சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 23 நவம்பர், 2009

கொஞ்சம் மண்ணும், கொஞ்சம் சூரியனும்




குறும்படங்கள்: 1

15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் கபீரை முன் வைத்து அயோத்தி ராமனின் "போராளி"த்தனத்தை அலசுவதற்கு "கபீர் காடா பஜார் மெய்ன்" என்ற படம் உருவாகக்கப்ப்ட்டிருக்கிறது. பிராமணன் பெரியவனா, வேதம் பெரிதா, மனிதத்துவம் பெரிதா என்ற கேள்வியை, ராமன் அயோத்தி பிரச்சினையை முன் வைத்து யோசித்தவர் போல்"நன்றாய் இருப்பவை ஒன்றே" என்கிறார் கபீர். ஆனந்த் பட்வர்த்தனைப் போல் அயோத்திப் பிரச்சினையை அலசுவதற்கு இந்தப்படம் உதவியது என்றாலும் , ராமனை முன் வைத்து கபீரினுள் சென்று நோக்குவதற்குமான உபாயமாக இருக்கிறது . கபீரைப்பற்றிய பல தொன்மங்கள் உள்ளன.

1.கபீர் முஸ்லீம் நெசவாளி. ஆனால் பிரார்த்தனைகள், சடங்குகளில் நம்பிக்கையில்லாததால் முஸ்லீம்கள் அவரி நிராகரிக்ககிறார்கள். கபீர் என்ற சொல்லுக்கு "அல்லாஹ்" என்ற பொருளுமுண்டு.

2. கபீர் இந்து. மூஸ்லீமால் வளர்க்கப்பட்டவர்.

3. தாமரை மலரில் பிறந்தவர். சாதாரண மனிதரல்ல.அவதாரபுருசர்.

4. விஸ்ணுவின் அவதாரம்

5. ஒரு சூபி, நாட்டுப்புறக்கலைஞன்

இந்த வெவ்வேறு கோணங்கள் பற்றிய பார்வைகளை பலர் முன் வைத்திருக்கிறார்கள். அந்த அவதானிப்பபுகளில் அவரவர் பக்கமிருந்து சான்றுகளை அந்தந்த தரப்பினர் முன் வைக்கிறார்கள். மரத்தின் வேர்களை அறிய முடியாதது போல கபீரின் மூலத்தையும் அறிய முடியாமலிருக்கிறது. சாதாரண மனிதராக இருந்து அதி அற்புத பிறவியாக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் சப்னம் வீரமணி கபீரின் கவிதைகளைப் பாடும் கவிஞர்களையும், பாடகர்களையும் தேடிச் சென்று பேட்டி கண்டிருக்கிறார். கபீரை ஆதர்ச மூச்சாகக் கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். இந்தத் தேடலை இந்தியாவில் மட்டுமல்ல பாக்கிஸ்தானுக்கும் சப்னம்வீரமணி நீட்டித்திருக்கிறார்.

நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கமும், பாடும் முறைகளும் கபீருக்குள் இருப்பதைக் கண்டறிந்து நாட்டுப்புறப்பாடகர்கள், அவரைக் கொண்டாடுகிறார்கள். சூபி கவிஞர்களும் , பாடகர்களும் நாங்கள் அவரை உள்வாங்கிக் கொண்டதைப் போல யாரும் உள்வாங்கி தெளிவு பெற்று விட முடியாது என்கிறார்கள். ஒரு கவிஞன் என்ற அளவில் சாதாரண மக்களின் மனதில் இவ்வளவு ஆழப்பதிந்திருப்பதைப் பார்க்கும் போது இந்த அளவு தென்னிந்தியாவில் யாராவது மக்களின் மனதில் ஆழத்திற்கு சென்றிருப்பார்களா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. கபீர் என்னும் கவிஞன் அதிர்ஷ்டசாலி என்று தோன்றுகிறது. ராமன் பற்றி கபீர் சொன்ன மாயாவாதங்களை இப்படத்தில் ராமனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசும் மக்கள் தங்களைத் திரும்பிப் பார்த்ததுக்கொள்ள இப்படம் ஏதுவாகலாம்.

குறிப்புகள்:

1. எனது ‘சாயத்திரை’ நாவலை ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி மொழிபெயர்த்திருக்கிறார். கன்னடத்தில் தமிழ் செல்வி ‘ பண்ணத்திரா’ என்ற தலைப்பிலும், மலையாளத்தில் ஸ்டேன்லி ‘ சாயம் புரண்ட திர’ என்ற தலைப்புகளிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீனாட்சி பூரி ‘ ரங்ரங்கிலி சாதர் மெஹெலி’ என்று தலைப்பிட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்டபோது கபீரை வடஇந்தியர்கள் நன்கறிவார்கள். சாதாரணமக்களுக்கும் பரிச்சயமானவர். அவர் ஒரு நெசவாளி. நெசவு, சாயத்தோடு சம்பந்தம் கொண்டது என்பதால் இத்தலைப்பினை கபீரின் கவிதைகளில் இருந்து எடுத்தேன் என்றார். சுற்றுச்சூழலை மையமாக வைத்துத் தலைப்பிட்டால் சட்டென்று விளங்காமல் போய்விடும்.

2. கபீரை நாடகமாக்குகிற ஒரு நாடகாசிரியர்.: கபீர் பற்றின மூலம் சர்ச்சசைக்குரியதே. கபீருக்கு எந்த வகையில் தாடி வைப்பது, எப்படி தொப்பி வைப்பது, எந்த வகை உடைகளை அணிவிப்பது என்பது ஒவ்வொருமுறையும் சர்ச்சசைக்குறியதாகிறது. நானும் என் மனநிலை தோன்றுவதற்கேற்ப தாடி வைக்கிறேன்,தொப்பி, உடைகளை வடிவமைக்கிறேன். சர்ச்சையும் தீராது. கபீர் இன்றைக்கும் சர்ச்சைக்குறிய கவி புருசர்தான்.

3. ‘சப்னம்’ வீரமணியின் இன்னொரு விவரணப்படம் ‘ கோல் சுந்தர் ஹை’ கபீரின் பாடல்களை மேடைகளில் பாடுபவரான குமாரகவுரவ்வை முன் வைத்து கபீரைப்பற்றின ஒரு மீள் பார்வையை இதில் வெளிப்படடுத்துகிறார். குமார் 1947ல் பிறந்தவர். மிகவும் இள வயதிலேயே பாடகராகப் பரிணமித்தவர். 23 வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். பாடுவதற்குத் தடையிருந்தது.1952ல் அதிலிருந்து மீண்டு, மீண்டும் கச்சேரிகள் செய்கிறார். கபீரை முமுமையாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியவர் என இதில் இடம்பெற்றிருக்கிற பல்வேறு பேட்டிகளில் சிலாகரிக்கப்படுகிறார். சுபாமுக்தல், ராம்பிராசாத், திபாங்கே போன்றோரின் விளக்கமானப் பேட்டிகளும் கபீர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களும், குமாரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இதில் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன. "ஒருவன் செத்தால் தூக்கம் சில நாளைக்குக் கூட வரும். ஞானவான் செத்தால் அவர் கூடவே இருப்பார். கபீர் ஞானவான்" என்கிறார் ஒரு நாட்டுப்புறப்பாடகர்.

subrabharathi@gmail.com