய‌ற்சி என்கிறார் பிரபாகர். தக்காளி என்ற விளை பொருளை முன் வைத்து விவசாயிகளின் நிலையை எடுத்துக் கூறுகிறது. பின்ன‌ணி உரையாடல் மூலம் கதை போல் நகர்த்திச் செல்வது நல்ல முயற்சி .

5. சும‌ங்க‌லி : ( ர‌விக்குமார்/சுப்ர‌பார‌திம‌ணிய‌ன் )

நவீனக் கொத்தடிமைத்தனமாய் இன்றைக்கு பஞ்சாலை தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலை வாங்கும் திட்டமும், அது சார்ந்த விமர்சனமும் இந்தக் குறும்படத்தில் பதிவாகியிருக்கிறது.கவிஞர் சுபமுகியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது